என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்விக்கி"

    • ஸ்விக்கி மூலம் நான் பன்னீர் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் சிக்கன் டெலிவரி செய்யப்பட்டது.
    • பன்னீரின் சுவையிலும் வித்தியாசம் இருந்ததால் சுதாரித்துக் கொண்டு சோதித்து பார்த்தேன்.

    மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையிலும் கால் பதித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ராஜா ராணி, காலா மற்றும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

    பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் மனதில் பதிந்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

    கடைசியாக அதர்ம கதைகள் திரைப்படத்தில் நடித்து இருந்தார். கெஸ்ட் மற்றும் தி நைட் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

    நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைப்பெற்றது. அவரது சிறு வயது நண்பரான நரனீத் மிஸ்ரா என்பவரை கரம் பிடித்தார்.

    இந்நிலையில், சாக்ஷி அகர்வால் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சாக்ஷி அகர்வால் ஆர்டர் செய்த உணவு காண்பிக்கப்பட்டுள்ளது.

    தான் சைவ உணவை ஆர்டர் செய்ததாகவும், வந்தது சிக்கன் எனவும் ஸ்விக்கி உணவகத்தை டேக் செய்து பகிர்ந்துள்ளார்.

    பதிவில், "சுத்த சைவமான எனக்கு சிக்கன் வந்துள்ளது. என் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழில் பேசி சாக்ஷி அகர்வால் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், " கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்விக்கி மூலம் நான் பன்னீர் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் சிக்கன் டெலிவரி செய்யப்பட்டது. நான் என் வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை. ஆர்டர் செய்த உணவில் மோசமான மணம் வந்ததுடன், பன்னீரின் சுவையிலும் வித்தியாசம் இருந்ததால் சுதாரித்துக் கொண்டு சோதித்து பார்த்தேன். அது சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன்,

    நான் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டு, சைவம் - அசைவம் உண்பவர்களுக்கு இடையேயான பிரச்னையோ, இந்துக்கள் இந்து அல்லாதோருக்கு இடையேயான பிரச்னையோ இல்லை. வாடிக்கையாளருக்கும் மோசமான வாடிக்கையாளர் சேவைக்குமான பிரச்னை.

    உணவு என்பது ஒருவரின் தனியுரிமை, அதில் அசைவம் சாப்பிடாதது என் உரிமை. உணவு என்பது நம் உணர்வு மட்டுமன்றி, நம்பிக்கை, கலாசாரம், மத உணர்வுகளையும் சார்ந்தது என்பதால் இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.

    • ஸ்விக்கி, சொமேட்டோ ஆகியவை முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான உள்ளன.
    • மழை பெய்யும் பொது உணவு டெலிவரி செய்தால் மழை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை அமலுக்கு வந்துள்ளது.

    ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்நிலையில், முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோவில் மழை பெய்யும் பொது உணவு டெலிவரி செய்தால் தனியாக வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

    இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்புகைப்படத்தில் ஸ்விக்கியில் மழை கட்டணம் ரூ.25 என்றும் அதற்கு ஜிஎஸ்டி என்று ரூ.4.50 கட்டணம் என மொத்தமாக ரூ.29.50 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    அந்த பதிவில், "மழை கடவுளான இந்திரனுக்கும் வரி போட ஆரம்பித்துள்ளார்கள். இனிமேல் வெயில் அடித்தால் அதற்கு ஒரு கட்டணம், ஆக்சிஜனுக்கு ஒரு கட்டணம், மூச்சு விடுவதர்க்கு ஒரு கட்டணம் என்று கூட வசூலிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கிண்டலடித்துள்ளார்.

    • சாக்ஷி அகர்வால் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    • வீடியோவில், சாக்ஷி அகர்வால் ஆர்டர் செய்த உணவு காண்பிக்கப்பட்டுள்ளது.

    மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையிலும் கால் பதித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ராஜா ராணி, காலா மற்றும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

    பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் மனதில் பதிந்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

    கடைசியாக அதர்ம கதைகள் திரைப்படத்தில் நடித்து இருந்தார். கெஸ்ட் மற்றும் தி நைட் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

    நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைப்பெற்றது. அவரது சிறு வயது நண்பரான நரனீத் மிஸ்ரா என்பவரை கரம் பிடித்தார்.

    இந்நிலையில், சாக்ஷி அகர்வால் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சாக்ஷி அகர்வால் ஆர்டர் செய்த உணவு காண்பிக்கப்பட்டுள்ளது.

    தான் சைவ உணவை ஆர்டர் செய்ததாகவும், வந்தது சிக்கன் எனவும் ஸ்விக்கி உணவகத்தை டேக் செய்து பகிர்ந்துள்ளார்.

    பதிவில், "சுத்த சைவமான எனக்கு சிக்கன் வந்துள்ளது. என் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர்.
    • இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார்

    பெங்களூருவில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு டெலிவரி ஊழியர் நேற்று இரவு மருத்துவமனை சந்திப்புக்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோதிலும், ஹாரன் அடித்து, அவரை முன்னோக்கி நகர்த்துமாறு கோரினர்.

    அதற்கு அந்த ஊழியர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதாக விளக்கியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர். அந்த நபர்கள், அவரை மீண்டும் மீண்டும் அடித்து உதைத்து வேகமாக ஓடிச் சென்று காரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

    இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. இந்த தாக்குதல் குறித்து அவர் பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்தில் தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மது போதையில் இருந்ததாக கூறி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    டெலிவரி ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • தனது மகளை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு தான் திறமையானவர் என்பதால், எந்த உதவியும் தேவையில்லை என்று அவர் கூறினார்.
    • எத்தனை பேர் மௌனப் போராட்டங்களை புன்னகையுடன் சுமக்கிறார்கள் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்.

    உலகத்திலேயே மிகவும் கஷ்டப்படுவது நாம் தான்.. நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது... என்று பலரும் நொந்துக்கொள்கின்றனர். ஆனால் நம்மை விட வறுமையிலும், ஆதரவு இல்லாமலும் பல பேர் இவ்வுலகில் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது நம்முடைய வலிகளும், வேதனைகளும் சிறியதாக தெரியும். அப்படி ஒரு சம்பவம் தான் இணையதள வாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    குருகிராமைச் சேர்ந்த மயங்க் என்பவர் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர் உடனான உரையாடல் குறித்து லின்க்டுஇன் தளத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், ஸ்விக்கி டெலிவரி பார்ட்னரான பங்கஜ் என்பவர் உணவை டெலிவரி செய்யும் போது அவரது இரண்டு வயது மகளை அழைத்துக்கொண்டு வந்து ஆர்டரை வழங்கினார். அவரிடம் ஏன் குழந்தையுடன் வந்து ஆர்டரை வழங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், மனைவி பிரசவத்தின் போது இறந்துவிட்டதாலும், மூத்த மகன் வகுப்புக்கு சென்று இருப்பதாலும், மகளை தான் மட்டுமே பார்த்துக்கொள்ளவதாக கூறினார். இதனால் மகளை தன்னுடன் அழைத்து வருவதை விட வேறு வழியில்லை என்றும் கூறியதாக பதிவிட்டு இருந்தார்.

