என் மலர்
நீங்கள் தேடியது "பழைய ஓய்வூதிய திட்டம்"
- கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
- 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்த வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்) மீண்டும் அமல்படுத்தப்படும் என கடந்த 3-ந்தேதி அறிவித்தார்.
இந்த நிலையில் ஜனவரி 1-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டத்தின்படி, கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும். 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு தரப்படும். பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும். ஓய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.
- ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர் - அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது பாஜக ஆட்சிதான்
- நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பிஜேபி அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?
"அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஓய்வூதியம் ஏமாற்று வேலை. 5 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தற்போது தேர்தல் வருவதால் ஓய்வூதியம் குறித்து அறிவிப்பை வெயிட்டுள்ளார்கள்" என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஓய்வூதியம் அறிவிப்பு தொடர்பாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
"தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை 'ஏமாற்று வேலை' என்று கூறும் நயினார் நாகேந்திரன் அவர்களே!ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர் - அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது பாஜக ஆட்சிதான். நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பிஜேபி அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? பிஜேபி ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை இதுவரையில் அமல்படுத்தியதுண்டா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.






