என் மலர்
நீங்கள் தேடியது "Gutka"
- புகையிலை பொருட்கள் விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
சூலூர்
சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திர பிரசாத் மற்றும் கார்த்திக் குமார் உள்ளிட்டோர் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ரமேஷ்(38) என்பவரின் கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 10 கிலோ குட்கா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கேத்தனூரை சேர்ந்த நடராஜன் மகன் கணேசன் (வயது 45 ). இவர் பல்லடம்- உடுமலை சாலையில் உள்ள கேத்தனூரில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு போலீசார் சென்று சோதனை செய்ததில் 10 கிலோ குட்கா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக கணேசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 கிலோ குட்காவை கோப்புபடம். செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
- மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதையடுத்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து நூர்முகம்மது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் குட்கா விற்பனையை தடுக்க தீவிர சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
ஈரோட்டை அடுத்து உள்ள ஆர்.என்.புதூர் ராகவேந்திரா நகரில் உள்ள முத்துராஜா (29) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் முத்துராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 45 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த மளிகை கடை அரசு பள்ளிக்கூடம் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.
டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் நூர் முகமது (35). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவரது கடையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மளிகை கடையை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 10 குட்கா (ஹான்ஸ்) பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து நூர்முகம்மது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- மளிகை கடைகாரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- குட்காவை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் துடியலூர் மற்றும் பேரூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பேரூர் தீத்திபாளையம் பகுதியில் உள்ள மளிகை கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 101.75 கிலோ குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடை நடத்தி வந்த பீம்சன் (வயது 51) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர் பீம்சனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று துடியலூர் போலீசார் அப்பநாயக்கன் பாளையம் முல்லை நகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது முத்தீசன் (27) என்பவது கடையில் 20 கிலோ குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் குட்காவை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது குளத்தூர் பகுதியில் செந்தில்வேல் குமார் (37) என்பவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 49 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். போலீசார் நேற்று ஒரே நாளில் 170.75 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர். சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்தார்.
- ரெயில்களில் குட்கா- மதுபாட்டில்கள் கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
மதுரை
மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் வெளிமாநில மதுபானம் ஆகியவை கடத்திக்கொண்டு வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை முதல் மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தினர். நிஜாமுதீன்- மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பேரையூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் 10 வெளிமாநில மது பாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பெட்டியில் ராஜஸ்தான் மாநிலம் தாஸ்பான் பகுதியைச் சேர்ந்த திகாம்சிங் (வயது 26) என்பவர் தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்காவை பறிமுதல் செய்த போலீசார் திகாம்சிங்கை கைது செய்தனர்.
- அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகில் உள்ள வெள்ளைகோட்டையை சேர்ந்தவர் முத்துராசு (32). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன், தலைமை காவலர் அன்பழகன் மற்றும் போலீசார் முத்து ராசுவை பிடித்து விசாரணை செய்தனர். அப்ேபாது அவரிடம் குட்கா பண்டல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, முத்துராசு மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதை பொதுமக்கள் பாராட்டினர்.
- தேவகோட்டையில் குட்கா, புகையிலை விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
- 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.
தேவகோட்டை
தமிழக அரசு குட்கா- புகையிலை விற்பனையை தடை செய்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தர வுப்படி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தேவகோட்டை துணைக்காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் அறிவுரைப்படி நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் தேவகோட்டை நகர் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான ஸ்நாக்ஸ் கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
அங்கிருந்த குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர். அதனை விற்பனை செய்தவரை ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வட்டார உணவு பாதுகாப்புதுறை அலுவலர் வேல்முருகன், உதவியாளர் மாணிக்கம் அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
- விழுப்புரத்தில் அதிரடி: குட்கா விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல்வைத்தனர்.
- அதிகாரி பாலசுப்பிரமணியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் நகர போலீஸ் நிலையம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குருசாமி பிள்ளை தெருவில் பங்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், ஆர்எம்.பி பாக்கு, விமல் பாக்கு வைத்து வியாபாரம் செய்த விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த திவாகர் (வயது 27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பங்க் கடையை விழுப்புரம் நகராட்சி அதிகாரி பாலசுப்பிரமணியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
- வாலிபர் ஒருவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர்.
- போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்த 4 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கோவை:
கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு அந்தப் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாசம் மற்றும் போலீசார் காபி கடை பஸ் நிறுத்தம் அருகே சென்று சோதனை செய்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் குட்கா விற்பனை செய்து கொண்டு இருந்த வாலிபரை கண்காணித்தனர்.
பின்னர் அந்த வாலிபரை அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்தனர். அப்போது அந்த வாலிபர் அத்திப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றார். இதனை கண்ட போலீசார் அதிரடியாக குடோனுக்குள் புகுந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்த 4 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் குடோனை சோதனை செய்தபோது ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 750 கிலோ 75 கிராம் குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த குட்கா மற்றும் பணம் ரூ. 39 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மடக்கிப் பிடித்த 2 வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த ராம் (வயது 24) மற்றும் கோபால் குமார் (24) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியது ஜெகதீஷ் பட்டேல் மற்றும் பரத் பட்டேல் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராம் மற்றும் கோபால்குமாரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய ஜெகதீஸ் பட்டேல், பரத் பட்டேல் ஆகியோரை தேடி வருகின்றனர். இதேபோன்று சூலூரில் 50 கிலோ குட்கா பதுக்கி வைத்து விற்ற சூலூரை சேர்ந்த முத்துபாண்டி (41), ஷியாம் சுந்தர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தக்கலை:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீசாரின் அதிரடி வேட்டையின் காரணமாக தற்போது கஞ்சா மற்றும் குட்கா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அழகிய மண்டபம் பகுதியில் குட்கா புகையிலை விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தார். போலீசார் அவரை சோதனை செய்தபோது அவரிடம் குட்கா புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் அழகிய மண்டபத்தை சேர்ந்த முகமது ஷாபி (வயது 54) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவரிடம்விசாரணை மேற்கொண்டபோது அழகிய மண்டபம் பகுதியில் வாடகை வீட்டில் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வீட்டில் சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்த குட்கா புகையிலை பறிமுதல் செய் தனர்.
மேலும் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள வீட்டிலும் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்துபோலீசார் அங்கு சென்று சோதனை மேற் கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த குட்கா புகையிலை பறிமுதல் செய்தனர். மொத்தம் 170 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முகமது ஷாபி குட்கா புகையிலையை எங்கிருந்து விற்பனைக்கு வாங்கி வந்தார்.இதற்கும் வேறு நபர்களுக்கு தொடர்புஉண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படை அலுவலர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை 5 மணி அளவில் காந்திபுரம் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் 15 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை வைத்திருந்த திருச்சூரை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் தாமஸ் வீதியில் ஒரு வியாபாரியிடம் இருந்து வாங்கி சென்றதாக கூறினார். இதையடுத்து பறிதல் செய்த குட்கா பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 11-ந் தேதி முதல் இதுவரை எந்த ஆவணங்களும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 83 லட்சத்து 38 ஆயிரத்து 865 பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் உரிய ஆவணங்களை 19 பேர் சமர்ப்பித்ததின் அடிப்படையில் ரூ.1 கோடி 6 லட்சத்து 26 ஆயிரத்து 980 மற்றும் 64 பட்டுப்புடவைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
மீதமுள்ள ரூ.77 லட்சத்து 11 ஆயிரத்து 885 மற்றும் 213 பட்டுப்புடவைகள் சம்பந்தப்பட்ட கருவூலகங்களிலும், 1497 மது பாட்டில்கள் மற்றும் ஒரு ஏர்பிஸ்டல் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019
