search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salman khan"

    • சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மும்பை:

    பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்சி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

    சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டு முன் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வுசெய்தனர்.

    இதற்கிடையே, சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். குஜராத்தின் புஜ் பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே இன்று மாலை நேரில் சென்றார். அவர் சல்மான் கான் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

    துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் மந்திரி சல்மான் கான் வீட்டுக்கு நேரில் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இன்று அதிகாலை சல்மான் கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
    • மும்பை கிரைம் பிரிவு போலீசார் சல்மான் கான் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மும்பை:

    பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீடு பாந்த்ராவில் அமைந்துள்ளது.

    இந்நிலையில், இன்று அதிகாலை சல்மான் கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மர்ம நபர்கள் 2 பேர் அதிகாலை 5 மணிக்கு சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கி சூடு நடத்தினர் என்றும், 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர் எனவும் தெரிய வந்தது.

    தகவலறிந்து மும்பை கிரைம் பிரிவு போலீசார் சல்மான் கான் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சல்மான்கான் வீட்டிற்கு ரன்பீர்- ஆலியாபட் விருந்துக்கு சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
    • இதுகுறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் பலவித விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

    பிரபல நடிகர் ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதியினர் மும்பையின் பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சல்மான்கான் வீட்டிற்கு ரம்ஜான் விருந்துக்கு சென்றுள்ளனர்.

    இதில் ஆலியா குறைந்த மேக்கப்புடன் முழு வெள்ளை நிற சல்வார்  உடையணிந்துள்ளார். அதே போல ரன்பீர் ஜீன்ஸ் பேண்ட் - சாம்பல் நிற டி-ஷர்ட் மேல் நீல நிற டெனிம் சட்டையுடன் சாதாரண தோற்றத்துடன் உடை அணிந்துள்ளார்.

    சல்மான் மற்றும் ரன்பீர் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கத்ரீனாகைப் உடன் டேட்டிங் செய்தனர். ஆனால் சல்மான்கான் விக்கி கவுஷலை மணந்தார். ரன்பீர் ஆலியா பட்டை 2022 -ல் திருமணம் செய்து கொண்டார்,ரன்பீருக்கு ராஹா என்ற மகள் உள்ளார்.கடந்த பல வருடங்களாக ரன்பீரும் சல்மானும் பேசிக்கொள்ள வில்லை.



    இந்நிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகைக்கு எதிர்பாராத சல்மான்கான் வீட்டிற்கு ரன்பீர்- ஆலியாபட் விருந்துக்கு சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் பலவித விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

    தற்போது அலியா பட் ஜிக்ரா  மற்றும்  லவ் & வார்  ஆகிய படங்களில் நடிக்கிறார் . அவரது கணவர் ரன்பீர் கபூர் தற்போது நித்தேஷ் திவாரியின்  ராமாயண படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். 

    அதே போல் சல்மான்கான் கடைசியாக கத்ரீனா கைப் ஜோடியாக டைகர் 3 -ல் நடித்தார். சல்மான் தற்போது அடுத்த புதிய படம் குறித்து ரம்ஜான் தினத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். தமிழ் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடிக்க உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும்.
    • ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகை தினத்தில் தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும், இவரது புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான்.

    அந்த வகையில், ரம்ஜான் பண்டிகை நாளான (ஏப்ரல் 11) இன்று சல்மான் கானுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் கூடினர். ஒரே சமயத்தில் ஏராளமான ரசிகர்கள் வீட்டின் முன் ஒன்று கூடியதால், அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். எனினும், காவலர்களால் ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானதாக தெரிகிறது.

    ஒரு கட்டத்தில் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்க காவலர்கள் தடியடி நடத்தி ரசிகர்களை அங்கிருந்து கலைந்து போக வலியுறுத்தினர். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நடிகருக்கு வாழ்த்து தெரிவிக்க கூடிய ரசிகர்கள் மீது தடியடி நடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முன்னதாக ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சல்மான் கான் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்திற்கு "சிக்கந்தர்" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.



    • ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தனது புதிய படத்தின் 'டைட்டில்' அறிவிப்பு சல்மான்கான் வெளியிட்டுள்ளார்.
    • இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு விஜய் வயது துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் மகேஷ் பாபுக்கு ஸ்பைடர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 'தர்பார்' என பல படங்களை இயக்கியுள்ளார்.

    கஜினி படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இயக்கி மிகப்பெரும் வெற்றி அடைந்தார். தெலுங்குவில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஸ்டாலின்' படத்தை இயக்கினார்.




    ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய பின் அப்படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் சினிமாவில் சில காலம் அவர் ஒதுங்கி இருந்தார்.

    இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனின் அமரன்' படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் பாதி முடிந்த நிலையில் தற்போது அடுத்த புதிய படம் குறித்து அறிவித்தார்




    அதில் பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய இந்தி படம் இயக்குகிறார். இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.

    இதைத் தொடர்ந்து சல்மான்கான் படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை கடந்த சில மாதங்களாக முடித்த ஏ. ஆர். முருகதாஸ் அந்த படத்துக்கான சூட்டிங்கை விரைவில் தொடங்க உள்ளார்.

    மேலும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் ரம்ஜான் பண்டிகையை யொட்டி தனது புதிய படங்களை 'ரிலீஸ்' செய்வதை வழக்கமாக கொண்டவராவார். இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தனது புதிய படத்தின் 'டைட்டில்' அறிவிப்பு சல்மான்கான் வெளியிட்டுள்ளார்.




    ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'சிக்கந்தர்' எனும் 'டைட்டில்' வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் தற்போது தனது எக்ஸ் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    மேலும் தற்போது ரம்ஜானுக்கு வெளியான 'படே மியான் சோட்டா மியான்' மற்றும் ' மைதான்' உள்ளிட்ட படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைய அல்லாவை வேண்டிக் கொள்வதாகவும் ரசிகர்கள் அனைவருக்கும் 'ஹேப்பி ரம்ஜான்' எனவும் இணைய தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
    • சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களில் ஏ.ஆர். முருகதாஸ் ஒருவராக இருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி படத்தில் உதவி இயக்குநராக ஆரம்ப காலத்தில் பணி புரிந்தார். பிறகு 2000 ஆம் ஆண்டில் அஜித் நடித்து வெளியான தீனா என்ற படத்தை இயக்கினார்.

    2005 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கினார். இந்த படம் சூர்யாக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கஜினி படம் ஹிட்டானதை அடுத்து 2008 ஆம் ஆண்டு அவரின் திரையுலக பயணத்தை பாலிவுட் பக்கம் திருப்பினார்.

    இவர் இயக்கிய கஜினி படத்தை அமீர்கானை வைத்து இந்தியில் ரீமேக் செய்தார். இந்தியிலும் மிக முக்கியமான படமாக இது பேசப்பட்டது. வசூலில் உச்சமடித்தது இந்தி கஜினி. மேலும் வசூலில் ரூ. 100 கோடி தாண்டிய முதல் இந்தி படம் இதுவே.

    2011 ஆம் ஆண்டு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து 7ஆம் அறிவு படத்தை அவர் இயக்கினார். 2012 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கினார். நடிகர் விஜய்-க்கு கம்பேக் கொடுத்த படங்களில் துப்பாக்கி முதன்மை இடம் பிடித்தது.

    தமிழ் சினிமாவின் அதிக வசூல் பட்டியலில் துப்பாக்கி இடம் பிடித்தது. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சர்கார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார்.

