search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி"

    • மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது.
    • தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே– கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சத்தரை ஊராட்சி. இப்பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

    இந்த பாலத்தை பயன்படுத்தி கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்துக்கு முக்கிய தரைப்பாலமாகவும் உள்ளது.

    மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது. பின்னர் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.

    ஒவ்வொரு முறை தரைப்பாலம் சேதம் அடையும் போதும் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தரைப்பாலம் தற்காலிகமாக மட்டுமே சீரமைக்கப்பட்டது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் போதும் கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் 4-வது முறையாக சேதமடைந்தது. இதனால் இவ்வழியே அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றி உள்ள கிராமஙகளைச் சேர்ந்தவர்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

    ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய மேம்பாலம் கட்ட ரூ. 20 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதில் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதனால் கூவம் ஆற்றின் குறுக்கே எந்த திட்டத்தில் பாலப்பணிகள் தொடங்கு வது என்ற குழப்பத்தில் சீரமைக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் பொது மக்களின் வேண்டுகோளின்படி அவசர தேவை பயன்பாட்டுக்காக கூவம் ஆற்றில் தற்போது 4 -வது முறையாக சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.

    அந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கரூர், திருச்சி, புதுக்கோட்டை மக்களின் கனவு திட்டமான காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்ட முதற்கட்ட பணிகள் தீவிரமாக தொடங்கி உள்ளது
    • இதுவரை 237.97 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது

    திருச்சி,

    தமிழகத்தின் கனவு திட்டங்களில் ஒன்றாக காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளது. காவிரியில் இருந்து வைகை மற்றும் குண்டாறு வரை கால்வாய் அமைத்து, காவிரியில் கிடைக்கும் உபரி நீரை மாநிலத்தின் தண்ணீர் பற்றாக்குறை உள்ள தென் பகுதிகளுக்கு திருப்பி விடுவதே திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

    காவிரியின் உபரி நீரை தெற்கு வெள்ளாறு, வைகை மற்றும் இறுதியாக குண்டாறு வரை கொண்டு செல்வதற்காக, 262 கி.மீ. நீளமுள்ள புதிய இணைப்புக் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இது காவிரியில் மாயனூர் தடுப்பணையில் இருந்து தொடங்குகிறது.

    இதன் மூலம் சுமார் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக, மாயனூர் தடுப்பணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை சுமார் 118.45 கி.மீ., தொலைவுக்கு ரூ.6,941 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த கால்வாய் கரூர் மாவட்டத்தில் 47.23 கி.மீ. தூரத்திலும், திருச்சி மாவட்டத்தில் 18.89 கி.மீ தொலைவிலும் மற்றும் புதுக்கோட்டை 52.32 கி.மீ. தூரத்துக்கும் பயணிக்கிறது. தற்போது முதல் கட்ட பணிகளில் ஒன்றாக மாயனூர் தடுப்பணையில் இருந்து 4.10 கி.மீ. தூரத்துக்கும், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 5.35 கி.மீ., நீளத்துக்கும் 2 வழித்தடங்களில் கால்வாய் அமைக்க ரூ.331 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது.

    இதில் இதுவரை 78 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி 3 மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு கரூர் மாவட்டத்தில் 427.81 ஹெக்டேர் , திருச்சி மாவட்டத்தில் 200.41 ஹெக்டேர் பட்டா நிலமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 585.05 ஹெக்டேர் பட்டா மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களும் தேவைப்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கால்வாய் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். ரம்யா தேவி உடன் இருந்தார்.

    பின்னர் நிறுவன ஆதாரத்துறை செயற்பொறியாளர் எஸ். சிவகுமார் கூறும்போது, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கால்வாய் அமைக்கும் பணி ஆகிய இரண்டும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை, 237.97 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மீதமுள்ள பகுதிக்கு ஏற்ப, செயல்முறை நடந்து வருகிறது.