    பங்கஜின் கதை இணையத்தில் புயலைக் கிளப்பியது. பலர் அவரது விடாமுயற்சி மற்றும் உழைப்பை பாராட்டினர். அதே நேரத்தில் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவளிக்க முன்வந்தனர். பயனர்கள் அவரது தொடர்பு எண்ணைக் கேட்டு கருத்துகளைப் பதிவு செய்தனர். சிலர் அவருக்கு உதவ ஸ்விக்கியையும் அழைத்தனர். மேலும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு செயல்பாட்டுக் குழு உறுப்பினர் அவ்வாறு செய்ய ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

    பங்கஜின் UPI ஐடியைப் பகிர்ந்து கொண்ட மயங்க், பின்னர் அதை நீக்கிவிட்டு, திருத்திய பதிவை பகிர்ந்தார். அதில், "அவருக்கு இப்போது எந்த நிதி உதவியும் தேவையில்லை. அவருக்கு நிறைய அழைப்புகள் வருவதாகவும், வேலை செய்ய முடியவில்லை என்று பங்கஜ் கூறினார். நண்பர்களே, தயவுசெய்து அவரை அழைக்க வேண்டாம். தனது மகளை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு தான் திறமையானவர் என்பதால், எந்த உதவியும் தேவையில்லை என்று அவர் கூறினார். உதவி உண்மையில் தேவைப்படும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று பங்ஜ் கூறினார். தனது வீட்டில் மகள் வடிவில் "லட்சுமி" இருப்பதாக பங்கஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாக மயங்க் கூறியுள்ளார்.

    இந்த பதிவை கண்ட பயனர்களோ, இது என் இதயத்தைத் தொட்டது. ஒரு தந்தையாக பங்கஜின் பலமும் அன்பும் ஊக்கமளிப்பதை விட அதிகம். எத்தனை பேர் மௌனப் போராட்டங்களை புன்னகையுடன் சுமக்கிறார்கள் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் என்றும் இந்த மனிதருக்கும் அவரது மகளுக்கும் இருக்கும் வைராக்கியம், மன உறுதி மற்றும் தைரியத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன். கடவுள் அவர்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அருளட்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் தெரியப்படுத்துங்கள் என்று பதிவிட்டு பங்கஜை பாராட்டி வருகின்றனர்.

    பங்கஜின் கதை, நாம் பெரும்பாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சேவைகளுக்குப் பின்னால் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத போராட்டங்களின் அப்பட்டமான பிரதிபலிப்பாகும். இது குறிப்பாக ஒற்றைப் பெற்றோரின் போராட்டங்களையும், சமூகத்திலிருந்து முழுமையான பச்சாதாபமின்மையையும், மலிவு மற்றும் நம்பகமான ஆதரவு அமைப்பு இல்லாததையும் காட்டுகிறது.

    உணவு டெலிவரி பார்ட்னர்கள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், பங்கஜ் போன்ற டெலிவரி பார்ட்னர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    • நாடு முழுவதும் உள்ள 26 லட்சத்துக்கும் அதிகமான உணவகங்கள் பிரியாணியை தயாரித்து வழங்குகின்றன.
    • பெங்களூருவில் 24,000 பிரியாணி வழங்கும் உணவகங்கள் உள்ளன.

    புதுடெல்லி:

    அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் எத்தனையோ இருந்தாலும் அனைவரின் தேர்வாக இருப்பதில் கம... கம..., சுடச்சுட பிரியாணி தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் ஆன்லைன் உணவு டெலிவரி முறை வந்த பின்னர் வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து சாப்பிடும் பிரியாணியின் மகத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.

    அந்த வகையில், இந்தியர்கள் பிரியாணியை அதிகம் ஆர்டர் செய்துள்ளதாகவும், கடந்த 12 மாதங்களில் 7.6 கோடி ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளதாகவும் ஸ்விக்கி உணவு விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நாளை (2-ந்தேதி) சர்வதேச பிரியாணி தினத்தை கொண்டாடும் வகையில், ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி, இந்தியர்கள் தங்கள் தளத்தில் பிரியாணியை ஆர்டர் செய்தது தொடர்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அந்த புள்ளி விவரப்படி தங்களுக்கு பிடித்தமான உணவு வகைகளில் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாகவும், பிரியாணியின் மீதான காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்றும் பிரியாணி பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஸ்விக்கி நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள வாடிக்கையாளர்கள் பிரியாணியின் மகத்துவம் குறித்த கருத்துக்களை சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் பரப்பி வருகின்றனர்.

