search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "runway"

    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    • நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.

    துபாய்:

    ரமலான் நோன்பையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பள்ளிவாசல்கள், கூடாரங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த நிலையில் உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    இந்த நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர். அவர்கள் நோன்பை திறந்த போது விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது நடந்து கொண்டிருந்தது.


    இது குறித்து துபாய் விமான நிலைய அதிகாரி கூறும்போது, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான சூழலில் வேலை செய்து வந்தவர்கள் அதனை மறந்து பலரும் விளையாட்டாக பேசிக் கொண்டு மன இறுக்கத்தை மறந்து செயல்பட்டனர்.

    விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

    துபாயில் கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விமான ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

    • கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியது
    • விமானம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மெதுவாக நகர தொடங்கியது

    தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடு அர்ஜென்டினா (Argentina). இதன் தலைநகரம் ப்யூனோஸ் அயர்ஸ் (Buenos Aires).

    கடந்த சில நாட்களாக கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் கடும் புயல் வீசி வருகிறது. மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேக புயலால் அங்கு உயிரிழப்பு 14-ஐ கடந்துள்ளது. பல இடங்களில் கட்டிட சேதங்களும், மின்சார தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்புயல், அங்குள்ள ஏரோபார்க் நியூபெரி (Aeroparque Jorge Newbery) விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தையும் தாக்கியது. இத்தாக்குதலில் அந்த விமானம் காற்றின் அதிவேகத்தால் நகர தொடங்கி, நிறுத்தப்பட்டிருந்த திசைக்கு எதிராக மெதுவாக நகர்ந்து சென்றது.

    அப்போது அங்கு விமானத்தில் பயணிகள் ஏறவும் இறங்கவும் பயன்படுத்தப்படும் படிக்கட்டு, சரக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனம் உட்பட பலவற்றில் அந்த விமானம் மோதியது. இதில் விமானத்திற்கு ஓரளவு சேதம் ஏற்பட்டது.

    ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • அன்னை சத்யா மைதானத்தில் குழந்தைகள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை.
    • இயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அவரிடம் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மைதானத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்.

    தொடர்ந்து மைதானத்தில் சர்வதேச செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருவதை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    இதையடுத்து இயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார். அப்போது அவர் கால்பந்து மைதானம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    மேலும் மைதானத்தில் குழந்தைகள் விளையாடும் அரங்கம் அமைக்கப்படும் என்றும், மைதானத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வில் மருத்துவ கல்லூரி பகுதி தி.மு.க. செயலாளர் சதாசிவம், மாநகராட்சி கவுன்சிலர்கள் அண்ணா.பிரகாஷ், சுகந்தா, ஓய்வு பெற்ற மாவட்ட அலுவலர்கள் மோகன், காந்தி, பயிற்சியாளர்கள் பாபு, ரஞ்சித், மகேஷ், நீலவேணி, தி.மு.க. நிர்வாகிகள் சேகர், ரங்கராஜ், எடிசன், இளங்கோ, கார்த்தி, வினோத் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    கேரளாவில் இருந்து மாலத்தீவுக்கு 136 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று மாலை தவறான ஓடுபாதையில் தரையிறங்கியதால் அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்பட்டது. #AirIndiaflight #MaleAirport
    மாலி:

    கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் A320 ரக விமானம் இன்று 136 பயணிகளுடன் மாலத்தீவு தலைநகரான மாலி நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.

    இன்று மாலை 4.42 மணியளவில் மாலி விமான நிலையத்தை நெருங்கியதும் கீழே இறங்கிய அந்த விமானம் வழக்கமான ஓடுபாதையை விட்டு விலகி, புதிதாக கட்டப்பட்டு வரும் வேறொரு கரடுமுரடான ஓடுபாதையில் இறங்கியது. இதனால், அந்த விமானத்தின் இரு டயர்கள் பஞ்சர் ஆனதை தவிர வேறு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி, அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.

    சம்பவ இடத்தில் இருந்து இழுத்து செல்லப்பட்டுள்ள நிலையில், மாலி விமான நிலயத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த விமானத்தின் பழுதடைந்த டயர்களை மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AirIndiaflight #MaleAirport 
    நேபாளத்தில் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்று விபத்து ஏற்பட்டது, இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. #Nepal #PlaneAccident
    காட்மாண்டு:

    நேபாள நாட்டின் காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்துக்கு நேபாள்கஞ்ச்சிலிருந்து 21 பயணிகளுடன் ஒரு விமானம் சனிக்கிழமை இரவு வந்தது. விமானம் தரை இறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்றதால் விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    ஆனாலும் விமான போக்குவரத்து சுமார் 12 மணி நேரத்துக்கு தடைபட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். சமீபத்தில் சரிசெய்யப்பட்ட அந்த ஓடுபாதையின் மேல் பகுதியில் விரிசல்கள் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.  #Nepal #PlaneAccident 
    பரங்கிமலையில் தடுப்புச்சுவரில் மோதியதால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். #ElectricTrain #Runway #Youth #death
    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி விரைவு மின்சார ரெயில் நேற்று இரவு சென்று கொண்டு இருந்தது. சில குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரெயில் நின்று செல்லும் என்பதால் இந்த ரெயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    மேலும் பணி முடிந்து அனைவரும் வீட்டிற்கு செல்லும் நேரம் இயக்கப்படுவதால் பயணிகள் படிக்கட்டில் தொங்கியபடி இந்த ரெயிலில் பயணம் செய்வார்கள். கிண்டி ரெயில் நிலையத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்த இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் ஏறினர். உடனே ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென அங்கிருந்த தடுப்புச்சுவரில் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 2 வாலிபர்கள் மோதினர்.

    இதில் தவறி கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். உயிரிழந்தவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டீபன் (வயது 23), தாம்பரத்தை சேர்ந்த விக்னேஷ் (20) என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கம்பத்தில் பை சிக்கியதால் செங்கல்பட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். அடிக்கடி பரங்கிமலையில் கம்பம், தடுப்புச்சுவரில் மோதி பயணிகள் இறக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. எனவே இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து விபத்தை தவிர்க்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  #Tamilnews 
    ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணியை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரரை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.
    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 11-வது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையம் நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டது. அப்போது அந்த ரெயிலில் 35 வயதுடைய பெண் அவசர அவசரமாக ஏற முயன்றார். எதிர்பாராத விதமாக அவரது கால் தவறி ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். நடைமேடைக்கும், ரெயில் பெட்டிக்கும் நடுவில் சிக்கிய அந்த பெண்ணை 11-வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவு வீரர் ஆர்.கே.மீனா விரைந்து செயல்பட்டு காப்பாற்றினார்.

    இந்த செயல் குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவு வீரர் ஆர்.கே.மீனாவை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர். 
    ×