என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chiyaan63"

    'வீர தீர சூரன்' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமின் புது படம் தொடர்பான தகவல் வெளியானது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் ஆரம்ப காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கென அடையாளம் தந்தது 'சேது' படம் தான்.

    அப்படத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். ரசிகர்களால் அன்போடு 'சியான்' என்று அழைக்கப்படுகிறார்.

    படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் விக்ரம் என்றால் மிகையாகாது.

    இதனிடையே, 'வீர தீர சூரன்' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமின் புது படம் தொடர்பான தகவல்கள் வெளியானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

    நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

    ஒரு அறிமுக இயக்குநருடன் இணைந்து விக்ரம் பணியாற்ற உள்ளதாகவும் இயக்குநரின் ஸ்கிரிப்ட் விக்ரமை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விக்ரமின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இந்நிலையில், சியான் விக்ரமின் 63வது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் இயக்குகிறார் என்ற புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

    • இயக்குநரின் ஸ்கிரிப்ட் விக்ரமை மிகவும் கவர்ந்துள்ளது.
    • சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் ஆரம்ப காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கென அடையாளம் தந்தது 'சேது' படம் தான். அப்படத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். ரசிகர்களால் அன்போடு 'சியான்' என்று அழைக்கப்படுகிறார்.

    படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் விக்ரம் என்றால் மிகையாகாது.

    இதனிடையே, 'வீர தீர சூரன்' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமின் புது படம் தொடர்பான தகவல்கள் வெளியானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு அறிமுக இயக்குநருடன் இணைந்து விக்ரம் பணியாற்ற உள்ளதாகவும் இயக்குநரின் ஸ்கிரிப்ட் விக்ரமை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விக்ரமின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

    • சிதம்பரம் தற்பொழுது மலையாளத்தில் படத்தை இயக்கவுள்ளார்.
    • சித்தா இயக்குனர் இயக்கும் சியான் 62 படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

    கடந்த மாதம் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகிய படம் மஞ்சும்மல் பாய்ஸ். ஒரு மாதம் முழுவதும் எங்கு திரும்பினாலும் மஞ்சும்மல் பாய்ஸ் , மஞ்சும்மல் பாய்ஸ் என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது.

    சமூக வலைத்தளங்களில் 'கண்மணி அன்போடு காதலன்' பாட்டு மிகவும் வைரலாகியது.

    படத்தை பார்த்து பல தமிழ் பிரபலங்களான கமல், ரஜினிகாந்த, விக்ரம் , சித்தார்த் என பலர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் இதுவரை 220 கோடி ரூபாய் வசூலித்துல்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    இந்நிலையில் நடிகர் விக்ரம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனரான சிதம்பரம் இயக்கத்தில் அடுத்தப்படம் நடிக்கவுள்ளார். சிதம்பரம் தற்பொழுது மலையாளத்தில் படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை இயக்கி முடித்தப் பின் விக்ரம் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். சியான் 2024 ஆம் ஆண்டு வரிசையாக மிக சுவாரசியமான படங்களில் நடித்து வருகிறார்.

    தங்கலான்,கரிகாலன், கர்ணன், கருடா, என பெரும் படங்களில் நடித்து வருகிறார். சித்தா இயக்குனர் இயக்கும் சியான் 62 படத்தில் தற்பொழுது  நடித்து வருகிறார். 

    சியான் 62 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிதம்பரம் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன்
    • இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 62' எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

    'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் 'ராயன்' , 'வேட்டையன்' ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது 'சீயான்' விக்ரம் நடிப்பில் தயாராகும் 'சீயான் 62' படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 62' எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

    இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×