    நிலம் கையகப்படுத்துதல் எந்த தடங்கலும் இன்றி முன்னேறும் வகையில், குறிப்பாக நிதி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. இந்த நிதியாண்டிற்குள் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இரு வழித்தடங்களில் கால்வாய் அமைக்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த கால்வாயின் முதல் கட்டத்தின் மூலம் கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 42,170 ஏக்கர் பாசன வசதியும், 342 பாசன குளங்கள் பாசன வசதியும் பெறும். 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாற்றையும் வைகையையும் இணைக்கும், சுமார் 110 கி.மீ தூரமும், 3-வது இறுதிக் கட்டம் வைகையை குண்டாற்றுடன் (34.04 கி.மீ) இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    • கடலூரில் உள்ள சாலையோரம் தள்ளுவண்டி கடை களை வைத்து துணி வியாபாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.
    • மஞ்சக் குப்பம் நேதாஜி சாலை களில் மாலை வேளை யில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    கடலூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் நகரில் உள்ள ஜவுளிக்கடை களில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் பலர் தீபாவளியையொட்டி கடலூரில் உள்ள சாலை யோரம் தள்ளுவண்டி கடை களை வைத்து துணி வியா பாரம் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் கடலூர் லாரன்ஸ் சாலை, இம்பீரியல் சாலை, மஞ்சக் குப்பம் நேதாஜி சாலை களில் மாலை வேளை யில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் வியா பாரிகள் பட்டாசு கடைகள் வைக்கும் பணியிலும் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக் பாக்கெட், திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடை பெறுவதை தடுக்கும் பொருட்டு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் உத்தரவின் பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் கடலூர் நகரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநகரில் கடலூர் மஞ்சக் குப்பம், திருப்பாதிரிப்புலியூர் சிக்னல், நாகம்மன் கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் போலீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டது மகிழ்ச்சி என மக்கள் கூறியுள்ளனர்.
    • நடந்து செல்பவர்களுக்கு வசதியாக நடைபாதை அமைத்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம்-மதுக்கரை சாலையில் மதுக்கரை மார்க்கெட், வேலந்தாவளம், மற்றும் கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருக்கும்.

    இதனால் இந்த சாலை எப்போதும் மிகுந்த பரபரப்பான பகுதியாகவே காணப்படும். பல சமயங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

    இதற்கு முக்கிய காரணமாக அந்த பகுதியில் சாலைையயொட்டி இருந்த ஆக்கிரமிப்புகளே காரணம் என்றும், அதனை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத் துறையினர் சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிக்கான ஏற்பாடுகளை தொடங்கினர்.

    அதன்படி சாலை நன்கு விரிவாக்கப்பட்டு போக்குவரத்திற்கு சிரமம் இன்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் அதிவேகமாக அந்த சாலையில் செல்ல தொடங்கின.

    இதனால் சாலையின் ஒரு பகுதியை விட்டு மற்றொரு பகுதிக்கு கடப்பது மக்களுக்கு சிரமமாகியது. சில நேரங்களில் மக்கள் விபத்தில் சிக்கும் நிலைமையும் உருவானது. ஏனென்றால் வாகனத்தில் வருவோம் மெல்ல வராமல் அதிவேகத்தில் வருகின்றனர். வாகனம் வெகுதூரம் வருகிறதே என்று சாலையை கடந்தால், வேகமாக வந்து நம்மீது மோதுவது போல் நின்று விடுகிறது. எனவே இதற்கு சாலையின் நடுவே தடுப்புகள் வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் இதற்கு தீர்வு காணும் வகையில், சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கும் பணியை தொடங்கினர். முதல் கட்டமாக சுந்தராபுரத்தில் இருந்து காமராஜர் நகர் வரை இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சாலையின் மற்ற பகுதிகளிலும் தடுப்புகள் வைக்கும் பணி நடக்க உள்ளது.

    இதுகுறித்து மக்கள் கூறும் போது, வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டது மகிழ்ச்சி. இதனால் வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்லும்.

    தடுப்பு வைக்கப்பட்டதால் சாலையின் அகலம் குறைந்துள்ளது. எனவே நடந்து செல்பவர்களுக்கு வசதியாக நடைபாதை அமைத்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றனர்.

    • குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி
    • நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம் பங்கேற்பு

    அருவங்காடு,

    குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு- ஜெகதளா இடைேயேயான ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அங்கு அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்தன.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அருவங்காடு- ஜெகதளா ரோட்டை உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அந்த சாலையை சீரமைக்க தற்போது ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அருவங்காடு- ஜெகதளா ரோட்டில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.

