என் மலர்
நீங்கள் தேடியது "joju george"
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர்,ஜோஜூ ஜார்ஜ், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
திரைப்படம் கடந்த ஆகஸ்டு 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடித்த மலையாள நடிகராஜ ஜோஜூ ஜார்ஜூக்கும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தது.
இந்நிலையில், கேரள மாநிலம் மூணாறு பகுதியில் படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
அதில் சென்ற ஜோஜு ஜார்ஜ் உள்பட 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வரவு எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக அறிமுகமாகிய திரைப்படம் பணி.
- படப்பிடிப்பு பணிகள் இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக அறிமுகமாகிய திரைப்படம் பணி. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் அபிநயா, சகர் சூர்யா மற்றும் ஜுனாய்ஸ் நடித்தனர். இப்படத்திற்கு விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி எஸ் இசையமைத்திருதார்.
இந்நிலையில் பணி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜோஜு ஜார்ஜ் பணி 2 மற்றும் பணி 3 திரைப்படங்களை இயக்கவுள்ளார். பணி 2 முந்தைய பாகத்திற்கு தொடர்பு இல்லாமல்.
புது கதாப்பாத்திரங்களுடன், புது இடத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தை குறித்து புதிய அப்டேட் ஒன்ரை ஜோஜு ஜார்ஜ் கொடுத்துள்ளார். படத்திற்கு டீலக்ஸ் என தலைப்பு வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
- இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. நடிகர் சிம்பு, திரிஷா, கமல்ஹாசன் , அபிராமி என பலரும் படத்தை பற்றி பேசினர். அப்பொழுது கமல்ஹாசன் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜை புகழ்ந்து சில வார்த்தைகள் பேசினார். அதை கேட்ட ஜோஜு ஆனந்தத்தில் கண் கலங்கினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் கூறியதாவது " நான் 30-க்கு மேற்பட்ட இரட்டை வேடங்கள் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன் ஆனால் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்கும் உருவத்தில் ஏதோ ஒரு மாறுபாடு இருக்கும். ஆனால் ஜோஜு நடித்த இரட்டா படத்தில் அவர் ஒரு காவல் நிலையத்திற்குள் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பார். அவர் எந்த ஒரு உருவ மாறுபாடும் இல்லாமல் அதில் நடித்து இருப்பார். நான் பொறாமைப்படும் நடிகர்களுள் ஜோஜு ஒருவர்" என கூறினார்.
இதை கேட்ட ஜோஜு கமலுக்கு நன்றி தெரிவித்து கண் கலங்கினார்.
- மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் 'பணி'.
- கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்து இருக்கும் தக் லைஃப் திரைப்படத்திலும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் 'பணி'. கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதன் வெற்றியை தொடர்ந்து தமிழிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றியை கண்டார் ஜோஜு ஜார்ஜ்.
சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்து கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்து இருக்கும் தக் லைஃப் திரைப்படத்திலும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் அபிநயா, சகர் சூர்யா மற்றும் ஜுனாய்ஸ் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி எஸ் இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில் பணி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜோஜு ஜார்ஜ் பணி 2 மற்றும் பணி 3 திரைப்படங்களை இயக்கவுள்ளார். பணி 2 முந்தைய பாகத்திற்கு தொடர்பு இல்லாமல். புது கதாப்பாத்திரங்களுடன், புது இடத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து போஸ்டரை ஜோஜு ஜார்க் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ.
- ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு சென்சார் போர்ட் U/A சான்றிதழ் வழங்கியது. ரெட்ரோ 2 மணி நேரம் 48 நிமிட படமாக அமைந்துள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கேரளாவில் நடைப்பெற்றது. அதில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் " நான் ஒரு பெண்ணாக இருந்தால் கண்டிப்பாக சூர்யா சாருக்கு ஒரு லவ் லெட்டராவது கொடுத்திருப்பேன். அவருடைய தோற்றத்திற்கும், அழகுக்கும் மட்டும் நான் அதனை கொடுத்திருக்க மாட்டேன். அவருடைய மனதிற்கும், கண்ணியத்திற்கும், அவர் செய்யும் நல்ல காரியத்திற்கும் கொடுத்திருப்பேன்.
அவரை பற்றி அவ்வளவு அதிகம் உங்களுக்கு தெரிகிறதோ அவ்வளவு உங்களுக்கு பிடிக்கும் மேலும் அவர் ஒரு ரியல் சூப்பர் ஸ்டார்" என கூறினார்.
- இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
- ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான 'கண்ணாடி பூவே' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடலான கனிமா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு பாடல் மிக வைரலாக அமைந்தது.
