என் மலர்
நீங்கள் தேடியது "BJP"
- புகாரின் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
- இது அப்பட்டமான ஜனநாயக விரோத பாசிச அடக்குமுறை செயலாகும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா பவர் திறப்பு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றும் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியதற்கு பதிலடி கொடுக்கின்ற வகையில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எதிர்ப்பதோடு, இந்திய அரசையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த பேச்சு இந்திய அரசுக்கு எதிராக மக்களை தூண்டுகிற வகையில் இருப்பதாக கூறி வடகிழக்கு மாகாணமான அசாம் மாநிலம், கவுகாத்தி அருகில் உள்ள காவல் நிலையத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இது அப்பட்டமான ஜனநாயக விரோத பாசிச அடக்குமுறை செயலாகும்.
இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இன்று மாலை 4 மணிக்கு தங்கள் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நாளை காலை 11 மணியளவில் ஈரோடு மாநகரில் எனது தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் மூலம், தலைவர் ராகுல் காந்தி மீது தொடுத்திருக்கும் பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை முறியடிக்க, இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் திரண்டு வரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- எம்.பி.பி.எஸ்.இடங்கள் ஆண்டுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது.
- ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
சென்னை:
முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காங்கிரசின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை நிர்ணயிக்கும் உச்ச பட்ச அமைப்பான என்.எம்.சி. தேசிய மருத்துவ மேலாண்மை கவுன்சில் அனுப்பியுள்ள முன்னெச்சரிக்கை தற்காலிக சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏறக்குறைய 60 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட தற்சமயம் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 105 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் சேர்ந்து கொண்டிருந்த மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்.இடங்கள் ஆண்டுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது.
இந்தியா முழுவதும் ஒரே ஒரு எய்ம்ஸ் இருந்த நிலை மாறி பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்கி வருகிறது என்று தெரிவித்து உள்ளது. இதையெல்லாம் முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசியல் கட்சிகள் தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
- உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததை அடுத்து அந்த விவரங்களை வெளியிட்டது.
இந்தியாவின் 18வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பின்னர், தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு 240 இடங்கள் கிடைத்தது. ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைந்தது.
இந்நிலையில் இந்த 2024 பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான செலவு அறிக்கையை பாஜக இன்னும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, அரசியல் கட்சிகள் தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இதன்படி அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் செலவு அறிக்கைகளை 4.9.2024 க்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் பாஜக கடைசி தேதி கடந்தும் இன்னும் அறிக்கை சமர்பிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை விதிகள் ஆளும் கட்சியான பாஜகவுக்குப் பொருந்தாது போல? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு தேர்தல் பத்திர முறையை அறிமுகப்படுத்தியது. கடந்த வருடம் பிப்ரவரியில் இந்த முறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது.
மேலும் எந்தெந்த கட்சி எவ்வளவு வாங்கியது என எஸ்பிஐ வங்கி நன்கொடை விவரங்களை வெளியிட உத்தரவிடப்பட்டது. ஆனால் காலதாமதம் செய்த எஸ்பிஐ, உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததை அடுத்து அந்த விவரங்களை வெளியிட்டது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6060 கோடி வரை நன்கொடை பெற்றதும் தெரியவந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்த புகாரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- வாக்கு அரசியலுக்காக வழங்கினால் அதனை கடுமையாக எதிர்ப்போம்.
- மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்வோம்.
நாமக்கல்:
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு ரூ.10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதை கட்டி முடிக்க இன்னும் பல ஆண்டுகளாகும். தி.மு.க. தமிழகத்தில் அடிப்படை தேவைகளுக்கு செலவு செய்வதில்லை. தேவையில்லாதவைகளுக்கு அள்ளித்தெளித்துக் கொண்டிருக்கிறது. நான் தமிழகத்திற்கு வந்திருப்பது அரசியலை தூய்மை செய்வதற்காக. ரூ.3 லட்சம் கோடி பட்ஜெட் போடுகிறார்கள் என்றால், ரூ.60 ஆயிரம், ரூ.70 ஆயிரம் கோடிகள் எதற்காக செலவு செய்கிறார்கள்? என்பதே தெரியவில்லை. மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்வோம். வாக்கு அரசியலுக்காக வழங்கினால் அதனை கடுமையாக எதிர்ப்போம்.
