என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • நிதிஷ் குமார் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
    • மோடி அமைச்சரவையில் மத்திய மின்சார துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

    பீகார் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டு பாஜகவின் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி பெரு வெற்றி பெற்றது.

    இந்நிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பீகாரைச் சேர்ந்த மூத்த தலைவருமான ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமை மற்றும் பீகாரில் நிதிஷ் குமார் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்.கே.சிங் செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.

    இந்தச் சூழலில் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி பாஜக உயர்மட்ட குழு அவரை இடைநீக்கம் செய்துள்ளது.

    முன்னதாக 2,400 மெகாவாட் பாகல்பூர் மின் திட்டத்தை அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துக்கு பிகார் அரசு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ரூ. 60,000 கோடி முதல் ரூ. 62,000 கோடி ஊழல் நடந்ததாக ஆர்.கே.சிங் குற்றம் சாட்டியிருந்தார்.

    மேலும் பீகார் தேர்தலில் குற்றப்பிண்ணனி கொண்ட தலைவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று ஜனதா தளத்தின் ஆனந்த் சிங் மற்றும் பிகார் துணை முதல்வரான பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பதிவு வெளியிட்டிருந்தார்.

    மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தூதராகவும், மத்திய உள்துறை செயலாளராகவும் பணியாற்றிய ஆர்.கே.சிங், 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

    2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பீகாரில் உள்ள அவுரா தொகுதியில் இருந்து மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றார்.

    2017 ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில் மத்திய மின்சார துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார். 

    • பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்துள்ளது.
    • மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் இன்று என்ன செய்கிறார்?

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    பணகுடி, வள்ளியூர், கூடங்குளம், திசையன்விளை உள்ளிட்ட ராதாபுரம் தொகுதியில் நடத்தப்பட்ட 15 நலம் காக்கும் முகாம்களிலும் காலை சிற்றுண்டி முதல் மதிய உணவு, மாலை தேநீர் வரையிலும் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.

    முகாமில் பங்கேற்றோருக்கு முழு உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடல்நிலையை பதிவு செய்த தனிப்பட்ட பைல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை பரிசோதனைகளுக்கு வழக்கமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இங்கு மக்கள் ஒரு ரூபாயும் செல வில்லாமல் சேவையைப் பெற்றுள்ளனர்.

    பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. அவர் ஒரு ஆலோசனை வழங்குபவர் தான். ஆனால் அவருக்கு களப்பணியில் உள்ள உண்மையான நிலைமை தெரியாது. அவர் யோசனை சொல்வார். ஆனால் அது அவர் சொந்த ஊரிலேயே செல்லுபடியாகவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?.

    பீகார் தேர்தலால் வாரிசு அரசியல் தோல்வியடைந்து விட்டது. அது தமிழ்நாட்டிலும் தொடரும் என பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது. மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் இன்று என்ன செய்கிறார்?. ராணுவ மந்திரியின் மகன் என்ன செய்கிறார்?. பா.ஜ.க.வில் 287 வாரிசுகள் பதவியில் உள்ளனர். இத்தனை வாரிசுகளை வைத்திருக்கும் பா.ஜ.க. ஒரே ஒரு வாரிசு வைத்திருக்கும் தி.மு.க.வை குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசு மீது குறை சொல்கிறார்கள்.
    • தேர்தல் நேரத்தில் தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கிறது என்று கூறுகிறார்கள்.

    நெல்லை மாவட்ட பா.ஜா.க அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 190 இடங்களுக்கு மேலாக முன்னிலை வகித்து வருகிறது. இது ஏற்கனவே அங்கு நடைபெற்றுள்ள ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதனை நான் வரவேற்கிறேன்.

    நெல்லை தொகுதியில் தி.மு.க. தோற்க கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். நெல்லை தொகுதியை பொருத்தவரை நான் கேட்ட கல்லூரி உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி தந்துள்ளார். தனிப்பட்ட முறையில் எனக்கும், அவருக்கும் உள்ள நட்பு ஆழமானது. அதற்காக கட்சிகள் என்று வரும்போது விட்டுக் கொடுக்க முடியாது.

    பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தல் ஆணையமும் பங்கு வகித்ததால் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி என்றால் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக இருந்ததா?

    பீகாரில் 65 லட்சம் வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். அதில் சுமார் 30 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர். 28 லட்சம் வாக்காளர்கள் வரை வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள். பின்னர் நீக்க தானே செய்வார்கள்.

    தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை பொருத்தவரை தமிழகத்தில் தி.மு.க. வட்ட செயலாளர்களை வைத்துதான் இந்த வாக்காளர் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக அதிகாரிகளுக்கு நிர்பந்தம் கொடுக்கிறார்கள். அதிகாரிகள் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் மனு அனுப்பியுள்ளேன்.

    டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசு மீது குறை சொல்கிறார்கள். வெளிநாடுகளில் இது போன்ற சம்பவம் நடந்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றாக திரண்டு ஆதரவாக பேசுவார்கள். ஆனால் இந்தியாவில் தான் இப்படி குறை கூறும் சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு காரணம் இங்கு இருப்பவர்களின் தேசப்பற்று குறைந்துவிட்டது தான்.

    தேர்தல் நேரத்தில் தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கிறது என்று கூறுகிறார்கள். பீகாரில் தேர்தல் நடந்தது. டெல்லியில் கொண்டு வெடித்தது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனது வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டது குறித்து நான் அரசியலாக்க விரும்பவில்லை. அதேநேரம் எனக்கு யாரும் வெடிகுண்டு மிரட்டல் விடவில்லை.

    அ.தி.மு.க.வில் ஒரு காலத்தில் ஜே அணி, ஜா அணி என்று இருந்தது. பின்னர் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தார்கள். மிகப்பெரிய வெற்றியை பெற்றார்கள். அதேபோன்று தற்போது அ.தி.மு.க.வினர் அணிகளாக உள்ளனர். இது அ.தி.மு.க. வில் வழக்கமாக நிகழக்கூடிய ஒன்றுதான்.

    அதே நேரத்தில் எங்கள் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கட்சி. தற்போது பீகாரில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதனை கொண்டாடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
    • காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

    பீகாரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

    மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 24 தொகுதிகளைக் கொண்ட சீமாஞ்சல் பகுதியில் 10 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது

    காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். 

    • தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.
    • காங்கிரஸ் கூட்டணி 68 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறு 46 மையங்களில் பலத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

    தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் என்.டி.ஏ. கூட்டணி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 68 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    ராகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகிக்கிறார். 

    • மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பீகார் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.

    வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 'விவிபாட்' எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் 'சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டது.

    இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கியது. மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

    எனவே, பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று இன்று தெரிந்துவிடும்.

    • வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்தபடி ஒரே மொபட்டில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது வீட்டை புகைப்படம் எடுத்துள்ளனர்.
    • நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஏதும் விடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் உளவுத்துறை போலீசார் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனிடையே சமீப காலமாகவே தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. நேற்று அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 3 தி.மு.க. அமைச்சர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் நேற்று நெல்லையில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை மர்ம நபர்கள் நள்ளிரவில் நோட்டமிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள நயினார் நாகேந்திரன் வீட்டினை சுற்றி 3 புறங்களிலும் சாலைகள் செல்கின்றன. இந்நிலையில் இந்த சாலையில் நேற்று நள்ளிரவு 11.35 மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் ஹெல்மெட் அணிந்தபடி மொபட்டில் வந்துள்ளனர். அவர்கள் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு திரும்பும் சாலையில் மூலையில் நின்றபடி அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளனர். இதனை அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கவே, அவரது உதவியாளர்கள் மூலம் வீட்டை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.

