என் மலர்
நீங்கள் தேடியது "மணிரத்னம்"
- அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டு எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று முன் தினம் விழா நடைபெற்றது.
இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பாக்யராஜை வெகுவாக பாராட்டினார். இதற்கிடையே பாக்யராஜ் நேர்காணல் ஒன்று பங்கேற்று பேசியுள்ளார். அதில் ரஜினியின் தளபதி படத்திற்கு தான் யோசித்த வேறு மாதிரியான கிளைமாக்ஸ் குறித்து பாக்யராஜ் மனம் திறந்துள்ளார்.
1991 இல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி திரைப்படம் வெளியாகி கிளாசிக் அந்தஸ்து பெற்றது அனைவரும் அறிந்ததே. மகாபாரதத்தில் துரியோதனன், கர்ணன் நட்பை இன்ஸபிரேசனாக கொண்டு அர்ஜுனனாக அரவிந்த் சாமியை வைத்து தளபதி கதையை மணிரத்னம் அமைத்திருப்பார்.
இந்த படத்தின் தாதா மம்மூட்டி தனக்கு இடையூறு தரும் கலெக்டர் அரவிந்த் சாமியை கொல்ல வேண்டும் என தனது உயிர் நண்பன், தளபதி ரஜினியிடம் கூறுவார். ஆனால் மம்மூட்டி இவ்வாறு சொல்வதற்கு முன் ரஜினி தனது தாயை சந்தித்து, அரவிந்த் சாமி தனது தம்பி என்பதை அறிந்துகொள்வார்.
எனவே மம்மூட்டி கேட்கும் போது தன்னால் கொலை செய்ய முடியாது என ரஜினி கூறுவார். ஒரு கட்டத்தில் அவன் என் தம்பி, எனது உயிரை எடுத்துக்கோ, நான் உன் உயிர் நண்பன் ஆனால் அவனை கொல்ல சொல்லாதே என மம்மூட்டி இடம் கூற, ரஜினியின் நட்பை பார்த்து அவர் பூரித்துப்போவார்.
நண்பனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணடையலாம் என அரவிந்த் சாமியை பார்க்க இருவரும் போக, வில்லன் அந்நேரம் வந்து துப்பாக்கியால் சுட்டவுடன் மமூட்டி ரஜினியின் கண் முன்னேயே உயிரிழப்பார். இது கதை.

நேர்காணலில் பாக்கியராஜ் கூறியதாவது, தளபதி படம் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றியது. அவன் என் தம்பி, அவனை கொல்ல முடியாது என ரஜினி செல்லும்போது அந்த தேவா கதாபாத்திரத்தின் உயிர் நட்பு என்பது விழுந்துவிடுகிறது.
மம்மூட்டி சொன்னவுடன் எதுவும் சொல்லாமல் ரஜினி சிறு புன்னகையுடன் கையை நீட்டி துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தம்பியை கொல்ல புறப்பட வேண்டும்.
ரஜினி சென்றவுடன் அங்கு வரும் உண்மை தெரிந்த மற்றொருவன் இதை மாமூட்டியிடம் சொல்ல, மம்மூட்டி தனது நண்பன் தனக்காக தம்பியையே கொல்ல சென்றிருக்கிறான் என நெகிழ வேண்டும்.
ரஜினியை தடுக்க மம்மூட்டி கிளம்ப வேண்டும். மம்மூட்டி செல்லும் வழியில் வில்லன் கும்பல் அவரை இடைமறித்து தடுக்க வேண்டும். இப்போது ரஜினி அரவிந்த் சாமியை கொன்றுவிடுவாரா, அல்லது மம்மூட்டி வில்லன் கும்பலை சமாளித்து ரஜினியை சரியான நேரத்தில் தடுத்து நிறுத்துவாரா என்ற விறுவிறுப்பு படம் பார்பவர்களிடையே ஏற்படும்.
இதை ஏன் மணிரத்னம் யோசிக்கிக்கவில்லை என்று தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு பிறகு ரஜினியின் வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டிருந்தபோது இந்த மாற்று கிளைமாக்ஸை அவரிடம் கூறினேன்.
அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டு எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளனாக படம் பார்க்கும்போது எனக்கு இயல்பாகவே இது தோன்றியது. அந்த தேவா கதபாத்திரம் அந்த இடத்தில் சட்டென விழுந்துவிட்டதே என்று தோன்றியது என்று ரஜினியிடம் கூறினேன்" என்று தெரிவித்தார்.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது.
இயக்குநர் மணிரத்னம் தக்லைஃப் படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் தனது கதையை சிம்பு, விஜய் சேதுபதியிடம் கூறியதாகவும், இதில், சிம்பு அரசன் மற்றும் அஷ்வத்தின் படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியை வைத்து எடுக்க முடிவு செய்துள்ளார்.
