என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "businessman"

    • தவறான புரிதலால் ஏற்பட்ட புகார் என குற்றம்சாட்டப்பட்டவர் வாதிட்டார்.
    • உயர் நீதிமன்ற ஊழியர்களின் மருத்துவ நல நிதிக்கு செலுத்த வேண்டும்

    மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த 52 வயது தொழிலதிபர் ஒருவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மடிக்கணினி வாங்கித் தர மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2024 ஆகஸ்ட் மாதம், 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி, தொழிலதிபரான தனது தாய்மாமன் மீது பாலியல் புகார் அளித்தார்.

    பள்ளிக்குச் செல்லும்போது அவர் தவறான குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், ஒருமுறை தன்னை தவறாகத் தொட்டு முத்தம் கேட்டதாகவும் அந்தச் சிறுமி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையின் போது, இது ஒரு தவறான புரிதலால் ஏற்பட்ட புகார் என்றும், தற்போது குடும்ப உறுப்பினர்களிடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரும் வழக்கை மேலே தொடர விருப்பமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ஆர். போன்ஸ்லே தலைமையிலான மும்பை உயர்நீதிமன்ற அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து அவர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்தனர்.

    மேலும் தங்கள் உத்தரவில், பாதிக்கப்பட்ட சிறுமி மேற்படிப்புக்கு செல்ல உள்ளதால், அவருக்கு ஆப்பிள் மேக்புக் அல்லது அதற்கு இணையான ஒரு உயர்தர லேப்டாப்பை ரூ.1.5 லட்சம் அபராதத் தொகையில் இருந்து வாங்கித் தர வேண்டும்.

    லேப்டாப் வாங்கியது போக மீதமுள்ள தொகையை உயர் நீதிமன்ற ஊழியர்களின் மருத்துவ நல நிதிக்கு செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
    • பல அமெரிக்க, ஐரோப்பிய பிரபலங்கள் இந்த நிறுவனத்தின் தயரிப்புகளை பயனப்டுத்தி வருகின்றனர்.

    பிரிட்டனின் பிரபல ஆன்லைன் பேஷன் மற்றும் அழகுசாதன பொருட்கள் நிறுவனமான ASOS உடைய இணை நிறுவனர் குவென்டின் கிரிஃபித்ஸ்.

     58 வயதான இவர் தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று குடியிருப்பு கட்டிடத்தில் அவர் வசித்து வந்த 17-வது மாடியில் இருந்து விழுந்து மர்மமான உயிரிழநதார்.

    அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இதில் சதி இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும்.

    2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ASOS நிறுவனம், இன்று முன்னணி பேஷன் நிறுவனமாக வளர்ந்துள்ளது. பல அமெரிக்க, ஐரோப்பிய பிரபலங்கள் இந்த நிறுவனத்தின் தயரிப்புகளை பயனப்டுத்தி வருகின்றனர்.

    பிரிட்டனை சேர்ந்த குவென்டின், தனது முதல் மனைவியிடம் விவாகரத்து பெற்ற பிறகு, 2007ல் தாய்லாந்திற்கு குடிபெயர்ந்தார்.

    அங்கு ஒரு தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் அவரிடமிருந்தும் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.  

    • அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் மோகன் தனது உடைகளை மாற்றிக்கொள்வார்.
    • ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் வாகனத்தை தானேயில் உள்ள ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் சியோன் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயது மோகன் கோகடே.

    மோகனின் குடும்பம் நன்கு படித்த மற்றும் வசதியான குடும்பம். இவரது சகோதரி துபாயிலும், சகோதரர் அமெரிக்காவிலும் வசிக்கின்றனர்.

    இவரது ஒரு மகன் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட், மற்றொரு மகன் இன்ஜினியர் ஆவார். மோகன் முன்பு தனது தந்தையுடன் சேர்ந்து தோட்ட தொழில் செய்து வந்தார்.

    வசதியான பின்னணி இருந்தும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் அவர் பெரும் கடன் சுமைக்கு ஆளானார். இந்தக் கடனை அடைப்பதற்காக திருட்டுத் தொழிலை தொடங்கியுள்ளார்.

    சியோன் மற்றும் பிற இடங்களில் நகை பறிப்புகளில் மோகன் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஜனவரி 25 அன்று சியோனில் ஒரு பெண்ணிடம் பைக்கில் சென்று சங்கிலியை பறித்துச் சென்றார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் மோகன் தனது உடைகளை மாற்றிக்கொள்வார். மேலும் எப்போதும் ஹெல்மெட் அணிந்திருப்பார்.

    அவர் உடைகளை மாற்றினாலும், ஒவ்வொரு முறையும் அதே ஜோடி ஷூக்களை அணிந்திருந்தார். போலீசார் சுமார் 80 சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்தபோது, முகம் தெரியாவிட்டாலும் அவர் அணிந்திருந்த ஷூக்கள் மட்டும் மாறாமல் இருந்ததைக் கவனித்தனர். இதுவே அவர் பிடிபட முக்கியத் துப்பாக அமைந்தது.

