search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "businessman"

    • பாந்த்ரா-ஒர்லியை இணைக்கும் கடல் பாலத்தில் இருந்து குதித்து சேத் தற்கொலை செய்துகொண்டார்.
    • தகவலறிந்து சென்ற மீட்புக் குழுவினர் நடத்திய 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

    மும்பை:

    காட்கோபரில் வசிக்கும் பவேஷ் சேத், பால் பேரிங்ஸ் வியாபாரம் செய்து வந்தார். இவர்நேற்று மாலை 3.15 மணியளவில் பாந்த்ரா-ஒர்லியை இணைக்கும் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது மகன் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற பாந்த்ரா போலீசார் சேத் உடலைக் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பாந்த்ரா போலீசார் கூறியதாவது:

    இறந்தவரின் மகன் மாலை 4:30 மணியளவில் எங்களை அணுகினார். வாட்ஸ்அப் வீடியோ காலில் தந்தை அழைத்ததையும், கடலில் குதித்ததையும் தெரிவித்தார்.

    தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் நடத்திய 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

    ஒரு வாகன ஓட்டியிடம் லிப்ட் கேட்டு பாந்த்ரா-ஒர்லி பாலத்தின் தென் பகுதியில் இறங்கிய அவர், மகனுக்கு வீடியோ கால் செய்து பாலத்தில் இருந்து குதிக்கப் போவதாகவும், குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்படியும் தெரிவித்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட கோடிக்கணக்கான நஷ்டம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.

    தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மகனுக்கு வீடியோ கால் செய்து தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த நீக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்தது.
    • தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் தொழிலாளருக்குக் குறுந்தகவல் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்தார்.

    தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட்.

    தமது ஐஃபோன்வழி பாலியல் தொழிலாளர்களுக்குக் குறுந்தகவல் அனுப்பி, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து வந்த அந்த அவர், குறுந்தகவல்கள் அனைத்தையும் கைப்பேசியிலிருந்து நீக்கிவிட்டார்.

    ஆனால், அவரது ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த நீக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்தது.

    குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்தும் அந்த ஐமேக்கில் செயலி ஒன்றை இயக்கிய ரிச்சர்ட் மனைவி, தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் தொழிலாளருக்குக் குறுந்தகவல் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்தார்.

    அவர் மேலும் ஆழமாக ஆராய்ந்ததில் பல ஆண்டுகளாகத் தம் கணவர் அனுப்பி, பின்னர் நீக்கிய குறுந்தகவல்கள் அனைத்தையும் பார்த்துவிட்டார்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரிச்சர்ட் மனைவி விவாகரத்து கோரினார்.

    இந்நிலையில் அந்த தொழிலதிபர், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார். ஒரு ஐஃபோனிலிருந்து நீக்கப்படும் குறுந்தகவல்கள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற ஆப்பிள் சாதனங்களில் தொடர்ந்து இருக்கலாம் என்பதை நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை என்பது இவரது வாதம். ஆதலால் அவர் சுமார் 5 மில்லியன் பவுண்ட் (ரூ. 53 கோடி) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    • சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.
    • குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போர்ச் கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அஸ்வினி கோஸ்டா சம்பவ இடத்திலேயே இறந்தார். அனிஸ் துதியா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த காரை 17 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என தெரிய வந்துள்ளது. அவரை விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர்.

    அந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததும், பார்ட்டி முடித்து வீடு திரும்பிய போது காரை வேகமாக இயக்கியுள்ளார் என்பதும், ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.

    அவருக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளதாக அந்த சிறுவனின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    நிபந்தனையில் கூறியிருப்பதாவது,

    போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    வயது குறைந்த மகனை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

    17 வயது சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்தச் சிறுவனுகு சமூக சேவை, போதை விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    செய்தி வெளியாகி பூதாகரமானதால் சிறாரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார், மகனுக்கே ஜாமீன் நிபந்தனை கட்டுரை எழுத வேண்டும் என்றால் சட்டவிரோதம் என தெரிந்தும் தன் மகனுக்கு காரை ஓட்ட கொடுத்த, அவன் குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

    சாமானிய, ஏழை மக்களுக்கு வழக்கு, தண்டனை என வழங்கும் இந்த நீதிமன்றங்கள், கோடி கணக்கில் ஊழல் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் என்று பல்வேறு வழக்குகளில் இருக்கும் பண படைத்தவர்களை இந்த சட்டமும், போலீஸூம் கண்டு காணாமல் இருக்கிறார்கள் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

    • மும்பையில் கடந்த மே 13 ஆம் தேதி வீசிய சூறைக்காற்றில் ராட்சத விளம்பரப் பலகை ஒன்று பெட்ரோல் நிலயத்தின் மீது விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பாவேஷ் ஷிண்டே தலைமறைவானார்.

