என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shah Rukh Khan"

    • ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் 3 கான்களும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
    • நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று கருத்திக்கொண்டதில்லை என்று சல்மான் கான் தெரிவித்தார்.

    பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், "எங்கள் மூவரையும் (ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான்" நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று கருத்திக்கொண்டதில்லை" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பேசிய ஷாருக் கான், "அமீர்கான் மிகசிறந்த நடிகர். ஒரு கதையைச் சொல்ல அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். சல்மான் கான் அவரது இதயத்திலிருந்து மிக சுதந்திரமாக வேலையை செய்கிறார். நான் இந்த இரண்டையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இறுதியாக பேசிய அமீர் கான், "நாங்கள் மூவரும் ஒரே படத்தில் ஒன்றாக நடிக்க தயாராக இருக்கிறோம். அதற்கேற்ற சரியான கதை அமைந்தால் நாங்கள் மூவரும் ஒரே படத்தில் நடிப்போம்" என்று தெரிவித்தார். 

    • பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
    • உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக 'டெய்லர் ஸ்விப்ட் உள்ளார்.

    இந்தியப் பணக்கார நடிகர்கள் பட்டியல் முதலிடம் பிடித்து வந்த ஷாருக்கான் முதல்முறையாக உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

    The Hurun India வெளியிட்டுள்ள பட்டியலில் 1.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12,490 கோடி) சொத்து மதிப்புடன் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்

    திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலகளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்டவை ஷாருக் கானுக்கு சொந்தமானவை ஆகும்.

    உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக 'டெய்லர் ஸ்விப்ட்' 1.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். ஜெர்ரி செய்ன்ஃபெல்ட் 1.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.

    பிரபல அமெரிக்க பாடகி செலினா கோமஸ் 720 மில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார்.

    டாப் 5 இந்தியப் பணக்காரர்கள் பட்டியல்:

    1. ஷாருக் கான் மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ.12,490 கோடி

    2. ஜூஹி சாவ்லா மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ.7,790 கோடி

    3. ஹிருத்திக் ரோஷன் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,160 கோடி

    4. கரண் ஜோஹர் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,880 கோடி

    5. அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தர் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி

    • 2024-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 231.1 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
    • 2023-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியனாக இருந்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் விளம்பரம், கிரிக்கெட் வருமானம் மூலம் அதிக அகளவில் சம்பாதிக்கிறார். இதனால் அவரின் பிராண்ட் மதிப்பு எப்போதுதும் உயர்ந்ததாகவே இருந்து வருகிறது.

    தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரன்வீர்சிங், ஷாருக்கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

    கடந்தாண்டை விட விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு இந்தாண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் விராட் கோலியின் மதிப்பு உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.

    க்ரோல் (Kroll) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2024-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 231.1 மில்லியன் அமெரிக்க டாலராகும். 2023-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியனாக இருந்தது.

    2 ஆம் இடத்தில உள்ள பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 170.7 மில்லியன் டாலராகும். 3 ஆம் இடத்தில உள்ள ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு 145.7 மில்லியன் டாலராகும். கடந்தாண்டை விட ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு இந்தாண்டு 21% உயர்ந்துள்ளது.

    116.4 மில்லியன் டாலர் மதிப்புடன் ஆலியா பட் 4 ஆம் இடத்திலும் 112.2 மில்லியன் டாலர் மதிப்புடன் சச்சின் தெண்டுல்கர் 5 ஆம் இடத்திலும் உள்ளனர்.

    102.9 மில்லியன் டாலர் மதிப்புடன் எம்.எஸ்.தோனி 7 ஆம் இடத்திலும் 48.4 மில்லியன் டாலர் மதிப்புடன் ரோகித் சர்மா 17 ஆம் இடத்திலும் 43.1 மில்லியன் டாலர் மதிப்புடன் ஹர்திக் பாண்ட்யா 20 ஆம் இடத்திலும் 38.1 மில்லியன் டாலர் மதிப்புடன் பும்ரா 22 ஆம் இடத்திலும் உள்ளனர்.

    • ஷாருக்கான் தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் தொடங்கினார்.
    • 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார்.

    71 வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மெஸ்ஸி ஆகியோர் வென்றனர்.

    விருது அறிவிக்கப்பட்டவர்களு இன்று ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதுகள் வழங்கி கவுரவித்தார். ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மெஸ்ஸி ஆகியோர் ஜனாதிபதி கையில் விருதை பெற்றனர்.

    ஷாருக்கான் தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருக்கு முதல் தேசிய விருதை கொடுத்துள்ளது.

    கல்கி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

    கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

    கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகம் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் படக்குழு கல்கி இரண்டாம் பாகத்திலிருந்து நடிகை தீபிகா படுகோனை நீக்கினர். இது பெரும் பேசும் பொருளாக மாறியது. ஆனால் இதற்கான காரணத்தை படக்குழு வெளியிடவில்லை.