தமிழகத்தில் திராவிட ஆட்சியால்தான் அருந்ததிய மக்கள் மருத்துவ படிப்பிற்கு அதிக அளவில் சேர முடிகிறது என அமைச்சர் மதிவேந்தன் கூறி உள்ளார். சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது? தி.மு.க. 5 முறை ஆட்சியில் இருந்தது. தற்போது 6-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. இன்றைக்கும் பட்டியல் சமுதாய மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர். 75 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தி.மு.க. பட்டியல் சமுதாய மாணவர்களை உயர்த்துவதற்கு என்ன செய்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இருவரின் அறிக்கையும் ஒரே மாதிரி இருப்பதாக கூறப்பட்டது.
- காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான கள்ளக்கூட்டணி நொடிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் ஜகபர் அலி மரணத்தை கண்டித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டார். இருவரின் அறிக்கையும் ஒரே மாதிரி இருப்பதாகவும், அறிக்கைகள் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அறிக்கைகள் ஒரே மாதிரி இருப்பது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையே கள்ளக்கூட்டணி இருப்பதை காட்டுவதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு பொம்மலாட்டம் நடக்குது!*
'அரசியல்ல வட்ட செயலாளர் பதவி மட்டும்தான் இருக்கு. சதுர செயலாளர் பதவியெல்லாம் கிடையவே கிடையாது' என டயலாக் பேசும் வட்ட செயலாளர் வண்டு முருகன் காமெடியை போல, நிஜ அரசியலில் கள்ளக் கூட்டணி என்ற சொல்லை ஏற்படுத்தித் தந்த பெருமைக்குரியவர்(?) எடப்பாடி பழனிசாமி!
அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணியை நொடிக்கொரு முறை இந்த நாட்டுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். புதுக்கோட்டை திருமயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி மரணம் தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அப்பட்டமாக ஒரே வரிகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுச் சந்தி சிரிக்க வைத்திருக்கிறார்கள். அண்ணாமலை நேற்று போட்ட பதிவை அப்படியே வழிமொழிந்து, 'பசையே' இல்லாமல், காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பத்துவரி பதிவைக் கூட சொந்தமாக எழுதத் தைரியமில்லாமல், மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டு வந்த பழனிசாமி, டெல்லியிலிருந்து பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு எழுதிக்கொடுத்த பதிவை அப்படியே நகல் எடுத்து வெளியிடும் அளவிற்கு பாஜகவின் அடிமட்ட அடிமையாகவே மாறிவிட்டார் பழனிசாமி. இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரியான அறிக்கை விடும் வழக்கத்தை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுக செய்ததை சமூக வலைத்தளம் முழுவதும் கேலிப் பொருளாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பழனிசாமியின் நெருங்கிய ஈரோட்டு உறவினர் இடங்களில் மோடி அரசின் வருமான வரித்துறை சோதனை நடத்தி ஆவணங்களை அள்ளிச் சென்ற பிறகு, பழனிசாமிக்கு 'பய' காய்ச்சல் வந்துவிட்டதா? டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் முகவரியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையிலேயே அதிமுகவின் அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் பழனிசாமி வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ, இரட்டை இலை என பழனிசாமி தினமும் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்குப் பதில் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையை டெல்லிக்கோ அல்லது சென்னை தியாகராயர் நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கமலாலயம் அலுவலகத்திலோ மாற்றிக் கொள்ளலாம்.
அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணி பிரதமர் மோடி நடத்தும் அப்பட்டமான பொம்மலாட்ட நாடகம். அச்சுபிசகாமல் ஆடும் பொம்மை பழனிசாமி!
"ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்பப் புதுமையாக இருக்குது. நாலுபேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே" என்ற திரைப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது!, என்று குறிப்பிட்டுள்ளார்.
- டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
- 2020 தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியை பிடித்தது.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பல ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
கமலா நகர் வார்டில் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்ட கபில் நாகர், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருடன் 100க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்கும் கலந்து கொண்டார்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி 62 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 இடங்களில் மட்டும் தான் வெற்றியை பெற்றது.
- பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்றார்.
- கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும் என்றார்.
மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.
கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமகோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஐடி இயக்குனர் காமகோடியின் கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
ஐஐடி இயக்குனர் காமகோடி ஒரு வகுப்பறையில் வகுப்பு எடுத்து நீங்க குடிங்க என்று சொல்லவில்லையே. அவரின் தனிப்பட்ட கோட்பாட்டை சொல்கிறார். இதிலும் அரசியலாக்க நினைத்தால், அந்த மனிதர் எதற்காக இத்தனை வேலைகளை செய்கிறார் என்பதை மறந்து ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அரசியல் செய்கிறார்கள்.
இவ்வாறு கூறினார்.
- தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வர வேண்டும்.
- தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக உட்கட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தென்காசிக்கு ஸ்ரீதர் வேம்புவின் நெருங்கிய நண்பர் ஆனந்த் அய்யாசாமி, கோவை மேற்கு - சந்திரசேகர், நெல்லை வடக்கு முத்து பலவேசம், சேலம்- சசி. தேனி - ராஜபாண்டியன் உட்பட நீலகிரி, அரியலூர், காஞ்சி, குமரி, கடலூர், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இகுதுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாஜகவின்
புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The election of representatives for the largest political party in the world happens through a democratic process, starting with the Booth President, the Mandal President, and the District President and ending with the National President of @BJP4India. Happy to have… pic.twitter.com/Gqp3mDWTnC
— K.Annamalai (@annamalai_k) January 19, 2025
- கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட நபருக்கு புதிதாக பொறுப்பு வழங்கியதால் நிர்வாகிகள் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.
- மாநில தலைமையின் முடிவில் உடன்பாடு இல்லாததால், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட நபருக்கு புதிதாக பொறுப்பு வழங்கியதால் நிர்வாகிகள் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.
மாநில தலைமையின் முடிவில் உடன்பாடு இல்லாததால், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேரின் பெயரை அதிஷி குறிப்பிட்டார்.
- மூன்று பேரும் பாஜகவின் பயிற்சி பெற்ற குண்டர்கள் மற்றும் குற்றவாளிகள் என்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லிக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று பிரசாரத்திற்கு சென்ற கெஜ்ரிவாலின் கார் மீது கம்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
BJP Goons try to kill Arvind Kejriwal. Huge stones thrown at the Car of AAP National Convener.Two days ago, Security Agencies had warned of a terror attack against Arvind Kejriwal and had asked Central Govt to increase his security. BJP working with Terror Groups? pic.twitter.com/mQi4Wg3l8p
— Dr Ranjan (@AAPforNewIndia) January 18, 2025
தாக்குதல் வீடியோவை பகிர்ந்த ஆம் ஆத்மி, கெஜ்ரிவாலை எதிர்த்து புது டெல்லி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவின் குண்டர்கள் செங்கல் மற்றும் கற்களால் தாக்கியதாகவும், அதனால் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய முடியாதபடி காயப்படுத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டியது.
#WATCH | Delhi CM Atishi says "It is clear that criminals and goons were sent to kill Arvind Kejriwal. The second person involved in the attack is Rohit Tyagi, who constantly stays with Pravesh Verma and has been involved in campaigning for Pravesh Verma. He is also a criminal.… pic.twitter.com/5zF6pPpMMo
— ANI (@ANI) January 19, 2025
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அதிஷி, அவர்கள் வீசிய கற்கள் மேலே விழுந்திருந்தால் அவர் மரணித்திருப்பார்
தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பர்வேஷ் வர்மாவுடன் தொடர்புடைய மூன்று பேரின் பெயரை அதிஷி குறிப்பிட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்ல பயிற்சி பெற்ற தேர்ந்த குற்றவாளிகள் மற்றும் குண்டர்கள் பாஜகவால் அனுப்பப்பட்டனர் என்பது தெளிவாகிறது என்று கூறினார்.
#WATCH | Delhi CM Atishi says "It is clear that criminals and goons were sent to kill Arvind Kejriwal. The second person involved in the attack is Rohit Tyagi, who constantly stays with Pravesh Verma and has been involved in campaigning for Pravesh Verma. He is also a criminal.… pic.twitter.com/5zF6pPpMMo
— ANI (@ANI) January 19, 2025
கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல் நடத்திய மூவர் ராகுல், ரோகித், சுமித் ஆகியோர் ஆவர். ராகுல் எப்போதும் பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவுடன் காணப்படுகிறார் மற்றும் அவரது பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ராகுல் மீது 7 ஆண்டு சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் திருட்டு முயற்சி வழக்குகள் உள்ளன.
ரோகித்தும் பிரவேஷ் வர்மாவுடன் தொடர்ந்து தங்கி, அவரின் பிரச்சாரத்தில் வேலை செய்பவர். ரோகித் மீது 2011 இல் ஒரு திருட்டு வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது.
கெஜ்ரிவாவின் கார் மீது கற்கள் வீசப்பட்டபோது அங்கிருந்த மூன்றாவது நபர் சுமித். அவர் மீதும் திருட்டு, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
மூன்று பேரும் பாஜகவின் பயிற்சி பெற்ற குண்டர்கள் மற்றும் குற்றவாளிகள். எனவே தேர்தல் தோல்வி பீதியில், பாஜக இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்ல முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது என்று அதிஷி குற்றம் சாட்டினார்.
