என் மலர்
நீங்கள் தேடியது "ஷாருக்கான்"
- தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார்.
- பான் மசாலா விளம்பரத்தில் ஷாருக்கான், "நாக்கிலே குங்குமப்பூ" என்று கூறுவார்.
டெல்லியில் நடைபெற்ற தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார்.
அப்போது ஷாருக்கானிடம், பிரபல பான் மசாலா விளம்பரத்தில் வரும், "நாக்கிலே குங்குமப்பூ" (Zubaan Kesari) என்ற டயலாக்கை கூறுமாறு வற்புறுத்தி கேட்டதால் சிரிப்பலை எழுந்தது.
இதையடுத்து பேசிய ஷாருக்கான்,"இந்த தொழிலதிபர்களிடம் நீங்கள் ஒருமுறை பிசினஸ் செய்தால், அவர்கள் உங்களை ஒருபோதும் விட மாட்டார்கள், அதிலும் குட்கா காரர்கள் அதிக பணம் தருகிறார்கள். நான் அதைச் செய்ய பணம் வாங்குகிறேன். தயவுசெய்து இதை உன் அப்பாவிடம் சொல்லுங்கள். நல்ல விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். நான் இங்கே நின்றுகொண்டு நாக்கிலே குங்குமப்பூ என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அது தவறு, அது தடைசெய்யப்பட்டுள்ளது. நீ என் ரசிகனா அல்லது விமலின் (பான் மசாலா நிறுவனம்) ரசிகனா?" என தனேக்கே உரிய பாணியில் கிண்டல் அடித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இப்படி சங்கப்படுத்துவது தவறு என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் ஷாருக் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் கிங் படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஷாருக்கானுக்கு பதான், ஜவான், டங்கி உள்ளிட்ட கடைசியான திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
அவர் நடித்து வரும் கிங் படத்தை பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஆக்சன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
இதற்கிடையே ஒவ்வொரு பிறந்த நாளும் கடற்கரையை ஒட்டியுள்ள மன்னத் பங்களாவில் ரசிகர்களை பார்த்து, வாழ்த்துகளை பெறுவார்.
ஆனால், இன்று அவர் மன்னத் பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களை சந்திக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் இதனால் உங்களை மிஸ் செய்கிறேன். இதற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் ஷாருக் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு பிறந்த நாளும் மன்னத் வீட்டில் ரசிகர்களை பார்ப்பார்.
- பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்களை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தனர்.
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு பிறந்த நாளும் கடற்கரையை ஒட்டியுள்ள மன்னத் பங்களாவில் ரசிகர்களை பார்த்து, வாழ்த்துகளை பெறுவார்.
இதற்கான இன்று காலை முதலே, மன்னத் வீடு முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர். வழக்கமாக பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து வாழ்த்துகளை பெறுவார்.
ஆனால், இன்று அவர் மன்னத் பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களை சந்திக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் உங்களை மிஸ்சிங் செய்கிறேன். இதற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்காக காத்திருந்த அன்பான ரசிகர்களை, நான் வெளியே வந்து வரவேற்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உங்கள் அனைவரிடம் எனது ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கூட்டக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள் காரணமாக அனைவரின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்து கொண்டதற்கு நன்றி, என்னை நம்புங்கள்... உங்களை விட அதிகமாக உங்களைப் பார்ப்பதை நான் மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் பார்க்கவும் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் ஆவலுடன் இருந்தேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.
இவ்வாறு ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்.
- 2024-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 231.1 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
- 2023-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியனாக இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் விளம்பரம், கிரிக்கெட் வருமானம் மூலம் அதிக அகளவில் சம்பாதிக்கிறார். இதனால் அவரின் பிராண்ட் மதிப்பு எப்போதுதும் உயர்ந்ததாகவே இருந்து வருகிறது.
தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரன்வீர்சிங், ஷாருக்கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்தாண்டை விட விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு இந்தாண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் விராட் கோலியின் மதிப்பு உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.
க்ரோல் (Kroll) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2024-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 231.1 மில்லியன் அமெரிக்க டாலராகும். 2023-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியனாக இருந்தது.
