search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jailed"

    • பவானி-சித்தோடு பகுதியில் திருட்டு வழக்கில் கைதான 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கபட்டனர்
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

     பவானி,

    பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பவானி பஸ் நிலையம் அருகில் உள்ள காவேரி ஆற்று புதிய பாலம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இரு வரும் முன்னுக்கு முரணாக பதில் அளித்த நிலையில் அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கரூர் வேலா யுதம்பாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த அகமது என்கிற அம்மானுல்லா (22) மற்றும் கார்த்தி என்கிற கார்த்திகேயன் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் 15-தேதி இரவு காடையம்பட்டி பிரிவில் வரதநல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளி கணேசமூர்த்தி என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றது தெரியவந்தது.

    அதேபோல் சித்தோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கோவிந்தராஜ் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் திருடியதை ஒப்பு கொண்டு உள்ளனர். அகமது என்கிற அம்மானு ல்லா அக்கா நிஷா என்பவரிடம் 08 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டு அவர் கோவை பெண்கள் மத்திய சிறையில் உள்ளார். மீதமுள்ள 17 பவுன் நகைகளை ஊராட்சி கோட்டை மலை அடிவா ரத்தில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைத்திருந்ததை தொடர்ந்து பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று நகைகளை மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் பவானி குற்றவி யல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் கோபி மாவட்ட சிறைச்சா லையில் அடைத்து உள்ளனர். இவர்கள் இருவருக்கும் கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

    • 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • பின்னர் போலீசார் கைதான 3 பேரையும் பெருந்துறை கிளை சிறையில்அடைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சென்னிமலை சாலை விக்னேஷ் நகரை சேர்ந்தவர் சேகர். இவர் திருப்பூரில் சொந்தமாக நூல் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று விட்டார். அப்போது நள்ளிரவில் இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.1.30 லட்சம் பணத்தை திருடி சென்றனர்.

    இதே போல் பக்கத்து வீட்டை சேர்ந்த துர்க்கை ராஜ்-மீனாட்சி ஆகியோரும் வெளியூர் சென்று இருந்தனர். அப்போது அவர்களது வீட்டிற்குள்ளும் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றனர்.

    இது குறித்து தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது 2 மர்ம நபர்கள் முகத்தை மறைத்தப்படி வீட்டிற்குள் புகுந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்துறையில் இருந்து வெள்ளோடு செல்லும் சாலையில் பெருந்துறை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் பேசினர்.

    தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணையில் அவர்கள் பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் பகுதியில் தொடர் திருட்டு மற்றும் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டதும், நூல் கம்பெனி உரிமையாளர் சேகர், துர்க்கை ராஜ்-மீனாட்சி ஆகியோர் வீட்டில் நடந்த திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் திருவாரூரை சேர்ந்த சதீஷ், தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிதுரை, நெல்லையை சேர்ந்த சுபாஷ் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் இவர்களது கூட்டாளிகள் நெல்லையை சேர்ந்த விக்னேஷ், திருவண்ணாமலையை சேர்ந்த ராமஜெயம் ஆகிய 2 பேர் ஏற்கனவே வேறு ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். பின்னர் போலீசார் கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறை யில்அடைத்தனர்.

    • பண்டக சாலையில் துணை விதிகளுக்கு முரணாக சுமார் ரூ.57 லட்சம் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.
    • ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான பண்டகசாலை சென்னிமலை அருகே எம்.பி.என் காலனியில் உள்ளது. இது ஈரோடு சரக துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

    இந்த பண்டக சாலையில் கடந்த 1.4.2015 முதல் 31.3.2016 வரை நடைபெற்ற வரவு செலவுகளின் உண்மை தன்மையினை கண்டறியும் வகையில் கணக்கு தணிக்கை செய்ய ப்பட்டது. இந்த தணிக்கை யில் அனைத்து வகை சங்க பதிவேடு ஆதாரங்கள் குறித்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது 2015-2016-ம் ஆண்டில் பண்டக சாலையில் துணை விதிகளுக்கு முரணாக சுமார் ரூ.57 லட்சம் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் நர்மதா மூலம் சென்னையில் உள்ள வணிக குற்றப்பிரிவு (புலனாய்வு பிரிவு) கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பண்டக சாலையில் ஸ்டோர் மேலாளராக பணிபுரிந்த சென்னிமலை அருகே உள்ள எம்.பி.என் காலனி சரவணபுரியை சேர்ந்த கணேசன் (55), பண்டக சாலையின் தலைவராக இருந்த முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியை சேர்ந்த தேவராஜ் ( 61) மற்றும் விற்பனையாளராக இருந்த ரவிச்சந்திரன் (61) ஆகிய 3 பேர் ரூ.57 லட்சத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.

    அதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை தாக்கிய லாரி டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் புறநகர் பகுதியான அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சிவசாமி (வயது 63). இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் 3 ரோடு மேம்பாலத்தின் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து தொழுதூர் நோக்கி ஒரு லாரி சென்றது. லாரி வருவதற்குள் சிவசாமி சாலையை கடந்து விட்டார்.

    ஆனாலும் லாரியின் டிரைவரான ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த ராஜூ மகன் சவுந்திரமோகன் (28) லாரியை நிறுத்தி, கீழே இறங்கி வந்து சிவசாமியிடம், லாரி வருவது உனது கண்ணுக்கு தெரியவில்லையா? என்று கேட்டு, தகாத வார்த்தையால் திட்டி, காலணியால் (செருப்பு) அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவசாமி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்திர மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


    • முட்டைக்கோஸ் லோடு ஏற்றி வந்த சரக்கு வாக னத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதி யில் குட்கா மறறும் போதை பொருட்கள் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் புளியம்பட்டி அடுத்து நால்ரோடு டானா புதூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக முட்டைக்கோஸ் லோடு ஏற்றி வந்த சரக்கு வாக னத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் முட்டைக்கோஸ் மூட்டை க்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததும் அதை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த போதை பொருட்கள் மற்றும் அதை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்த முபீஸ் (20), தாளவாடி பயஸ் பாஷா (30), சத்திய மங்கலம் சஞ்சய் ராஜ் (30) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் குட்கா உள்ளிட்ட புகை யிலை போதை பொரு ட்களை கர்நாடகா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இந்த போதை பொருட்களின் மதிப்பு 2.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரி வித்தனர்.

    இதையடுத்து போதை பொருட்களை கடத்தி வந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை போலீ சார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தா.பழூர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • காயமடைந்த பார்த்திபனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன் கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பார்த்திபன் (வயது 34), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர்கள் 2 பேரின் குடும்பத்துக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு பார்த்திபனை செல்வராஜ் மகன் சவுந்தரராஜன் (25) தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். மேலும், அவரது தம்பி செல்வகுமார் (19) தான் வைத்திருந்த கத்தியால் பார்த்திபனை குத்தியுள்ளார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தகராறை விலக்கி விட்டு காயமடைந்த பார்த்திபனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கத்தியால் குத்தியதாக செல்வகுமார் மற்றும் சவுந்தரராஜனை கைது செய்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
    • 30 பாட்டில்கள் பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்கப்படுவதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன் பேரில் துரைபெரும்பாக்கம், ஈராளஞ்சேரி பகுதிகளில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது துரைபெரும் பாக்கம் கிராமத்தில் போலீசாரை கண்டவுடன் ஓட முயன்ற வாலிபரை பிடித்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் துரைபெரும்பாக்கம் கிராமம், கிறிஸ்டியன் தெருவை சேர்ந்த மதனகாமராஜ் (29) என்பது தெரியவந்தது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பைக் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.

    அப் போது ஒரே மோட்டார் சைக் கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தினர். சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந் தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த ரியாஸ் அஹமது (வயது 22), அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த விஜய குமார் (21), மங்கமாபேட்டை பகுதியை சேர்ந்த மணிகண் டன் (18) என்பது தெரியவந் தது. அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற் றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் அருள்ராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 43). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் கோபி அருகே செரையாம்பாளையம் பவானி ஆற்றங்கரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் மீன் பண்ணை அமைத்துள்ளார்.

    இவருக்கு மீன் பண்ணை அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மானியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 2 மாதத்துக்கு முன்பு கார்த்திக்குக்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மானிய தொகை அவரது வங்கி கணக்குக்கு மீன் வளத்துறை சார்பில் செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் மீன் வளத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் பவானிசாகரை சேர்ந்த அருள்ராஜ் (47) என்பவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு உங்களுக்கு 2-ம் கட்ட மானியமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வந்துள்ளது. அந்த மானியத்தொகை 2 நாட்களுக்குள் உங்களுக்கு வழங்கப்படும்.