    இதற்கான நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், செயற்பொறியாளர் வின்சென்ட், பேரூராட்சி தலைவர் பங்கஜம், துணைத்தலைவர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியான லூர்துமாதா தெருவில் உள்ள சானல் ரோட்டில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டி சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியின் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட உள்ள தடுப்பு சுவருடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆனி ரோஸ்தாமஸ், ஆட்லின் சேகர், அரசு ஒப்பந்ததாரர் சுதாபாஸ்கர், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், புனிதன், புஷ்பராஜ், சகாயம், நிசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 15 வது நிதி குழு அடிப்படை மானியத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையம்
    • குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார்

    குளித்தலை, 

    கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட கணேசபுரத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டிடமும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புத்தூர் ஊராட்சி பகுதிகளான வேங்கடத்தான் பட்டியில் புதிய நாடக மேடையும், சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஆதனூரில் புதிய நாடக மேடையும், வேப்பங்குடியில் 15 வது நிதி குழு அடிப்படை மானியத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையமும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ள பாளையம் ஊராட்சியில் காந்தி நகர் காலனியில் புதிய நாடக மேடையும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.பேட்டையில் புதிய நாடக மேடையும் கட்டுவதற்கான பூமி பூஜையை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கி வைத்தார், தொடர்ந்து சிவாயப் ஊராட்சி வேப்பங்குடியில் 15 வது நிதி குழு அடிப்படை மானியத்தில் கட்டப்பட்ட தானிய கிடங்கு அமைத்தல், பெருமாள் பட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் திறந்து வைத்தார்.

    விழாவில் கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், தோகைமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், விவசாய அணி துணை அமைப்பாளர் சசிகுமார், மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர், மருதூர் பேரூராட்சி அலுவலர் சரவணன், நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், புத்தூர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சந்திரன், சிவாயம் ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி, ஊராட்சி செயலாளர் அருள், கே.பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி கதிர்வேல் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தென்தாமரைகுளம் பேரூராட்சியில் அமைந்துள்ள தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தது.
    • பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் அமைந்துள்ள தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தது.

    இதனால் மறுகால் வழியாக தண்ணீர் வெளியேற முடியாத நிலை நீடித்து வந்தது. ஆகய தாமரைகளை அகற்ற அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில் ஆகாயதாமரைகள் அகற்றம் பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், கவுன்சிலர் சுபாஷ், புரவு தலைவர் பேராசிரியர் மகேஷ், தி.மு.க நிர்வாகி தாமரை பிரதாப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வளர்ச்சி பணிகளுக்காக பொது நிதி யிலிருந்து சுமார் ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இரணியல்:

    நெய்யூர் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக பொது நிதி யிலிருந்து சுமார் ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா பேரூராட்சிக்குட்பட்ட அந்தந்த பகுதிகளில் நடந்தது. பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் ஷீலா, அஜின், ஆசிரியர் மேரி லில்லி புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பென் டேவிட் வரவேற்றார்.

    9-வது வார்டு பிலாபிளை செல்லும் சாலையில் அலங்கார கற்கள் பதிக்கும் பணிக்கு ரூ.2 லட்சமும், 8 மற்றும் 9-வது வார்டு குழிவிளையில் இருந்து எரிவிளாகம் பம்பு ரூம் செல்லும் சாலை வரை சாலை சீரமைப்பு ரூ. 9.75 லட்சத்திலும், 14-வது வார்டு இடையன்விளை கிணறு வடக்குபக்கம் முதல் குளம் வரை வடிகால் அமைப்பதற்கு ரூ.4 லட்சத்திலும், 3-வது வார்டு முரசன்கோடு ஆர்சி சர்ச் குறுக்குசாலையில் சிமெண்ட் தளம் அமைக்க ரூ. 6.50 லட்சத்திலும், 7-வது வார்டுக்குட்பட்ட பாதிரிகோடு முதல் முரசங்கோடு இணைப்பு சாலை சீரமைப்பு ரூ. 9.85 லட்சத்திலும் உள்ள பணிகளை குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற தொகுதி தி.மு.க. மேற்பார்வையாளர் உசிலம்பட்டி அருண், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மண் அரிப்பா அல்லது திருட்டு முயற்சியால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு
    • இன்று கான்கிரீட் பணிகள் மேற்கொண்டு நாளை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    பொள்ளாச்சி,

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்துக்கு கடந்த மாதம், 20-ந் தேதி முதல் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியில் பிரதான கால்வாயில் நேற்று காலை திடீரென உடைப்பு தண்ணீர் வெளியேறியது. அருகில் உள்ள தென்னந்தோப்புக்குள் பாய்ந்து தண்ணீர் வீணானது.

