என் மலர்
நீங்கள் தேடியது "BJP"
- மாவட்டம் தோறும் 'கோரிக்கை பெட்டிகளை' வைத்து மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுள்ளோம்.
- தமிழக அரசியலில் 'பெட்டி' என்றாலே அதற்கு அர்த்தமே வேறு.
சென்னை:
சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தீவிரமாகி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றாலும் பா.ஜ.க. தனி தேர்தல் அறிக்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கடந்த மாதம் மக்களிடம் கருத்து கேட்க தேர்தல் அறிக்கை பெட்டிகளை தமிழகம் முழுவதும் அனுப்பி வைத்தது.
இதற்கிடையே, சென்னை அமைந்தகரையில் உள்ள தமிழக பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தில், 234 சட்டசபை தொகுதிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள், கருத்துக்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை பெட்டிகளை, பா.ஜ.க. மாநில நிர்வாகிகளிடம், தேர்தல் அறிக்கை குழு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.
இந்த நிகழ்வில், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாநில அமைப்பாளர் அர்ஜூனமூர்த்தி, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெறும் குளிர்சாதன அறைகளில் அமர்ந்துகொண்டு உருவாக்குவது அல்ல தேர்தல் அறிக்கை, நேரடியாக மக்கள் மன்றத்துக்கே சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுள்ளோம். இதற்காக, மாவட்டம் தோறும் 'கோரிக்கை பெட்டிகளை' வைத்து மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுள்ளோம்.
தமிழக அரசியலில் 'பெட்டி' என்றாலே அதற்கு அர்த்தமே வேறு. கூட்டணிக்கு முன்பாகப் பெட்டி கைமாறுகிறதா? அல்லது கூட்டணிக்குப் பின்னால் கைமாறுகிறதா? என்பதே பலருக்கும் தெரியாது. ஆனால், எங்களிடம் அந்த 'பெட்டி' கலாசாரம் கிடையாது. நாங்கள் தேர்தல் அறிக்கைக்கு முன்பாக வெறும் பெட்டியைக் கொடுத்து, மக்களின் நம்பிக்கையை நிரப்பிக் கோரிக்கை பெட்டியாகத் திரும்பப் பெற்றிருக்கிறோம்.
நாங்கள் சற்றும் எதிர்பாராத அளவுக்கு, பொதுமக்கள் பெருமளவில் ஆர்வத்துடன் தங்கள் கோரிக்கைகளை இந்தப் பெட்டிகளில் சமர்ப்பித்துள்ளனர். பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது மக்கள் எந்த அளவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
இந்தக் கோரிக்கைப் பெட்டிகள் விரைவில் வாக்குப்பெட்டிகளாக மாறி, தமிழக மக்கள் எங்களுக்கு மாபெரும் வாய்ப்பினைத் தருவார்கள் என்பது உறுதி.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வெளியே வந்த முதலமைச்சர் "எல்லாம் முடிந்துவிட்டது" என ஒரு செய்கையைக் காட்டிவிட்டுச் சென்றார். உண்மையில் அவரது அந்தச் செய்கையைப் பார்க்கும்போது, "தி.மு.க. ஆட்சியே முடிந்துவிட்டது" என்பதைக் குறிப்பது போலத்தான் எனக்குத் தோன்றியது.
எங்களை 'அடிமைக் கூட்டணி' என்று விமர்சித்தவர்களைப் பார்த்து நான் பகிரங்கமாகக் கேட்கிறேன். தி.மு.க. -காங்கிரசுக்கு அடிமையா? அல்லது காங்கிரஸ், தி.மு.க.வுக்கு அடிமையா?.
தி.மு.க. அரசின் பொய்களை மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் விஜய் மிகத் தெளிவாக எடுத்து கூறியுள்ளார். அந்த வகையில் அவரை நான் பாராட்டுகிறேன். விஜய்யின் இந்தத் தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டையும், கருத்துகளையும் நான் வலிமையாக ஆதரிக்கிறேன் என்றார்.
- மூன்றே மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்.
- அமித் ஷாவுடன் இவருக்கு மிக நெருக்கமான நட்பு உள்ளது.
முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெரும் வெற்றியை பெற அதில் இடம்பெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வர் ஆனார். பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர் ஆகினர்.
இந்நிலையில் மூன்றே மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்த நிதிஷ், எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதனால் பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவை சேர்ந்த ஒருவரே முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளது.
பீகாரில் ஜாதி பிரதிநிதித்துவத்தை கருத்தில் வைத்து பாஜக மூவரை முதல்வர் பதவிக்கு பரிசீலித்து வருகிறது.

சாம்ராட் சௌத்ரி - நிதிஷ் குமார்
பீகார் மாநில துணை முதலமைச்சராக உள்ள சாம்ராட் சௌத்ரி பட்டியலில் முதலில் உள்ளார்.
