search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "claim"

    • பலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • குவாரியை எந்தவித தாமதமும் இன்றி மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    கீழஉப்பிலிக்குண்டு நடந்த குவாரி வெடி விபத்தின் அதிர்வு அருகில் உள்ள கிராமங்களில் உணரப்பட்டது.வெடி விபத்து நடந்தபோது லேசான அதிர்வு இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தில் பயங்கர சத்தம் கேட்டதால் என்ன நடந்தது? என பொதுமக்களால் உடனடியாக உணர முடியவில்லை. அந்த கிராமத்தில் மட்டும் பல வீடுகளின் சுவர்கள் சேதமடைந்தன.

    மேலும் ஆவியூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நடந்த வெடி விபத்தால் 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும் பலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெடி விபத்து ஏற்பட்டதில் இருந்து சில நிமிடம் காது கேட்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    வெடி விபத்து நடந்த குவாரியில் தினமும் இரவு பகலாக வெடி சத்தம் கேட்டு கொண்டே இருக்கும் இதனால் நாங்கள் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே இந்த குவாரியை எந்தவித தாமதமும் இன்றி மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    • வயல்களில் மழைநீர் புகுந்து வெங்காயம்-மக்காசோள பயிர்கள் சேதமடைந்தது.
    • எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பெய்த பருமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் விவசாய பணிகளை மும்முரமாக மேற்கொண்டு தங்களது நிலங்களின் தன்மைக்கு ஏற்ப நெல், சோளம், பருத்தி, வெங்காயம், மக்காச்சோளம் போன்ற பல்வேறு வேளாண் பயிர்களை ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ளனர்.மேலும் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் தற்போது களையெடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் விவசாய பணிகளுக்காக தங்களது நகைகளை அடகு வைத்தும், கூடுதல் வட்டிக்கு வெளியில் கடன் வாங்கியும் பல்வேறு சிரமத் திற்கு இடையே விவசாய பணி களை மேற் கொண்டு வரு கின்றனர்.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் அப்பகுதியிலுள்ள பல்வேறு ஓடைகள் நிரம்பி அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மறவர் பெருங்குடி, எம்.மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி, சலுக்கார்பட்டி, கஞ்சம்பட்டி, சுத்தமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, கம்பு போன்ற பல்வேறு பயிர்களின் விளை நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகிய நிலையில் மிகவும் சேதமடைந்தது. இதனால் கடன் வாங்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றிற்கு சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விவசாயிகள் செலவழித்துள்ள நிலையில் இவ்வாறு அறுவடை நேரத்தில் மழை வெள்ளம் புகுந்து வெங்காயம் மற்றும் மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி முழுவதும் சேதமான தால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந் துள்ளனர்.

    மேலும் தற்போது 2023- 2024 க்கான நெல், சோளம், பருத்தி போன்ற பல்வேறு விளை பொருட்க ளுக்கு குறைந்த பட்ச பிரீமிய தொகையாக ரூ.120-ல் தொடங்கி அதிக பட்சமாக ரூ.500 வரை பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து வீணாகிய விளை பொருட்களால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணத்தை இழப்பீடு தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நகை இல்லாமல் பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் எடுத்துக் கூறினார். உழவன் செய லியை பதிவிறக்கம் செய்ய வும், அதன் பயன்பாடு குறித்து எடுத்துரைக்கவும் அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

    தோட்டக்கலை துறையின் கீழ் இருக்கும் அனைத்து பண்ணைகளிலும் நன்றாக விளைந்த நாற்றாங்கால்கள் உரிய நேரத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மிளகாய் மற்றும் தக்காளி நாற்றுக்கள் பருவ காலத்தில் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் வருவாய் துறை அலுவலர்களால் வழங்கப் படும் அடங்கலுடன், ஒப்பம் செய்யப்பட்ட நகலும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கொப்பரைத் தேங்காய் உலர்த்தும் கருவி, வெட்டும் கருவி, மரம் ஏறும் கருவி ஆகியவற்றை மானி யத்தில் வழங்க வேண்டி அரசுக்கு பரிசீலனை அனுப்பப்பட உள்ளது என்றும் கூட்டுறவுத் துறை மூலம் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேவையான அளவில் யூரியா உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக் கப் பட்டது.

    கூட்டுறவுத்துறையில் நகை இல்லாமல் பயிர்க் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு வழி வகை செய்யப்படும் என்று அவர் பதிலளித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண்மை இணை இயக்குநர் கோ.பத்மாவதி, மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 65 கிராமங்களை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
    • கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வட்டார வாரியாக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். 2022-23-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 65 வருவாய் கிராமங்கள் காப்பீட்டு தொகை இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யக் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். மேலும் பயிர்க்கடன் மற்றும் பயிர் காப்பீடு நெல் கொள்முதல் செய்ய அடங்கல் வழங்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் வலியு றுத்தினர்.

    வரத்து கால்வாய் சீரமைத்தல், வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்தல், கருவேல மரங்களை அப்புறப் படுத்துதல், விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சரிசெய்தல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைத்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பா கவும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அவர்க ளது கோரிக்கைகளை பரிசீ லனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.