படத்தின் பின்னணி காட்சிகளை காமிக் வடிவங்களில் படக்குழு வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் 8- வது அதியாயத்தை வெளியிட்டது அதில் நடிகர்களான ஜெயராம் மற்றும் ஜோஜு ஜார்க் படத்தின் எப்படி திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார் என்பதை விவரித்துள்ளது.
ஜெயராம் எப்பொழுதும் நடிக்கும் போது அங்கு இருப்பவர்களை கலகலப்பாக வைத்திருப்பார். பல நடிகர்களின் குரலில் பேசி மற்றவர்களை சிரிக்க வைப்பார் என தெரிவித்துள்ளனர். மேலும் ஜோஜு ஜார்ஜ் மலையாளம் பேசினாலும் படப்பிடிப்பின் காட்சியின் போது பக்கா தமிழில் பேசி அசத்துவார் என அந்த காமிக்கில் பதிவிட்டுள்ளனர்.
- மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜோஜு ஜார்ஜ்.
- இவர் தமிழில் ஜெகமே தந்திரம், பபூன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் பிரபல நடிகரான ஜோஜு ஜார்ஜ், தமிழில் தனுசுடன் ஜெகமே தந்திரம், பபூன் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவர் நடித்துள்ள 'இரட்டா' திரைப்படம் கடந்த 3-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், நடிகர் ஜோஜு ஜார்ஜ் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாக வீடியோ ஒன்று வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஜோஜு ஜார்ஜ்
அதில் ஜோஜு ஜார்ஜ் கூறியதாவது, "இரட்டா படத்தின் புரொமோஷனுக்காக மீண்டும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்க முயன்றேன். ஆனால், எனக்கு எதிராக தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். நான் உங்களிடம் உதவி கேட்கவில்லை. என்னை தேவையில்லாமல் துன்புறுத்துவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும். என்னை கலைஞனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி" இவ்வாறு கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 'லியோ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலானது.

இந்நிலையில் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிக்கவிருக்கும் பகுதியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நடிகர் ஜோஜு ஜார்ஜ் ‘பனி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.
sமலையாளத்தில் பிரபல நடிகரான ஜோஜு ஜார்ஜ், தமிழில் தனுசுடன் ஜெகமே தந்திரம், பபூன் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவர் தற்போது 'பனி' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகுகிறார். இதில், அபிநயா, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, ஆபிரகாம் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், 'குணா', 'மின்சார கனவு', 'அன்பே ஆருயிரே' போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த பிரபல ஒளிப்பதிவாளர் வேணு இதில் பணியாற்றி வந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் வேணு அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் இதனால் ஜோஜு ஜார்ஜுக்கும் வேணுவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல், வேணுவை நீக்கிவிட்டு வேறொரு ஒளிப்பதிவாளரை வைத்து படத்தைத் ஜோஜு ஜார்ஜ் தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இது முற்றிலும் வதந்தி என ஜோஜு ஜார்ஜ் கூறியுள்ளார். அதாவது, "மலையாள சினிமாவில் நான் மதிக்கும் பல நபர்களில் வேணுவும் ஒருவர். நாங்கள் அவரை நீக்கவில்லை. அவராகதான் சென்றார். இன்றும் அவர் மீது எனக்கு அதே மரியாதை உள்ளது. இந்த படத்தை இயக்க சொன்னதே வேணு சார் தான். தயவு செய்து இது மாதிரியான வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' .
- இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

தக் லைஃப் போஸ்டர்
இந்நிலையில், 'தக் லைஃப்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
Welcome onboard to the magnificent ensemble of Thug Life.#JojuGeorge @Gautham_Karthik
— Red Giant Movies (@RedGiantMovies_) January 10, 2024
#Thuglife #Ulaganayagan #KamalHaasan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @abhiramiact #Nasser @MShenbagamoort3 @RKFI… pic.twitter.com/MwLl4OlPZ3
- இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
- இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது
பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக்களத்தில் படம் இயக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர்.
கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார்.
மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம். இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது.சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்பொழுது அவர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அத்திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இப்படத்தில் நடிக்கவுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படத்தில் இதர்கு முன் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தற்பொழுது கங்குவா படத்தின் வெளியீட்டிற்காக தயாராகிக் கொண்டு இருக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் , சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சூர்யா 44 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுண்டபுரமுலோ படத்தின் மூலம் பிரபலமானார் பூஜா ஹெக்டே. அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் 40 நாட்கள் நடைப்பெறவுள்ளது. அதற்கு அடுத்து ஊட்டியில் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் சுற்று சூழல் பாதிப்பை பற்றி பேசக்கூடிய திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