குஷ்வாஹா சமூகத்தை சேர்ந்த இவர் ஓபிசி பிரிவில் வருவார். பீகாரில் நிதிஷ் குமாருக்கு மாற்றாக ஒரு வலுவான ஓபிசி தலைவரை உருவாக்க பாஜக விரும்புகிறது.
எனவே கட்சியிலும், ஆட்சியிலும் இவருக்கு இருக்கும் செல்வாக்கு இவரை முதல்வர் பதவிக்கு முதல் தேர்வாக மாற்றியுள்ளது.

இரண்டாமவர் மத்திய அமைச்சராக உள்ள நித்யானந்த ராய். இவர் யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு இருக்கும் யாதவ வாக்கு வங்கியை உடைக்க, நித்யானந்த ராயை முதலமைச்சராக்குவது ஒரு சிறந்த உத்தியாக இருக்கும் என்று பாஜக கருதுகிறது.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் இவருக்கு மிக நெருக்கமான நட்பு உள்ளது.

திலிப் ஜெய்ஸ்வால்
மூன்றாமவர் தற்போது பீகார் அமைச்சரவையில் உள்ள திலிப் ஜெய்ஸ்வால். இவர் வைசிய சமூகத்தை சேர்ந்தவர். பாஜகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான வைசிய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், கட்சியின் மேலிடத்தில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

விஜய் குமார் சின்ஹா
பீகாரின் மற்றொரு துணை முதல்வரான பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா ஆதிக்க சாதியாக கருதப்படும் பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பீகார் அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது ஓபிசி மற்றும் மிகவும் பின்தங்கிய சமூக வாக்குகள்தான் என்பதால் இவருக்கு முதல்வர் வாய்ப்பு எட்டாக்கனியே என்று கூறப்படுகிறது.
நிதிஷ் குமார் ராஜினாமா செய்தவுடன், பாஜக தனது புதிய முதலமைச்சர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
மொத்தத்தில் மகாராஷ்டிராவை போல் கூட்டணி கணக்கில் கவனம் செலுத்தி மாநில சக்திகளை பின்னுக்கு தள்ளி ஆட்சி அதிகாரத்தை பீகாரில் பாஜக முழு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
- பாஜகவின் ஆக்டோபஸ் கரங்கள் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை பல துண்டுகளாக பிரித்தது.
- பவார் குடும்பமும், கட்சியும் ஒன்றாக இணையும் தருணத்தில் மர்மமான முறையில் விமான விபத்தில் (?) இறந்தார் அஜித் பவார்.
பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் தற்போது மாநிலங்களவை சீட்டுக்காக தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனைக் குறிப்பிட்டு பாஜக தமிழ்நாட்டிலும் இதே ஃபார்முலாவை முன்னெடுப்பதாகவும், அதிமுக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் எனவும் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"பீகார் மாநிலத்தை பாஜக தமது சதியால் கைப்பற்றியுள்ளது. பீகார் மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், சமூகநீதி-இட ஒதுக்கீட்டு கொள்கை நாயகனாகவும் களமாடி வந்த நிதிஷ் குமார் பாஜகவோடு கூட்டணி வைத்ததிலிருந்தே தடுமாற ஆரம்பித்து விட்டார்.
தற்போது, முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்ய வைக்கப்பட்டதன் மூலம் நிதிஷ்குமாரை பாஜக மாநில அரசியலிலிருந்தே அப்புறப்படுத்தியுள்ளது. 243 இடங்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 202 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது தேசிய ஜனநாயக கூட்டணி.
2025 தேர்தலில் பீகார் முதலமைச்சரும், ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரும் பாஜகவும் 101 இடங்கள் என்று சமமாக போட்டியிட்டன. இறுதியில் 89 இடங்களோடு முதல் இடத்தில் பாஜகவும், 85 இடங்களோடு இரண்டாமிடத்தில் ஜனதா தளமும் வெற்றி பெற்றது.
