என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு டெலிவரி"

    • குடிபோதையில் இருந்த ரிஷி வரமறுத்து அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
    • கேமராவில் பதிவான காட்சியில் உணவு டெலிவரி பார்ட்னரும் உள்ளார்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு அருந்தும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. இதனால் வேலையில்லாமலும், பகுதி நேரமாக பணிபுரிய விரும்பும் பலருக்கு ஆன்லைன் உணவு டெலிவரி வேலை பயனுள்ளதாக உள்ளது.

    இதுவே சில நேரங்களில் உணவு டெலிவரி செய்பவருக்கும், ஆர்டர் செய்பவருக்கும் தொந்தரவாகவே அமைந்துள்ளது. பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் சாலைகளில் வேகமாக செல்லும் போது விபத்துகளிலும் சிக்குகிறார்கள். மேலும் டெலிவரி செய்த உணவுக்கு உரிய பணம் கிடைக்காமலும் ஊழியர்கள் சிரமம் படுகிறார்கள். அதுபோல் ஒரு சம்பவம் ஒன்றுதான் டெல்லியில் நடந்துள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...

    டெல்லியின் நரேலாவில் குடிபோதையில் இருந்த ஆசிரியர் ஒருவர் டெலிவரி செய்யப்பட்ட உணவுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசியும் உள்ளார். இதனால் செய்வதறியாது இருந்த உணவு டெலிவரி பார்ட்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்தபோது அவர் குடிபோதையில் இருந்ததை தொடர்ந்து அவரை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். ஆனால் குடிபோதையில் இருந்த ரிஷி வரமறுத்து அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

    இதனால் ரிஷியை போலீசார் வலுக்கட்டாயாக வீட்டில் இருந்து அழைத்து செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் கேமராவில் பதிவான காட்சியில் உணவு டெலிவரி பார்ட்னரும் உள்ளார்.

    காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ரிஷி, உணவு டெலிவரி பார்ட்னருக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து அவருக்கு போலீசார் உரிய அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

    உணவு டெலிவரி பார்ட்னருக்கு நிறைய ஆர்டர்கள் இருந்ததால் அவர் புகார் அளிக்காததால் ரிஷியை போலீசார் விடுவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 2 ஆண்டுகளில் 600 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • Zomato பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.10 ஆக உள்ளது.

    முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி (Swiggy), தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 17 சதவீதம் அதிகரித்து ரூ.12 இல் இருந்து ரூ.14 ஆக உயர்த்தியுள்ளது.

    அதிக தேவை உள்ள பகுதிகளில் இந்த அதிகரிப்பு சோதனை அடிப்படையில் இந்த பயன்பாட்டு கட்டண உயர்வு செயல்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பண்டிகைக் காலத்தில் ஆர்டர்கள் அதிகரித்ததால் இந்த தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.

    2023 ஆம் ஆண்டில் வெறும் ரூ.2 ஆக இருந்த இந்த பிளாட்ஃபார்ம் கட்டணம், 2 ஆண்டுகளில் 600 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், Zomato பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.10 ஆக உள்ளது.  

    • இதற்காக, 'ஒன்லி' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி தளங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

    2015 முதல் இயங்கி வரும் பிரபல பைக் டாக்ஸி தளமான ரேபிடோ, ஆனலைன் உணவு டெலிவரி துறையில் நுழைந்துள்ளது.

    இதற்காக, 'ஒன்லி' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த சேவைகள் தற்போது பெங்களூருவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கின்றன.

    ரேபிடோ வாவ், ஈட் ஃபிட், கிறிஸ்பி க்ரீம் போன்ற பிராண்டுகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    தற்போது, ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி தளங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

    இந்த சூழலில், ரேபிடோ இந்த துறையில் அவற்றுக்கு கடுமையான போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

    உணவகங்களிலிருந்து 8-15 சதவீத கமிஷனை மட்டுமே வசூலிப்பதன் மூலம் இந்தத் துறையில் சிறந்து விளங்க ரேபிடோ நம்புகிறது.

    வருங்காலங்களில் இந்த ஒன்லி உணவு டெலிவரி சேவை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது. 

    • தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள டெலிவரி ஊழியர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.
    • ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    தமிழகத்தில் 2,000 டெலிவரி ஊழியர்கள் மின்சார இருசக்கர வாகனம் (e scooter) வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்குவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. டெலிவரி ஊழியர்கள் மானியம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.20,000 மானியம்: முக்கிய அம்சங்கள்

    தமிழ்நாடு அரசு, இணையவழி சேவைகளில் பணிபுரியும் கிக் தொழிலாளர்களுக்காக (gig workers) ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், டெலிவரி ஊழியர்கள் புதிய மின்சார ஸ்கூட்டர் (e-scooter) வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். இந்த மானியத்திற்காக அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    இந்த மானியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

    யாருக்கு மானியம்?

    தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள டெலிவரி ஊழியர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும். இது Zomato, Swiggy, Zepto, Amazon, Flipkart போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்குப் பொருந்தும்.

    பயனாளிகளின் எண்ணிக்கை

    ஆரம்பகட்டமாக, இந்தத் திட்டத்தின் கீழ் 2,000 டெலிவரி ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

    மானியம் எவ்வளவு?

    ஒரு மின்சார ஸ்கூட்டர் வாங்க, தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.

    எப்படி விண்ணப்பிப்பது?

    இந்த மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த கூடுதல் தகவல்களை நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnuwwb.tn.gov.in -ல் காணலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    • ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
    • இத்திட்டத்தின் மூலம் டெலிவரி ஊழியர்களுக்கு வேலையில் மேலும் எளிமையாக செயல்பட உதவும்.

    தமிழகத்தில் 2,000 உணவு டெலிவரி ஊழியர்கள் மின்சார இருசக்கர வாகனம் (e scooter) வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்குவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    அமேசான், பிளிப்கார்ட், சொமட்டோ, மீசோ போன்ற ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

    நலவாரியத்தில் பதிவு பெற்ற டெலிவரி ஓட்டுநர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து மானியம் பெறலாம்.

    இத்திட்டத்தின் மூலம் டெலிவரி ஊழியர்களுக்கு வேலையில் மேலும் எளிமையாக செயல்பட உதவும். டெலிவரி ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

    • கமிஷன் தொகையை குறைப்பது மற்றும் மறைமுக கட்டணத்தை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
    • ஓட்டல் உரிமையாளர்கள் வைக்கும் கோரிக்கையை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் ஏற்க மறுத்து விட்டன.

    நாமக்கல் மாநகரில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு உணவகத்திற்கும் ஏற்ப கமிஷனில் வேறுபாடு வைத்து உள்ளனர். மேலும் விளம்பர கட்டணம், மறைமுக கட்டணம் போன்றவற்றால் வருமானத்தில் 50 சதவீதம் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் உணவு வழங்காமல் நிறுத்தி வைக்க இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

    இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் நேற்று நாமக்கல் நகர ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கமிஷன் தொகையை குறைப்பது மற்றும் மறைமுக கட்டணத்தை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஆனால் ஓட்டல் உரிமையாளர்கள் வைக்கும் கோரிக்கையை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் ஏற்க மறுத்து விட்டன. எனவே திட்டமிட்டபடி இன்று முதல் நாமக்கல் மாநகரில் கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது எனவும், வாடிக்கையாளர்கள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஓட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னையில் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சென்னையிலும், ஸ்விகி, ஜொமோட்டா மூலம் உணவு வழங்கப்படாது என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் ரவி தெரிவித்துள்ளார். 

    • தனது மகளை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு தான் திறமையானவர் என்பதால், எந்த உதவியும் தேவையில்லை என்று அவர் கூறினார்.
    • எத்தனை பேர் மௌனப் போராட்டங்களை புன்னகையுடன் சுமக்கிறார்கள் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்.