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்திடம் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- படம் ரொம்ப பிடிச்சிருக்கு.
- உன் படைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் குவித்து வருகிறது.
இதனிடையே, இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் 'பைசன்' படத்தை பார்த்த இயக்குநர் மணிரத்னம், இப்போ தான் படம் பார்த்தேன் மாரி. படம் ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க தான் பைசன். உன் படைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன். இதை தொடர்ந்து செய். உன் குரல் தான் முக்கியம் என பாராட்டினார்.
இதையடுத்து இயக்குநர் மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்து மாரிசெல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பரியேறும் பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்... என்று கூறியுள்ளார்.
- சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இதனை தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். 'நாயகன்' (1987) படத்தை தொடர்ந்து, அதாவது 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 'தக் லைஃப்' படம் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.டி.டி. உரிமம் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது.
- 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
- திரையரங்குகளில் அதிகாலை முதலே குவிந்த ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
'நாயகன்' (1987) படத்தை தொடர்ந்து, அதாவது 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. இப்படத்தில் சிம்பு நடித்துள்ளதால் அவரின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இப்படம் தொடர்பான டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில், இன்று ஒருநாள் மட்டும் 'தக் லைஃப்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், சர்ச்சைகளை தாண்டி 'தக் லைஃப்' படம் கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதையொட்டி திரையரங்குகளில் அதிகாலை முதலே குவிந்த ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இப்படத்தில் நடித்த நடிகர்களும் திரையரங்கிற்கு திரைப்படத்தை காண வந்தனர்.
இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழு இன்று மலேசியாவில் ப்ரோமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8.01 மணிக்கு தொடங்கியது. கமல்ஹாசன் படங்களில் இப்படம் மிகப்பெரிய ஓப்பனிங் படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
- தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பின் எடுக்கப்பட்ட காட்சிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தக் லைஃப் படக்குழுவிலிருந்து சிம்பு மற்றும் மணிரத்னம் இணைந்து கதாநாயகியாக நடிக்கும் ருக்மிணியை வைத்து எடுக்கப்பட்ட ஒரு காதல் காட்சியின் படப்பிடிப்பின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
- தம்பி STR போகப் போகும் தூரம் எனக்குத் தெரிகிறது.
- நான் chief minister ஆகுறதுக்கு ஒண்ணும் வரல என்றார்.
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
தம்பி STR போகப் போகும் தூரம் எனக்குத் தெரிகிறது. உங்களுக்குப் புரிகிறது. உங்களுக்கு கடமை இருக்கிறது. இந்தக் கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள். அந்த ரெஸ்பான்சிபிளிடி உடன் நீங்கள் நடந்து கொள்வீர்கள். இது சுமை அல்ல, சுகம்.
நான் chief minister ஆகுறதுக்கு ஒண்ணும் வரல. எம்.எல்.ஏ, எம்.பி எல்லாம் எனக்கு புரியாது.
ஆனா 40 வருஷமா ஒரு எம்.எல்.ஏ. ஒரு தொகுதிக்கு என்ன பண்ணுவாரோ, அதை நாங்கள் சமயத்துக்கு மெதுவாக பண்ணிக்கிட்டே இருக்கோம். ஏனென்றால் நாங்கள் தனி மனிதர்கள்.
இங்கிருந்து என் கூட உழைத்த தம்பிகள் எல்லாம் பெரிய மனிதர்களாக சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பது எனக்குப் பெருமை.
கலைஞர் டயலாக் சொன்னதுபோல், பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தும் செய்யும் மீன், அதை போல நானும் என தெரிவித்தார்.
- இத்தனை லெஜெண்ட்ஸ் உடன் இந்த மேடையை பகிர்வதில் மகிழ்ச்சி.
- டிரெயிலருக்கு பிறகு நிறைய பேருக்கு என்னுடைய கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுந்தது.
சென்னையில் நடைபெற்று வரும் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ள நடிகை திரிஷா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் இருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. கவுரவமாக உணர்கிறேன். இந்த படத்தில் 3 பாடல்கள் படப்பிடிப்பில் நான் இருக்கிறேன் என்பதால், பாடல்களை முன்கூட்டியே கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது.
நாயகன் படத்திற்கு பிறகு கமல் சாரும், மணி சாரும் எப்போது மீண்டும் இணைவார்களா என்று 37 வருடங்களாக நானும் உங்களைப் போன்று காத்துக்கிடந்தேன்.
நிறைய இடங்களில் இதை நான் சொல்லி இருக்கிறேன். மணி சாருடன் நான்கு படங்களிலும், கமல் சாருடன் நான்கு படங்களிலும், ஏர்.ஆர். ரகுமான் சாருடன் 4 படங்கள் என என்னுடைய கனவு நிஜமாகியுள்ளது.
