search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assam"

    • ஒவ்வொரு 10 வருடத்திற்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் அதிகரிக்கிறது.
    • ஒவ்வொரு 10 வருடத்திற்கும் 30 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கிறது.

    ஒவ்வொரு 10 வருடத்திற்கும் 30 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கிறது எனக் கூறிய அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, 2041-ல் அசாம் முஸ்லிம் மெஜாரிட்டி மாநிலமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    "புள்ளி விவரங்கள் மாதிரியின்படி அசாம் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இதன்படி 2041-ல் அசாம் முஸ்லிம் மெஜாரிட்டி மாநிலமாகும். இது நிஜம், யாராலும் இதை தடுத்து நிறுத்த முடியாது.

    ஒவ்வொரு 10 வருடத்திற்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் அதிகரிக்கிறது. முஸ்லிம் மக்களை தொகையை கட்டுப்படுத்த தனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் காங்கிரசின் பணி முக்கியமானது.

    மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கான தூதராக ராகுல் காந்தி ஆனால், அவருடைய பேச்சை மட்டும் கேட்கும் சமூகத்தினரை அது கட்டுப்படுத்தும்" என்றார்.

    • ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து செய்தி வழங்கிக்கொண்டிருந்தார்
    • கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 96 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கைக்கு  திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மாநிலத்தில் பல பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைக்காட்சி நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த  தொலைக்காட்சி  ரிப்போர்ட்டர் ஒருவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

    கேமராவை பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க்கும் போது ஈரமான மணல் பகுதியால் நிலைதடுமாறி அவர் ஆற்றில் விழுந்தார். சமாளித்துக்கொண்டு நீந்தி வந்த அவரை கிராம மக்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால்  மேலே வர முடியாமல் அவர் திணறினார். கடைசியாக ஒருவழியாக சமாளித்துக்கொண்டு கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

    • அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது.
    • மழை வெள்ளத்துக்கு 78 பேர் பலியாகி உள்ளனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மதிக்கின்றன. மழை வெள்ளத்துக்கு 78 பேர் பலியாகி உள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று அசாமுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சென்றார். இன்று காலை அசாமின் சில்சாருக்கு சென்றடைந்த அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்று அழைத்து சென்றனர்.

    பின்னர் புலர்டல் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற ராகுல்காந்தி அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    அசாம் பயணத்துக்கு பிறகு ராகுல்காந்தி மணிப்பூருக்கு செல்கிறார். மணிப்பூரில் மெய்தி-குகி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். மணிப்பூரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இதனால் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தற்போதும் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று மணிப்பூருக்கு செல்ல உள்ளார். ஏற்கனவே அவர் மணிப்பூருக்கு இரண்டு முறை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். தற்போது எதிர்கட்சித்தலைவரான பிறகு முதன் முறையாக ராகுல்காந்தி மணிப்பூர் செல்கிறார்.

    • சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்
    • ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக் காப்பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

    அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் கரைபுரண்டோடி பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாநிலம் முழுவதும் வெவேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 மாவட்டங்களில் அபாயகரமான முறையில் வெள்ளம் வீதிகளை அடைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

    சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதகிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றான திப்ருகார் மாவட்டத்தின் துளியாஜான் நகரில் வீதியில் ஓடும் வெள்ளத்தில் சிக்கி மூழ்கிக்கொண்டிருந்த தனது பசுமாட்டை காப்பாற்றுவதற்காக உள்ளூர்வாசி ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக்  காப்பற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

    இந்த  சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சாரார் அவரின் செயலைப் பாராட்டி வரும் நிலையில்  மற்றொரு சாரார் அவரின் செயல் ஆபத்தானது என்று  கமன்ட் tவருகின்றனர்.

    • மழையால் இதுவரை 45 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • அசாமில் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

    கவுகாத்தி:

    இந்தியாவில் டெல்லி, அசாம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக அசாமில் ஜோர்காட் மாவட்டத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் துணை நதிகளில் வெள்ளம், அபாய அளவை தாண்டி பாய்ந்தோடுகிறது.

