search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old pension scheme"

    • மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50 சதவீத ஆக உயர்ந்திருக்கிறது.
    • அமைச்சரவையைக் கூட்டி 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50 சதவீத ஆக உயர்ந்திருக்கிறது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதுவரை உயர்த்தப்படவில்லை.

    மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட்டுவிட்டால், அதன்பிறகு ஜூன் மாதத்தில் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க முடியாது. எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக, அமைச்சரவையைக் கூட்டி 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடகாவில் கடந்த 2003-ம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டது.
    • பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

    பெங்களூரு:

    மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நிதிச்சுமையை காரணம் காட்டி மத்திய, மாநில அரசுகள் இதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றன.

    இதற்கிடையே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என காங்கிரஸ் கட்சி உறுதி அளித்தது.

    இந்நிலையில், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி சித்தராமையா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகாவில் கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு 13,000 பேர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டம் 13,000 ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது என்று நம்புகிறேன். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

    • என்.டி.ஏ. அரசு 2004ல் பழைய பென்சன் திட்டத்தை நிறுத்தி விட்டது
    • தொடக்கம் முதலே அரசு ஊழியர்கள் புது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

    அரசு ஊழியர்களின் பணிக்காலம் நிறைவடைந்ததும் அவர்கள் இறுதியாக வாங்கிய ஊதியத்தின் அடிப்படை தொகையை கணக்கிட்டு மாதாமாதம் நிலையாகவும் நிரந்தரமாகவும் ஒரு தொகையை அரசாங்கம் வழங்கி வந்தது. இது மாதாமாதம் முதல் வாரத்தில் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதால், நிலையான நிரந்தரமான வருமானமாக அவர்களுக்கு இருந்தது. இத்திட்டம் பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme) எனப்படும்.

    2004ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதில் மாற்றம் கொண்டு வந்தது. இதன்படி அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து தாங்களாக முன்வந்து ஒரு தொகையை மாதாமாதம் செலுத்த வேண்டும். இத்துடன் பணியாளர்களின் அடிப்படை தொகையின் 14 சதவீதத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து தன் பங்காக அரசாங்கம் ஒரு தொகையை செலுத்தும். இதுவே ஓய்வூதியமாக வழங்கப்படும். இத்திட்டம் புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme) எனப்படும்.

    2009 வருடத்திலிருந்து 18 வயதிலிருந்து 60 வயது வரை எந்த துறையில் பணியாற்றுபவரும் புதிய பென்சன் திட்டத்தில் சேரலாம் என இத்திட்டம் விஸ்தரிக்கப்பட்டது.

    அரசின் செலவினங்களை குறைக்கும் முயற்சியாகவும், பல துறைகளை சேர்ந்தவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில் அமைந்ததாலும், இத்திட்டத்தை பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் பின்பற்றி வந்தன.

    ஆனால், நிரந்தரமாக மாதாமாதம் ஊழியர்களுக்கு கிடைத்து வந்த நிலையான வருமானம் நின்று போனதால், அரசு ஊழியர்கள் என்.பி.எஸ். திட்டத்தை எதிர்த்து வந்தனர்.

    சமீபத்திய சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வென்றுள்ள பா.ஜ.க. அங்கு முன்னர் இருந்த அரசுகள் அமல்படுத்தி வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர போவதாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் வென்றுள்ள தெலுங்கானாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி (RBI) "மாநில நிதிநிலைமை: 2023-24க்கான பட்ஜெட் குறித்த ஆய்வு" எனும் அறிக்கையை வெளியிட்டது. அதில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    "சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மீண்டும் திரும்பி உள்ளதும், சில மாநில அரசுகள் திரும்ப உத்தேசித்திருப்பதும் தவறான முடிவு. இது மாநில அரசுகளின் நிதி ஆதாரத்திற்கு பெரும் சுமையாக மாறி விடும். மாநிலத்தில் ஒரு அரசு செயல்படுத்த வேண்டிய வளர்ச்சிக்கான பெரும் திட்டங்களுக்கான செலவினங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும். இது ஒரு பிற்போக்கான முடிவு. இதன் மூலம் சுமார் 4.5 மடங்கு வரை நிதிச்சுமை அதிகரிக்கும் அபாயம் உள்ளது" என மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

    புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எதிர்கட்சிகள் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்துவோம் என பிரசாரம் செய்வதும், அதற்கு ஒரு சில அரசு ஊழிய தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு அளிப்பதும் அதிகரித்து வரும் நிலையில், ஆர்.பி.ஐ.-யின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

    • திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • மாவட்ட செயலாளா் ஆா்.சித்ரா, மாவட்ட பொருளாளா் சத்தியசீலன் மற்றும் மாவட்ட துணை செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:- 1999-ம் ஆண்டு வழங்கப்பட்டு, கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை கடந்த மாா்ச் 8-ந்தேதி நிறுத்தப்பட்டதை திரும்ப வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழு மாற்றுத் திறனாளி கிராம உதவியாளா்களுக்கு வழங்கிய எரிபொருள் படி ரூ. 2 ஆயிரத்து 500-ஐ நிறுத்தம் செய்ததை திரும்ப வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு என்பதை 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியா்களுக்கு ஊா்தி ஓட்டுநா் பதவி உயா்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள கிராம ஊழியா்கள் பணியிடத்தை தோ்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். அதில் குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என நிா்ணயம் செய்ய வேண்டும். கடந்த ஜனவரியில் 2 ஆயிரத்து 748 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, புதிதாக பணிக்கு வந்தவா்களுக்கு முறையாக சிபிஎஸ்., கணக்கு எண் வழங்கி ஊதியம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா். அப்போது வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்ட தலைவா் கே.நடராஜன், மாவட்ட செயலாளா் ஆா்.சித்ரா, மாவட்ட பொருளாளா் சத்தியசீலன் மற்றும் மாவட்ட துணை செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • மாவட்ட தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் சரவணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலா்கள் சங்க 3-வது மாவட்ட மாநாடு திருப்பூர் டவுண் ஹால் அருகேயுள்ள ஒரு கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் சரவணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கல்வித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளா்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள நேரடி நியமன உதவியாளர் முறையினை ரத்து செய்ய வேண்டும். கருணை அடிப்படையில் பணிக்காக காத்திருப்போருக்கு உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சுப் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பொதுமாறுதல் மூலம் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • ஓய்வூதியர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகரில் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் நலச்சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சங்கத்தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது.

    இக்கூட்டத்தில் மாநில தலைவர் ராகவன் கலந்து கொண்டு பேசினார். மாநில இணைச்செயலாளர் முத்துக்குமாரசாமி வாழ்த்தி பேசினார். மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தா தொகையை ரூ.300 ஆக உயர்த்தியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் ரூ.1½ லட்சம் நிதி வழங்க வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். ெரயில் பயணத்தில் முதியோர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த சலுகைகளை வழங்க வேண்டும்.

    அரசு பஸ்களில் 50 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும். முதியோருக்கு தனியாக அமைச்சரவை ஏற்படுத்துவதுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சரிடம் இருந்து விருது பெற்ற கலெக்டர் ஜெயசீலனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் சங்க செயலாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

    • 2004-ம் ஆண்டு ஜனவரில் இருந்து புதிய பென்சன் திட்டம்
    • நாளை ராம்லீலா மைதானத்தில் மெகாபேரணி

    டெல்லி ராம்லீலா மைதானத்தில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் சங்கங்கள் பேரணிநடத்த உள்ளனர். இந்த பேரணி நாளை நடைபெற உள்ளது.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு அமைப்பு/தேசிய கூட்டு நடவடிக்கை கவுன்சில் ஆகியவை இந்த பென்சன் உரிமை மகாபேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இதுகுறித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இந்திய ரெயில்வே ஆண்களுக்கான பெடரேசன் பொது செயலாளர் ஷிவ் கோபால் மிஷ்ரா கூறுகையில் ''2014-ம் ஆண்டு ஜனவரி 1-ல் இருந்து புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு, அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியம் திட்டத்தில் இருந்து புதிய ஓய்வூதியத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். லட்சக்கணக்கான ஊழியர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். நாளை காலை 9.30 மணிக்கு பேரணி நடைபெறும்'' என்றார்.