    இந்த வரிசையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.இது சிவகார்த்திகேயனின் 23-வது படம் ஆகும். இந்த படம் தொடர்பான தவவல்கள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் மற்றொரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார். இவர் இயக்க போகும் இந்தி படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தின் பட்ஜெட் 400 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    சஜித் நதியத்வாலா இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தை 2025 ஆம் ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் சல்மான் கான் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    • 3 சூப்பர் ஸ்டார்கள் ஒரேமேடையில் பங்கேற்று 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினர்.
    • தீபிகா படுகோன், ரன்வீர்சிங், ராணிமுகர்ஜி பங்கேற்பு

    தொழில் அதிபர் ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவை முன்னிட்டு 2- ம் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை குஜராத் ஜாம்நகரில் உள்ள வீட்டில் நடந்தது.

    இந்தவிழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.

    இதில் இந்தி பட சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள். ஆஸ்கார் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர். படத்தில் வரும் 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்கள். வண்ண குர்தா உடையில், 3 கான்கள் ஒரே பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியது அனைவரையும் ஆச்சர்யபடுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்தநிகழ்ச்சியில் பாஷில்சித்தார்த் மல்ஹோத்ரா, கியாராஅத்வானி, சைப் அலிகான், கரீனாகபூர், மாதுரி தீட்சித், வருண்தவான். அனன்யா பாண்டே, ஆதித்யாராய், ராணிமுகர்ஜி, தீபிகாபடுகோன், ரன்வீர்சிங், ரன்பீர்கபூர், ஆலியாபட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு வந்து சென்றதை தொடர்ந்து மாலத்தீவு அமைச்சரின் எக்ஸ் பக்க பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது
    • மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் திரை பிரபலங்கள்

    இந்தியாவில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை புகைப்படங்களுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து, இந்தியா மாலத்தீவை குறிவைத்துள்ளது என சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர் பதிவிட்டிருந்தார்.

    இதன் எதிரொலியாக, திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களைக் கண்டேன். அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டுக்கு இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அவர்களிடம் நல்லவர்களாக இருக்கிறோம். அதேசமயம் இப்படியான வெறுப்பை நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? என பதிவிட்டிருந்தார். மேலும், நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதன் அழகை வியந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால், கண்ணியம் மிகவும் முக்கியமானது. இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்" என தெரிவித்திருந்தார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டூல்கர் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "சிந்துதுர்க் பகுதியில் எனது 50வது பிறந்தநாளை கொண்டாடி 250 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாம் கேட்பதை விட அதிகமாக கொடுக்கக்கூடியது இந்த கடல் நகரம். அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகிய இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை நமக்கு கொடுத்துச் செல்லும். இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்

    நடிகர் சல்மான் கான், "லட்சத்தீவின் அழகான சுத்தமான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. இதன் சிறப்பான அம்சம் என்னவென்றால், அது இந்தியாவில் உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

    நடிகை ஷ்ரத்தா கபூர், "பழமையான அழகிய கடற்கரையையும், உள்ளூர் கலாசாரத்தையும் உள்ளடக்கிய லட்சத்தீவில் எனது விடுமுறை நாட்களை செலவழிக்க ஆவலாக உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.

    • சல்மான்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.
    • திடீரென சல்மான் கானுக்கு இணைய தளத்தில் கொலை மிரட்டல் வந்தது.

    இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக இருபவர் சல்மான்கான். திரைத்துறையில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் காரணமாக ஏற்கனவே அவருக்கு போலீஸ், பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.


    இந்த நிலையில் திடீரென சல்மான்கானுக்கு இணைய தளத்தில் கொலை மிரட்டல் வந்தது. அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தாவூத் உங்களை காப்பாற்றுவார் என்ற மாயையில் இருக்கிகாதீர்கள். உங்களை யாராலும் காப்பற்ற முடியாது. சித்து மூஸ் வாலாவின் மரணத்திற்கு உங்கள் பதில் கவனிக்கப் படாமல் இல்லை. அவர் எப்படிப்பட்டவர் என்பதும் அவருக்கு இருந்த குற்ற சம்பவங்கள் பற்றியும் நாங்கள் அறிவோம். நீங்கள் விரும்பும் எந்த நாட்டிற்கும் தப்பி செல்லுங்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். மரணத்திற்கு விசா தேவையில்லை என்று பதிவிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து சல்மான்கானுக்கு வந்த மிரட்டல் பற்றி மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கணக்கில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்து உள்ளது. லாரன்ஸ் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தற்போது சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மிரட்டலையொட்டி மும்பை போலீசார் சல்மான்கானின் பாதுகாப்பு அதிகரித்து இருக்கின்றன.