    இன்று தீபிகா, ஷாருக்கான் நடிக்கும் கிங் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.

    தீபிகா இன்று அவரது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் 18 ஆண்டுகளுக்கு முன் 'ஒம் ஷாந்தி ஓம்' படப்பிடிப்பின் போது கற்றுக் கொண்ட முக்கியமான பாடத்தை பகிர்ந்துள்ளார்.

    " ஷாருக்கான் உடன் நடித்த முதல் படமான ஓம் ஷாந்தி ஓம் படத்தின் நேரத்தில் எனக்கு அவர் கற்றுக் கொடுத்த முதல் பாடம், ஒரு படத்தை எடுக்கும் அனுபவமும், அதில் பணிபுரியும் மக்களும், அதன் வெற்றியை விட அதிகம் முக்கியம் என்பதே. அதன் பின்னர் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் நான் அந்தக் கற்றலைப் பின்பற்றி வருகிறேன்," என தீபிகா கூறினார்.

    இந்த பதில் சமீபத்தில் அவர் நடிக்க இருந்த கல்கி திரைப்படத்தில் இருந்து விலகியதன் காரணமாக ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    • ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
    • தி கிங் படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கான் நடிக்கிறார்.

    பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருடன் இணைந்து அவரது மகள் சுஹானா கான் நடிக்கிறார்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான போலீஸ் புகாரில் நடிகர் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அலிபாக்கில் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களை விவசாயத்திற்காக வாங்குவதாக பத்திரப்பதிவின்போது கூறிவிட்டு பண்ணை இல்லம் கட்டியதாக சுஹானா கான் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் தூதர்கள்.
    • இந்த வழக்கு இந்தியாவின் 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜஸ்தானின் பாரத்பூரில் உள்ள கோர்ட்டில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் உட்பட ஹூண்டாய் நிறுவனத்தின் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் வாங்கிய காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அதன் பிராண்ட் தூதர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இந்தியாவின் 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிராண்ட் தூதர்கள் தவறான அல்லது குறைபாடான பொருள்களை விளம்பரப்படுத்தினால் அவர்களும் இதில் பொறுப்பேற்க வேண்டும்.

    அந்த வகையில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது.
    • திரைப்படம் 1148 கோடி ரூபாய் வசூலித்தது.

    கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஷாருக் கான் இரு வேடங்களில் நடித்திருப்பார். இவருடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, நயன்தாரா, பிரியாமணி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. திரைப்படம் 1148 கோடி ரூபாய் வசூலித்தது.

    நேற்று 71-வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தனர் அதில் சிரந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் ஜவான் திரைப்படத்திற்காக வென்றுள்ளார். இதுவே அவர் வாங்கும் முதல் தேசிய விருதாகும்.

    தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருகு தேசிய விருதை கொடுத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    • பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான்.
    • ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    டைரக்டர் ஆகவேண்டும் என்பது மூத்த மகனின் கனவு அதற்காக தயாராகி வருகிறார். கடைசி மகன் பள்ளியில் படித்து வருகிறார். ஷாருக்கானின் மகள் சுகானா கான். அமெரிக்கா 'ஆக்டிங்' ஸ்கூலில் படித்துள்ளார்.

    பதான் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார். இந்த படம் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.

    இந்நிலையில் ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுஜோய் கோஷால் இயக்குகிறார். இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' தயாரிக்கிறது.

    இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் தந்தை மகள் ஆகிய இருவரும் படம் முழுவதும் நடிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    படப்பிடிப்பு பணிகள் மும்பையில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில். அதிரடி ஆக்ஷன் காட்சி இன்று படமாக்கப்பட்டது. அதில் ஷாருக் கான் ஈடுபட்டார் அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றுள்ளனர்.

    அவருக்கு தசை பிரண்டுள்ளது என கூறப்படுகிறது அதனால் 1 மாத காலம் அவர் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர் ஆலோசனை அளித்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    • அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சமீபத்தில் ஷாருக் கான் யார்? என கேட்டிருந்தார்.
    • நேற்று அதிகாலை 2 மணிக்கு அவரை நடிகர் ஷாருக் கான் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    கவுகாத்தி:

    நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான். வரும் 25-ம் தேதி படம் திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது.

    அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில், படுகவர்ச்சியுடன் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது. இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரில் இந்து ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பதான் படம் திரையிடப்பட கூடாது என்று திரையரங்க நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றனர். இதேபோல், அசாமில் கவுகாத்தி நகரில் பதான் படம் வெளியாக கூடிய திரையரங்குகளுக்குள் புகுந்த பஜ்ரங் தள அமைப்பினர் போஸ்டர்களை கிழித்து, எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    இதுபற்றி அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஷாருக் கான் யார்? அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரது பதான் படம் பற்றியும் எனக்கு தெரியாது என பதிலளித்து பேசினார்.