    அப்போது வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்தபடி ஒரே மொபட்டில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது வீட்டை புகைப்படம் எடுத்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அந்த நபர்கள் மீண்டும் சிறிது நேரம் கழித்து அங்கு வந்து வீட்டை நோட்டமிட்டு சென்ற காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

    இதைத் தொடர்ந்து பெருமாள்புரம் போலீசாருக்கு இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஏதும் விடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் உளவுத்துறை போலீசார் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அவர் அறந்தாங்கியில் நடந்த பிரசார பயணத்தில் கலந்து கொண்டார். அங்கும் அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    இதனிடையே நேற்று நெல்லையில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்கள் நோட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் யாரும் நேற்று வீட்டில் இல்லை. அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் வெளியூருக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லை. இதனால் வந்த மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நோக்கத்துடன் நோட்டமிட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் பயங்கர சதி திட்டத்துடன் நோட்டமிட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • டாக்டர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
    • எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்றாக இணைந்து இதனை வேரில் இருந்து பிடுங்கி எறிய வேண்டும்.

    கோவை:

    பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவையில் வருகிற 19-ந் தேதி தென்னிந்திய இயற்கை விவசாய சம்மேளம் சார்பில் இயற்கை விவசாய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகிற 19-ந்தேதி பிரதமர் மோடி கோவைக்கு வருகிறார்.

    இந்த மாநாட்டில் பிரதமர் மோடி 5 ஆயிரம் இளம் இயற்கை விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். தென்னிந்தியாவில் பணிபுரியும் 50 இயற்கை விஞ்ஞானிகளை சந்தித்து பேசுகிறார். நாட்டு மாடுகளை ஊக்குவிக்க வேண்டும். பிரதமர் விவசாய நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்கிறார். வேறு எந்த கட்சி நிகழ்ச்சிகளும் கிடையாது.

    மருத்துவர்கள் பயங்கரவாதிகளாக செயல்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் இந்திய பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் குஜராத்தில் உள்ள டாக்டர்கள் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம், அவர்கள் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் ரசாயனம் கலந்து பலரை கொல்வதற்கும் சதி திட்டம் தீட்டியுள்ளனர். டாக்டர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.

    மும்பையில் நடந்தது போன்று டெல்லியில் நடத்த வேண்டும் என்பதற்காக இதை செய்தோம் என தெரிவித்துள்ளனர். எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்றாக இணைந்து இதனை வேரில் இருந்து பிடுங்கி எறிய வேண்டும் என்றார். 

    • தி.மு.க.வை சேர்ந்த சேகர்பாபு பா.ஜ.க.வை பற்றி பேச வேண்டியதில்லை.
    • அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

    புதுக்கோட்டையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை NDA-வில் இணைப்பது பற்றி காலம் தான் முடிவு செய்யும்.

    * அமைச்சர் சேகர்பாபு சொல்வது உண்மைதான். பா.ஜ.க.வில் 3 ஆண்டுகள் தான் பதவி.

    * 3 ஆண்டுகளுக்கு பின் ஒரு வேளை பதவி நீட்டிக்கப்படலாம்.

    * தி.மு.க.வை சேர்ந்த சேகர்பாபு பா.ஜ.க.வை பற்றி பேச வேண்டியதில்லை.

    * அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

    * நடிகர் விஜயின் த.வெ.க.வை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

    * த.வெ.க. இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக மக்கள் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தி.மு.க.வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளனர்.

    பட்டுக்கோட்டை:

    "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற பெயரில் பா.ஜ.க. கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு வருகை தந்தார். பின்னர் அவர் தலைமை தபால் நிலையம் அருகே பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து நிருபர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:-

    எனது சுற்றுப்பயணம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்பதை தேசிய தலைமையும், கூட்டணி தலைவரும் முடிவு செய்வார்கள்.

    பா.ஜ.க.வை பொறுத்த வரை தீவிரமாக யாரையும் எதிர்ப்பதில்லை. கட்சியின் கொள்கை ரீதியாக மட்டுமே எதிர்க்கிறோம்.