    இதில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
    • சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் கருப்பையன் நிறைவுரையாற்றினார்.

    கடலூர்:

    கூட்டுறவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கருணை ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். அரசு அறிவிக்கும் போனஸ் மற்றும் கருணை தொகையை அனைத்து கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். நியாய விலை கடை ஊழியர்களிடம் இருப்பு குறைவிற்கு 3 மடங்கு அபராத தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர்கள் வேல்முருகன், சுப்புராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பழனிவேல், கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் கருப்பையன் நிறைவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • ராமநாதபுரம் அருகே உள்ள மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வேண்டும்.
    • அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் மழை சரிவர பெய்யாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய், ஊருணிகளும் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளித்து வருகின்றன. ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மல்லல் கிராமம் உள்ளது.

    இந்த கிராமம் ராமநாத புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வருகின்றது. இந்த மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாயும் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றது. கண்மாய்க்கு அருகில் உள்ள திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, களக்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்க்கு வைகை தண்ணீர் வருகிறது.

    ஆனால் மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வராததால் கண்மாய் தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டு காட்சி யளிக்கிறது. அருகில் உள்ள திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, உள்ளிட்ட பல கிராமங்களில் வைகை தண்ணீரை பயன்படுத்தி அந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் மிளகாய் மற்றும் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆனால் மல்லல் கிராமத்தில் கண்மாயில் தண்ணீர் இல்லாமல் வறண்டதால் நெல் விவசா யம், மிளகாய், பருத்தி விவசாயமும் அடியோடு பாதிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வராததால் இந்த கிராம மக்கள் மழையை மட்டும் நம்பி இருக்கிறார்கள். மழை பெய்து கண்மாய் நிரம்பினால் தான் விவசாய பணியை தொடங்கி வந்தனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் கண்மாய் வறண்டு விவசாய பணி மேற்கொள்ள முடியாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கண்மாயில் தண்ணீர் இல்லாததால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் அலைந்து வருகின்றன. எனவே இந்த மல்லல் கிராமத்திற்கு வைகை தண்ணீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். தண்ணீர் வரத்து வரும் கால்வாயை தூர்வார வேண்டும்.

    மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு வைகை தண்ணீர் கொண்டு வருவ தற்கு தேவையான நடவ டிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக புதிய கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கியில் பெண்கள் திரண்டனர்.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருச்சுழி

    தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக அரசு அறிவித்தபடி கடந்த சில நாட்களாக ரேசன் கடைகள் மூலமாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பொது மக்களின் தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட போதே டோக்கனில் முகாமிற்கு செல்லும் நாள், டோக்கன் எண் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கினால் தான் கலைஞர் உரிமை தொகை பெற முடியும் என ரேசன்கடை ஊழியர்கள் விண்ணப்பம் வழங்கும்போதே கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அதனடிப்படையிலேயே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நரிக்குடி கிளை யில் நேற்று கணக்கு தொடங்க ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூட்டமாக திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் பதிவு முகாம்களிலும் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் முதல் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் கள் தொடங்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் வங்கியில் புதிய கணக்கு தொடங்கவும், டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் விண்ணப்ப பதிவு முகாம் களுக்கு சென்று பதிவுகள் செய்யவும் வேண்டியுள்ள தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    ஆனால் அதற்கான சரியான நேரம் இதுவல்ல எனவும் பொதுமக்கள் ஆலோசனை தெரிவித்தனர்.ஆகவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டருக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.
    • ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்க ளின் கூட்டமைப்பு செய லாளரும், வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவ ருமான செந்தில்குமார் கூறிய தாவது:-

    வெங்கலகுறிச்சி, கருங்காலக்குறிச்சி, தொட்டியவலசை, திரு வாக்கி, கீழப்பனையடி யேந்தல், கிருஷ்ணாபுரம் ஆகிய 6 கிராமங்களை உள்ளடக்கியது வெங்கல குறிச்சி ஊராட்சி. 6 வார்டு பகுதிகளை கொண்டுள்ளது.

    இந்த ஊராட்சியில் மொத்தம் 2000 குடும்பங்கள் உள்ளன. வெங்கலகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளில் குடிதண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெங்கலகுறிச்சி, கருங்காலகுறிச்சி கிராமங்க ளுக்கு போதுமான சாலை வசதி இல்லாமல் மழை காலங்களில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த 2 கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து தர வேண்டும்.

    கருங்காலக்குறிச்சியில் தடுப்பு சுவர், வெங்கலகுறிச்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் படித்துறை, அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கலகுறிச்சி, கிருஷ்ணாபுரம், தொட்டிய வலசை, கருங்காலக்குறிச்சி பகுதியில் புதிதாக ஆழ் குழாய் கிணறு அமைக்க வேண்டும்.