    மோகன் நெரூலில் ஒரு இருசக்கர வாகனத்தைத் திருடி, அதைப் பயன்படுத்தி சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் வாகனத்தை தானேயில் உள்ள ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அவர் மீண்டும் அடுத்த திருதிற்காக வாகனத்தை எடுக்க வந்தபோது, ஷு அடையாளத்தை வைத்து போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

    சுமார் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.   

    • தனது காரில் வந்து இறங்கிய சந்தர்கனி நேராக கட்டிடத்தின் 17வது மாடியில் ஏறினார்.
    • வாட்ச்மேன் அவரை சமாதானம் செய்து 10வது மாடி வரை அழைத்து வந்தார்.

    மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்த தொழிலதிபர் சுனில் மோதிலால் சந்தர்கனி (59). இவர் முல்தானி என்ற பிரபல பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.

    நேற்று மதியம், சோலாப்பூரின் விஜய்பூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு தனது காரில் வந்து இறங்கிய சந்தர்கனி நேராக கட்டிடத்தின் 17வது மாடியில் ஏறினார்.

    மொட்டை மாடியின் விளிம்பில் நின்று கடவுளிடம் கைகூப்பி சந்தர்கனி பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தார். அவரை கண்ட வாட்ச்மேன் வேகமாக மேலே சென்று அவரை கீழே அழைத்து வர முயன்றார்.

    அவரை சமாதானம் செய்த வாட்ச்மேன், அவருடன் கீழே இறங்கினார். ஆனால் 17வது மாடியில் இருந்து 10வது மாடிக்கு இருவரும் வந்தபோது சந்தர்கனி, தனது கார் சாவியை மேலேயே மறந்து வைத்துவிட்டதாக கூறி மீண்டும் 17வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

    அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர்.

    அவர் கைகூப்பி பிரார்த்தனை செய்த சிசிடிவி காட்சி தற்போது வேகமாக பரவி வருகிறது. 

    • சிறு விஷயத்துக்காக சிவம் குப்தாவிற்கும், உணவு டெலிவரி செய்யும் 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • இதில் அவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    டெல்லியில் உணவு டெலிவரி ஊழியர்கள் தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவம் குப்தா (36).

    கடந்த ஜனவரி 3 இரவு, டெல்லியின் மிகவும் நெரிசலான பகுதியான Connaught Place-இல் சிறு விஷயத்துக்காக சிவம் குப்தாவிற்கும், உணவு டெலிவரி செய்யும் 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், தங்கள் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டுகளால் சிவம் குப்தாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 16 நாட்கள் உயிருக்குப் போராடிய சிவோம் குப்தா, சிகிச்சை பலனின்றி ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்தார்.

    சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, 2 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மூன்றாவது நபரைத் தேடி வருகின்றனர்.

     

      புதுச்சேரி:

      புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் மெசேஜ் வந்தது.

      அதில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து மர்ம நபர்கள் அவரை தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர்.

      பின்னர் அவர்கள் ஒரு லிங்கை அவருக்கு அனுப்பி அதன் மூலம் முதலீடு செய்யுமாறு கூறினர். இதனை தொடர்ந்து அவர் முதலில் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தார். இதன் மூலம் அவருக்கு ரூ.3 ஆயிரம் லாபம் கிடைத்தது.

      இதனை தொடர்ந்து அவர் பல்வேறு தவணைகளாக ரூ.5½ கோடி முதலீடு செய்தார். இதன் மூலம் கிடைத்த லாபத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் அது முடியவில்லை.

      எனவே அவர் தனக்கு முதலில் ஆலோசனைகள் வழங்கியவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

      புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார்.
      • பான் மசாலா விளம்பரத்தில் ஷாருக்கான், "நாக்கிலே குங்குமப்பூ" என்று கூறுவார்.

      டெல்லியில் நடைபெற்ற தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார்.

      அப்போது ஷாருக்கானிடம், பிரபல பான் மசாலா விளம்பரத்தில் வரும், "நாக்கிலே குங்குமப்பூ" (Zubaan Kesari) என்ற டயலாக்கை கூறுமாறு வற்புறுத்தி கேட்டதால் சிரிப்பலை எழுந்தது.

      இதையடுத்து பேசிய ஷாருக்கான்,"இந்த தொழிலதிபர்களிடம் நீங்கள் ஒருமுறை பிசினஸ் செய்தால், அவர்கள் உங்களை ஒருபோதும் விட மாட்டார்கள், அதிலும் குட்கா காரர்கள் அதிக பணம் தருகிறார்கள். நான் அதைச் செய்ய பணம் வாங்குகிறேன். தயவுசெய்து இதை உன் அப்பாவிடம் சொல்லுங்கள். நல்ல விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். நான் இங்கே நின்றுகொண்டு நாக்கிலே குங்குமப்பூ என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அது தவறு, அது தடைசெய்யப்பட்டுள்ளது. நீ என் ரசிகனா அல்லது விமலின் (பான் மசாலா நிறுவனம்) ரசிகனா?" என தனேக்கே உரிய பாணியில் கிண்டல் அடித்தார்.

      இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இப்படி சங்கப்படுத்துவது தவறு என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

      • இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
      • மாலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் போலீசில் புகார் அளித்தனர்.

      குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் போரிசனா கிராமத்தை சேர்ந்த தீரஜ் ரபாரி பல பெட்ரோல் பங்களை நடத்தி தொழிலதிபராக இருந்து வந்தார். இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

      இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை தனது மகள்களை காரில் அழைத்துக்கொண்டு ஆதார் கார்டு பதிய தீரஜ் ரபாரி வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.

      மாலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

      போலீசார் நடத்திய விசாரணையில், தீரஜ் தனது நண்பருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

      மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.  

      • முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை.
      • உலகின் மிகப்பெரிய ஆடை மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான Canam குழுமத்தை அவர் நிறுவினார்

      கனடாவில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      தொழிலதிபரும், Canam இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

      திங்கட்கிழமை காலை, வீட்டின் வெளியே அவர் தனது காரில் அமர்ந்திருந்தபோது மர்ம நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

      போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, காரில் இருந்த சாஹ்சி காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

      சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.

      தர்ஷன் சிங் சாஹ்சி பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1991 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்து தொழிலதிபராக உயர்ந்தார்.

      உலகின் மிகப்பெரிய ஆடை மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான Canam குழுமத்தை அவர் நிறுவினார். இது 40க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. தனது நிறுவனத்தில் ஏராளமான பஞ்சாபிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார்.  

      • ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
      • வீட்டில் பிணமாக கிடந்த மூன்று பேரிpf உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

      தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபூபதி (வயது45). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி உள்ளார்.

      ஆன்லைன் நெட்வொர்க் ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு நரேந்திரபூபதி (14) லதீஷ் பூபதி (11) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.

      இவர்கள் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். சிவபூபதி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

      இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டில் சிவபூபதி தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். அருகில், இரண்டு மகன்களும் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

      அவரது மனைவி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டதால், உயிர் தப்பிவிட்டார்.

      இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

      கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ஓசூரில் சிவபூபதி வாழ்ந்து வருவதாகவும், ஆன்லைன் வர்த்தகத்தை சொந்த ஊரிலும், சென்னையிலும் அவர் செய்து வந்த நிலையில் அதே தொழிலை ஓசூரில் செய்து வந்துள்ளார்.

      வீட்டில் பிணமாக கிடந்த மூன்று பேரிpf உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

      • ஆண்ட்ரூ மீதான வர்ஜீனியாவின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
      • வர்ஜீனியா இந்தாண்டு ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார்

      அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீது வர்ஜீனியா கியூஃப்ரே (41) என்ற பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

      தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும், இளவரசர் ஆண்ட்ரூவும் 17 வயதில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் வர்ஜீனியா குற்றம் சாட்டினார்.

      இளவரசர் ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்கு 15,000 டாலர் கொடுத்ததாக வர்ஜீனியா வெளிப்படுத்திய ஆதாரங்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் பல சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

      இந்த வழக்கில் 2008 இல் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 இல் நியூயார்க் நகர சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

      இந்நிலையில், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா இந்தாண்டு ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

      பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ந்து தனது அரச பட்டங்களை துறப்பதாக பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

      இதுகுறித்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதற்கான எனது முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.

      தற்பொழுது மன்னராட்சியின் ஒப்புதலுடன் எனது பட்டத்தையோ அல்லது எனக்கு வழங்கப்பட்ட கௌரவங்களையோ இனி நான் பயன்படுத்த மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். நான் முன்பு கூறியது போல், என் மீதான குற்றச்சாட்டுகளை நான் உறுதியாக மறுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

      • ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம்.
      • ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை.

      எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்கக் கூடாது என்று வணிகர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

      இன்று குஜராத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, "எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்க முடியாது என வணிகர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். துரதிஷ்டவசம் என்னவென்றால், விநாயகர் சிலைகளைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். அந்த சிலைகளின் கண்களும் மிகச் சிறியதாக உள்ளன, கண்கள் சரியாக திறப்பது கூட இல்லை. ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை."

      ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தப்படும் ஹேர்பின், சீப்பு கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை தான். 'ஆபரேஷன் சிந்தூர்' என்பது நமது படைகள் கைகளில் மட்டும் இல்லை, 140 கோடி இந்தியர்கள் கைகளிலும் உள்ளது" என்று தெரிவித்தார்.

      ×