    தனிப்பட்ட முறையில் இதுவரை யாரையும் எதிர்ப்பது கிடையாது. இனிமேலும் அது இருக்காது. கரூர் சம்பவம் நடந்தபோது அங்கு போலீஸ் பாதுகாப்பு குறைவாகவே இருந்தது. எதிர்க்கட்சிகள் கூட்டம் போடும் எந்த இடத்திலும் போலீசார் நிற்பதில்லை. மதுரை இந்து முன்னணி மாநாட்டில் 5 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். ஆனால் அங்கு ஒரு போலீசார் கூட இல்லை.

    எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு முறையாக அனுமதி தர போலீசார் மறுக்கிறார்கள். கோர்ட்டுக்கு சென்ற பின்னர் தான் அனுமதி வழங்கப்படுகிறது. இதைத்தான் நான் கூறி வருகிறேன். த.வெ.க.வுக்கு ஆதரவாக நான் பேசவில்லை.

    தமிழக பா.ஜ.க. தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான். ஆகவே எனக்கு 6 மாதங்கள் முடிந்துவிட்டதால் மீதம் 2½ ஆண்டுகள் தான் பதவிக்காலம் உள்ளது.

    ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலம் முடிய இன்னும் 2½ மாதங்கள் தான் உள்ளது. அதனால் தி.மு.க. ஆட்சி முடிய கவுண்டவுன் ஆரம்பமாகி விட்டது.

    தி.மு.க. கூட்டணி பலமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி கூட்டணி பலம் தான் வெற்றிக்கு காரணம் என்றால் 2011-ல் தி.மு.க. தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

    தற்போது தமிழக மக்கள் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதுபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

    தி.மு.க.வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளனர். எனவே 2026-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மாற்றம் உறுதி.

    த.வெ.க.வுக்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறுமா என்று தெரியாது. ஒரு கவுன்சிலர் கூட த.வெ.க.வுக்கு கிடையாது. அப்படி இருக்கையில் தமிழகத்தில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என கூறுவது நகைப்பிற்குரியது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் அருகிலேயே கஞ்சா விற்கப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயற்கை விவசாயம் குறித்த மாநாடு 19-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • மாநாடு முடிந்து தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை மோடி சந்தித்து பேச வாய்ப்பு.

    பிரதமர் மோடி கடைசியாக கடந்த ஜூலை மாதம் தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு வருகை தந்தார்.

    3 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் மோடி வருகிற 19-ந் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயம் குறித்த மாநாடு 19-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த தகவலை தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

    மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 19-ந் தேதி கர்நாடக மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அன்று மதியம் கொடிசியாவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

    சுமார் ஒரு மணி நேரம் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். இந்த ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே மோடி பங்கேற்க உள்ளதாகவும், அதன்பிறகு கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மாநாடு முடிந்து தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை மோடி சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பிரதமர் மோடியின் தற்போதைய தமிழக பயணம் பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

    இதனால் பா.ஜ.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர். மீண்டும் பீகாரில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில், அது அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர்.

    பீகார் தேர்தல் முடிவடைந்த சூழலில், பா.ஜ.க.வின் பார்வை அடுத்து தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்தநிலையில் மோடி வருகை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இனி வரும் காலங்களில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பயணம் தமிழகத்தில் தொடரும் என பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி வருகை தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது இதுவரை தங்களுக்கு முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை எனவும், அறிவிப்பு வந்தால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறினர்.

    • அதிமுக ஆட்சியில் தான் சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி கிடைத்தது.
    • மத்திய அரசிடம் உங்களால் அனுமதி வாங்க முடியுமா?

    கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி பிரதமர் மோடி தான் எங்கள் டாடி என்று பேசியது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்த நிலையில் 'மோடி தான் எங்கள் டாடி' என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் பேசியுள்ளார்.

    சிவகாசியில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "அதிமுக ஆட்சியில் தான் சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி கிடைத்தது. மத்திய அரசிடம் உங்களால் அனுமதி வாங்க முடியுமா? மத்திய அரசில் இருப்பது உங்க ஐயா இல்லை. எங்கள் ஐயா மோடி தான் இருக்கிறார். எங்கள் டாடி தான் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

    ×