    மத்திய, மாநில, ரெயில்வே, ஆசியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    • நேரம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தபோது எங்களுக்கு செய்து தருவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைத் தான் நிறைவேற்றி தர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை முதல்கட்ட பேச்சு வார்த்தையை நேற்று முன்தினம் நடத்தியதைத் தொடர்ந்து, 2-ம் கட்டக் கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குனர் க.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டி.என்.எஸ்.ஜாக்டோ) சார்பில் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

    அதே நேரம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து டி.என்.எஸ்.இ ஜாக்டோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தபோது எங்களுக்கு செய்து தருவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைத் தான் நிறைவேற்றி தர வேண்டுமென வலியுறுத்துகிறோம். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நேரடி கவனம் செலுத்த வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கவே போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    பள்ளிக் கல்வித் துறையுடன் தற்போது நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டி.பி.ஐ) வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை)ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தல்
    • ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்ட கிளை தலைவர் இல.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர் களுக்கான பணி விதி வெளியிடுதல், ஊதிய உயர்வு, புதிய பணியிடம் ஏற்படுத்துதல், பதவி உயர்வு பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு மற்றும் கோஷங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட கிளை தலைவர் தென்னரசு துணை தலைவர் முத்துவேலன் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சண்முகம் பரசுராமன் சரவணன் தேவராஜ் திவாகர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    இறுதியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • பேராவூரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிலுவை அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

    பேராவூரணி:

    பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    நிலுவை அகவிலைப்படியை உடன டியாக வழங்க வேண்டும்.

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை வழங்க வேண்டும் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    த.அ.ஊ.சங்க வட்ட தலைவர் ஏ.நாவலரசன் தலைமை வகித்தார்.

    த.அ.ஊ. சங்க மாவட்ட இணை செயலாளர் ஸ்ரீமகேஷ் விளக்க உரையாற்றினார்.

    வருவாய்துறை அலுவலர்கள் ரெத்தினம் மற்றும் மனோகரன் பேசினர்.

    நிறைவாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த அஸ்ரப் அலி நன்றி கூறினார்.

    • பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாத புரம் மாவட்டத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 31.3.2003 முன்பு வரை தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய பென்சன் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வுக்கு பிறகு அவர்கள் எந்த உறவுகளையும் சார்ந்து இருக்க தேவையில்லை. தன்னுடைய இறுதிக்காலத்தில் நிம்மதி யாக இருப்பார்கள்.

    மத்திய அரசின் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எதிரான கொள்கையால் கடந்த 31.3.2003 பிறகு பணியமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இந்த திட்டம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான திட்டம். பழைய ஓய்வூதிய திட்டத்தில் கீழ் பணத்தை சேமிக்கும் பணியாளர்கள் சேமித்த தொகையில் 6 மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றுக்கொண்டு அதனை மீண்டும் செலுத்தலாம். இது குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமண செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ஆனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சேமித்த பணத்தை பணி ஓய்வு பெறும் வரை சிறிதளவு கூட முன்தொகையாக பெற முடியாது.

    இதனால் தங்களுடைய குழந்தைகளின் படிப்புப் செலவு, திருமண செலவு போன்ற அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.

    மேலும் பணி ஓய்வுக்கு பிறகு இவர்களுக்கு மாதாந்திர ஓய்வவூதியம் இல்லாததால் உணவு, உடை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவை களுக்கு மற்றவர் களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் ஓய்வுக்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து வருபவர்கள் பெரும் மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறார்கள்.

    கடந்த ஆட்சியில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டி போராடிய ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக பேசிய மு.க.ஸ்டாலின் ஆசிரியர், அரசு ஊழியர்க ளின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உண்ணாவிரதம் போராட்டம் பாளை சித்த மருத்துவக்கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
    • போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பாளை சித்த மருத்துவக்கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் பால்ராஜ், பிரகாஷ், பால் கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கி னர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பிரம்ம நாயகம், ஸ்டான்லி, ராம சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் மாணிக்கராஜ் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு சிறப்புரையாற்றினார்.

    இதில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    தொடர்ந்து கோரிக்கை களை வலியுறுத்தி வருகிற 24-ந்தேதி மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    முடிவில் காளிராஜ் நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் மாரிராஜா, வசந்தி, அல்லா பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×