மத்தூர் அருகே காரில் கடத்திய 400 கிலோ குட்கா சிக்கியது- டிரைவர் தப்பியோட்டம்

குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
மத்தூர் அருகே காரில் கடத்திய 400 கிலோ குட்கா சிக்கியது- டிரைவர் தப்பியோட்டம்
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீசார் கிருஷ்ணகிரி-ஊத்தங்கரை சாலை பெருகோபனப் பள்ளி பக்கமாக ரோந்து சென்றனர். அந்த பகுதியில் இருந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு குட்கா காரில் கடத்தி வரப்பட்டதும், போலீசுக்கு பயந்து காரை விட்டு டிரைவர் தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

ஓசூர் தாலுகா மத்திகிரி போலீசார் டி.வி.எஸ். சோதனை சாவடி பக்கமாக ரோந்து சென்றனர். அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 13 கிலோ 750 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் மணிகண்டன் (33), ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ரூ.19 ஆயிரத்து 600 மதிப்புள்ள ஸ்கூட்டர், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com