    மேலும் 8 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர், கச்சார், தேமாஜி, மோரிகான், திப்ருகார், நாகோன், நல்பாரி, சிவசாகர், சோனித்பூர், தவாம்பூர் உள்ளிட்ட 19 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 6 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக ஜோர்காட் மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும் சில மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாம் முழுவதும் தொடர் மழையால் இதுவரை 45 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வெள்ளத்தால் மனிதர்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப் பட்டுள்ளது. காசிரங்கா தேசிய பூங்காவில் கனமழை காரணமாக தேங்கிய மழை வெள்ளத்தில் தப்பிக்க விலங்குகள் அருகே உள்ள மலைக்கு இடம்பெயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் அடுத்த 2 அல்லது 3 நாட்க ளுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இதனால் அசாமில் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

    அசாமில் கனமழை தொடர்வதால் நிலைமை மோசமாக மாறி உள்ளதாக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

    அருணாச்சல பிரதேசத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக அசாம் மாநிலத்தில் வெள்ளப்பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் என்னை அழைத்து நிலைமையை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

    பிரம்மபுத்ரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து வருகிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    எனவே அவசர நிலையை சமாளிக்க ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    இதற்கிடையே இன்று டெல்லி, அரியானா, அசாம் மற்றும் குஜராத் உள்பட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    டெல்லியில் ஏற்கனவே கடந்த வாரம், 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இந்நிலையில் இன்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இதேபோல வடக்கு குஜராத் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக கேரளா, புதுச்சேரியில் மாகே, கடலோர கர்நாடகா, கோவா, கொங்கன், குஜராத், லட்சத்தீவு, கடலோர ஆந்திரா, மத்திய மராட்டியம், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 6-ந்தேதி வரை இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

    • யானைக்கூட்டம் ஒன்று நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ.
    • பிரம்மபுத்திரா ஆற்றில் டிரோன் உதவியுடன் படமாக்கப்பட்டுள்ளது.

    ஆழமான ஆற்றை யானைக்கூட்டம் ஒன்று நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அது அசாமின் நிமதி கட் வனப்பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில் டிரோன் உதவியுடன் படமாக்கப்பட்டுள்ளது. புகைப்பட கலைஞர் சச்சின் பரலி இந்த அரிய காட்சியை படமாக்கி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

    யானைக்கூட்டம் பொதுவாக காடுகளை கடந்து செல்வதை பார்த்து இருக்கலாம். நீர்நிலைகளுக்கு அருகில்கூட அவை பெருங்கூட்டமாக வந்து நீர்அருந்தி கடந்து செல்லும். ஆனால் அதிக எடையுடைய யானைகள் நீர்நிலைகளை அவ்வளவு எளிதில் நீந்தி கடக்க முயலாது என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

    அந்த எண்ணத்தை மாற்றும் விதமாக, ஆழமான ஆற்றையும் அசாதரணமாக எங்களால் கடக்க முடியும் என்பதைப்போல, ௮௦-க்கும் மேற்பட்ட யானைகள் பெருங்கூட்டமாக பிரமாண்டமான பிரம்மபுத்திராவை நீந்திக்கடக்கின்றன. அவற்றின் முதுகு பகுதிகள் மட்டுமே மேலே தெரியும் அளவில் ஆழமான இடத்தில் அவை நீந்தி செல்லும் காட்சி பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.

    வழக்கமாக காட்டு மாடுகள்தான் நூற்றுக்கணக்கில் இப்படி மந்தையாக ஆற்றைக்கடக்கும் காட்சியை பார்க்க முடியும். அதுபோல அதிக எண்ணிக்கையிலான யானைக்கூட்டம் நீந்தும்காட்சி அரிதாக படம்பிடிக்கப்பட்டு இருப்பது புகைப்படக் கலைஞருக்கு பாராட்டுகளை குவித்துள்ளது. இந்த காட்சி வலைத்தளத்தில் 42 லட்சத்துக்கும் மேலானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது. 3.5 லட்சம் பேரின் விருப்பங்களை பெற்றுள்ளது.

    • சாந்திபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆயுதங்களை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
    • வீட்டில் இருந்து இருந்து ஒரு ஏகே56 துப்பாக்கி, தோட்டாக்களை ஸ்டோர் செய்துகொள்ளும் மெகசின் மற்றும் 668 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அசாம் மாநிலத்தில் சாந்திபூர் கிராமத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்க முயன்ற 2 பேரை உதல்குரி போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், சாந்திபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆயுதங்களை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    அந்த வீட்டில் இருந்து இருந்து ஒரு ஏகே56 துப்பாக்கி, தோட்டாக்களை ஸ்டோர் செய்துகொள்ளும் மெகசின் மற்றும் 668 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக உதல்குரி எஸ்பி புஷ்கின் ஜெயின் தெரிவித்தார்.