    எங்கள் ஊராட்சியில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், அவசர காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி இல்லாததால் சிகிச்சைக்காக 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைத்து 24 மணி நேரம் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊராட்சிக்கு போதுமான நிதி இல்லாததால் அடிப் படை வசதி செய்ய முடியாமல் உள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அரசு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழபனையடியேந்தல், வெங்கலகுறிச்சி கிராமங்களுக்கு புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும். கீழபனையடியேந்தல் கிராமத்துக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

    ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள், மின் வயர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிக ளுக்கும் பயிர் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை உடனடி யாக வழங்க வேண்டும்.

    கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெற்பயிர் சாகுபடி மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நம்பி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கிய தால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்வது டன் பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு வறட்சி நிவா ரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • போதுமான மருத்துவ வசதியில்லை.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரு கிறது. இந்த பகுதியில் ஏராளமான கிராமங்களும் அபிராமம் நகரில் குடியி ருந்து வருபவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வருகின்றனர்.

    அபிராமம், அகத்தாரிருப்பு நத்தம், அச்சங்குளம், அ.பச்சேரி, பாப்பனம் தீர்த்தாண்டதானம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு போதுமான மருத்துவ வசதியில்லை.

    அவசர தேவைக்கு அபி ராமத்திலிருந்து கமுதி அல்லது 50 கிலோமீட்டர் தூரம் உள்ள பரமக்குடிக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே நத்தம் ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்த பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், விவசாயிகள், கூலி தொழி லாளர்கள் நிறைந்த பகுதி யாகவும் உள்ளது. உடல் நிலை பாதிக்கப்பட்டால் அரசு ஆஸ்பத்திரியை நம்பி செல்லும் நிலை உள்ளது.

    பாம்பு கடி மற்றும் சாலை விபத்து போன்ற அவசர சிகிச்சைக்கு வரும் நோயா ளிகளுக்கு போதுமான மருத்துவ வசதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லை.

    அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை போதுமான மருத்துவ வசதிகளுடன் அரசு மருத்துவமனையாக செயல்படுத்திட சுகாதார துறையும், மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேல்பாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் விவசாயி.
    • வனத்துறை சார்பில் இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கால்பாச்சேரி, மேல்பா ச்சேரி, கேடார், சின்ன திருப்பதி, மடவாச்சி உள்ளி ட்ட பகுதிகளில் கரடிகள் அதிக அளவில் சுற்றி திரிகிறது. மேலும் இந்த பகுதியில் சாலை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் காட்டு பகுதி வழியாக ஒரு வழிபாதையில் சின்னசேலம் பகுதிக்கு வந்து தங்களது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மீண்டும் தங்களது பகுதிக்கு காட்டு பகுதி வழியாக வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் சமீபகலமா காட்டு பகுதி வழியாக வரும் பொதுமக்கள் வனவிலங்குகளால் தாக்கி படுகாயம் அல்லது உயிர் இழப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. சம்பவதன்று மேல்பா ச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 40) விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் இருந்து சின்னசேலம் அருகே ஊனத்தூர் பகுதிக்கு சென்றார். அப்போது ஊனத்தூர் வனப்பகு தியில் இருந்து திடீரென வெளிய வந்த கரடி ஒன்று இவர் நடந்து சென்ற பாதையின் குறுக்கே வந்து கோவிந்தசாமியை தாக்கியது.

    கால்களில் கடித்ததால் படுகாயம் அடைந்த கோவிந்தசாமி வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். இதையடுத்து இவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டதில் கரடி ஊனத்தூர் வனப்பகுதிக்கு சென்றது. இதன்பின்னர் படுகாயம் அடைந்த கோவிந்தனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்:- எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாததால் நாங்கள் நீண்ட காலமாக காட்டு பகுதி வழியாக செல்கிறோம். அப்போது செல்லும்போது வனவிலங்குகள் எங்களை தாக்கி படுகாயம் அல்லது உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் வனத்துறை சார்பில் இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி ெபாதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • காட்டு பன்றிகள், குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன.
    • விவசாயி களின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    மதுரை

    மதுரை மேற்கு வட்டாட்சி யர் அலுவ லகத்தில் விவசா யிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் நாகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விவசா யிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    சேதமடைந்துள்ள துவரிமான் கண்மாய் ஷட்டரை சரி செய்ய வேண்டும். கீழமாத்தூரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், கீழக் குயில்குடி தட்டானூர் பொட்டக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், துவரிமான் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகிறது.

    அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    கூட்டத்தில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர், வி.ஏ.ஓ.க்கள், பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வாழப்பாடி வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.
    • மாநில செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் செல்லதுரை சிறப்புரையாற்றினர்.

    சேலம்:

    தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வாழப்பாடி வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வருதராஜன், பொருளா:ளர் ராணி உள்ளிட்ட நுஇர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    மாநில செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் செல்லதுரை சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், 70 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.80-இல் இருந்து ரூ.150 ஆகவும், மருத்துவ காப்பீடு ரூ.300-இல் இருந்து ரூ.497 ஆகவும் உயர்த்தியுள்ளதை மாற்றி அமைக்கவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×