- சிறுபான்மையின மக்களின் வாக்குகளை குறிவைத்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. தனியாக நின்றது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் தமிழகத்தில் என்ன மாற்றம் நடந்து விடப்போகிறது.
மதுரை:
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை வருகை தந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூரில் பேசுகையில் திருப்பதி சென்றால் ஒரு நாள் முழுவதும் காத்திருக்கிறார்கள். இங்கே சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாதா? என்று தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் லட்சணம் இதிலிருந்தே தெரிகிறது.
பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிறது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சவுகரியங்களை கோவில் வளாகத்தில் ஏற்படுத்த வேண்டும். 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை இருக்காது. தி.மு.க. ஆட்சி இன்னும் 15 அமாவாசைகள் தான் தாங்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை எத்தனை அமாவாசை வரும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். ஐந்து முறை ஆண்ட கட்சியான அ.தி.மு.க., அண்ணாமலை சொன்னதால்தான் கூட்டணி முறிவு ஏற்பட்டது என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன். சிறுபான்மையின மக்களின் வாக்குகளை குறிவைத்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. தனியாக நின்றது.
தி.மு.க. மீது பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தால் மக்களின் கோபம் தெரியும். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்த சமய அறநிலையத்துறையை அகற்றுவோம் என்ற எங்களது கருத்துக்கு எத்தனை கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் என்று தெரியவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கொள்கை ரீதியில் இணையும் கட்சியுடன் தேர்தலை சந்திக்க உள்ளோம். பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பேசியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின்போது 36 பக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் கண், காதுகளை திறந்து வைத்து பார்க்க வேண்டும். பிப்ரவரி மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் தமிழகத்திற்கு பெரிய அளவிலான திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்படும். ஆனால் வேண்டுமென்றே இவர்கள் ஆட்சியினுடைய லட்சணத்தை மறைப்பதற்காக தினமும் மத்திய அரசின் மீது குறை சொல்வதை மட்டுமே ஒரு முழு நேர வேலையாக தி.மு.க. செய்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் தமிழகத்தில் என்ன மாற்றம் நடந்து விடப்போகிறது. இடைத்தேர்தல், இடைத்தேர்தலுக்கு இடைத்தேர்தல், இப்போது ஒரு தேர்தல் என ஐந்து வருடத்தில் நான்கு முறை மக்கள் வாக்களித்தால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் குறையும், தேர்தலால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
பிரதமர் தமிழகம் வரும் போது, முதலமைச்சர் போட்டி போட்டுக்கொண்டு சந்திக்கிறார். இந்த சந்திப்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அரசின் மீது இருக்கும் வெறுப்பை மறைப்பதற்காகவே கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். கவர்னர் குறித்து அவதூறாக தி.மு.க.வினர் போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியே கூறியிருக்கிறார். பா.ஜ.க. நிர்வாகிகள் மீது போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிதாக 3 பேருக்கு நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியை தர கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளது.
- புதுச்சேரி பா.ஜ.க. அலுவலகம் கடந்த சில நாட்களாக பரப்பரப்பாக காணப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 10 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். இதில் முதலமைச்சராக ரங்கசாமி, அமைச்சர்களாக தேனீ.ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.
பா.ஜ.க. சார்பில் 6 எம். எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். இதில் சபாநாயகராக ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சராக நமச்சிவாயம், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக சாய்ஜெ. சரவணன்குமார், முதலமைச்சரின் பாராளுமன்ற செயலராக ஜான்குமார் ஆகியோர் பதவியில் உள்ளனர்.
மேலும் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவதற்காக மாநிலத்தில் தலைவர் பதவி முதல் அனைத்து அணி தலைவர் பதவிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
புதிய மாநில தலைவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் பா.ஜ.க. அமைச்சர் ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து அதிருப்தியில் உள்ள 3 எம். எல்.ஏ.,க்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி தர கட்சி தலைமை தயாராகி வருகிறது.
இதுமட்டுமின்றி தற்போது உள்ள நியமன எம்.எல்.ஏ.,க்கள் 3 பேரையும் ராஜினாமா செய்ய வைத்து, புதிதாக 3 பேருக்கு நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியை தர கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்தான், காரைக்காலை சேர்ந்த ராஜசேகர் மற்றும் மீனவர் அல்லது வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரும் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் புதுச்சேரி பா.ஜ.க. அலுவலகம் கடந்த சில நாட்களாக பரப்பரப்பாக காணப்படுகிறது.