2005ல் வெறும் 37 இடங்களுடன்தான் பாஜக பீகார் அரசியலில் நுழைந்தது. நிதிஷ் குமாரின் ஜனதா தளம் எனும் மாநில கட்சியின் தயவுடன் உள்ளே நுழைந்த பாஜக இன்று அதே நிதிஷ் குமாரின் முதலமைச்சர் பதவியை பறித்து, மாநில அரசியலைவிட்டு வெளியேற்ற முனைந்துள்ளது. இதே நிலை தான் NDA என்ற சர்கஸ் கூடாரத்தில் பாஜக எனும் ரிங் மாஸ்டரின் கீழ் அடைப்படுள்ள கட்சிகளுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் வரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
மராட்டியத்திலும் பாஜகவின் ஆக்டோபஸ் கரங்கள் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை பல துண்டுகளாக பிரித்தது. சிவசேனாவின் தோள்களில் 35 ஆண்டுகள் சவாரி செய்த பாஜக, இன்று தேர்தல் ஆணையத்தின் துணையுடன் அந்த கட்சியை துண்டாக்கியது. கட்சியை நிறுவிய தாக்கரே குடும்பத்திடமிருந்து சின்னத்தையும், கட்டமைப்பையும் பிடுங்கியது. கடந்த 30 ஆண்டுகளாக சிவசேனாவின் கைகளில் இருந்த மும்பை மாநகராட்சியும் இன்று பாஜக கைகளில் உள்ளது. தாங்கள் வளர்த்த பாஜகவிடமே இன்று கட்சியும் ஆட்சியும் இழந்து நிர்கதியாய் நிற்கிறார் உத்தவ் தாக்கரே.
பாஜக சதியால் பிரிந்த பவார் குடும்பமும், கட்சியும் ஒன்றாக இணையும் தருணத்தில் மர்மமான முறையில் விமான விபத்தில் (?) இறந்தார் அஜித் பவார். இப்படி தான் இந்தியா முழுக்க பாஜக தமது சதிவலையை விரித்து ஆட்சியை பிடித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பீகார் பார்முலாவையே பாஜக முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது.
தேர்தலுக்கு பிறகு அதிமுக என்னும் மாநிலக்கட்சி இல்லாமல் போவதற்கே வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமி அப்போது என்ன புலம்பினாலும் அவரையும் அதிமுகவையும் காப்பாற்ற முடியாது. அதிமுக தொண்டர்கள் இந்த ஆபத்தை புரிந்து கொண்டால் நல்லது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த மாதம் அசாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூபென் போரா பாஜகவில் இணைந்தார்.
- காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அசாமில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மூன்றுபேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். கடந்த மாதம் அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா பா.ஜ.க.வில் இணைந்தநிலையில், இந்த விலகல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த கமலக்யா தே புர்கயஸ்தா (கரீம்கஞ்ச் வடக்கு), வசந்தா தாஸ் (மங்கல்தோய்) மற்றும் சசிகாந்த தாஸ் (ரஹா) ஆகிய மூவர் உட்பட ஐந்து பேர் இன்று மத்திய அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா முன்னிலையில், மாநில பாஜக தலைவர் திலீப் சைகியாவால் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
காங்கிரஸில் இருந்து விலகி தற்போது பா.ஜ.க. முதலமைச்சராக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் இந்த மூன்று பேரும் கடந்தசில ஆண்டுகளாகவே வெளிப்படையாகவே பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் இது காங்கிரஸிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. காங்கிரஸ் தனது முதற்கட்ட 42 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
- ஆட்சியின் கடமை மக்களின் வாழ்வை உயர்த்துவது; அரசியல் காட்சிகளை அல்ல.
- மக்கள் நல ஆட்சியின் மண், மாநில உரிமைகளின் குரல்.
விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மக்கள் வரிப்பணம் —
அரசியல் மேடைகளுக்கா?
ஒரே நாள் நிகழ்ச்சிக்கு
₹30 கோடியை தாண்டும் செலவு.
மேடைகள் உயர்ந்தன,
விளம்பரங்கள் முழங்கின,
ரோடு ஷோக்கள் பிரகாசித்தன.
ஆனால் மக்கள் வாழ்க்கை?
விலைவாசி உயர்வு,
வேலைவாய்ப்பு குறைவு,
இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி.
ஆட்சியின் கடமை
மக்களின் வாழ்வை உயர்த்துவது;
அரசியல் காட்சிகளை அல்ல.
ஆனால் இன்று
பிரதமர் மோடி அவர்களின் வருகைக்காக
கோடிகள் செலவழிக்கப்படும் அரசியல் கலாசாரம் உருவாகிறது.
இந்த கலாசாரம்
தமிழ்நாட்டில் வேரூன்றக்கூடாது.
ஏனெனில்
தமிழ்நாடு என்பது
மக்கள் நல ஆட்சியின் மண்,
மாநில உரிமைகளின் குரல்.
அதனால் தான்
பாஜக/அதிமுக கூட்டணியை
அரசியல் ரீதியாகத் தடுக்க வேண்டியது அவசியம்.
மக்கள் பணம் புனிதம்.
அதை காக்கும் பொறுப்பு
மக்களிடமே உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார்.
- நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
அதே சமயம் நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பஞ்சப்பூர் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது.
- கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி:
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்த தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து தமிழகம் வருகை தந்து கூட்டணியை பலப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த வாரம் புதுச்சேரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி தி.மு.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே மக்களுக்கான நல்லாட்சியை தரமுடியும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி கட்சிகளுக்கான இடஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ள நிலையில் மேலும் ஒருசில கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகை தரவுள்ளார். அந்த வகையில் வருகிற 11-ந்தேதி திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேச இருக்கிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வு கடந்த சில நாட்களாக நடந்தன.
