என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old pension scheme"

    • 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
    • தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகா, இமாச்சல பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான். தமிழக அரசுக்கு மனமிருந்தால், அங்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஒரு வாரத்தில் அறிந்து தமிழகத்திலும் செயல்படுத்த முடியும்.

    ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களை இனியும் ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடாது. ஆனால், தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க.வை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும், மக்களும் ஏமாற்றுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? அது எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதலமைச்சருடன் பேசி உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்.

    அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து பல அரசு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார். 

    • ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்தது
    • 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் லக்கி லாரன்ஸ் புவியரசு தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைக்கால ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 1.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவிக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் முடக்கப்பட்டுள்ள உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    மாணவர்கள் நலன் கருதி தேவையற்ற இணையவழி பதிவு பதிவேடுகளை நிறுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார அளவிலான நிர்வாகிகள், மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாங்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்குவோம்.
    • 10 உத்தரவாதங்களை வழங்கியுள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம்.

    சிம்லா:

    இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இங்கு 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த முறையும் அந்த சரித்திரம் தொடருமா அல்லது மாறுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை பெறத் தொடங்கினர்.

    இறுதியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து இமாசலபிரதேச மாநிலத்தின் 15-வது முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரி பதவியேற்றுக்கொண்டார். மந்திரிகள் அடுத்த சில நாட்களில் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நாங்கள் 10 உத்தரவாதங்களை வழங்கியுள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம். நாங்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் இருந்து நாட்டாமை கட்டிடம் வரை பேரணி நடந்தது.
    • இந்த பேணியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் இருந்து நாட்டாமை கட்டிடம் வரை பேரணி நடந்தது. பேரணிக்கு மாநில துணை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்ரமணியம் பேரணியை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சுரேஷ் பேசினார்.

    இந்த பேணியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆட்குறைப்பு அரசாணைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.

    தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலமாக செயல் படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • உண்ணாவிரதம் போராட்டம் பாளை சித்த மருத்துவக்கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
    • போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பாளை சித்த மருத்துவக்கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் பால்ராஜ், பிரகாஷ், பால் கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கி னர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பிரம்ம நாயகம், ஸ்டான்லி, ராம சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் மாணிக்கராஜ் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு சிறப்புரையாற்றினார்.

    இதில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    தொடர்ந்து கோரிக்கை களை வலியுறுத்தி வருகிற 24-ந்தேதி மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    முடிவில் காளிராஜ் நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் மாரிராஜா, வசந்தி, அல்லா பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாத புரம் மாவட்டத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 31.3.2003 முன்பு வரை தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய பென்சன் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வுக்கு பிறகு அவர்கள் எந்த உறவுகளையும் சார்ந்து இருக்க தேவையில்லை. தன்னுடைய இறுதிக்காலத்தில் நிம்மதி யாக இருப்பார்கள்.

    மத்திய அரசின் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எதிரான கொள்கையால் கடந்த 31.3.2003 பிறகு பணியமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இந்த திட்டம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான திட்டம். பழைய ஓய்வூதிய திட்டத்தில் கீழ் பணத்தை சேமிக்கும் பணியாளர்கள் சேமித்த தொகையில் 6 மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றுக்கொண்டு அதனை மீண்டும் செலுத்தலாம். இது குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமண செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ஆனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சேமித்த பணத்தை பணி ஓய்வு பெறும் வரை சிறிதளவு கூட முன்தொகையாக பெற முடியாது.

    இதனால் தங்களுடைய குழந்தைகளின் படிப்புப் செலவு, திருமண செலவு போன்ற அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.

    மேலும் பணி ஓய்வுக்கு பிறகு இவர்களுக்கு மாதாந்திர ஓய்வவூதியம் இல்லாததால் உணவு, உடை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவை களுக்கு மற்றவர் களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் ஓய்வுக்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து வருபவர்கள் பெரும் மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறார்கள்.