    உலகத்திலேயே மிகவும் கஷ்டப்படுவது நாம் தான்.. நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது... என்று பலரும் நொந்துக்கொள்கின்றனர். ஆனால் நம்மை விட வறுமையிலும், ஆதரவு இல்லாமலும் பல பேர் இவ்வுலகில் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது நம்முடைய வலிகளும், வேதனைகளும் சிறியதாக தெரியும். அப்படி ஒரு சம்பவம் தான் இணையதள வாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    குருகிராமைச் சேர்ந்த மயங்க் என்பவர் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர் உடனான உரையாடல் குறித்து லின்க்டுஇன் தளத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், ஸ்விக்கி டெலிவரி பார்ட்னரான பங்கஜ் என்பவர் உணவை டெலிவரி செய்யும் போது அவரது இரண்டு வயது மகளை அழைத்துக்கொண்டு வந்து ஆர்டரை வழங்கினார். அவரிடம் ஏன் குழந்தையுடன் வந்து ஆர்டரை வழங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், மனைவி பிரசவத்தின் போது இறந்துவிட்டதாலும், மூத்த மகன் வகுப்புக்கு சென்று இருப்பதாலும், மகளை தான் மட்டுமே பார்த்துக்கொள்ளவதாக கூறினார். இதனால் மகளை தன்னுடன் அழைத்து வருவதை விட வேறு வழியில்லை என்றும் கூறியதாக பதிவிட்டு இருந்தார்.

    பங்கஜின் கதை இணையத்தில் புயலைக் கிளப்பியது. பலர் அவரது விடாமுயற்சி மற்றும் உழைப்பை பாராட்டினர். அதே நேரத்தில் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவளிக்க முன்வந்தனர். பயனர்கள் அவரது தொடர்பு எண்ணைக் கேட்டு கருத்துகளைப் பதிவு செய்தனர். சிலர் அவருக்கு உதவ ஸ்விக்கியையும் அழைத்தனர். மேலும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு செயல்பாட்டுக் குழு உறுப்பினர் அவ்வாறு செய்ய ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

    பங்கஜின் UPI ஐடியைப் பகிர்ந்து கொண்ட மயங்க், பின்னர் அதை நீக்கிவிட்டு, திருத்திய பதிவை பகிர்ந்தார். அதில், "அவருக்கு இப்போது எந்த நிதி உதவியும் தேவையில்லை. அவருக்கு நிறைய அழைப்புகள் வருவதாகவும், வேலை செய்ய முடியவில்லை என்று பங்கஜ் கூறினார். நண்பர்களே, தயவுசெய்து அவரை அழைக்க வேண்டாம். தனது மகளை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு தான் திறமையானவர் என்பதால், எந்த உதவியும் தேவையில்லை என்று அவர் கூறினார். உதவி உண்மையில் தேவைப்படும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று பங்ஜ் கூறினார். தனது வீட்டில் மகள் வடிவில் "லட்சுமி" இருப்பதாக பங்கஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாக மயங்க் கூறியுள்ளார்.

    இந்த பதிவை கண்ட பயனர்களோ, இது என் இதயத்தைத் தொட்டது. ஒரு தந்தையாக பங்கஜின் பலமும் அன்பும் ஊக்கமளிப்பதை விட அதிகம். எத்தனை பேர் மௌனப் போராட்டங்களை புன்னகையுடன் சுமக்கிறார்கள் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் என்றும் இந்த மனிதருக்கும் அவரது மகளுக்கும் இருக்கும் வைராக்கியம், மன உறுதி மற்றும் தைரியத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன். கடவுள் அவர்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அருளட்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் தெரியப்படுத்துங்கள் என்று பதிவிட்டு பங்கஜை பாராட்டி வருகின்றனர்.

    பங்கஜின் கதை, நாம் பெரும்பாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சேவைகளுக்குப் பின்னால் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத போராட்டங்களின் அப்பட்டமான பிரதிபலிப்பாகும். இது குறிப்பாக ஒற்றைப் பெற்றோரின் போராட்டங்களையும், சமூகத்திலிருந்து முழுமையான பச்சாதாபமின்மையையும், மலிவு மற்றும் நம்பகமான ஆதரவு அமைப்பு இல்லாததையும் காட்டுகிறது.

    உணவு டெலிவரி பார்ட்னர்கள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், பங்கஜ் போன்ற டெலிவரி பார்ட்னர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    • சென்னையில் சாலையோரங்களில் 24 மணி நேர ஏசி ஓய்வறை ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    • அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்க திட்டம்.

    சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்களுக்காக சாலையோரங்களில் 24 மணி நேர ஏசி ஓய்வறை ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏசி ஓய்வறை அமைக்க திட்டமிட்டுள்ளது.

    கழிவறை, குடிநீர், ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை அடங்கிய அறை மூலம் பெண் தொழிலாளர்கள் அதிக பயனடைவர்.

    • ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.
    • தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

    சென்னை:

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்று பணத்தை பறிக்கும் வட மாநிலத்தவர்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி பொதுமக்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் வடமாநில வாலிபர்கள் உங்கள் செல்போன் எண்ணில் இருந்து உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வலை விரிக்கிறார்கள்.

    எதிர்முனையில் பேசும் பொதுமக்கள், நாங்கள் உணவு ஆர்டர் செய்யவில்லையே என்று கூறியதும்... என்ன சார் இப்படி சொல்றீங்க... உங்கள் செல்போனில் இருந்துதானே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இப்படி சொன்னால் எப்படி? என்று எதிர்கேள்வி கேட்கும் வடமாநில வாலிபர் சரி... உணவை நான் கேன்சல் செய்து கொள்கிறேன். உங்கள் நம்பருக்கு ஓ.டி.பி. வரும் அதை சொல்லுங்கள் என்பார்.

    அதேபோன்று சம்பந்தப்பட்ட நபரின் சொல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்ததும் எதிர்முனையில் பேசிக் கொண்டு இருக்கும் வட மாநில வாலிபர் அதனை கூறுமாறு சொல்வார்.

    ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.

    இப்படி ரூ.20 ஆயிரம் ரூபாயை ஒருவர் பறி கொடுத்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பொது மக்களை உஷார்படுத்தி உள்ளனர். உங்கள் செல்போனுக்கு இதுபோன்று யாராவது தொடர்பு கொண்டு பேசினால் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்பை துண்டித்து விடுங்கள்.

    அதுதான் நல்லது. இல்லையென்றால் நீங்கள் பணத்தை இழப்பது உறுதி என்று போலீசார் தெரிவித்தனர். எப்போதுமே தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

    • 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார்.
    • ஏழுமலை ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (21). இவர் ஈரோட்டில் உணவு சப்ளை செய்யும் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.

    அப்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனை லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வரும் 17 வயது மாணவியுடன் ஏழுமலைக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் ஏழுமலை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஏழுமலை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் 2 பேரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து ஏழுமலை கைது செய்யப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டார்.

    • ஸ்விகி உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.
    • ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் மாவட்டங்களை சேர்ந்த ஸ்விகி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    உணவு மற்றும் இதர பொருட்கள் வினியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு டெலிவரி சேவை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    ஸ்விகி சேவையில் புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஸ்லாட் முறையை திரும்ப பெற்று, ஏற்கனவே வழங்கிவந்த "டர்ன் ஒவர்" தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஸ்விகி உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஐ.பி.எல். ஒட்டுமொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    • ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக, 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    2 மாத காலமாக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு போட்டிகளும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருந்தது. போட்டிகளை வீட்டில் இருந்தே டி.வி., செல்போன்கள், இணையதளங்கள் மூலம் கண்டுகளித்த ரசிகர்கள், தங்களை உற்சாகப்படுத்தி கொள்ள பல்வேறு உணவு பொருட்களையும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி உள்ளனர்.

    போட்டிகளை பிரியாணி விருந்துடனும், பல்வேறு சுவையான உணவு பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி சுவைத்தும், திருவிழா போல கொண்டாடியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான ஸ்விகி டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

    அதில், ஐ.பி.எல். ஒட்டுமொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அதாவது நிமிடத்திற்கு 212 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக, 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடம் பிடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த சீசனில் கொல்கத்தாவில் ஒருவர் ஆர்டர் செய்த உணவை 77 வினாடிகளுக்குள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரங்களை பொறுத்தவரை பெங்களூருவில் தான் அதிகளவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி மட்டுமல்லாமல் சமோசா, ஷாக்கர், தாகி, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களும் ஸ்விகியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்விகி இன்ஸ்டா மார்ர்ட் மூலம் 2,423 காண்டங்களும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 3,641 யூனிட் தாகி மற்றும் 720 யூனிட் ஷக்கர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு ரசிகர் மட்டும் 701 சமோசாக்களை ஆர்டர் செய்துள்ளார்.

    இது, இந்த சீசனில் தனி நபர் ஒருவர் அதிகம் ஆர்டர் செய்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஸ்விகியின் உணவு வினியோகிப்பாளர்கள் மொத்தம் 33 கோடி கிலோ மீட்டர்கள் இந்த சீசன் முழுவதும் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×