    இது தொடர்பான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் கடந்த ஜனவரி 2023 முதல் ஜூன் 15 வரை செய்யப்பட்ட பிரியாணி ஆர்டர்கள் பற்றிய விபரத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்தரை மாதங்களில் பிரியாணி ஆர்டர்களில் 8.26 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பிரியாணி ஆர்டர்கள் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    பிளாட்பாரங்கள் மற்றும் சாலையோர கடைகள் மூலம் பிரியாணி வழங்கும் ஒரு லட்சம் உணவகங்கள், 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் இந்த பிரியாணி உணவில் தனித்துவம் பெற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன. நறுமணமுள்ள லக்னோவி பிரியாணி முதல் காரமான ஐதராபாத் தம் பிரியாணி மற்றும் சுவையான கொல்கத்தா பிரியாணி முதல் மணமிக்க மலபார் பிரியாணி வரை, நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களுக்கு பிரியாணி உணவுக்காக நிமிடத்திற்கு 219 ஆர்டர்களை வழங்குகின்றனர்.

    பிரியாணி விற்பனையான உணவகங்கள் அதிகம் உள்ள நகரங்களைப் பொறுத்தவரை ஸ்விக்கியின் ஆய்வில், நாடு முழுவதும் உள்ள 26 லட்சத்துக்கும் அதிகமான உணவகங்கள் பிரியாணியை தயாரித்து வழங்குகின்றன. 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் பிரியாணி உணவை மட்டுமே தயாரித்து வழங்குவதில் தங்களது பெயரை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது.

    இருப்பினும், பெங்களூருவில் 24,000 பிரியாணி வழங்கும் உணவகங்களும், அதற்கு அடுத்தபடியாக மும்பையில் 22,000 உணவகங்களும், டெல்லியில் 20,000 உணவகங்களும் உள்ளன. பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை என்று வரும்போது ஐதராபாத்தில் உள்ள ஸ்விக்கி நிறுவனம் 7.2 மில்லியன் ஆர்டர்களை அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளது.

    பெங்களூரு வாடிக்கையாளர்கள் 5 மில்லியன் ஆர்டர்களை செய்து தொடர்ந்து 2-வது இடத்திலும், அதற்கு அடுத்தபடியாக சென்னை வாசிகள் 3 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களை பிரியாணிக்காக செய்து 3-வது இடத்தில் உள்ளனர். அதிலும் சுமார் 85 வகை பிரியாணி வகைகளுடன், 35 மில்லியன் ஆர்டர்களுடன் ஐதராபாத் பிரியாணி சாதனை படைத்துள்ளது.

    இதற்கிடையே சென்னையை சேர்ந்த பிரியாணி பிரியர் ஒருவர் ஒரே நேரத்தில் ஸ்விக்கி நிறுவனத்தில் ரூ.31 ஆயிரத்து 532-க்கு ஆர்டர் செய்து பிரியாணியின் மீதான பிரியத்தை உலகுக்கு வெளிக்காட்டி உள்ளார்.

    • செல்போனில் பேசிக் கொண்டே வேகமாக செல்லக்கூடாது.
    • விதிமுறைகளை மீறினால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 6 மாதங்களில் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

    இருப்பினும் சென்னை போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதன்படி முக்கிய இடங்களில் போக்குவரத்து உதவி கமிஷனர்களின் தலைமையில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ போன்றவை ஓட்டுனர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    600 உணவு விநியோக ஓட்டுனர்களுக்கு முறையற்ற வகையில் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அப்போது உணவு டெலிவரி ஊழியர்கள் ஒரு வழிபாதையில் பயணம் செய்யக்கூடாது, செல்போனில் பேசிக் கொண்டே வேகமாக செல்லக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்து போலீசார் கடிவாளம் போட்டுள்ளனர்.

