என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maniratnam"

    • படம் ரொம்ப பிடிச்சிருக்கு.
    • உன் படைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் குவித்து வருகிறது.

    இதனிடையே, இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் 'பைசன்' படத்தை பார்த்த இயக்குநர் மணிரத்னம், இப்போ தான் படம் பார்த்தேன் மாரி. படம் ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க தான் பைசன். உன் படைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன். இதை தொடர்ந்து செய். உன் குரல் தான் முக்கியம் என பாராட்டினார்.

    இதையடுத்து இயக்குநர் மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்து மாரிசெல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பரியேறும் பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்... என்று கூறியுள்ளார். 



    • தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
    • தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    இந்நிலையில், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பின் எடுக்கப்பட்ட காட்சிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், தக் லைஃப் படக்குழுவிலிருந்து சிம்பு மற்றும் மணிரத்னம் இணைந்து கதாநாயகியாக நடிக்கும் ருக்மிணியை வைத்து எடுக்கப்பட்ட ஒரு காதல் காட்சியின் படப்பிடிப்பின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

    • தம்பி STR போகப் போகும் தூரம் எனக்குத் தெரிகிறது.
    • நான் chief minister ஆகுறதுக்கு ஒண்ணும் வரல என்றார்.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:

    தம்பி STR போகப் போகும் தூரம் எனக்குத் தெரிகிறது. உங்களுக்குப் புரிகிறது. உங்களுக்கு கடமை இருக்கிறது. இந்தக் கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள். அந்த ரெஸ்பான்சிபிளிடி உடன் நீங்கள் நடந்து கொள்வீர்கள். இது சுமை அல்ல, சுகம்.

    நான் chief minister ஆகுறதுக்கு ஒண்ணும் வரல. எம்.எல்.ஏ, எம்.பி எல்லாம் எனக்கு புரியாது.

    ஆனா 40 வருஷமா ஒரு எம்.எல்.ஏ. ஒரு தொகுதிக்கு என்ன பண்ணுவாரோ, அதை நாங்கள் சமயத்துக்கு மெதுவாக பண்ணிக்கிட்டே இருக்கோம். ஏனென்றால் நாங்கள் தனி மனிதர்கள்.

    இங்கிருந்து என் கூட உழைத்த தம்பிகள் எல்லாம் பெரிய மனிதர்களாக சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பது எனக்குப் பெருமை.

    கலைஞர் டயலாக் சொன்னதுபோல், பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தும் செய்யும் மீன், அதை போல நானும் என தெரிவித்தார்.

    • விண்னைத் தாண்டி வருவாயா படத்தில் நானும், திரிஷாவும் நடித்திருந்தோம். அதன் பிறகு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.
    • சினிமாவின் மாணவனாக இருந்தாலும் திறமையுள்ள மாணவனிடம் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை.

    சென்னையில் நடைபெற்று வரும் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் சிம்பு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தக் லைஃப் படத்தில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ஏ.ஆர்.ரகுமான் சாருடன் சிறிய வயதில் இருந்தே டிராவல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. என் தந்தை படத்தை தவிர, மற்ற படத்தில் பாட முதல் முதலாக எனக்கு வாய்ப்பு கொடுத்தது ஏ.ஆர்.ரகுமான் சார். அதன்பிறகு, இதுவரை தமிழ் முதல் இந்தி வரை 150 பாடல்கள் பாடியுள்ளேன்.

    விண்னைத் தாண்டி வருவாயா படத்தில் நானும், திரிஷாவும் நடித்திருந்தோம். அதன் பிறகு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இந்த படத்தில் நாங்கள் இணைவதாக தகவல் வெளியான பிறகு மீண்டும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் உள்ளது.

    என்னை வைத்து படம் எடுக்க, எல்லோரும் பயந்த சமயத்தில், பயப்படாமல் தைரியமாக, 'இந்த பையனை நம்பலாம்' என என் மீது நம்பிக்கை வைத்து என்னை அழைத்த மணி சாரை என்றும் மறக்கவே மாட்டேன்.

    சினிமாவின் மாணவனாக இருந்தாலும் திறமையுள்ள மாணவனிடம் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இத்தனை லெஜெண்ட்ஸ் உடன் இந்த மேடையை பகிர்வதில் மகிழ்ச்சி.
    • டிரெயிலருக்கு பிறகு நிறைய பேருக்கு என்னுடைய கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுந்தது.

