search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shah Rukh Khan"

    • இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
    • இந்த படத்திற்காக ரூ. 200 கோடி பணம் செலவிடுகிறார்.

    பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    டைரக்டர் ஆகவேண்டும் என்பது மூத்த மகனின் கனவு அதற்காக தயாராகி வருகிறார். கடைசி மகன் பள்ளியில் படித்து வருகிறார். ஷாருக்கானின் மகள் சுகானா கான். அமெரிக்கா 'ஆக்டிங்' ஸ்கூலில் படித்துள்ளார்.




    ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் படம் வெளியாகி, மகத்தான வசூலை அள்ளியது. இந்த படத்தில் இந்திய 'ரா' பிரிவின் ரகசிய உளவாளியாக நடித்திருந்தார். பதான் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார். இந்த படம் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.

    இந்நிலையில் ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சுஜோய் கோஷால் இயக்க உள்ளார். இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' தயாரிக்கிறது.




    இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கதாநாயகியாக நடிக்க உள்ளார். தனது மகள் அறிமுகமாகும் படம் என்பதால், இந்த படத்திற்காக ரூ. 200 கோடி பணம் செலவிடுகிறார்.

    இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் தந்தை மகள் ஆகிய இருவரும் படம் முழுவதும் நடிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் ஷாருக்கான் இப்படத்தில் 'டான்' கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் நீளமான தலைமுடி மற்றும் தாடி வளர்க்க இருப்பதாகவும் கூறப்படுகிறது




    இப்படத்தில் சித்தார்த் ஆனந்த் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    மேலும் சஹானா கானின் நடிப்பு ரசிகர்களை கவரும் வகையில் இப்படத்தை ஷாருக்கான் உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 'மே' மாதம் தொடங்க உள்ளது. 2025 -ல் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தை கௌரி கான், சித்தார்த் ஆனந்த் இணைந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது.
    • இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீசாகும் என்று தெரிகிறது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக் கான். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் மற்றும் டன்கி என மூன்று திரைப்படங்களும் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியதோடு, பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த வரிசையில், ஷாருக் கான் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல்களின் படி ஷாருக் கான் நடிக்கும் புதிய படத்தில் அவரது மகள் சுஹானா கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஷாருக் கான், சுஹானா கான் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு "கிங்" என தலைப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

     


    இந்த படத்தை இயக்குநர் சுஜோய் கோஷ் இயக்குவதாகவும், இந்த படத்தை கௌரி கான் மற்றும் சித்தார்த் ஆனந்த் இணைந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது. கிங் படத்தில் ஷாருக் கானின் கதாபாத்திரம் மாசாகவும், வில்லனிசம் கலந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீசாகும் என்று தெரிகிறது.

    இப்படத்தின் இயக்குநர் சுஜோய் கோஷ் முன்னதாக அலாதின், கஹானி, கஹானி 2, பாட்லா மற்றும் கடந்த ஆண்டு ரிலீசான ஜானே ஜான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி சுஜோய் கோஷ் பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 3 சூப்பர் ஸ்டார்கள் ஒரேமேடையில் பங்கேற்று 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினர்.
    • தீபிகா படுகோன், ரன்வீர்சிங், ராணிமுகர்ஜி பங்கேற்பு

    தொழில் அதிபர் ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவை முன்னிட்டு 2- ம் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை குஜராத் ஜாம்நகரில் உள்ள வீட்டில் நடந்தது.

    இந்தவிழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.

    இதில் இந்தி பட சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள். ஆஸ்கார் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர். படத்தில் வரும் 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்கள். வண்ண குர்தா உடையில், 3 கான்கள் ஒரே பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியது அனைவரையும் ஆச்சர்யபடுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்தநிகழ்ச்சியில் பாஷில்சித்தார்த் மல்ஹோத்ரா, கியாராஅத்வானி, சைப் அலிகான், கரீனாகபூர், மாதுரி தீட்சித், வருண்தவான். அனன்யா பாண்டே, ஆதித்யாராய், ராணிமுகர்ஜி, தீபிகாபடுகோன், ரன்வீர்சிங், ரன்பீர்கபூர், ஆலியாபட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் மோதல்.
    • துவக்க விழாவில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    மகளிர் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் அறிமுக நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. துவக்க விழாவில் பங்கேற்ற ஷாருக் கான் அதிரடியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

     


    பிரமாண்டமாக துவங்கிய அறிமுக நிகழ்ச்சியில் ஷாருக் கானை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்களான கார்திக் ஆர்யன் சித்தார்த் மல்ஹோத்ரா, டைகர் ஷெராஃப், வருண் தவான் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோரும் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர்.

     


    கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து 2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி துவங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    • நிகழ்ச்சியில் ஷாருக் கான் கலந்து கொள்வது உறுதியானது.
    • மகளிர் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் விரைவில் துவங்க இருக்கும் மகளிர் கிரிக்கெட் லீக் தொடரில் பாலிவுட் திரை நட்சித்திரம் ஷாருக் கான் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் துவக்க நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

    நாளை (பிப்ரவரி 23) மாலை 6.30 மணிக்கு இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பெங்களூருவில் உள்ள எம்.ஏ. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஷாருக் கான் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது.

