என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குட்கா, பான் மசாலா தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
- குட்கா, பான் மசாலா தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
- உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அரசு அமல்படுத்தியது.
இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குட்கா, பான் மசாலா மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டு மே 23 வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.
Next Story