    மும்பையில் கடந்த மே 13 ஆம் தேதி வீசிய சூறைக்காற்றில் ராட்சத விளம்பரப் பலகை ஒன்று பெட்ரோல் நிலயத்தின் மீது விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மகாராஷ்டிர அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்தது.

    உரிய அனுமதியின்றி ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஈகோ டிஜிட்டல் நிறுவனம் விளம்பரப் பலகையை நிறுவியதால்தான் 14 உயிர்கள் பலியானது என்று கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று அந்த ராட்சத பலகையை ஈகோ நிறுவனம் விளம்பரப் படுத்தியிருந்தது.

    இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பாவேஷ் ஷிண்டே தலைமறைவானார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மும்பை காவல்துறை தீவிரமாக தேடிவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாவேஷ் ஷிண்டேவை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பாவேஷ் ஷிண்டே மீது ஏற்கனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.
    • இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் மாயன். இவர் சமீபத்தில் காலமான தே.மு.தி.க. கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் தீவிர ஆதரவாளர். விஜயகாந்த் நடிகராக இருந்த காலம் முதலே அவரது தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.

    மதுரை, செக்காணூரனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இவரிடம் ஏராளமான ஊழியர்கள், பொறியாளர்களாகவும், மேஸ்திரிகளாகவும், கொத்தனாராகவும், சித்தாளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    விஜயகாந்த் பாணியை பின்பற்றி தன்னிடம் பணி யாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.

    பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு தனது ஊழியர்களை சுற்றுலா பேருந்தில் அழைத்துச் சென்று, அங்கு சகல வசதிகளுடன் அவர்களுக்கு விருந்தும் அளிப்பார். இது அவர்களுக்கு மறக்க முடியாத மகிழச்சியான அனுபவத்தை அளிப்பதாக இருந் தது. இதனால் மாயன் மீது அவர்களது ஊழியர்கள் மிகுந்த மரியாதையும், மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக யோசித்த மாயன், தனது ஊழியர்களுக்கு விடுமுறை பரிசளிக்க திட்டமிட்டார். அதே நேரத்தில் அவரது அபிமான நடிகர் விஜயகாந்த் மறைந்ததால் அவரது நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அவரிடம் இருந்து வந்துள்ளது.

    எனவே தனது ஊழியர்களை சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல எண்ணிய மாயன், தன்னிடம் பணியாற்றும் 35 பெண்கள், 40 ஆண்கள் என மொத்தம் 75 பேரை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். இந்த இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    இதுகுறித்து மாயன் கூறுகையில், விமானத்தில் பறக்க வேண்டும் என்பது எனக்கும் நீண்ட கால கனவாக இருந்தது. நான் ஒப்பந்ததாராக தொழில் தொடங்கி வளர்ச்சி அடைந்ததும் 2002-ல் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது. நான் பெற்ற இன்பம் என்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பினேன் என்றார்.

    அவ்வாறு விமானத்தில் அழைத்துச் சென்ற ஊழியர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலமாக விஜயகாந்த் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து மெரீனா பீச், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் சென்றதுடன், உயர்தர நட்சத்திர விடுதியிலும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அங்கே அவர்களுக்கு சுவையான விருந்து அளித்தும் அவர்களை மகிழ்வித்தார்.

    நட்சத்திர விடுதியில் தனது ஊழியர்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பணியாற்று ஊழியர் ஒருவர் கூறுகையில், இது எங்களுக்கு மிகவும் மறக்க முடியாத அற்புதமான அனுபவமாகும். நாங்கள் அனைவரும் இப்போதுதான் முதன் முறையாக விமானத்தில் பறக்கிறோம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் தனது ஊழியர்களுக்கு அவர்களது பணியை பாராட்டி ஆண்டு தோறும் காரை பரிசாக அளிப்பதாக செய்திகள் வருவதுண்டு. நமக்கு அருகிலேயே இப்படி ஒரு அற்புதமான மனிதர் தனது ஊழியர்களுக்கு விமான பயணத்தை அளித்து மகிழ்ச்சி அளித்த சம்பவம் மதுரை மக்களிடையே மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.