    இந்த விதிமுறைகளை மீறினால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்யும் போது ஒரு ஆர்டருக்கு 3 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிப்பதாக சில வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
    • பயனர்கள் சிலர் தங்களது ஆர்டருக்கான பில் தொகையை பதிவிட்டு அதில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டினர்.

    சமீபகாலமாக ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்யும் போது ஒரு ஆர்டருக்கு 3 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிப்பதாக சில வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது 'எக்ஸ்' தளத்தில் ஒரு விவாதமாகவே மாறியது. பயனர்கள் சிலர் தங்களது ஆர்டருக்கான பில் தொகையை பதிவிட்டு அதில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டினர்.

    உணவு தொகையுடன் ஆர்டர் பேக்கிங் கட்டணம், டெலிவரி கட்டணம் மற்றும் வரிகள் அனைத்தையும் சேர்த்த பிறகும் இறுதி பில் தொகையில் ரூ.3 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக கிங்ஸ்லி என்ற பயனர் குறிப்பிட்டிருந்தார். இதே போல மேலும் சில வாடிக்கையாளர்களும் வலைதள பக்கங்களில் புகார் கூறியதை தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனம் இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், இது ஒரு காட்சி பிழையாக இருக்கலாம். பயனர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது என கூறி உள்ளது.

    • இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்தது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • டி.வி.முன்பு ஒரு தட்டில் உருளைக்கிழங்கில் ஊதுபத்திகளை கொலுத்தி வைத்துள்ள காட்சி பயனர்களை கவர்ந்தது.

    இந்திய கிரிக்கெட் அணி 3-வது முறையாக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என நாடு முழுவதும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்தது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

    தானேயை சேர்ந்த அந்த ரசிகர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரை வழங்கிய நபர் இதுதொடர்பாக ஒரு படத்தை ஸ்விக்கி தளத்தில் பதிவிட்டார். அதில் இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது டி.வி.முன்பு ஒரு தட்டில் உருளைக்கிழங்கில் ஊதுபத்திகளை கொலுத்தி வைத்துள்ள காட்சி பயனர்களை கவர்ந்தது.

    அதனுடான பதிவில், நாங்கள் உங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இச்சேவையில் முன்னணியில் உள்ளன
    • இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியின் போது மிக அதிகளவில் ஆர்டர்கள் செய்துள்ளனர்

    கடந்த சில வருடங்களாக உணவிற்காக வசிப்பிடத்தை விட்டு வெளியே சென்று உணவகங்களை தேடுவதற்கு பதிலாக இணையதளத்தில் உள்ள செயலிகளின் மூலம் விருப்பமான உணவகங்களிலிருந்து விலைகளை ஒப்பிட்டு பார்த்து தங்களுக்கு பிடித்தமான உணவுகளை இருக்கும் இடத்திற்கே தருவிப்பது இந்தியர்களிடையே பிரபலமாகி வருகிறது.

    சொமேட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையில் முன்னணியில் உள்ளன.

    ஆண்டுதோறும், ஸ்விக்கி நிறுவனம் தங்கள் செயலியின் மூலம் பெரும்பான்மையானோர் தருவிக்கும் உணவு வகைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

    இதில் தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக முதலிடத்தை "பிரியாணி" பிடித்துள்ளது.


    இந்த தரவுகளின்படி ஒவ்வொரு 2.5 வினாடிகளில் இந்தியர்களால் ஒரு பிரியாணி ஆர்டர் செய்யப்படுகிறது. அதிலும் சைவ பிரியாணியோடு ஒப்பிட்டால் சிக்கன் பிரியாணியின் விகிதாசாரம் 1 : 5.5 எனும் அளவில் உள்ளது.

    ஸ்விக்கி செயலியின் தளத்தில் 40,30,827 முறை "பிரியாணி" அதிகம் தேடப்பட்ட சொல்லாக உள்ளது. ஐதராபாத் நகரில்தான் பிரியாணி ஆர்டர்கள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. அந்நகரத்தில் ஒரே நபர் இந்த ஒரே வருடத்தில் 1633 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளார்.