அதன்படி திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பஞ்சப்பூர் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.
திருச்சியில் நடைபெறும் இந்த பிரமாண்ட கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவும் பங்கேற்க இருப்பதாகவும், அதற்குள் கூட்டணியை இறுதி செய்யவும் தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது.
- இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது.
- உண்மையான மக்கள் பிரச்சனைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?
திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சி.பி.எம். எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பா.ஜ.க.வினர் பதில் அளித்து வருகின்றனர். இதனால் இன்று காலை முதல் சமூக வலைத்தள பக்கங்களில் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசை சாடி மு.க.ஸ்டாலின் பதிவிட்டதற்கு, பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?
இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் என, உண்மையான மக்கள் பிரச்சனைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- தமிழ் மொழி பலகையை முறையாக வைக்கவும் அறிவுறுத்துங்கள்.
- இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள்.
திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சி.பி.எம். எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில், மாண்புமிகு அஷ்வினி வைஷ்ணவ் தயவுசெய்து திருச்சி ரெயில் நுழைவு வாயிலுக்கு நமது மொழி தமிழ் மொழிபெயர்ப்பை முறையாக வைக்கவும், தமிழ் மொழி பலகையை முறையாக வைக்கவும் அறிவுறுத்துங்கள். ஏனெனில் சில அதிகாரிகள் செய்த தவறுகள் காரணமாக மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தேவையற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறது என தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாமக மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள். இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்கு பதட்டம் கூடுகிறது. வந்தே பாரத், தேஜஸ், அந்த்யோதயா, நமோ பாரத், அம்ரித் பாரத், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், பிரதான் மந்திரி பாரதிய ஜனசௌஷதி கேந்திரா என அனைத்து பெயர்களையும் இந்தியில் மட்டுமே சூட்டியது தான் பாஜக ஆட்சி," என கூறியுள்ளார்.
- ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது.
- மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.
சென்னை :
திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவத:-
பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!
இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!
'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
* திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர்.
* வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர்.
* குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.
* ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது.
* மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.
கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!
தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை ஆகிய அறநெறிகளை மக்களிடம் விதைத்தவர் அய்யா வைகுண்டர்.
- ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள் பதிவில்,
சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று போதித்த, மகான் அய்யா வைகுண்டர் அவர்களின் 194 ஆவது அவதார தினம் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். அன்பு, அறிவு, சமதர்மம், ஆன்மீகம் ஆகியவற்றை வாழ்வியல் நெறியாக கற்றுக் கொடுத்தவர். ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து, அனைவரும் சமம் என்று வலியுறுத்தி, சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை ஆகிய அறநெறிகளை மக்களிடம் விதைத்தவர் அய்யா வைகுண்டர்.
அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார தினமான இன்று, ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். அய்யா வைகுண்டர் வழி நடப்போம்.
அய்யா உண்டு! என்று கூறியுள்ளார்.
- பீகாரில் உள்ள ஐந்து இடங்களுக்கான அறிவிப்பு பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
- 10 மாநிலங்களில் உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பீகாரில் ராஜ்யசபா தேர்தல் தொடர்பான சஸ்பென்ஸை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. 2026 ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களாக பாஜக அதன் தலைவர் நிதின் நபின் மற்றும் ஷிவேஷ் குமார் ராம் ஆகியோரை நியமித்துள்ளது. பாஜகவின் தேசிய செயல்தலைவராக சமீபத்தில் நிதின் நபீன் தற்போது பாட்னாவின் பங்கிபூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
மார்ச் 16 அன்று நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டுள்ள 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் நிதின் நபினின் பெயர் இடம் பெற்றுள்ளது. அசாமில், தேராஷ் கோவாலா மற்றும் ஜோகன் மோகன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில், பாஜக தனது மாநிலங்களவை வேட்பாளராக லட்சுமி வர்மாவை அறிவித்துள்ளது. தமிழ்நாடு, பீகார் உட்பட 10 மாநிலங்களில் உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பீகாரில் உள்ள ஐந்து இடங்களுக்கான அறிவிப்பு பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 5 ஆகும். என்டிஏ கூட்டணி 200க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை கொண்டுள்ளதால், ஐந்து இடங்களில் 4 இடங்களில் வெல்வது உறுதி. இதில் ஜேடியுக்கு 2, பாஜகவிற்கு இரண்டு. ஐந்தாவது இடத்திற்கான போட்டிதான் தற்போது தீவிரமாக உள்ளது.