சினிமாவின் மாணவன் நான் என்று கமல் சார் அடிக்கடி கூறுவார். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.
தக் லைஃப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நான் சரியா வருவேனா என மணி சாருக்கும் எனக்கும் சந்தேகம் இருந்தது. ஏனென்றால், இது குந்தவை கதாப்பாத்திரத்திற்கு எதிரானது.
இத்தனை லெஜெண்ட்ஸ் உடன் இந்த மேடையை பகிர்வதில் மகிழ்ச்சி.
விடிவிக்கு பிறகு சிம்புவுடன் நடித்துள்ளேன், ஜூன் 5ம் தேதி போய் தியேட்டரில் பாருங்கள். டிரெயிலருக்கு பிறகு நிறைய பேருக்கு என்னுடைய கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுந்தது.
2 நிமிடங்கள் டிரெயிலர் பாத்திருப்பீங்க, 2 மணி நேர படத்திற்கு பிறகு புரியும் இந்த படம் என்னவென்று.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் " சூர்யா நடிப்பு துறையில்தான் வருவார் என ஜோதிடர் கூறினார். நான் நம்பவே இல்லை. சூர்யாவும் ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கலாம் என எண்ணினார். மணி ரத்னம் தயாரித்து வசந்த் இயக்கிய நேருக்கு நேர் திரைப்படத்தின் லுக் டெஸ்டிற்கு சென்றார். பிறகு திரைப்படம் வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்தது. மணி ரத்னம் மற்றும் வசந்திற்கு பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சூர்யாவை வைத்து இயக்கிய அனைத்து இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்." என கூறினார்.
இந்நிலையில் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தில் லவ் டீடாக்ஸ் என்ற பாடலை பாடியுள்ளார். இப்பாடலுக்கு சூர்யா மற்றும் ஷ்ரேயா இணைந்து நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- விருந்தோம்பல் என்பது தமிழனின் 2000 ஆண்டு பழக்கம்.
- பொறாமையும் போட்டியும் நிறைந்த திரைத்துறையில் இப்படியெல்லாம் நட்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேச உள்ளதாக கூறி கமல்ஹாசன் தனது பேச்சை தொடங்கினார். இது அரசியல் எல்லாம் இல்லை. இது தமிழனின் எதார்த்தம். விருந்தோம்பல் என்பது தமிழனின் 2000 ஆண்டு பழக்கம் என்று கூறி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:- மணிரத்னத்துடன் இணைந்து படத்தில் நடிப்பதற்கு மக்களின் தீர்ப்பே காரணம். மணிரத்னத்துக்கு அஞ்சரை மணிரத்னம் என்ற பட்டப்பெயர் வைத்துள்ளேன். அதுக்கு காரணம் படப்பிடிப்பு காலை 5 மணிக்கே வந்துவிடுவார். சிம்புவின் அப்பாவிற்கு என் மேல் பாசம் அதிகம். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அழுதுவிடுவார். அது ஒரு தலைமுறை. இன்றைய தலைமுறையான சிம்பு எப்படி என்றால் பாசத்தில் டி.ஆர். 8 அடி என்றால் இவர் 16 அடி பாய்ந்து உள்ளார். இந்த டயலாக் படத்திலும் இருக்கு. அவரைப் பார்த்து நான் சொல்ற மாதிரி. பொறாமையும் போட்டியும் நிறைந்த திரைத்துறையில் இப்படியெல்லாம் நட்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். மேடையில் இருக்கிற இந்த 2 கதாநாயகிகளும் இந்த படத்துல ஒரு தடவை கூட என்னை பார்த்து ஐ லவ் யூ சொல்லலை. ஆனா தினந்தோறும் காலை, மாலை எப்போது ஷூட்டிங்கிற்கு வந்தால் என்னை பார்த்து சார், ஐ லவ் யூ சொன்ன ஒரே ஆள் ஜோ ஜோ தான். அதனால மனசை கொஞ்சம் தேற்றிக்கொண்டேன் என்றார்.
இதனை தொடர்ந்து படத்தில் நடித்த நடிகர் அசோக் செல்வன், மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறித்து கமல் பேசினார். பேச்சு தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பேச தொடங்கிய கமல் பின்னர் தமிழில் பேசினார்.
- தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனும் சிம்புவும் இணைந்து நடித்துள்ளனர்.
- தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தக் லைப் திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் நாளை (ஏப்ரல் 18) வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் திருமணத்தில் கமல்ஹாசனும் சிம்புவும் இணைந்து நடனமாடுவது கவனம் ஈர்த்துள்ளது.






