என் மலர்
நீங்கள் தேடியது "ரஜினிகாந்த்"
- கவிஞர் வைரமுத்துக்கு இந்த ஆண்டு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது.
- 24 ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
சென்னை:
இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது.
ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பின் வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞானபீடம் விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஜினிகாந்த் கூறுகையில், நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருதைப் பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
- ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் கட்சி தொடங்க நினைத்தது உண்மை.
- தமிழகத்தில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகுந்த வலிமையோடு உள்ளது.
மதுரைக்கு விமானத்தில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என தி.மு.க. மிரட்டியதாக, த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியது கற்பனை என நினைக்கிறேன். ரஜினிகாந்த் அரசியல், அதிகாரம், ஆட்சி போன்றவற்றில் ஆர்வம் காட்டக்கூடியவரோ, மயங்கக்கூடியவரோ அல்ல. அவர் அந்த நிலையில் இருந்தெல்லாம், வெளியேறிவிட்டார், விலகி நிற்கிறார். அவரை யாரும் ஆசைக்காட்டி மயக்கி அரசியலுக்குள் இழுக்க முடியாது. அச்சுறுத்தி அவரை வெளியேற்றவும் முடியாது என்ற நிலையை அவர் எட்டிவிட்டார்.
ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் கட்சி தொடங்க நினைத்தது உண்மை. ஆனால், இந்த அரசியலில் வலதுசாரிகள், சங்பரிவார்களின் தலையீடு, ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில் அது தனக்கு உகந்த தல்ல என கருதினார். அரசியல் விஷயத்தில் தீர்க்கதரிசியாக முன்பே உணர்ந்து அதனை அவர் கைவிட்டுவிட்டார் என்பதே உண்மை.
அவரை நேரில் சந்தித்து உரையாடியதன் அடிப்படையில், அவரை புரிந்து நான் கூறும் கருத்து இது. அவரை தி.மு.க. அச்சுறுத்தியது என கூறுவது கற்பனை. அதற்காக அவர் அச்சப்பட்டு பின்வாங்கினார் என்பதும் கற்பனை. இது ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தும் விமர்சனமாக பார்க்கிறேன்.
தமிழகத்தில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகுந்த வலிமையோடு உள்ளது. தி.மு.க. கூட்டணியை எதிர்க்கக்கூடிய, வலிமையுள்ள கூட்டணியை இன்னும் உருவாக்கவில்லை. எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடித்த பிறகு முறைப்படி அறிவிப்பு செய்யப்படும்.
சசிகலா கட்சியின் பெயரை அறிவித்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் படுகொலையில் தொடர்புடைய போலீசார் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகாஷ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அரசு சார்பில் மாணவியின் குடும்பத்தினருக்கு இழப் பீடு தொகை வழங்க வேண்டும். அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது.
- எந்த மிரட்டலுக்கும் அடிபணியமாட்டார் என்பது நாடு அறிந்த உண்மை.
தி.மு.க. அரசை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது "தமிழ்நாட்டின் சிஸ்டத்தையே மாற்ற வேண்டும் என அரசியலுக்கு வர நினைத்த ரஜினியை தி.மு.க. குடும்பம் மிரட்டியது. ரஜினியை விமர்சிக்கவில்லை. மிரட்டலையும் தாண்டி அரசியலுக்கு வரும் மன வலிமை விஜயிடம் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் வந்தபோதிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அஞ்சவில்லை" எனக் கூறியிருந்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் ரகுபதி இது தொடர்பாக கூறியதாவது:-
ரஜினி காந்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அடிபணியமாட்டார் என்பது நாடு அறிந்த உண்மை. திமுக மிரட்டியது எனச் சொல்வது அப்பட்டமான பொய். அரசியல் ஆதாயத்திற்காக அப்படிப்பட்ட குற்றச்சாட்டை விஜய் கட்சியை சேர்ந்தவர் சொல்லலாம்.
எங்களை பொறுத்தவரை அவர் எங்களுடைய நண்பர். 1996-ல் திமுக கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர் மரியாதைக்குரிய ரஜினி காந்த். அவரை பற்றி எந்த குறையும் திமுக பற்றி சொல்லாதீர்கள்.
இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.
- கொரோனா தொற்றால் அரசியலில் இருந்து விலகினார்.
- கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது.
நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இந்நிலையில் அவரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்ற வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
"ரஜினிகாந்த் அவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே... கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார். மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல; தனது பலத்தை நிரூபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை.
கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும், பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர்...
பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ரஜினியை விமர்சிக்கவில்லை.
- மிரட்டலையும் தாண்டி அரசியலுக்கு வரும் மன வலிமை விஜயிடம் இருக்கிறது.
தி.மு.க. அரசை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:
* தமிழ்நாட்டின் சிஸ்டத்தையே மாற்ற வேண்டும் என அரசியலுக்கு வர நினைத்த ரஜினியை தி.மு.க. குடும்பம் மிரட்டியது.
* ரஜினியை விமர்சிக்கவில்லை. மிரட்டலையும் தாண்டி அரசியலுக்கு வரும் மன வலிமை விஜயிடம் இருக்கிறது.
* தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் வந்தபோதிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அஞ்சவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன் லால் மற்றும் சிவராஜ்குமார் தவிர்த்து புது நடிகர்களும் நடித்து உள்ளனர்.
- இந்தப் படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் நெல்சன்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்2'. சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.
'ஜெயிலர்' முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கூறினாலும், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன் லால் மற்றும் சிவராஜ்குமார் தவிர்த்து புது நடிகர்களும் நடித்து உள்ளனர். இதனிடையே, 'ஜெயிலர் 2' படத்தின் தனது படப்பிடிப்பை முடித்ததாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் இப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இந்தப் படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டின் 'பாட்ஷா' என்று அழைக்கப்படும் ஷாருக் கான் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டாலும், ஷாருக்கானின் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. ஷாருக்கான் குறித்த காட்சிகள் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் சில நாட்கள் வரை நீடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் "ஜெயிலர் 2." இந்திய திரையுலகின் பல உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜெயிலர் படம் குறித்த புதிய அப்டேட்டை நடிகர் சுராஜ் கொடுத்துள்ளார்.
கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள "யூத்" திரைப்படத்தில் சுராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான நேர்காணல் ஒன்றில் பேசிய சுராஜ், "ஜெயிலர் 2 திரைப்படம் அருமையாக வந்திருக்கிறது. இந்தப் படம் ஜெயிலர் படத்தை விட சிறப்பாக இருக்கும்.
எனக்கு நீண்ட காலமாக ரஜினி சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் அவருடன் பணியாற்றவே வாய்ப்பு கிடைத்து. ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒவ்வொரு ஷாட்டிலும் ரஜினி சார் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் ஒரு வித்தைக்காரர்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தனுஷ் சார் ஸ்டார் நடிகர். அவர் ஒருபக்கம் கமர்ஷியல் திரைப்படங்களும், மறுபக்கம் மரியான் மற்றும் அசுரன் போன்ற திரைப்படங்களிலும் நடிக்கிறார். அவர் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார்," என்றார்.
- ரஜினி - கமல் நடிக்கும் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது.
- இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
ப்ரோமோ வீடியோவில் தீம் மியூசிக் ரெடியா இருக்கு என்று அனிருத் சொல்ல, யாரு ஹீரோ? என்று கமல்ஹாசன் கேட்க, கேட்குறாங்களா சொல்லுங்க ஜீ என்று ரஜினிகாந்த் சொல்ல இயக்குனர் நெல்சனும், அனிருத்தும் செய்வதறியாது திகைக்கின்றனர். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த ப்ரோமோ வீடியோவை எடிட் செய்து மோடி - அமித் ஷா முகத்தை வைத்து தமிழக பாஜக வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், "பாரதத்தை வல்லரசாக்க அயராது உழைக்கும் இணையற்ற இரட்டையர்கள்..!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நல்லகண்ணு நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தி.நகர் சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
- நல்லகண்ணு மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- நல்லகண்ணு இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் காலமானார் என அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. அவருக்கு வயது 101. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்லகண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி நல்லகண்ணு இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் காலமானார் என அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து நல்லகண்ணு மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நல்லகண்ணு மறைவிற்கு நடிகர் ரஜினிகாந் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.
- வயது மூப்பின் காரணமாக நல்லகண்ணு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது.
- நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு கண்விழித்து பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலையிலும் அதே நிலை நீடித்து வருகிறது. அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். ஆனாலும் வயது மூப்பு என்பது தவிர்க்க முடியாத இயற்கையான செயலாகும். அதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையில் நல்ல கண்ணுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.
- கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.
- முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நேர்காணலின் டீசரில் மோகன்லால் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நீங்கள் பழைய நேர்காணல்களில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு ஆம் என்று கூறிய பினராயி விஜயன், ரஜினிகாந்தின் ஆக்சன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.