    கடந்த ஆட்சியில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டி போராடிய ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக பேசிய மு.க.ஸ்டாலின் ஆசிரியர், அரசு ஊழியர்க ளின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேராவூரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிலுவை அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

    பேராவூரணி:

    பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    நிலுவை அகவிலைப்படியை உடன டியாக வழங்க வேண்டும்.

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை வழங்க வேண்டும் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    த.அ.ஊ.சங்க வட்ட தலைவர் ஏ.நாவலரசன் தலைமை வகித்தார்.

    த.அ.ஊ. சங்க மாவட்ட இணை செயலாளர் ஸ்ரீமகேஷ் விளக்க உரையாற்றினார்.

    வருவாய்துறை அலுவலர்கள் ரெத்தினம் மற்றும் மனோகரன் பேசினர்.

    நிறைவாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த அஸ்ரப் அலி நன்றி கூறினார்.

    • பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தல்
    • ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்ட கிளை தலைவர் இல.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர் களுக்கான பணி விதி வெளியிடுதல், ஊதிய உயர்வு, புதிய பணியிடம் ஏற்படுத்துதல், பதவி உயர்வு பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு மற்றும் கோஷங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட கிளை தலைவர் தென்னரசு துணை தலைவர் முத்துவேலன் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சண்முகம் பரசுராமன் சரவணன் தேவராஜ் திவாகர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    இறுதியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • நேரம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தபோது எங்களுக்கு செய்து தருவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைத் தான் நிறைவேற்றி தர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை முதல்கட்ட பேச்சு வார்த்தையை நேற்று முன்தினம் நடத்தியதைத் தொடர்ந்து, 2-ம் கட்டக் கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குனர் க.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டி.என்.எஸ்.ஜாக்டோ) சார்பில் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

    அதே நேரம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து டி.என்.எஸ்.இ ஜாக்டோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தபோது எங்களுக்கு செய்து தருவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைத் தான் நிறைவேற்றி தர வேண்டுமென வலியுறுத்துகிறோம். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நேரடி கவனம் செலுத்த வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கவே போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    பள்ளிக் கல்வித் துறையுடன் தற்போது நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டி.பி.ஐ) வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை)ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2004-ம் ஆண்டு ஜனவரில் இருந்து புதிய பென்சன் திட்டம்
    • நாளை ராம்லீலா மைதானத்தில் மெகாபேரணி

    டெல்லி ராம்லீலா மைதானத்தில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் சங்கங்கள் பேரணிநடத்த உள்ளனர். இந்த பேரணி நாளை நடைபெற உள்ளது.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு அமைப்பு/தேசிய கூட்டு நடவடிக்கை கவுன்சில் ஆகியவை இந்த பென்சன் உரிமை மகாபேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இதுகுறித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இந்திய ரெயில்வே ஆண்களுக்கான பெடரேசன் பொது செயலாளர் ஷிவ் கோபால் மிஷ்ரா கூறுகையில் ''2014-ம் ஆண்டு ஜனவரி 1-ல் இருந்து புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு, அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியம் திட்டத்தில் இருந்து புதிய ஓய்வூதியத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். லட்சக்கணக்கான ஊழியர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். நாளை காலை 9.30 மணிக்கு பேரணி நடைபெறும்'' என்றார்.

    மத்திய, மாநில, ரெயில்வே, ஆசியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • ஓய்வூதியர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகரில் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் நலச்சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சங்கத்தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது.

    இக்கூட்டத்தில் மாநில தலைவர் ராகவன் கலந்து கொண்டு பேசினார். மாநில இணைச்செயலாளர் முத்துக்குமாரசாமி வாழ்த்தி பேசினார். மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தா தொகையை ரூ.300 ஆக உயர்த்தியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் ரூ.1½ லட்சம் நிதி வழங்க வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். ெரயில் பயணத்தில் முதியோர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த சலுகைகளை வழங்க வேண்டும்.

    அரசு பஸ்களில் 50 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும். முதியோருக்கு தனியாக அமைச்சரவை ஏற்படுத்துவதுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சரிடம் இருந்து விருது பெற்ற கலெக்டர் ஜெயசீலனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் சங்க செயலாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

    ×