     


    ஷாருக் கான் மட்டுமின்றி ஷாஹித் கபூர், கார்திக் ஆர்யன், வருண் தவான், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பிரபலங்களும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதி போட்டியில் மோதிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. மகளிர் பிரீமியர் லீக் தொடர் நாளை துவங்கி மார்ச் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    • அனிமல் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி குவித்தது
    • நானே எழுதுவதால் கதை சொல்லவே எனக்கு பல நாட்கள் ஆகும் என்றார் சந்தீப்

    கடந்த 2023 டிசம்பர் 1 அன்று, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா, இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" உலகளவில் வெளியானது.

    அனிமல் படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்திருந்தனர். மிக பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி குவித்தது.

    இதை தொடர்ந்து, இயக்குனர் சந்தீப் ரெட்டி, "ஸ்பிரிட்" எனும் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இதில் "பாகுபலி" திரைப்பட கதாநாயகன் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தனது விருப்பங்கள் குறித்து சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்ததாவது:

    சிரஞ்சீவி மற்றும் ஷாருக் ஆகியோரை இயக்க விரும்புகிறேன். அவர்கள் எனக்கு கனவு நாயகர்கள். எப்போது இயக்குவேன் என தெரியாது, ஆனால் நிச்சயம் அவர்களை வைத்து திரைப்படம் இயக்குவேன்.

    பலருடன் இணையாமல் நானே கதை எழுதுவதால் எனக்கு ஒரு நடிகரிடம் கதை சொல்லவே பல மாதங்கள் ஆகிறது.

    சிரஞ்சீவி, ஷாருக் ஆகியோரை ஈர்க்கும் நல்ல அழுத்தமான கதையுடன் எவராவது என்னிடம் முன்வந்தால் உடனே இயக்கவும் தயாராக உள்ளேன். அவ்வாறு கதை கிடைத்தால் 9 மாதங்களில் படத்தை முடித்து விடுவேன்.

    இவ்வாறு சந்தீப் கூறினார்.

    • தமிழக வீரர் ஷாருக் கானை 7.40 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.
    • சமீர் ரிஸ்வியை சென்னை அணி 8.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், தமிழக வீரர் ஷாருக் கானை 7.40 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

    இந்தியாவின் ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும், சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

    நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    • பதானில் சல்மானும், டைகர்-3 படத்தில் ஷாருக்கும் கேமியோ செய்திருந்தனர்
    • இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம் என்றார் சல்மான்

    மும்பை திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் ஆமிர் கான், சல்மான் கான் மற்றும் ஷாருக் கான். இந்த 3 நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பது வழக்கம்.

    அகில இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் இவர்களின் திரைப்படங்கள் பல திரையரங்குகளில் வெளியாவதால் அவற்றின் வர்த்தக எல்லையும் பரந்து விரிந்துள்ளது. இதன் காரணமாக இவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள், இத்திரைப்படங்களில் ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புகுத்த நினைக்கின்றனர்.

    அதில் ஒன்றாக சமீப காலங்களாக சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் ஷாருக் கானும், ஷாருக் கான் கதாநாயகானாக நடிக்கும் திரைப்படங்களில் சல்மான் கானும், சில நிமிடங்களே திரையில் தோன்றும் கேமியோ (cameo) காட்சியில் தோன்றுகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் வெளியான ஷாருக் கான் நடித்து திரைக்கு வந்த "பதான்" திரைப்படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    அதே போல், நவம்பர் மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சல்மான் கான் நடித்த "டைகர்-3" திரைப்படத்தில் ஷாருக் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    ஒரு முன்னணி கதாநாயகனின் திரைப்படத்தில் திரையில் வேறொரு முன்னணி கதாநாயகன் தோன்றுவது இரு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

    இந்நிலையில் இது குறித்து சல்மான் கான் கூறியதாவது:

    நானும் ஷாருக் கானும் பரஸ்பரம் இருவர் படங்களிலும் கேமியோ வேடங்கள் செய்கிறோம். எங்கள் இருவரின் ரசிகர்களும் அதை விரும்புவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் இருவருக்கும் திரையை தாண்டியும் ஆழமான நட்பு உள்ளது; இது கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. எங்கள் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது சமூக வலைதளங்களில் சச்சரவு நடைபெறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால், நான் சமூக வலைதளங்களை அதிகம் பார்ப்பவன் இல்லை. ஆனால், நான் எப்பொழுதும் என் ரசிகர்களிடம் சொல்வது என்னவென்றால், ஷாருக் எனக்கு சகோதரன்; எனவே, உங்களுக்கும் சகோதரன் - அவருக்கு எந்த தீங்கும் நேர்ந்து விட கூடாது - என்பதுதான். நானும் ஷாருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம்.

    இவ்வாறு சல்மான் தெரிவித்தார்.

    பிரபல கதாநாயகர்கள், வேறொரு கதாநாயகரின் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வருவது திரைப்படங்களின் வெற்றிக்கும், அதிக வசூலுக்கும் உதவுவதாக திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • ஹிரானி அனைத்து வயதினரும் கொண்டாடும் படங்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்.
    • டங்கியில் பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் நடித்துள்ளனர்.

    மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியரான இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பார்வையாளர்களின் மனதில் நீங்காத அளவில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை வழங்கி, பிளாக்பஸ்டர் வெற்றிச்சாதனையையும் படைத்துள்ளார்.

    'சஞ்சு,' 'பிகே,' '3 இடியட்ஸ்,' போன்ற கிளாசிக் படங்கள் மற்றும் அனைவரும் கொண்டாடிய 'முன்னா பாய்' என, ஹிரானி அனைத்து வயதினரும் எப்போதும் கொண்டாடும் படங்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். இப்போது, ஷாருக்கானுடன் 'டங்கி' மூலம் முதல் முறையாக இணைந்திருக்கும் அவர் மீண்டும் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தவுள்ளார்.

    ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட 'டங்கி' திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.

    இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, "டங்கி" திரைப்படம் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது.

    • ஜவான் திரைப்படம் உலகளவில் வசூலை குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
    • ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது.

    மும்பை:

    ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கியுள்ளார்.

    'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'ஜவான்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தொடர்ந்து 'ஜவான்' திரைப்படம் உலகளவில் வசூலைக் குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி 'ஜவான்' திரைப்படம் வெளியான 8 நாட்களில் ரூ.696.67 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.700 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

    இந்நிலையில், ஜவான் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, இசை அமைப்பாளர் அனிருத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது மேடையில் பாடிக் கொண்டிருந்த அனிருத், ஷாருக்கானை நடனமாட வரும்படி அழைத்தார். அவருடன் தீபிகா படுகோனேவும் வந்தார்.

    ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடி சலியா பாடலுக்கு அசத்தலாக நடனமாடியது. இதைக் கண்ட ரசிகர்கள் இந்த நடனத்தை வைரலாக்கி வருகிறார்கள்.


    • "ஜவான்" திரைப்படத்தை தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார்
    • 2015-ல் சல்மான்கான் கதாநாயகனாக நடித்து வெளியானது "பஜ்ரங்கி பாய்ஜான்"

    தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த "ஜவான்" திரைப்படம் நாடு முழுவதும் வெளியானது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மற்றொரு பிரபல இந்தி நடிகரான அமிர்கான், "ஜவான்" திரைப்படத்தையும், அதன் கதாநாயகன் ஷாருக்கானின் நடிப்பையும் பாராட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலானது. அந்த வீடியோவில் நடிகர் அமிர்கான், "படத்தை பார்த்தீர்களா? மிக நல்ல திரைப்படம். அவரது நடிப்பில் இதுதான் மிக சிறப்பான படம். அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். மீண்டும் மீண்டும் பாருங்கள்" என கூறுவது தெரிகிறது.

    இதனை பகிர்ந்த பயனர்களில் ஒருவர் "அமிர்கானின் ஜவான் பட விமர்சனம்" என ஒரு குறுஞ்செய்தியையும் இத்துடன் இணைத்து பதிவிட்டுள்ளார். ஆனால், ஆய்வில் இது தவறான செய்தி என்றும் அந்த வீடியோ பொய் எனவும் தெரிய வந்துள்ளது.

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான்கான் நடிப்பில் 2015-ல் வெளியான திரைப்படம் "பஜ்ரங்கி பாய்ஜான்." அந்த திரைப்படத்தை அப்போது கண்டு ரசித்த அமிர்கான், கதாநாயகன் சல்மான் கானையும், அத்திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனரையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் வெகுவாக பாராட்டி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

    அந்த நீண்ட வீடியோவில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், மேலே சொன்ன வாசகங்கள் இடம்பெறுகிறது. ஆய்வில், "பஜ்ரங்கி பாய்ஜான்" திரைப்படத்தை அமிர்கான் பாராட்டும் நீண்ட வீடியோவை ஆங்காங்கே வெட்டி தொகுத்து "ஜவான்" திரைப்படத்தை பாராட்டுவதை போல் உருவாக்கி வெளியிட்டுள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வரை "ஜவான்" திரைப்படம் குறித்து அமிர்கான் எத்தகைய விமர்சனமும் செய்ததாக உறுதியான தகவல் இல்லை. இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
    • ஜி20 உச்சி மாநாடு தொடர்பாக பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவுக்கு ஷாருக்கான் பதில் அளித்தார்.

    கிங் கான் என்று அறியப்படும் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜவான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

    ஜி20 உச்சி மாநாடு தொடர்பாக பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவுக்கு பதில் அளித்த ஷாருக்கான், "ஜி20 அமைப்புக்கு இந்தியா வெற்றிகரமாக தலைமை வகித்து, உலக எதிர்காலத்தை சிறப்பாக மாற்றுவதற்கு நாடுகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி இருப்பதற்கு மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்து உள்ளார்.

     

    "இது ஒவ்வொரு இந்தியரின் மனங்களில் பெருமை மற்றும் மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது. உங்கள் தலைமையில், நாம் ஒற்றுமையாக வளர்ச்சியடைவோம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்," என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    டெல்லியில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. முன்னதாக பாலிவுட் பிரபலம் அனுபம் கெர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

    ×