    • நானும், தலைமைச் செயலாளரும் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் எங்கள் மின் கட்டணத்தை செலுத்தத் தொடங்குவோம்.
    • ஜூலை 2024 முதல், அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் மின்சார நுகர்வுக்கான கட்டணத்தை செலுத்துங்கள்.

    அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசாங்க ஊழியர்களும் வரும் ஜூலை மாதம் முதல் தங்கள் மின்சார கட்டணத்தை தாங்களே செலுத்த வேண்டும் என்று அம்மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

    முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் அவரது தலைமைச் செயலாளரும் தங்கள் குடியிருப்பு மின் கட்டணத்தை வரும் ஜூலை மாதம் 1-ந்தேதி செலுத்த தொடங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளுக்கு மின்கட்டணம் செலுத்தும் 75 ஆண்டு கால விஐபி கலாச்சார விதியை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருகிறோம்.

    அதற்கு முன்னுதாரணமாகி நானும், தலைமைச் செயலாளரும் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் எங்கள் மின் கட்டணத்தை செலுத்தத் தொடங்குவோம். ஜூலை 2024 முதல், அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் மின்சார நுகர்வுக்கான கட்டணத்தை செலுத்துங்கள்" என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறி உள்ளார்.

    • ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் ஓடுகின்றன.
    • 10 மாவட்டங்களில் 6 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோபிலி, பராக், குஷியாரா ஆகிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் ஓடுகின்றன. அங்குள்ள 10 மாவட்டங்களில் 6 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர்.

    நாகோன் மாவட்டத்தில் அதிகபட்சமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அசாமில் வெள்ளம் மற்றும் புயலில் இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர்.

    • தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது
    • அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால், அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    அண்மையில் ஜம்மு காஷ்மீரில் கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது.

    தற்போது அசாம் மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமின் டிமா ஹசாவ் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    மே 4 ஆம் தேதி வரை டிமா ஹசாவ் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்பதால் அதுவரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மே 04 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்கு இயந்திரம் வாகனத்துடன் படகில் எடுத்துச் சென்றபோது திடீரென வெள்ளம் அதிகரித்தது.
    • படகு கவிழ்ந்த நிலையில் வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்தியா முழுவதும் இன்று 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலம் லகிம்பூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

    சதியா என்ற இடத்தில் உள்ள அமர்பூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது வாக்கு இயந்திரம் திடீரென பழுதானது. இதனால் மாற்றும் மெஷின் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த ஊருக்கு வரவேண்டுமென்றால் ஆற்றைக்கடந்து வரவேண்டும். அதிகாரிகள் வாக்கு இயந்திரத்திடன் சொகுசு வாகனத்தில் ஆற்றங்கரையோரத்திற்கு வந்தனர். அந்த வாகனத்தை படகு ஒன்று ஏற்றிச் சென்றது. ஆற்றில் திடீரென வெள்ளம் அதிகரிக்க படகு கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த வாகனமும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

    உடனடியாக அதிகாரிகள் மற்றும் வாக்கு இயந்திரம் பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னர் வாக்கு எந்திரம் எடுத்துச் செல்லப்பட்டது. அதிகாரிகள் வாகனத்துடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அழைத்து, மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
    • படகில் 15 பயணிகள் இருந்ததாகவும், மீதமுள்ளவர்கள் நீந்தி தப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

    அசாம் முழுவதும் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழைக்கு மத்தியில், தெற்கு சல்மாரா-மங்காச்சார் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், இரண்டு பேர் காணாமல் போனதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அழைத்து, மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும் அனைத்து உதவிகளும் செய்வதாகவும் உறுதியளித்தார்.

    நேற்று மாலை முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் மழையுடன் கூடிய திடீர் புயல், மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் வீடுகளை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தியது என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சிஇஓ ஞானேந்திர தேவ் திரிபாதி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர், " நேபுரேர் ஆல்கா கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் சிசுமாரா காட்டில் இருந்து நேபுரேர் ஆல்கா காட் நோக்கி பயணித்த நாட்டுப்படகு மூழ்கியது. இதில் ஒரு குழந்தையின் சடலத்தை உள்ளூர்வாசிகள் மீட்டனர் மற்றும் காணாமல் போன இரண்டு பேரை தேடி வருகின்றனர்" என்றார்.

    படகில் 15 பயணிகள் இருந்ததாகவும், மீதமுள்ளவர்கள் அருகிலுள்ள 'சார்' பகுதிகளிலிருந்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக நீந்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    ×