    • கடத்தல் கும்பல் சாம்பவ் ஜெயினின் காலில் சுட்டு விட்டு விஸ்வகர்மா சவுக் பகுதி அருகே அவரை தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.
    • தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லூதியானா:

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் சாம்பவ் ஜெயின். தொழில் அதிபரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 பேர் கும்பலால் கடத்தப்பட்டார். அவரது குடும்பத்தினரிடம் கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சாம்பவ் ஜெயினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீவிர விசாரணை நடத்திய போலீசார் கடத்தல் கும்பலை நெருங்கினர். இந்நிலையில் கடத்தல் கும்பல் சாம்பவ் ஜெயினின் காலில் சுட்டு விட்டு விஸ்வகர்மா சவுக் பகுதி அருகே அவரை தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.

    இதையடுத்து கடத்தல் வழக்கில் தொடர்புடைய தேடப்படும் கும்பலை சேர்ந்த 2 பேரை பஞ்சாப் போலீசார் நேற்று இரவு என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த என் கவுண்டரின் போது ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.

    இதுகுறித்து லூதியானா போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் கூறுகையில், லூதியானாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சாம்பவ் ஜெயின் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுபம் என்கிற கோபி மற்றும் சஞ்சீவ் குமார் என்ற சஞ்சு பஹ்மான் ஆகியோர் போலீஸ் தரப்புடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

    இன்ஸ்பெக்டர் குல்வந்த் சிங் தலைமையிலான போலீஸ் குழு அவர்களை துரத்திக் கொண்டிருந்தபோது, லூதியானா மாவட்டத்தில் உள்ள டோராஹா நகரில் உள்ள திப்பா பாலம் அருகே என்கவுண்டர் நடந்தது. இதில் ஏ.எஸ்.ஐ. சுக்தீப் சிங் என்ற போலீஸ்காரரும் பலத்த காயமடைந்தார். இறந்த இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

    தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேபாளி என்ற ஜதின், பிரேம்ஜித், மந்தோஷ், ஆதித்யா மற்றும் மன்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.

    • பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.
    • வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஆத்ரேயபுரம் மண்டலம், உச்சிலியை சேர்ந்தவர் ரித்து சாந்திராஜ். விவசாயி.

    இவரது நிலத்தில் பக்கிஸ் வகையை சேர்ந்த வாழை பயிரிட்டு இருந்தார். இவர் பயிரிட்டு இருந்த வாழை மரத்தில் 6.5 அடி உயரம் உள்ள வாழைத்தார் விளைந்தது.

    பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.

    இதனை நேற்று ராவுல பாலத்தில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தார். வாழைத்தாரை தொழிலதிபர் சீனிவாசரெட்டி என்பவர் அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.

    வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.

    • மீதமுள்ள ரூ.4 லட்சத்தை கவியரசன் திருப்பி கேட்டுள்ளார்.
    • போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசன், தொழில் அதிபர் இவர் தனது நண்பர் தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் என்பவர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த பாலகுமாரன் என்பவரிடம் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    மேலும் ரூ.4 லட்சத்தை கவியரசன் திருப்பி கொடுத்துள்ளார். மீதி தொகையை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

    இந்நிலையில் ஸ்டீபன் செல்வகுமார் தொலைபேசி மூலம் கவியரசனை தஞ்சாவூருக்கு அழைத்துள்ளார்.

    தஞ்சாவூருக்கு சென்ற கவியரசனை பைனான்சியர் பாலகுமாரன் உள்ளிட்டோர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கவியரசனின் மனைவி அனுசியா தேவிக்கு போன் மூலம் வாங்கிய கடன் தொகையை கொடுத்துவிட்டு மீட்டுச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அனுசியா தேவி இது குறித்து திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பைனான்சியர் பாலகுமாரன், அவரது சகோதரர் பாலமுருகன், புதுக்கோட்டை அத்திவெட்டியைச் சேர்ந்த புகழேந்தி, மணிகண்டன், தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் ஆகியோர் தஞ்சாவூர் சென்று கவியரசனை கடத்திச் சென்று புதுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி அய்யனார் கோவில் அருகே அடைத்து வைத்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய புகழேந்தி மற்றும் ஸ்டீபன் செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் தலைம றைவான பைனான்சியர் பாலகுமாரன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தெற்குவாசல் நாடார் உறவின் முறை தலைவர் தொழிலதிபர் உத்தண்டன் காலமானார்/
    • இறுதி சடங்குகள் நாளை நடக்கிறது

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் உறவின் முறை தலைவரும், காமராஜர் அறப்பணிக்குழு தலைவரும், தொழிலதிபருமான கே.உத்தண்டன் இன்று (21-ந் தேதி) காலமானார். அவருக்கு வயது 84.

    மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நாடார் மகாஜன சங்க தலைவர் கரிக்கோல் ராஜ், உறவின் முறை பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள், தெற்குவாசல் ஜமாத் நிர்வாகி கமர்தீன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    மறைந்த உத்தண்டன் இறுதிச் சடங்கு நாளை (22-ந் தேதி) நடை பெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    • சமீபத்தில் சரவணனை தொடர்பு கொண்ட ஒரு குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என்று கூறினர்.
    • நான் வளர்த்த நாய்க்கு ட்டியை ராகுல் காந்தி ஆசையாக பெற்று கொண்டார்.

    கரூர்:

    கரூர் சின்னாண்டாங் கோவில் எல்.பி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

    ரஷ்யாவின் ஜாக் ரசல் டெரியர் வகையை சேர்ந்த இரண்டு ஜோடி நாய்க்குட்டிகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்தார். தற்போது அவை ஈன்று வரும் குட்டிகளை விற்பனை செய்து வருகிறார்.

    இந்த அரிய வகை நாய்கள் குறித்த தகவல்களை அவர் வலைதளங்களில் வெளியிடுவார். அதைப் பார்த்த கேரளா போலீசார் கடந்த ஆண்டு கரூர் வந்து 4 குட்டிகளை வாங்கிச் சென்றனர்.

    இதற்கிடையே சமீபத்தில் சரவணனை தொடர்பு கொண்ட ஒரு குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என்று கூறினர்.

    பின்னர் கடந்த மாதம் கரூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு ராகுலின் உதவியாளர்கள் வந்தனர். பின்னர் நாய் குட்டியின் வளர்ப்பு முறை குறித்து கேட்டு அறிந்தனர். அதன் பின்னர் கேரளா வந்த ராகுல் காந்தியை சரவணன் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அதை தொடர்ந்து தொழிலதிபர் சரவணன் 3 ஜாக் ரசல் டெரியர் வகை நாய் குட்டிகளுடன் அவரை சந்தித்தார்.

    அப்போது மூன்றில் ஒரு குட்டியை ராகுல் காந்தி தேர்வு செய்தார். அந்த நாய்க்குட்டி பிறந்து 40 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. அதனால் மீண்டும் கரூருக்கு கொண்டு வரப்பட்டு 60 நாட்கள் ஆன பின்னர் அதனை டெல்லி க்கு எடுத்துச் சென்று ராகுல் காந்தி வீட்டில் அவரிடம் சரவணன் நேரில் வழங்கினார். இது தொட ர்பாக சரவணன் கூறும்போது,இந்த வகை நாய்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எளிதாக பழகும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் பலரும் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.

    நான் வளர்த்த நாய்க்கு ட்டியை ராகுல் காந்தி ஆசையாக பெற்று கொண்டார். அந்த தருணம் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்றார்.

    • சிவகாளிமுத்து கடந்த 2020-ம் ஆண்டு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
    • தாதா எழிலரசியை போலீ சார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட பிரபல பெண் தாதா எழிலரசி, கடந்த 2019-ம் ஆண்டு வாஞ்சூர் பகுதியில் உள்ள மறைந்த தொழில் அதிபர் ராமுவின் முதல் மனைவி வினோதாவின் மகன்கன் அஜேஸ் ராமு, சிவகாளி முத்து ஆகியோ ருக்கு சொந்தமான மதுபான கடையை கூலிப்படை யினர் மூலம் தாக்குதல் நடத்தியது, அஜேஷ் ராம் மற்றும் சிவகாளி முத்துவை மிரட்டி மதுபான கடையை எழுதி வாங்கியது தொடர்பாக அஜேஷ் ராம் மற்றும் சிவகாளிமுத்து கடந்த 2020-ம் ஆண்டு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

    அதன் பேரில், பெண் தாதா எழிலரசியை போலீ சார் கைது செய்தனர். அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த எழிலரசி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூலிப்படையினரை கொண்டு சிவகாளி முத்து வுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படு கிறது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக சிவகாளிமுத்து அளித்த புகாரை தொடர்ந்து, திருப்பட்டினம் போலீசார், நிரவியில் உள்ள சிவகாளி முத்து வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் தொழிலதிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சகோதரர்களான அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகரை சேர்ந்த தொழிலதிபரும், மருதுசேனை அமைப்பின் நிர்வாகியாகவும் இருந்த குமரவேல் விருதுநகர் பஜாரில் இருந்த தனது அலுவலகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரைக்குடியில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டாபட்டியை சேர்ந்த சிவபிரகாஷ் (வயது24), ஹரிஹரன் (22) ஆகியோரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர்களை விருதுநகர் அழைத்து வந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் ஞானசேகரன்(57), விக்ரமன்(55) ஆகியோர் மதுரை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.அவர்களை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

    இதையடுத்து சகோதரர்களான அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்த அமிர்தசங்கர் என்பவரை விருதுநகர் அழைத்து வந்து விசாரிப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    ×