    எனவே மானியத் தொகை வழங்க எனக்கு ரூ.31 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என கார்த்திக்கிடம் அருள்ராஜ் கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக் இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கார்த்திக்கிடம் வழங்கினர். இதையடுத்து மீன்வளத்துறை ஆய்வாளர் அருள்ராஜை கார்த்திக் தொடர்பு கொண்டார்.

    அப்போது அவர் லஞ்ச பணத்துடன் ஓடத்துறை குளம் பகுதிக்கு கார்த்திகை வருமாறு கூறினார்.

    இதை தொடர்ந்து கார்த்திக்கும் பணத்துடன் ஓடத்துறை பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்ெபக்டர் முருகன் மற்றும் போலீசார் மறைந்து இருந்தனர்.

    அப்போது கார்த்திக் தான் கொண்டு வந்த பணத்தை அருள்ராஜிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அருள்ராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட அருள்ராஜை கோபியில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அருள்ராஜை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    கரூர்:

    எர்ணாகுளம்-காரைக்கால் செல்லும் ெரயிலில் மாலதி என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி பயணம் செய்தார். அப்போது அதே ெரயில் பெட்டியில் பயணித்த கணேஷ்குமார்(வயது 62) என்பவர் துாங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் (மாலதியின் மகள்) பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதுகுறித்து கரூர் ெரயில் நிலையத்தில் மாலதி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி நசீமாபானு போக்சோ சட்டத்தின் கீழ் கணேஷ்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் திறமையாக செயல்பட்ட திருச்சி இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரி, அவருக்கு உதவியாக இருந்த கரூர் இருப்புப்பாதை சப் இன்ஸ்பெக்டர் கேசவன், நீதிமன்றக்காவலர் பூபதி ஆகியோரை தமிழ்நாடு ெரயில்வே காவல் துறை துணை இயக்குனர் வனிதா, சென்னை மாவட்ட இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு), திருச்சி மாவட்ட இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் ஆகியோர் பாராட்டினர்.

    • போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பொது இடத்தில் மது குடிக்க கூடாது என கூறினார்.

    சிவகிரி, 

    ஈரோடு மாவட்டம் சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மற்றும் போலீசார் விளக்கேத்தி மற்றும் எல்லக்கடை பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    சிவகிரி- எல்லப்பாளை யம் ரோட்டில் போலீசார் சென்ற போது ஆண்டிக்காடு முருகன் கோவில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி அருகே சென்று பார்த்தார். அங்கு 2 பேர் மது குடித்து கொண்டு இருந்தனர்.

    அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் பொது இடத்தில் மது குடிக்க கூடாது என கூறினார். மேலும் அவர்களிடம் வேனின் ஆவணத்தையும் கேட்டார்.

    இதையடுத்து மது குடித்து கொண்டு இருந்த 2 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் 2 பேர் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் அவர்கள் சிவகிரி அருகே உள்ள கொந்தளம் புதூரை சேர்ந்த சசிகுமார் (வயது 37), ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொன் ரஞ்சித் (22) என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் ஓட்டி வந்த வேனையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    • தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்தக்–குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.
    • 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதி–மன்ற நீதி–பதி கண்–ணன் முன்பு ஆஜர்–ப–டுத்தினர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மனைவி செந்தமிழ் செல்வி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். இவர்களுடைய மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19)  இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூரில் உள்ள தனியார் பாலிடெ க்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்கக்குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.    இதையடுத்து துணை போலீஸ் சூப்ரண்டு ரமேஷ் மற்றும் தாசில்தார் சத்தியநா ராயணன்ஆகியோர் முன்னிலையில் ஜெகன்ஸ்ரீ உடல் தோண்டி எடுக்கப்ட்டு பிரேத பரிசோதக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஜெகன் ஸ்ரீயை அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (32), மணிகண்டன் மகன் ஆகாஷ் (20), ரவிச்ந்திரன் மகன் அபிலரசன் (27), 17 வயது சிறுவன் ஆகியோர் மது பாட்டிலால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்–தும் கொலை செய்தது தெரியவந்தது.

    இதையத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். அய்யப்பன், ஆகாஷ், அபிலரசன் ஆகிய 3 பேரையும் 15 நாள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அய்–யப்பன் உள்பட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

    மேலும் 17 வயது சிறுவன், கடலூர் சாவடி பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். 

    ×