என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெலிவரி ஊழியர்கள்"

    • அவரது வரவிருக்கும் திருமணம், நிலையான சம்பளம் என பலவற்றை குறிப்பிட்டு குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • டெலிவரி வேலையின்போது லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களை அவர் சந்தித்தார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் தரும் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு உணவு டெலிவரி ஊழியராக மாறியுள்ளார்.

    இதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது அவர் சொந்தமாக கிளவுட் கிச்சன் உணவகம் தொடங்கும் கனவை கொண்டிருந்தார்.

    இதற்காக, தான் பயின்ற பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் என்ன வகையான உணவுக்கு தேவை உள்ளது, நுகர்வோர் என்ன விலையில் அதை வாங்கத் தயாராக உள்ளனர், எந்தெந்த பகுதிகளில் ஆர்டர்கள் அதிகம் வருகின்றன என்பதைத் தானே கண்டுபிடிக்க விரும்பினார். இந்தக் கள ஆராய்ச்சிக்கு டெலிவரி ஊழியராக ஆனார்.

    அவரது வரவிருக்கும் திருமணம், நிலையான சம்பளம் என பலவற்றை குறிப்பிட்டு குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சில நண்பர்கள் அவரை கேலி செய்தனர், மேலும் டெலிவரி வேலையின்போது லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களை அவர் சந்தித்தார்.

    இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும், அவர் பின்வாங்கவில்லை. தனது ஆராய்ச்சியின் மூலம், குறைந்த விலையில் அதிகம் விற்பனையாகும் 12 வகையான உணவுப் பொருட்களை அவர் அடையாளம் கண்டார்.

    இந்த மாதிரியின் மூலம் 3-4 மாதங்களுக்குள் லாபம் ஈட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். அவரது நண்பர் அவர் குறித்து இவ்வாறு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.   

    • தனது சக ஊழியர்களுடன் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தார்.
    • உயிரிழந்த விகல் தனி ஆளாக வேலை செய்து, மனைவி, 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களை காப்பாற்றி வந்தார்.

    அரியானாவில் 30 வயது டெலிவரி ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    டெலிவரி ஊழியர் விகல் சிங், அரியானா மாநிலம் பரிதாபாத்தின் சத்புரா கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் கடையில் டெலிவரி பாய் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில், அவர் தனது சக ஊழியர்களுடன் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார். சக ஊழியர்கள் உடனடியாக அவரை தூக்கி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். முதல் பார்வையில், அவர் மாரடைப்பால் இறந்ததாக நம்பப்படுகிறது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    உயிரிழந்த விகல் தனி ஆளாக வேலை செய்து, மனைவி, 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களை காப்பாற்றி வந்தார்.

    ஊர் மக்களின் போராட்டத்தை அடுத்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்குவதாக நிறுவனம் அறிவித்தது. இது தவிர, இறுதிச் சடங்குகளுக்காக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    • காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர்.
    • இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார்

    பெங்களூருவில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு டெலிவரி ஊழியர் நேற்று இரவு மருத்துவமனை சந்திப்புக்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோதிலும், ஹாரன் அடித்து, அவரை முன்னோக்கி நகர்த்துமாறு கோரினர்.

    அதற்கு அந்த ஊழியர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதாக விளக்கியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர். அந்த நபர்கள், அவரை மீண்டும் மீண்டும் அடித்து உதைத்து வேகமாக ஓடிச் சென்று காரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

    இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. இந்த தாக்குதல் குறித்து அவர் பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்தில் தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மது போதையில் இருந்ததாக கூறி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    டெலிவரி ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • இவ்வளவு தகுதிகள் இருந்தும், டிங்கிற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை.
    • பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, தனது வேலைக்காக 10 நேர்காணல்களில் கலந்து கொண்டார்.

    சீனாவைச் சேர்ந்த டிங், முன்னணி பல்கலைக்கழகங்கள் உட்பட பல பட்டங்களைப் பெற்றவர். பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல்லுயிர் பெருக்கத்தில் முதுகலைப் பட்டம், Peking பல்கலைக்கழகத்தில் ஆற்றல் பொறியியலில் முதுகலைப் பட்டம் மற்றும் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

    இவ்வளவு தகுதிகள் இருந்தும், டிங்கிற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை. அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பு ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். மார்ச் மாதத்தில் அவரது ஒப்பந்தம் காலாவதியானதால், புதிய வேலை எதுவும் கிடைக்காததால், அவர் சிங்கப்பூரில் உணவு டெலிவரி ஊழியர் நாட வேண்டியிருந்தது.