    சென்னையில் நடைபெற்று வரும் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ள நடிகை திரிஷா பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் இருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. கவுரவமாக உணர்கிறேன். இந்த படத்தில் 3 பாடல்கள் படப்பிடிப்பில் நான் இருக்கிறேன் என்பதால், பாடல்களை முன்கூட்டியே கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது.

    நாயகன் படத்திற்கு பிறகு கமல் சாரும், மணி சாரும் எப்போது மீண்டும் இணைவார்களா என்று 37 வருடங்களாக நானும் உங்களைப் போன்று காத்துக்கிடந்தேன்.

    நிறைய இடங்களில் இதை நான் சொல்லி இருக்கிறேன். மணி சாருடன் நான்கு படங்களிலும், கமல் சாருடன் நான்கு படங்களிலும், ஏர்.ஆர். ரகுமான் சாருடன் 4 படங்கள் என என்னுடைய கனவு நிஜமாகியுள்ளது.

    சினிமாவின் மாணவன் நான் என்று கமல் சார் அடிக்கடி கூறுவார். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.

    தக் லைஃப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நான் சரியா வருவேனா என மணி சாருக்கும் எனக்கும் சந்தேகம் இருந்தது. ஏனென்றால், இது குந்தவை கதாப்பாத்திரத்திற்கு எதிரானது.

    இத்தனை லெஜெண்ட்ஸ் உடன் இந்த மேடையை பகிர்வதில் மகிழ்ச்சி.

    விடிவிக்கு பிறகு சிம்புவுடன் நடித்துள்ளேன், ஜூன் 5ம் தேதி போய் தியேட்டரில் பாருங்கள். டிரெயிலருக்கு பிறகு நிறைய பேருக்கு என்னுடைய கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுந்தது.

    2 நிமிடங்கள் டிரெயிலர் பாத்திருப்பீங்க, 2 மணி நேர படத்திற்கு பிறகு புரியும் இந்த படம் என்னவென்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் " சூர்யா நடிப்பு துறையில்தான் வருவார் என ஜோதிடர் கூறினார். நான் நம்பவே இல்லை. சூர்யாவும் ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கலாம் என எண்ணினார். மணி ரத்னம் தயாரித்து வசந்த் இயக்கிய நேருக்கு நேர் திரைப்படத்தின் லுக் டெஸ்டிற்கு சென்றார். பிறகு திரைப்படம் வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்தது. மணி ரத்னம் மற்றும் வசந்திற்கு பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சூர்யாவை வைத்து இயக்கிய அனைத்து இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்." என கூறினார்.

    இந்நிலையில் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தில் லவ் டீடாக்ஸ் என்ற பாடலை பாடியுள்ளார். இப்பாடலுக்கு சூர்யா மற்றும் ஷ்ரேயா இணைந்து நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • விருந்தோம்பல் என்பது தமிழனின் 2000 ஆண்டு பழக்கம்.
    • பொறாமையும் போட்டியும் நிறைந்த திரைத்துறையில் இப்படியெல்லாம் நட்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேச உள்ளதாக கூறி கமல்ஹாசன் தனது பேச்சை தொடங்கினார். இது அரசியல் எல்லாம் இல்லை. இது தமிழனின் எதார்த்தம். விருந்தோம்பல் என்பது தமிழனின் 2000 ஆண்டு பழக்கம் என்று கூறி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- மணிரத்னத்துடன் இணைந்து படத்தில் நடிப்பதற்கு மக்களின் தீர்ப்பே காரணம். மணிரத்னத்துக்கு அஞ்சரை மணிரத்னம் என்ற பட்டப்பெயர் வைத்துள்ளேன். அதுக்கு காரணம் படப்பிடிப்பு காலை 5 மணிக்கே வந்துவிடுவார். சிம்புவின் அப்பாவிற்கு என் மேல் பாசம் அதிகம். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அழுதுவிடுவார். அது ஒரு தலைமுறை. இன்றைய தலைமுறையான சிம்பு எப்படி என்றால் பாசத்தில் டி.ஆர். 8 அடி என்றால் இவர் 16 அடி பாய்ந்து உள்ளார். இந்த டயலாக் படத்திலும் இருக்கு. அவரைப் பார்த்து நான் சொல்ற மாதிரி. பொறாமையும் போட்டியும் நிறைந்த திரைத்துறையில் இப்படியெல்லாம் நட்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். மேடையில் இருக்கிற இந்த 2 கதாநாயகிகளும் இந்த படத்துல ஒரு தடவை கூட என்னை பார்த்து ஐ லவ் யூ சொல்லலை. ஆனா தினந்தோறும் காலை, மாலை எப்போது ஷூட்டிங்கிற்கு வந்தால் என்னை பார்த்து சார், ஐ லவ் யூ சொன்ன ஒரே ஆள் ஜோ ஜோ தான். அதனால மனசை கொஞ்சம் தேற்றிக்கொண்டேன் என்றார்.