    • பதானில் சல்மானும், டைகர்-3 படத்தில் ஷாருக்கும் கேமியோ செய்திருந்தனர்
    • இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம் என்றார் சல்மான்

    மும்பை திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் ஆமிர் கான், சல்மான் கான் மற்றும் ஷாருக் கான். இந்த 3 நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பது வழக்கம்.

    அகில இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் இவர்களின் திரைப்படங்கள் பல திரையரங்குகளில் வெளியாவதால் அவற்றின் வர்த்தக எல்லையும் பரந்து விரிந்துள்ளது. இதன் காரணமாக இவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள், இத்திரைப்படங்களில் ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புகுத்த நினைக்கின்றனர்.

    அதில் ஒன்றாக சமீப காலங்களாக சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் ஷாருக் கானும், ஷாருக் கான் கதாநாயகானாக நடிக்கும் திரைப்படங்களில் சல்மான் கானும், சில நிமிடங்களே திரையில் தோன்றும் கேமியோ (cameo) காட்சியில் தோன்றுகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் வெளியான ஷாருக் கான் நடித்து திரைக்கு வந்த "பதான்" திரைப்படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    அதே போல், நவம்பர் மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சல்மான் கான் நடித்த "டைகர்-3" திரைப்படத்தில் ஷாருக் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    ஒரு முன்னணி கதாநாயகனின் திரைப்படத்தில் திரையில் வேறொரு முன்னணி கதாநாயகன் தோன்றுவது இரு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

    இந்நிலையில் இது குறித்து சல்மான் கான் கூறியதாவது:

    நானும் ஷாருக் கானும் பரஸ்பரம் இருவர் படங்களிலும் கேமியோ வேடங்கள் செய்கிறோம். எங்கள் இருவரின் ரசிகர்களும் அதை விரும்புவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் இருவருக்கும் திரையை தாண்டியும் ஆழமான நட்பு உள்ளது; இது கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. எங்கள் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது சமூக வலைதளங்களில் சச்சரவு நடைபெறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால், நான் சமூக வலைதளங்களை அதிகம் பார்ப்பவன் இல்லை. ஆனால், நான் எப்பொழுதும் என் ரசிகர்களிடம் சொல்வது என்னவென்றால், ஷாருக் எனக்கு சகோதரன்; எனவே, உங்களுக்கும் சகோதரன் - அவருக்கு எந்த தீங்கும் நேர்ந்து விட கூடாது - என்பதுதான். நானும் ஷாருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம்.

    இவ்வாறு சல்மான் தெரிவித்தார்.

    பிரபல கதாநாயகர்கள், வேறொரு கதாநாயகரின் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வருவது திரைப்படங்களின் வெற்றிக்கும், அதிக வசூலுக்கும் உதவுவதாக திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது.

    கடந்த 2015-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'. இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர், பார்வதி நாயர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது.


    அஜித்தின் கதாபாத்திரத்தை இயக்குனர் கவுதம் மேனன் மெருகேற்றி இருப்பார். மழை வரப்போகுதே.. அதாரு அதாரு போன்ற பாடல்கள் கொண்டாடப்பட்டன. இப்படத்தில் அஜித்துக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார்.


    இந்நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும் நடிகர் சல்மான்கான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு 'வீரம்' படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டைகர் 3’.
    • இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.


    இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    டைகர் 3 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'டைகர் 3' திரைப்படத்தின் டிரைலர் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    ×