    ஆக்ஸ்போர்டு பட்டதாரியான இவர், பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, தனது வேலைக்காக 10 நேர்காணல்களில் கலந்து கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    டெலிவரி ஊழியராக ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்து வாரத்திற்கு ரூ.40,000 க்கு மேல் டிங் சம்பாதிக்கிறார்.

    "நாம் கடினமாக உழைத்தால், நாம் ஒரு நல்ல வாழ்க்கையை சம்பாதிக்க முடியும். இது ஒரு மோசமான வேலை அல்ல" என்று டிங் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.    

    • டெலிவரி ஊழியர் விஷ்ணுவர்தன் தவறான முகவரியைக் கொடுத்ததற்காக தனது மைத்துனி மீது கோபமடைந்தார்.
    • விரைவில் குணமடையவில்லை என்றால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    பெங்களூருவில் ஜெப்டோ டெலிவரி ஊழியர் வாடிக்கையாளரைத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பெங்களூருவின் பசவேஸ்வரநகர் பகுதியில் மே 21 அன்று நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    வாடிக்கையாளர் ஷஷாங்க் கூறுகையில், தனது வீட்டிற்கு டெலிவரி வந்தபோது, டெலிவரி ஊழியர் விஷ்ணுவர்தன் தவறான முகவரியைக் கொடுத்ததற்காக தனது மைத்துனி மீது கோபமடைந்தார்.

    டெலிவரி ஊழியர் நடத்தையைப் பற்றி தான் கேள்வி எழுப்பியபோது, அவர் தன்னை திட்டி அடித்தார்.

    இந்த தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் செய்ததில் கண்ணுக்குக் கீழே உள்ள எலும்பு உடைந்துள்ளதாகவும், அது விரைவில் குணமடையவில்லை என்றால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ஷஷாங்க் தெரிவித்தார்.

    காவல்துறையில் புகார் அளித்து, இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

    • உலகளவில் இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்
    • முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன

    சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு தனி அணியை சொமேட்டோ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

    வழக்கமான சிவப்பு நிறம் இல்லாமல் இந்த சைவ டெலிவரி அணிக்கு பச்சை நிறத்தில் பேக், சீருடைகள் அளிக்கப்பட்டுள்ளன. செயலியில் Pure Veg Mode மூலம் இதனைப் பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் சைவ உணவுகளைக் கூட, இந்த சைவ அணி டெலிவரி செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை தனது எக்ஸ் பக்கத்தில் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

    அந்த பதிவில், உலகளவில் இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, மற்றும் அவர்களின் உணவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    சொமேட்டோவின் இந்த புதிய நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொமேட்டோ நிறுவனத்தை பலரும் புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன. குறிப்பாக எங்கள் உணவு தீட்டு பட்டு விட்டது என்று அவர்கள் அதற்கு காரணம் கூறினார்கள்.

    இத்தகைய பிரச்சினைகளை களைவதற்கு முயற்சி எடுக்காமல், ஏற்கனவே இருக்கும் பாகுபாடுகளை அதிகரிக்கும் வேலைகளை சொமேட்டோ செய்து வருகிறது என்று நெட்டிசன்கள் இந்த புதிய நடவடிக்கையை விமர்சித்தனர்.

    இந்நிலையில், சைவ உணவு பிரிவுக்கான பச்சை நிற உடை நடைமுறை படுத்தப்படாது, அதற்கு பதிலாக அனைவரும் இனி சிவப்பு நிற சீருடையே அணிவார்கள் என நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

    ஆனால், சைவ உணவுகள் தனியாகவே டெலிவரி செய்யப்படும் எனவும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

    மேலும், சிவப்பு, பச்சை ஆகிய இருவேறு நிற உடையால் சில குடியிருப்புவாசிகள் அவர்களது உரிமையாளர்களின் அதிருப்திக்கு உள்ளாகலாம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதை நாங்கள் புரிந்து கொண்டோம். எங்களால் யாருக்கும் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தீபிந்தர் கோயல் கூறியுள்ளார்.

    • டெலிவரி ஊழியர் சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
    • சதீஸ் குமாரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னையில் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு டெலிவரி செய்வதற்காக சதீஷ் குமார் வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் உள்ள பெண் குளிப்பதை அவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

    இதை பார்த்ததும் அப்பெண் கூச்சலிட, சதீஸ்குமார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசாரிடம் பெண் புகாரளித்ததை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும், சதீஸ் குமாரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×