    இதனை தொடர்ந்து படத்தில் நடித்த நடிகர் அசோக் செல்வன், மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறித்து கமல் பேசினார். பேச்சு தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பேச தொடங்கிய கமல் பின்னர் தமிழில் பேசினார். 

    • தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனும் சிம்புவும் இணைந்து நடித்துள்ளனர்.
    • தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், தக் லைப் திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் நாளை (ஏப்ரல் 18) வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் திருமணத்தில் கமல்ஹாசனும் சிம்புவும் இணைந்து நடனமாடுவது கவனம் ஈர்த்துள்ளது.

    • தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது.
    • தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது அதில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டிருந்தது.

    இந்நியைலில், தக் லைப் திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வரும் 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இதற்கான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஒரு பீட்டு இரண்டு தக்ஸ் எனவும் பதிவிட்டுள்ளனர்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
    • இந்த திரைப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    பொன்னியின் செல்வன்

    இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


    பொன்னியின் செல்வன்

    இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பாடல்கள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய அனுபவத்தில் பெஸ்ட் மியூசிக் ஆல்பம், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னம் சாரின் பொன்னியின் செல்வன் என்பதில் சந்தேகமே இல்லை. மிகச் சிறிய இடத்தில் கூட கவனம் செலுத்துவது பிரம்மிக்க வைக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். 


    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியன திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -1’.
    • 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    பொன்னியின் செல்வன்

    இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


    பொன்னியின் செல்வன் போஸ்டர்

    இந்நிலையில், 'பொன்னியின் செல்வன் -1' ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தை தற்போது வாடகை முறையில் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன் -1'.
    • 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

     

    பொன்னியின் செல்வன் 

    பொன்னியின் செல்வன் 

    பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

     

    பொன்னியின் செல்வன் 

    பொன்னியின் செல்வன் 

    இதில் இயக்குனர் மணிரத்னம் பேசியதாவது, அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அதனால் முதலில் வணங்கிக் கொள்கிறேன். அமரர் கல்கிக்குத் தான் முதல் நன்றி. 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படித்த வாசகர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை மற்றும் கனவு இருக்கும். அதனைத் திரைப்படமாகக் கொண்டு வருவது என்பது ஒரு பேராசை. அந்தப் பேராசையை அடைந்துவிட்டேன். இதனை அனுமதிச்சு அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி.

     

    பொன்னியின் செல்வன் 

    பொன்னியின் செல்வன் 

    சுபாஷ்கரன் சார் கிட்ட நான் 'பொன்னியின் செல்வன்' பண்ணனும்னு சொன்னேன். உடனே இரண்டு நிமிடத்தில் ஓகே சொல்லிவிட்டார். இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல் செயல்பட்டோம். அவர்கள் இல்லை என்றால் நிச்சயமாக இதை உருவாக்கி இருக்க முடியாது. முக்கியமாகக் கொரோனா காலகட்டத்தில் யாரும் உடல் எடையை ஏத்தாமல் இருந்ததற்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் மாறியதற்கும் நன்றி.

     

    மணிரத்னம் 

    மணிரத்னம் 

    இப்படத்தில் உதவி இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என நிறையப் பேர் பணியாற்றினோம். அவர்களைப் பார்க்கும்போது பயமாக இருக்கும். இவ்வளவு பேர் நம்மை நம்பி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வேலை வாங்குவது ஒரு பெரிய பொறுப்பு எனத்தோன்றும். இது எப்படி நடக்கும் எனத் தெரியாது.

     

    பொன்னியின் செல்வன் 

    பொன்னியின் செல்வன் 

    ஆனால் அடுத்த வேலைக்குப் செல்லும் போது இதெல்லாம் மறந்திடும். அவர்கள் எல்லோரும் நம் கண்களுக்கு முன்னால் தெரிய மாட்டார்கள் பின்னாடி தான் வேலை செய்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு மிகப்பெரியதாகக் கருதுகிறேன். என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

     

    விக்ரம் 

    விக்ரம் 

    நடிகர் விக்ரம் பேசும் போது, "பல ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தியேட்டருக்குப் படம் பார்க்க வர ஆரம்பித்திருக்கிறார்கள். இது பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏற்படுத்திய மாற்றம். வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும் வந்து படம் பார்த்தார்கள்" என்றார்.

    ×