2 ஆம் இடத்தில உள்ள பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 170.7 மில்லியன் டாலராகும். 3 ஆம் இடத்தில உள்ள ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு 145.7 மில்லியன் டாலராகும். கடந்தாண்டை விட ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு இந்தாண்டு 21% உயர்ந்துள்ளது.
116.4 மில்லியன் டாலர் மதிப்புடன் ஆலியா பட் 4 ஆம் இடத்திலும் 112.2 மில்லியன் டாலர் மதிப்புடன் சச்சின் தெண்டுல்கர் 5 ஆம் இடத்திலும் உள்ளனர்.
102.9 மில்லியன் டாலர் மதிப்புடன் எம்.எஸ்.தோனி 7 ஆம் இடத்திலும் 48.4 மில்லியன் டாலர் மதிப்புடன் ரோகித் சர்மா 17 ஆம் இடத்திலும் 43.1 மில்லியன் டாலர் மதிப்புடன் ஹர்திக் பாண்ட்யா 20 ஆம் இடத்திலும் 38.1 மில்லியன் டாலர் மதிப்புடன் பும்ரா 22 ஆம் இடத்திலும் உள்ளனர்.
கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.
கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகம் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படக்குழு கல்கி இரண்டாம் பாகத்திலிருந்து நடிகை தீபிகா படுகோனை நீக்கினர். இது பெரும் பேசும் பொருளாக மாறியது. ஆனால் இதற்கான காரணத்தை படக்குழு வெளியிடவில்லை.
இன்று தீபிகா, ஷாருக்கான் நடிக்கும் கிங் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.
தீபிகா இன்று அவரது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் 18 ஆண்டுகளுக்கு முன் 'ஒம் ஷாந்தி ஓம்' படப்பிடிப்பின் போது கற்றுக் கொண்ட முக்கியமான பாடத்தை பகிர்ந்துள்ளார்.
" ஷாருக்கான் உடன் நடித்த முதல் படமான ஓம் ஷாந்தி ஓம் படத்தின் நேரத்தில் எனக்கு அவர் கற்றுக் கொடுத்த முதல் பாடம், ஒரு படத்தை எடுக்கும் அனுபவமும், அதில் பணிபுரியும் மக்களும், அதன் வெற்றியை விட அதிகம் முக்கியம் என்பதே. அதன் பின்னர் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் நான் அந்தக் கற்றலைப் பின்பற்றி வருகிறேன்," என தீபிகா கூறினார்.
இந்த பதில் சமீபத்தில் அவர் நடிக்க இருந்த கல்கி திரைப்படத்தில் இருந்து விலகியதன் காரணமாக ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
- ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
- தி கிங் படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கான் நடிக்கிறார்.
பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருடன் இணைந்து அவரது மகள் சுஹானா கான் நடிக்கிறார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான போலீஸ் புகாரில் நடிகர் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலிபாக்கில் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களை விவசாயத்திற்காக வாங்குவதாக பத்திரப்பதிவின்போது கூறிவிட்டு பண்ணை இல்லம் கட்டியதாக சுஹானா கான் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் தூதர்கள்.
- இந்த வழக்கு இந்தியாவின் 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் பாரத்பூரில் உள்ள கோர்ட்டில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் உட்பட ஹூண்டாய் நிறுவனத்தின் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் வாங்கிய காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அதன் பிராண்ட் தூதர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இந்தியாவின் 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிராண்ட் தூதர்கள் தவறான அல்லது குறைபாடான பொருள்களை விளம்பரப்படுத்தினால் அவர்களும் இதில் பொறுப்பேற்க வேண்டும்.
அந்த வகையில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- காந்தரின் புதிய பிராண்ட் அம்பாசடராக பாலிவுட் இளவரசர் ஷாருக் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பச்சன் பாரம்பரிய நம்பிக்கையையும், கான் நவீன அழகு உணர்வையும் கொண்டு வருகிறார்கள்.
