என் மலர்
நீங்கள் தேடியது "relief"
- மக்களுக்கு மாற்று இடம் வழங்கவும், அந்தந்த பகுதியிலேயே நிரந்தர புயல் பாதுகாப்பு மையம் அமைக்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து முழு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டுக் கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சி.வி. கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்து 700-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் தலா ரூ.1000 நிதியுதவி வழங்கினர்.
அப்போது, அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: வெள்ளத்தால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, ஆற்றின் உள்ளே உள்ள மக்களுக்கு மாற்றுஇடம் வழங்கவும், அந்தந்த பகுதியிலேயே நிரந்தர புயல் பாதுகாப்பு மையம் அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து முழு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து முகாம்களின் பொதுமக்களுக்கு வழங்கு வதற்காக செய்யப்பட்ட உணவுகளை தரமாக சமைக்கப்பட்டுள்ளதா என அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, எஸ்.பி. நிஷா, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மணல் திட்டில் ஏறி மீன் பிடிக்க சென்ற நிலையில் எதிர்பாராவிதமாக கரைபுரண்டு வந்த வெள்ளத்தில் நால்வரும் சிக்கிக்கொண்டனர்.
- உயிரிழந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மதகுசாலை கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கடந்த மாதம் 18-ம் தேதி இரவு, கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் திட்டில் ஏறி, மீன் பிடிக்க சென்ற நிலையில்,எதிர்பா ராவிதமாக கரைபுரண்டு வந்த வெள்ளத்தில் நால்வரும் சிக்கிக்கொண்டனர்.
இதில் கொளஞ்சிநாதன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற ஆகாஷ், மனோஜ் ,ராஜேஷ் ஆகிய 3 பேரும் பலியாகினர். இந்நிலையில், வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா .அருள்மொழி, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ம. க. ஸ்டாலின் மற்றும் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க நிர்வாகிகளுடன் இணைந்து சம்மந்தப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது அவர்கள் கூறும்போது:- உயிரிழந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தகுதியான குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும். 15-ம் தேதிக்குள் இது குறித்து அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால், வன்னியர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.
- மழைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
- அரசு பொதுதேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற சங்க சார்பில் மாநில மகளிர் மாநாடு பற்றிய ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் தியாகராஜன் நீலகண்டர் தலைமை யில் நடந்தது. மாவட்ட தலைவர் கணேஷ் பால்பாண்டி வரவேற்றார்.
அரசு பொதுதேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தமிழகத்தில் உள்ள அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை ரூ10ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பு களில் 5 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். மண்பாண்ட தொழில் செய்ய களிமண் எண் எடுக்க தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், குமார், அசோக் உள்படபலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பா, அவருடைய முன்னாள் கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணும், அவருடைய சகோதரியும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்முறை வழக்கை 2016-ம் ஆண்டு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக சசிகலா புஷ்பாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது கையெழுத்து மோசடி வழக்கு பதிய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக மதுரை கே.புதூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மற்றும் திசையன்விளை காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளில் சசிகலா புஷ்பா உள்ளிட்டோரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை அந்த வழக்குகள் முடிவடையும் வரை தொடரும். இந்த வழக்கு களுக்கு எதிராக மனுதாரர் ஐகோர்ட்டை அணுகலாம்.
இவ்வாறு இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. #SasikalaPushpa #SupremeCourt
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கத்தினர் கஜா புயலால் சேதமான கோழிப்பண்ணைகளுக்கு நிவாரணம் கேட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்க மண்டலத்தலைவர் பூபாலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 210 கோழிப்பண்ணைகள் சேதமடைந்தன.
இந்த கோழிப் பண்ணைகளுக்கு உரிய நிவாரணம் கேட்டு பலமுறை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டு வீசிய தானே புயலின் போது விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சேதமான 1200 கோழிப்பண்ணைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.
ஆனால் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்னும் 10 நாட்களுக்குள் நிவாரணம் வழங்கவில்லை எனில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். சிறு சிறு கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க கட்சியின் தலைமை ஆலோசனை செய்து வருகிறது. பட்ஜெட்டில் மக்கள் பயன்படும் திட்டங்களும் தற்போதைய செயல்பாட்டு திட்டங்களுக்கும் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதேர்தல் நோக்கத்திற்காக போடப்பட்ட கவர்ச்சி பட்ஜெட் இல்லை. தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணம் வழங்கபடவில்லை என அங்கங்கே போராட்டம் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார். #ministerkamaraj #relief #gajacyclone
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். வேளாண்மை அதிகாரிகள் வேளாங்கண்ணி, மனோகர் மற்றும் பலர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக வேடசந்தூர் அருகே உள்ள ஆர். கோம்பை, வடுகம்பாடி விவசாயிகள் கஜா புயலுக்கு நிவாரணம் வழங்ககோரி கோஷம் எழுப்பினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எங்களது பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. ஆனால் 600 பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்து உள்ளது.
மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். இதனையடுத்து தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
கொடைக்கானலில் புயலால் சிசு வாழை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு மானியம் வழங்ககோரியும் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காய்கறி விவசாயிகள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தங்களது பகுதியில் விளையும் சவ்சவ், வாழை, எலுமிச்சை, அவரை உள்ளிட்ட காய்கறிகளை திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறோம். கடந்த சிலநாட்களாக அங்கு உள்ள காண்டிராக்டர்கள் தலா ஒரு மூட்டைக்கு பணம் கேட்கிறார்கள்.
பணம் தரவில்லை என்றால் உள்ளே கொண்டு வர அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே முன்பு போலவே இலவசமாக காய்கறிகள் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றனர்.