    இதுகுறித்து விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்த திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், பி.ஏ.பி., தலைமை பொறியாளர் சிவலிங்கம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், பகிர்மான குழு மற்றும் பாசன சபை தலைவர்கள் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது உடைப்பு ஏற்பட்ட கரையில் மண் கொட்டப்பட்டு தண்ணீர் வெளியேறாமல் தடுக்கும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    விவசாயிகள் கூறும்போது வறட்சியான கால கட்டத்தில் ஒரு சுற்று தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இடது கரையில் கசிவு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. தற்போது, அதே இடத்தில் வலது கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகி உள்ளது. மண் அரிப்பா அல்லது திருட்டு முயற்சியால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:-

    பிரதான கால்வாய் மொத்தம் 124 கி.மீ., நீளம் உடையது. இப்பகுதியில் கால்வாய் வெட்டப்படாமல், மண் குவித்து உருவாக்க ப்பட்டது. ஆறு மாதம் தண்ணீர் செல்லும். ஆறு மாதம் நீர் செல்லாது.

    இதனால், கால்வாய் கரையில் இயற்கை காரணங்களால் நீர் கசிந்து உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். தற்போது மண் கொட்டப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 2 நாட்களுக்கு நீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இன்று கான்கிரீட் பணிகள் மேற்கொண்டு நாளை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பணிமாறுதல் மூலம் பதவி இறக்கம் கூடாதுதலைமை ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

     திருச்சி,  

    தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் அழகிரிசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில்,

    தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில், பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரில் இருந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் பெறுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.பின்னர் முதலில் தடையாணை வழங்கப்பட்டு பின்பு, 2008-ல் அந்தத் தடை விலக்கி கொள்ளப்பட்டதால் மீண்டும் 2008 முதல் 2015 வரை 7 ஆண்டுகள் முன்பு வழங்கியது போல் பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 2023-ல் டிவிசன் பெஞ்ச் தீர்ப்பில் அந்த பதவி உயர்வு திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.

    இதில் தனி நீதிபதி 2018 தமிழக அரசு வழங்கிய உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை 4-7-2018 நாளது மற்றும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதி 9 மற்றும் 13-படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் உரிமையை விட்டு தந்த தகுதியின் அடிப்படையிலும், லெயின் தொடரும் என்ற பணி விதிகளும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் 23-3- 2023 நாளிட்ட தீர்ப்பு உரிமை துறப்பு மீதான தீர்ப்பு அல்ல என்பதால் 2018, 19, 20, 21-ம் ஆண்டுகளில் பணி மாறுதல் வழங்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கையை தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் பரிசீலித்து தற்போது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரியும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் தொடர்ந்து தலைமை ஆசிரியர்களாக நீடிக்க ஆவண செய்ய வேண்டும். மாறுதல் மூலம் பணிபுரியும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்யக்கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் முன்னாள் மாநில பொது செயலாளர்கள் அருள் சுந்தர்ராஜன், நடராஜன், அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொருளாளர் இளங்கோ, மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் திலகநாதன்,செயலாளர் பெரியசாமி, இணைச் செயலாளர்கள் அழகு சுப்பிரமணியன், சிவக்குமார், மதியழகன்மற்றும் 38 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • காலை 10 மணிக்கு முதல் பகல் 2 மணி வரை திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது
    • துணை கமிஷனர் ஹரி சிங் நயால் முன்னிலையில் பங்கு பெற்றனர்

    கே.கே.நகர், 

    மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ள பாரத பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நேற்று திருச்சி விமான நிலையத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையின் துணை கமிஷனர் ஹரி சிங் நயால் முன்னிலையில் பங்கு பெற்றனர். இதில் விமான நிலைய ஆணையக் குழு அதிகாரிகளும் ஊழியர்களும் பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணி செய்தனர். தூய்மை பணி காலை 10 மணிக்கு முதல் பகல் 2 மணி வரை திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. திருச்சி விமான நிலையத்தின் துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சிவகுமார் சந்தானகிருஷ்ணன் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.  

    ×