இணையத்தில் பெரும் கவர்ச்சியையும் ஊகங்களையும் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால்யான் ஜுவல்லர்ஸ் குழுமத்தின் வாழ்க்கைமுறை நகை பிராண்டான காந்தரின் புதிய பிராண்ட் அம்பாசடராக பாலிவுட் இளவரசர் ஷாருக் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது வெறும் பிரசாரச் செய்தி அல்ல. இந்திய நகைத் தொழிலில் ஒரு திருப்புமுனை. பல நாட்களாக டீசர் வீடியோக்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட இந்த வாய்ப்பு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ஸ்டைலிஷ் நகைகளில் திகழ்ந்த கானின் தோற்றம், இது அவருடைய சொந்த முயற்சியா என்ற கேள்விகளுக்கே துவக்கமாயிற்று.
அதில் தெளிவாகக் கூறப்பட்டது: ஷாருக் கான் காந்தரின் பிராண்ட் முகம்தான், உரிமையாளர் அல்ல. இது ஒரு தூய்மையான பிராண்டு தூதுவராக இருந்தாலும், அதன் கலாச்சார, வர்த்தக தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்போது, அமிதாப் பச்சனை பிரதிநிதித்துவப்படுத்தும் கால்யான் ஜுவல்லர்ஸும், ஷாருக் கானை பிரதிநிதித்துவப்படுத்தும் காந்தரும், ஒரே குழுமத்தின் கீழ் இணைந்துள்ளன.
பச்சன் பாரம்பரிய நம்பிக்கையையும், கான் நவீன அழகு உணர்வையும் கொண்டு வருகிறார்கள்.
- விராட் கோலியை கிங் ஆஃப் கிரிக்கெட், கோட் என ஷாருக்கான் பாராட்டினர்.
- ஆர்சிபி அணிக்காக 18 வருடமாக விளையாடும் விராட் கோலிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2025 சீசன் ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஷ்ரேயா கோஷல் பாடல்கள் பாடி அசத்தினார். இஷா பதானி கவர்ச்சி நடனம் ஆடினார்.
அதன்பின் ஷாருக்கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆர்சிபி அணிக்காக 18 வருடங்கள் தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலியை புகழந்து பேசினார். அப்போது கிங் ஆஃப் கிரிக்கெட், கோட் என விராட் கோலியை பாராட்டி வரவேற்றார். அதற்கு விராட் கோலியை நன்றி தெரிவித்தார்.
பின்னர் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் உடன் சற்று உரையாடினார். விராட் கோலியை கோல்டன் தலைமுறை எனவும், ரிங்கு சிங்கை இளம் தலைமுறை எனவும் ஷாருக்கு கூறினார்.
பின்னர் இருவருடன் ஆட்டம் போட்டார். ஷாருக்கான் உடன் விராட் கோலியும், ரிங்கு சிங்கும் சேர்ந்து ஆடினர். பின்னர் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக தலைவர்களை மேடைக்கு அழைத்தார். ஐபிஎல் கோப்பை மேடைக்கு கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கேகேஆர் அணி கேப்டன் ரகானே, ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, விராட் கோலிக்கு 18 வருடமாக ஆர்சிபி அணிக்காக விளையாடுவதை கவுரவப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
- இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இதைத் தொடர்ந்து அட்லீ, சல்மான்கானுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

அட்லீ
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ தன் அடுத்த படத்தில் சல்மான் கானுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சல்மான் கானை சந்தித்து காமெடி படத்துக்கான கதையை அட்லீ கூறியுள்ளதாகவும் கதை பிடித்துப்போகவே சல்மான் கான் அவருடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் "பதான்".
- "பதான்" படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் ஜவான் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

பதான்
இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பதான்
நடிகர் ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆனதையொட்டி "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் பதான் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் பதான் இன்னும் உயிரோட இருக்கான் என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசருக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
- ஜவான் படத்தின் கதை திருடப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

அட்லீ -ஷாருக்கான்
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'ஜவான்' படத்தின் கதை விஜயகாந்த் நடித்து 2006-ஆம் ஆண்டு வெளியான 'பேரரசு' படத்தின் கதை எனக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரித்து உரிய விளக்கம் அளிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது."

ஜவான்
இதற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படம் 'மௌன ராகம்' படத்தைப் போல் இருப்பதாகவும் 'மெர்சல்' படம் 'மூன்று முகம்' படம் போல் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.






