என் மலர்
நீங்கள் தேடியது "விக்ரம்"
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் ஆரம்ப காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கென அடையாளம் தந்தது 'சேது' படம் தான்.
அப்படத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். ரசிகர்களால் அன்போடு 'சியான்' என்று அழைக்கப்படுகிறார்.
படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் விக்ரம் என்றால் மிகையாகாது.
இதனிடையே, 'வீர தீர சூரன்' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமின் புது படம் தொடர்பான தகவல்கள் வெளியானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு அறிமுக இயக்குநருடன் இணைந்து விக்ரம் பணியாற்ற உள்ளதாகவும் இயக்குநரின் ஸ்கிரிப்ட் விக்ரமை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விக்ரமின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், சியான் விக்ரமின் 63வது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் இயக்குகிறார் என்ற புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
- இயக்குநரின் ஸ்கிரிப்ட் விக்ரமை மிகவும் கவர்ந்துள்ளது.
- சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் ஆரம்ப காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கென அடையாளம் தந்தது 'சேது' படம் தான். அப்படத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். ரசிகர்களால் அன்போடு 'சியான்' என்று அழைக்கப்படுகிறார்.
படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் விக்ரம் என்றால் மிகையாகாது.
இதனிடையே, 'வீர தீர சூரன்' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமின் புது படம் தொடர்பான தகவல்கள் வெளியானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அறிமுக இயக்குநருடன் இணைந்து விக்ரம் பணியாற்ற உள்ளதாகவும் இயக்குநரின் ஸ்கிரிப்ட் விக்ரமை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விக்ரமின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
- தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
- தந்தை போலவே மகனும் படத்திற்காக கடின உழைப்பு கொடுத்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் ஆரம்ப காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கென அடையாளம் தந்தது 'சேது' படம் தான். அப்படத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களை நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார்.
படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் விக்ரம் என்றால் மிகையாகாது.
இந்த நிலையில், தனது மகன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள 'பைசன்' படத்திற்காக துருவ் விக்ரம் தீவிர பயிற்சி மேற்கொண்ட வீடியோவை விக்ரம் பகிர்ந்து பெருமிதம் கொண்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். தந்தை போலவே மகனும் படத்திற்காக கடின உழைப்பு கொடுத்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
- கஷ்டமான காட்சிகள் நடிக்கும்போது சியானை நினைத்துக்கொள்வேன்.
- மாரி செல்வராஜ் 'டேக் ஓகே' என்று சொன்னாலே எனக்கு வாழ்க்கையில ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கும்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய துருவ் விக்ரம், "கஷ்டமான காட்சிகள் நடிக்கும்போது சியானை நினைத்துக்கொள்வேன். என் அப்பாவுடன் என்னை ஒப்பிட முடியாது. இருந்தாலும் அவரை போல நடிக்க நான் தொடர்ந்து முயற்சிப்பேன்.
பைசன் படத்தைக் கொடுத்ததற்கு என் குரு, இயக்குனர் மாரிசெல்வராஜ் சாருக்கு நன்றி. நான் இப்படத்திற்காக 2-3 வருடங்கள் காத்திருந்தேன் என்று சிலர் கூறுகிறார்கள், இதற்காக நான் 10 வருடங்கள் கூட காத்திருப்பேன். பைசன் படப்பிடிப்பின் போது மாரி செல்வராஜ் 'டேக் ஓகே' என்று சொன்னாலே எனக்கு வாழ்க்கையில ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கும். உங்களுடன் மீண்டும் பணியாற்ற நான் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
- விக்ரம் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
- இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விக்ரமின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'வீர தீர சூரன்'. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை என்றாலும் விக்ரமுக்கு பாராட்டுகளை பெற்றுத்தந்தது. இதையடுத்து விக்ரம் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது நடிகர் விக்ரம், கமர்ஷியல் படங்களை கொடுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பல ஆண்டுகளாக பணியாற்றிய விஷ்ணு எடவனுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம்- விஷ்ணு எடவன் இணைந்துள்ள இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் விஷ்ணு எடவன் தற்போது கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'ஹை' படத்தை இயக்கி வருகிறார். விக்ரம், லியோ போன்ற படங்களுக்கு விஷ்ணு எடவன் பாடல்களை எழுதியுள்ளார். 'நான் ரெடி தான்' பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் விஷ்ணு எடவன் பிரபலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் எதிர்பாராத இடத்தில் ஏஜெண்ட் டீனா என்ற கதாப்பாத்திரம் வந்து மக்களின் பெரும் வரவவேற்பை பெற்றது. இந்த கதாப்பாத்திரத்தை வைத்து ஒரு தனி இணைய தொடரை உருவாக்க இருக்கிறார் லோகேஷ். ஆனால் இதை அவர் இயக்காமல் அவரது உதவி இயக்குநர் இயக்க இருக்கிறார். இதனால் LCU ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
- விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ளார்.
- இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
வீர தீர சூரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ளார்.
விக்ரமின் 64-வது படமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
முன்னதாக விக்ரமின் அடுத்த படத்தினை மடோன் அஸ்வின் இயக்குவதாக இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர் அப்படம் கைவிடப்பட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அப்படம் கைவிடப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பிரேம் குமார் இயக்கும் இப்படம் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடக்க இருக்கிறது. இப்படத்தை முடித்துவிட்டு மடோன் அஸ்வின் படத்தில் நடிக்க இருக்கிறார் சீயான் விக்ரம்.
- விக்ரமின் 64-வது படமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
- இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
வீர தீர் சூரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ளார்.
விக்ரமின் 64-வது படமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்ரமின் 64-வது படத்தை இயக்குகிறார் 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார். இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
முன்னதாக விக்ரமின் 64-வது படத்தினை மடோன் அஸ்வின் இயக்குவதாக இருந்தது. இப்போது இந்த அறிவிப்பால் மடோன் அஸ்வின் இயக்கவுள்ள படம் கைவிடப்பட்டதாகவே கூறப்படுகிறது.
- நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்த படம் 'துருவ நட்சத்திரம்'.
- இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது.
நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்த படம் 'துருவ நட்சத்திரம்'. முதலில் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை 2010 ஆம் ஆண்டு துவங்கினார் கௌதம் மேனன். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
இக்கதையை கேட்ட விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இப்படம் துவங்கப்பட்டது. நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது.
பலமுறை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும், அந்த தேதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை. சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து இருந்தார்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கவுதம் மேனன் துருவ நட்சத்திரம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் அதில் " துருவ நடசத்திரம் திரைப்படம் வெளியீட்டிற்கு பிறகு தான் நான் மற்ற வேலைகளை தொடங்க போகிறேன். நான் அடுத்து எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. திரைப்படத்தை முதலீட்டாளர்களிடம் காண்பித்தோம் அவர்களுக்கு பிடித்துள்ளது. படத்தின் மீதுள்ள சட்ட சிக்கல்களை தீர்த்து வருகிறோம். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பாக திரைப்படம் வெளியாகும்." என கூறியுள்ளார்.
இம்முறையாவது திரைப்படம் திரையரங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் எஸ்.ஜே சூர்யா யாரை எப்படி என்கவுண்டர் செய்ய வேண்டும் என சக அதிகாரிகளிடம் பேசிக்கொண்டு இருக்கும் காட்சியமைந்துள்ளது.
- மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
- ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குவித்து வருகிறது.
'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குவித்து வருகிறது.
இந்த நிலையில், 'வீர தீர சூரன் பாகம்-2' வெளியாகி 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.
திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் உலகளவில் 52 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர். திரைப்படம் இந்த வார இறுதியில் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தை இந்தளவு வெற்றி திரைப்படமாக மாற்றிய ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து விக்ரம் வீடியோ ஒன்றை பதிவுசெய்துள்ளார். அதில் "இப்படம் வெளியாக இருந்த சிக்கல்கள் உங்களுக்கே தெரியும். எனது ரசிகர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன் அப்படி ஒரு திரைப்படமாக இது அமைந்தது. படத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்." என கூறியுள்ளார்.






