search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joju George"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் மணிரத்னம் நாயகன் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது.

    இயக்குனர் மணிரத்னம் நாயகன் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    இதில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது.

    ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு ராஜஸ்தான், புதுடெல்லி, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டப்படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்பு தளங்களில் இருந்து சில புகைப்படங்கள் கசிந்தது.

    இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் (செர்பியா) நடைபெற இருப்பதாகவும் அதற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

     

    பாண்டிச்சேரி படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகருக்கு ஆக்சிடண்ட் ஆகியது என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படும் சமயத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதனால் ஜோஜு ஜார்ஜ் ஓய்விற்காக கொச்சின் திரும்பி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ஜோஜு ஜார்ஜ் விரைவில் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
    • இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்துடன் படக்குழு வெளியிட்ட வீடியோவில் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

     


    இந்த நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சூர்யா 44 படத்தில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோரும் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.
    • இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூர்யா 44 படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஷஃபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்கிறார்.

    சண்டை பயிற்சி பணிகளை கெச்சா கம்பக்தீ மேற்கொள்கிறார், கலை இயக்க பணிகளை ஜாக்கியும், ஆடை வடிவமைப்பு பணிகளை பிரவீன் ராஜா மேற்கொள்கின்றனர்.

    சூர்யா 44 படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதைதொடர்ந்து உறியடி விஜயகுமார் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும், மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
    • அவர் அடுத்து இயக்க போகும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று மும்பையில் தொடங்கியது.

    பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய படங்களை எடுக்கும் இயக்குனர்களில் அனுராக் காஷ்யப் முக்கியமானவர். அவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு மாறுபட்ட கதைக்களத்துடன் மற்றும் முரண் பட்ட சிந்தனையுடன் இருக்கும், கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    அவர் அடுத்து இயக்க போகும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று மும்பையில் தொடங்கியது. இப்படத்தில் பாபி தியால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சன்யா மல்ஹோத்ரா இணைந்து நடிக்கவுள்ளார். இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ் மற்றும் சபா அசாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் உருவாக இருக்கும் படமாகும்.

    சன்யா மல்ஹோத்ரா 'லவ் ஹாஸ்டல்' திரைப்படத்திற்கு பிறகு பாபி தியாலுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். மலையாள சினிமாவில் புகழ் பெற்ற நடிகரான ஜோஜு ஜார்ஜ் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் களம் இறங்கியுள்ளார்.

    இப்படத்தை நிகில் திவேதி தயாரிக்கவுள்ளார். இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சூர்யா 44 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுண்டபுரமுலோ படத்தின் மூலம் பிரபலமானார் பூஜா ஹெக்டே. அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் 40 நாட்கள் நடைப்பெறவுள்ளது. அதற்கு அடுத்து ஊட்டியில் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இத்திரைப்படம் சுற்று சூழல் பாதிப்பை பற்றி பேசக்கூடிய திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    மேலும், இப்படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
    • இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது

    பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக்களத்தில் படம் இயக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர்.

    கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார்.

    மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம். இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

    சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது.சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

    மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்பொழுது அவர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அத்திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இப்படத்தில் நடிக்கவுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படத்தில் இதர்கு முன் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    சூர்யா தற்பொழுது கங்குவா படத்தின் வெளியீட்டிற்காக தயாராகிக் கொண்டு இருக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் , சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' .
    • இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.


    இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.


    தக் லைஃப் போஸ்டர்

    இந்நிலையில், 'தக் லைஃப்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


    • நடிகர் ஜோஜு ஜார்ஜ் ‘பனி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    sமலையாளத்தில் பிரபல நடிகரான ஜோஜு ஜார்ஜ், தமிழில் தனுசுடன் ஜெகமே தந்திரம், பபூன் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவர் தற்போது 'பனி' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகுகிறார். இதில், அபிநயா, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, ஆபிரகாம் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், 'குணா', 'மின்சார கனவு', 'அன்பே ஆருயிரே' போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த பிரபல ஒளிப்பதிவாளர் வேணு இதில் பணியாற்றி வந்தார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் வேணு அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் இதனால் ஜோஜு ஜார்ஜுக்கும் வேணுவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல், வேணுவை நீக்கிவிட்டு வேறொரு ஒளிப்பதிவாளரை வைத்து படத்தைத் ஜோஜு ஜார்ஜ் தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், இது முற்றிலும் வதந்தி என ஜோஜு ஜார்ஜ் கூறியுள்ளார். அதாவது, "மலையாள சினிமாவில் நான் மதிக்கும் பல நபர்களில் வேணுவும் ஒருவர். நாங்கள் அவரை நீக்கவில்லை. அவராகதான் சென்றார். இன்றும் அவர் மீது எனக்கு அதே மரியாதை உள்ளது. இந்த படத்தை இயக்க சொன்னதே வேணு சார் தான். தயவு செய்து இது மாதிரியான வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

    • விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்
    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 'லியோ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலானது.


    ஜோஜு ஜார்ஜ்
    ஜோஜு ஜார்ஜ்

    இந்நிலையில் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிக்கவிருக்கும் பகுதியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜோஜு ஜார்ஜ்.
    • இவர் தமிழில் ஜெகமே தந்திரம், பபூன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    மலையாளத்தில் பிரபல நடிகரான ஜோஜு ஜார்ஜ், தமிழில் தனுசுடன் ஜெகமே தந்திரம், பபூன் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவர் நடித்துள்ள 'இரட்டா' திரைப்படம் கடந்த 3-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், நடிகர் ஜோஜு ஜார்ஜ் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாக வீடியோ ஒன்று வெளியிட்டு தெரிவித்துள்ளார்.


    ஜோஜு ஜார்ஜ்

    அதில் ஜோஜு ஜார்ஜ் கூறியதாவது, "இரட்டா படத்தின் புரொமோஷனுக்காக மீண்டும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்க முயன்றேன். ஆனால், எனக்கு எதிராக தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். நான் உங்களிடம் உதவி கேட்கவில்லை. என்னை தேவையில்லாமல் துன்புறுத்துவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும். என்னை கலைஞனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி" இவ்வாறு கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் கார் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
    தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ’ஜகமே தந்திரம்’. இப்படத்தில் சிவதாஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்து இருந்தார். மேலும் இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

    இந்நிலையில் சிவதாஸ் நேற்று காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தி வரும் நேரத்தில் சென்றிருக்கிறார். அப்போது இவரது கார் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. தான் அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.

    ஜோஜூ ஜார்ஜ்

    இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அவரது காரை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×