    மாநில மக்கள் அசாமை பற்றி கவலைப்பட வேண்டும். இந்தி திரைப்படங்களை பற்றி அல்ல. ஷாருக் கான் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஒருவேளை அவர் என்னை தொடர்பு கொண்டால் அதுபற்றி விசாரிப்பேன். சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்பட்டு இருந்தால், வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், நேற்று அதிகாலை அசாம் முதல் மந்திரிக்கு தொலைபேசி மணி அழைப்பு வந்துள்ளது. அதனை எடுத்து பேசியபோது, மறுமுனையில் நடிகர் ஷாருக் கான் அவரிடம் பேசியுள்ளார்.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி பிஸ்வா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் என்னை இன்று அதிகாலை 2 மணியளவில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது படம் திரையிடப்பட்டபோது, கவுகாத்தி நகரில் நடந்த சம்பவம் பற்றி வருத்தம் தெரிவித்துப் பேசினார். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை என அவருக்கு உறுதி கூறினேன். இதுபற்றி நாங்கள் விசாரணை செய்து, அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

    • ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன.
    • இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார்.

    இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கான் சமீபத்தில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர் வாங்கி இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் காரின் விலை ரூ. 8.2 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இவர் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் ஆர்க்டிக் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் காரின் இண்டீரியர் முழுக்க ஆல்-வைட் லெதர் மற்றும் கோபால்டோ புளூ அக்செண்ட்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார். முன்னதாக ஐதராபாத்தை சேர்ந்த நசீர் கான் என்பவருக்கும், இரண்டாவதாக புவனேஷ்வரை சேர்ந்த நபருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் டெலிவரி செய்யப்பட்டது.

     

    ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன. ஸ்டாண்டர்டு கலினன் மாடலில் இருப்பதை விட பிளாக் பேட்ஜ் மாடலின் ஸ்பிரிட் ஆஃப் எக்டசி சின்னம் மற்றும் இரட்டை R பேட்ஜ் உள்ளிட்டவைகளில் டார்க் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதேபோன்று முன்புற கிரில் சரவுண்ட், பக்கவாட்டு ஃபிரேம் ஃபினிஷர்கள், பூட் ஹேண்டில், பூட் ட்ரிம், லோயர் ஏர் இண்டேக் ஃபினிஷர் மற்றும் எக்சாஸ்ட் பைப் உள்ளிட்டவைகளில் டார்கென்டு க்ரோம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எஸ்யுவி-இல் 22 இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், காண்டிராஸ்ட் ரெட் நிற பிரேக் கேலிப்பர்கள் உள்ளன.

    கலினன் பிளாக் பேட்ஜ் மாடலிலும் 6.75 லிட்டர், டுவின் டர்போ வி12 எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் வழக்கமான கலினன் மாடலை விட 29 ஹெச்பி மற்றும் 50 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டி.என்.சி.ஏ. பிரசிடென்ட் லெவனுக்கு விஜய் சங்கரும், டி.என்.சி.ஏ. லெவனுக்கு ஷாருக்கானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது.

    இந்தப்போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரசிடென்ட் லெவன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணிகளை தமிழ்நாடு சீனியர் தேர்வு குழு அறிவித்துள்ளது.

    டி.என்.சி.ஏ. பிரசிடென்ட் லெவனுக்கு விஜய் சங்கரும், டி.என்.சி.ஏ. லெவனுக்கு ஷாருக்கானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரசிடென்ட் லெவன் அணி வருமாறு:-

    விஜய் சங்கர் (கேப்டன்), சாய்கிஷோர் (துணை கேப்டன்), அஜித்ராம், கணேஷ், சச்சின், விமல்குமார், லக்சய் ஜெயின், அஜிதேஷ், சந்தீப் வாரியர், டிரிலோக், எம்.முகமது, ராகுல், கிரண், ரித்திக் ஈஸ்வரன், அதிக்-உர்-ரகுமான், முகமது அலி.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி வருமாறு:-

    ஷாருக்கான்(கேப்டன்), சந்தோஷ் குமார், ஜிதேந்திர குமார், நிதிஷ் ராஜகோபால், மாதவராவ் பிரசாத், சித்தார்த், ராமஅரவிந்த், அஜய் கிருஷ்ணன், சுபங் மிஸ்ரா, குருராக வேந்திரன், சச்சின் ரதி, சுப்பிரமணியம், சரவண குமார், கர்பன்த்சிங், விக்னேஷ், சாமுவேல் ராஜ்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர், அயர்லாந்து போட்டியில் ஆடுவதில் தேர்வு பெற்றுள்ளார். சாய் சுதர்ஷன், பிரகோஷ், ரஞ்சன் பவுல், ஜெகதீசன் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்சி முகாமுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

    பாபா அபராஜித்துக்கு திருமணம் நடைபெறுவதால் 20-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பங்கேற்க மாட்டார். பாபா இந்திரஜித் 2-வது போட்டியில் இருந்து ஆடுவார்.

    ×