என் மலர்
நீங்கள் தேடியது "லோகேஷ் கனகராஜ்"
- இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது.
- மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டம்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகிறார்.
பல நடிகர்களை இயக்கி வெற்றிப் படங்களை வழங்கிய பிறகு, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாவதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அவர் ஒரு கதாநாயகனாக வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதனிடையே, லோகேஷ் கனகராஜ், ஒரு பான் இந்தியா படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் கூறிய கதை அல்லு அர்ஜூனுக்கு பிடித்து உள்ளதாகவும் இதனால் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது மிகப்பிரமாண்டமான ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். எனவே அப்படத்தை முடித்துக்கொண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- இவர் ‘கைதி 2’ மற்றும் ‘விக்ரம் 2’ படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
- நடிகை சம்யுக்தாவும் நடித்து வருகிறார்.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் "ஜி ஸ்குவாட்" நிறுவனம் தயாரிப்பில் 'பென்ஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே 'ரெமோ', 'சுல்தான்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 'பென்ஸ்' திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.
இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் மாதவன் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.
'பென்ஸ்' திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கிறார். இதன் மூலம் அவர் லோகேஷ் சினிமாட்டிக் உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் இணையாக ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர் 'கைதி 2' மற்றும் 'விக்ரம் 2' படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. நடிகை சம்யுக்தாவும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'பென்ஸ்' படப்பிடிப்பின் முதல் கட்டப் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது
- புதிய படம் குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.

கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ரூ.35 கோடி சம்பளம் பெறுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் அறிமுக நடிகர்களில் ஒருவராகிறார்.
பல நடிகர்களை இயக்கி வெற்றிப் படங்களை வழங்கிய பிறகு, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாவதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அவர் ஒரு ஹீரோவாக வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதனிடையே, லோகேஷ் கனகராஜ் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் புதிய படம் குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.
- 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
- மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள BANDUAN படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'கைதி' படத்தின் மலாய் ரீமேக் 'BANDUAN' படத்தை பார்க்க நடிகர் கார்த்தி மலேசியா சென்றுள்ளார்.
திரையரங்குகளில் நவ.6 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. BANDUAN படத்தின் கதாநாயகனுடன் நடிகர் கார்த்தி சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.
இவரது இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என கூறப்பட்டு வந்தது.
இதற்கிடையே , இந்தப் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 23 அன்று நடைபெற்றதாக தகவல் வெளியானது.
இந்தப் படத்தில்தான் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்றும் ஜனவரி மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் லோகேஷ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர் 2016-ல் "மாலை நேரத்து மயக்கம்" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு "DC" என பெயரிடப்பட்டுள்ளது.
- படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 23 அன்று நடைபெற்றதாக தகவல் வெளியானது.
- "மாலை நேரத்து மயக்கம்" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.
இவரது இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என கூறப்பட்டு வந்தது.
இதற்கிடையே , இந்தப் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 23 அன்று நடைபெற்றதாக தகவல் வெளியானது.
இந்தப் படத்தில் தான் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்றும் ஜனவரி மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடியும் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த படத்தில் லோகேஷ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 2016-ல் "மாலை நேரத்து மயக்கம்" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கடைசியாக ராஜ்குமார் ராவ் உடன் 'புல் சுக் மாப்' என்ற இந்தி படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். பாலிவுட் ரசிகர்களிடையே crush ஆக விளங்கி வரும் வாமிகா லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் தமிழ் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தநிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும். படத்தின் கதை இருவருக்கும் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால், ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கும் படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ் அல்ல.. நெல்சன் என புதிய தகவல் கிடைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜின் கதை வன்முறை நிறைந்து இருப்பதால் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும், நெல்சன் கூறிய கதைக்கு அவர் கிரீன் சிங்னல் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெயிலர்2 படத்திற்குப் பிறகு, நெல்சன் படப்பிற்கு முந்தைய பணிகளை தொடங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரஜினிகாந்த் சுந்தர்.சி இயக்கும் படத்திலும், கமல்ஹாசன் அன்பறிவ் படத்திலும் நடிக்கவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
- கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியானது.
- படத்தின் பூஜை இன்று நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.
இவரது இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்தப் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் தான் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலான நிலையில், பல மாஸ் ஹீரோக்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 33 வயதாகும் ரச்சிதா ராம் சிங்கிளாகவே இருந்து வந்ததால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காதல் தூது விட்டு வந்தனர்.
- எனக்கு கணவனாக வரப்போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்தவித கனவும் இல்லை.
கன்னட சினிமாவில் பிரபலமான ரச்சிதா ராம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் திடீர் வில்லியாக உருவெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார்.
33 வயதாகும் ரச்சிதா ராம் சிங்கிளாகவே இருந்து வந்ததால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காதல் தூது விட்டு வந்தனர்.
இந்நிலையில் ரச்சிதா ராம் திருமண பந்தத்தில் இணையவுள்ளாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இன்னும் சில நாட்களில் நான் தாம்பத்திய வாழ்க்கையில் கால் பதிக்க இருக்கிறேன்.
எனக்கு கணவனாக வரப்போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்தவித கனவும் இல்லை. வீட்டில் எனக்கு வரன் பார்க்கும் படலம் வேகமாக நடந்து வருகிறது'', என்றார்.
இதனால் சந்தோஷம் பாதி, கவலை மீதி என்ற ரீதியில் ரசிகர்கள் வாழ்த்துகளை 'கமெண்ட்'டுகளாக அளித்து வருகிறார்கள்.
- சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.
- சண்டை உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் 'கூலி'. இப்படம் கடந்த மாதம் 14-ந்தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது.
'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். அங்கு சண்டை உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து படப்பிடிப்புகளை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது அவர் கூறுகையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன் லாலுக்கு வாழ்த்து. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்தார்.
- கூலி திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
- ஆமீர் கானை வைத்து லோகேஷ் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகின.
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.
'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைதி 2 படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான கூலி திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனையடுத்து ஆமீர் கானை வைத்து லோகேஷ் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகின. பின்னர், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பும் லோகேஷ் கையைவிட்டு சென்றுள்ளது.
இந்த வரிசையில் தற்போது கைதி 2 படமும் கைவிடப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலி படத்துக்காக ரூ.50 கோடி சம்பளம் பெற்ற லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்திற்கு ரூ.75 கோடி வரை கேட்டதாகவும் இதனை கேட்டு தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
அதே சமயம் கைதி 2 படம் கைவிடப்பட்டதா என்பது குறித்து எவ்வித அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






