என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேம்குமார்"

    • அடுத்த ஆண்டு ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
    • இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

    '96' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பிரபலமானவர் இயக்குநர் பிரேம்குமார். '96' படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளிவந்த 'மெய்யழகன்' படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், இயக்குநர் பிரேம்குமார் அடுத்ததாக ஃபஹத் பாசிலுடன் இணைய உள்ளார். இது ஒரு த்ரில்லர் ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறியுள்ள பிரேம்குமார், கதை தொடர்பாக ஃபஹத் பாசிலிடம் சுமார் 45 நிமிடங்கள் வரை பேசியதாகவும், இந்த கதை ஃபஹத் பாசிலுக்கு ரொம்ப பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார் .

    இது நேரடி தமிழ் படமாக வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார்.

    இதனிடையே, இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தாமதமாகலாம் என கூறப்படுகிறது. 

    • விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ளார்.
    • இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

    வீர தீர சூரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ளார்.

    விக்ரமின் 64-வது படமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

    முன்னதாக விக்ரமின் அடுத்த படத்தினை மடோன் அஸ்வின் இயக்குவதாக இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர் அப்படம் கைவிடப்பட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அப்படம் கைவிடப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    பிரேம் குமார் இயக்கும் இப்படம் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடக்க இருக்கிறது. இப்படத்தை முடித்துவிட்டு மடோன் அஸ்வின் படத்தில் நடிக்க இருக்கிறார் சீயான் விக்ரம்.

    • விக்ரமின் 64-வது படமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
    • இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

    வீர தீர் சூரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ளார்.

    விக்ரமின் 64-வது படமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

    வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்ரமின் 64-வது படத்தை இயக்குகிறார் 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார். இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

    முன்னதாக விக்ரமின் 64-வது படத்தினை மடோன் அஸ்வின் இயக்குவதாக இருந்தது. இப்போது இந்த அறிவிப்பால் மடோன் அஸ்வின் இயக்கவுள்ள படம் கைவிடப்பட்டதாகவே கூறப்படுகிறது.

    • இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டியர் டெத்’.
    • இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    எஸ்.என். ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டியர் டெத்'.சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். பிரேம்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு நவீன் அண்ணாமலை இசையமைத்துள்ளார்.


    டியர் டெத்

    இறப்பு என்பது நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது கம்பீரமானது. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் குறித்து கதாசிரியர் ஸ்ரீதர் வெங்கடேசன் கூறும்போது, "உண்மை சம்பவங்களையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்தப்படத்தை உருவாக்கியுளோம். இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் படத்திலுள்ள கதாபாத்திரங்களுடன் ஏதோ ஒரு விதத்தில் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.


    டியர் டெத்

    இதுவரை இங்கே இறப்பு என்கிற விஷயத்தைப் பற்றி பேசும்போது எமன் என்கிற ஒரு கதாபாத்திரம் மூலமாகவே பேசியிருக்கிறார்கள். முதன்முறையாக இறப்பே ஒரு கதாபாத்திரமாக மனித உருவில் மாறி பேசினால் எப்படி இருக்கும் என்கிற புதிய முயற்சிதான் இந்த படம். இந்த படத்தில் காதல், அம்மா, குழந்தை, நட்பு என நான்கு கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு கதைகளுடன் இறப்பு எப்படி தொடர்புபடுத்தப்படுகிறது என்பதை ஹைபர்லிங்க் முறையில் கூறியுள்ளோம்" என்று கூறினார்.

    இந்தப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்சாரில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×