    ஐசிசி 2023 ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது சண்டிகர் நகரில் ஒரு குடும்பம் ஒரே முறையில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளது. விறுவிறுப்பான அப்போட்டி நடைபெற்ற தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 250 ஆர்டர்கள் எனும் விகிதத்தில் மக்கள் ஸ்விக்கியில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.

    ஸ்விக்கியின் தரவுகளின்படி கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரூ மக்கள்தான் அதிகளவில் கேக் ஆர்டர் செய்துள்ளனர். 8.5 மில்லியன் ஆர்டர்கள் செய்ததால் இந்நகர் "கேக் தலைநகரம்" (cake capital) என அழைக்கப்படுகிறது.

    பிப்ரவரி 14, வேலண்டைன் தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 271 கேக்குகள் எனும் விகிதத்தில் ஆர்டர்கள் குவிந்தன. நாக்பூர் நகரில் ஒரு உணவு விரும்பி, ஒரே நாளில் 92 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளார்.


    பிரியாணியையும், கேக்குகளையும் தவிர, மும்பை நகரை சேர்ந்த ஒருவர் 42.3 லட்சம் பெருமான உணவு ஆர்டர்களை செய்திருந்தது இந்த தரவுகளில் உள்ள வியக்க வைக்கும் மற்றொரு தகவல்.

    அதே போல் ஒடிஸா மாநில தலைநகர் புபனேஸ்வரில் ஒரு வீட்டில் ஒரே நாளில் 207 பீஸாக்களை ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உணவு நிறுவனங்களின் செயலிகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
    • தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வருகின்றனர்.

    கடந்த சில வருடங்களாக உணவிற்காக வசிப்பிடத்தை விட்டு வெளியே சென்று உணவகங்களை தேடுவதற்கு பதிலாக இணையதளத்தில் உள்ள செயலிகளின் மூலம் விருப்பமான உணவகங்களிலிருந்து விலைகளை ஒப்பிட்டு பார்த்து தங்களுக்கு பிடித்தமான உணவுகளை இருக்கும் இடத்திற்கே தருவிப்பது இந்தியர்களிடையே பிரபலமாகி வருகிறது.

    சமீபகாலமாக ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வருகின்றனர்.


    இந்தாண்டில் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் ரூ.31748க்கு ஜூஸ், பிஸ்கட், சிப்ஸ் உள்ளிட்டவற்றை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் வாங்கியுள்ளார்.

    இதே போல் இந்தாண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் வெங்காயம், ஆணுறை, வாழைப்பழம், சிப்ஸ் உள்ளிட்டவை அதிகமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்டுள்ளன.

    • வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்ததால் 200 கிராம் கேக் மட்டும் ஆர்டர் செய்துள்ளார்.
    • பதிவு இன்ஸ்டாகிராமில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது.

    உணவு பொருட்கள் முதல் பிறந்தநாள் கேக் வரை பல பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு பெண் தனது சகோதரி குழந்தையின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்காக ஸ்விக்கியில் கேக் ஆர்டர் செய்துள்ளார்.

    அப்போது வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்ததால் 200 கிராம் கேக் மட்டும் ஆர்டர் செய்துள்ளார். அந்த கேக்கில் அதிக வாசகம் எதுவும் வேண்டாம் என கருதிய அவர், தனது ஆர்டருடன் 'ஹேப்பி பர்த்டே ஸ்டிக்' சேர்த்து அனுப்பவும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் பேக்கரி ஊழியர்கள், இதை தவறாக புரிந்து கொண்டு அவருக்கு ஆர்டர் கேக்கில் 'ஹேப்பி பர்த்டே ஸ்டிக்' என எழுதி கொடுத்துள்ளனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கேக்கின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, நாங்கள் ஆச்சரியம் கொடுக்க நினைத்தோம், ஆனால் ஸ்விக்கி எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்தது என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். அவரது இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது.



    ×