search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 arrested for"

    • நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் விசாரித்தனர்.
    • கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர ரோந்து பணியில் ஈடுப ட்டனர். அப்போது பவானி புது பஸ் ஸ்டாண்டு, பவானி ஆற்று பகுதி அருகே அனும தியின்றி மது விற்றுக்கொண்டிருந்த பவானி சொக்காரம்மன் காடு பகுதியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் வெற்றிவேல் (வயது 37), பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பழனிசாமி மகன் சுரேஷ் (40) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீ சார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அந்தியூர் போலீசார் அந்தியூர்-பவானி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் அந்தியூர் காமராஜர் சாலையை சேர்ந்த பூவாணன் மகன் செல்வன் (63) என்பதும், அவர் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கந்தாம்பாளையம் பிரிவு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் கந்தாம்பாளையம் பிரிவு அருகே வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் 24 மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    விசாரணையில் வேனில் வந்தவர்கள் பவானி குருப்ப நாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (35), பழனிபுரம் முதல் வீதியை சேர்ந்த செல்வன் (48) என்பது தெரிய வந்தது.

    அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வாங்கி பள்ளகாட்டூர் ரோஜா நகரில் 16 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    மொத்தம் அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட வேனை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பவானி மண் தொழிலாளர் முதல் வீதியை சேர்ந்த மணிகண்டன்(28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் பொதுமக்களிடம் இருந்து ரேசன் அரிசியை வாங்கி பெருந்துறை பகுதியில் தங்கி வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    • பாலசந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அனுமதியின்றி ம விற்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் ேபரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் பாலசந்திரன் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சித்தோடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரியசோமூர் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் சூர்யபிரகாஷ் (22), பப்பாளி என்ற பைசல் ஆகியோரை சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சந்தேகப்படும்படியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நின்றது.
    • போலீசார் சோதனை நடத்தியதில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கவுந்தப்பாடி-காஞ்சிக்கோவில் பிரிவு பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நின்றது. அதை ஓட்டி வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருச்சி மாவட்டம் உறையூர் முஸ்லீம் வீதியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பதும், பெருந்துறை பெத்தாம்பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் (33) என்பதும் தெரியவந்தது.

    இவர்களின் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனை நடத்தியதில், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்ப னைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அப்துல் ரகுமான், தர்மராஜ் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சா பொட்ட லங்கள் மற்றும் கார், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மரப்பாலம் நடராஜா தியேட்டர் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை யில் ஈடுபட்டிருந்த மரப்பா லம் ஆலமரத்து வீதியை சேர்ந்த தினேஷ் என்ற கொசு தினேஷ் (24) என்பவரை ஈரோடு டவுன் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.   

    • தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தமிழரசு, வினோத் உள்பட 8 பேர் இருந்தனர்.
    • இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சலங்கைபாளையம் பகுதியை சேர்ந்த பிரகதீஷ் (வயது 26). பவானி அடுத்த சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த பூபதி (30). இவர்கள் 2 பேரும் டிரைவர்கள். இவர்கள் 2 பேர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு பூபதி பச்சமலையை சேர்ந்த தினேஷ் (28) என்பவரிடம் என்னிடம் பணம் இல்லை. ரூ.200 தாருங்கள். கூகுள்பே மூலம் அந்த பணத்தை அனுப்புகிறேன் என்று கூறினார்.

    இதையடுத்து தினேஷ், பூபதிக்கு ரூ.200 கொடுத்தார். அதன் பிறகு பூபதி கூகுள்பே மூலம் தினேசுக்கு அனுப்பி விட்டார்.

    இந்த நிலையில் தினேஷ், பூபதிக்கு போன் செய்து கோபிசெட்டி–பாளையம் அருகே உள்ள பச்சமலை பகுதிக்கு வரும்படி கூறினார். இதையடுத்து பூபதி, பிரகதீஷ் ஆகியோர் பச்சமலை பகுதிக்கு சென்றனர்.

    அப்போது அங்கு தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தமிழரசு, வினோத் உள்பட 8 பேர் இருந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் பேசி கொண்டு இருந்தனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து தினேஷ் (25), தமிழரசு (25), வினோத் (25) உள்பட 8 பேர் சேர்ந்து பிரகதீஷ், பூபதியை தாக்கியதாக கூறப்ப–டுகிறது. இதில் அவர்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தினேஷ், தமிழரசு, வினோத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மற்ற 5 பேர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி அவர்கள் 5 பேரை தேடி வருகிறார்கள்.

    • போலீசார் 3 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
    • தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

     டி.என்.பாளையம்:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த காசிபாளையம் மணியகாரன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜெகதீஸ் (28) டி.ஜி.புதூரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து காலை கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 6 செல்போன்கள், ஒரு லேப்டாப் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அதே போன்று டி.என்.பாளையம் குமரன் கோவில் ரோட்டை சேர்ந்த சதீஸ் (46). டி.என்.பாளையத்தில் வைத்துள்ள போட்டோ ஸ்டுடியோ கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கேமரா, கம்ப்யூட்டர் மானி ட்டர் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பங்களாப்புதூர் போலீசார் கொடிவேரி அணை அருகே சதுமுகை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்திய போது அவர்கள் தப்பியோட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் டி.என்.பாளையம், டி.ஜி.புதூர் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததும்,  அவர்கள் சிறுமுகையை சேர்ந்த 17 வயது சிறுவன் கோவை மாவட்டம் சிறுமுகை வடபகதூரை சேர்ந்த நித்தீஸ் (21), கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பாசரை புதுக்காலனியை சேர்ந்த விஜய் (23) என தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரும் கோபி நீதிமன்றத்திலும், 17 வயது சிறுவன் கோவை சிறார் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன், பிரதாப், உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
    • தலைமறைவான கணேசன் மற்றும் பாலாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு தங்கதுரை மற்றும் போலீ சார் வாய்க்கால் மேடு பகுதியில் ேசாதனை செய்து கண்காணித்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோத னை நடத்தி விசாரித்தனர். இதில் அவர்கள் ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த பிரதாப் (21), பெருந்துறை பழைய பாளையம் பகுதி சேர்ந்த 18 வயது வாலிபர் என தெரியவந்தது.

    மேலும் போலீசார் அவர்கள் வைத்து இருந்த கட்டைப் பையை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் ரூ.20 ஆயிரம் மதிப்பி லான 2 கிலோ கஞ்சா மற்றும் எலக்ட்ரானிக் எடை மெஷின் இருந்ததும், அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய வைத்திருந்தும், இவர்கள் ஈரோடு பழைய பாளையம் பகுதியை சார்ந்த நவீன் (21) என்பவரிடமிருந்து கஞ்சா வை வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும் தெரிவித்த னர்.

    இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, எடை மெஷின், மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    இதை தொடர்ந்து நவீனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் ஈரோடு மணல்மேடு பகுதியை சார்ந்த கணேசன் மற்றும் ஈரோடு காந்தி கார்டன் பகுதியை சேர்ந்த பாலா (29) ஆகியோரிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வதாக தெரி வித்தார்.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன், பிரதாப், உள்பட 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான கணேசன் மற்றும் பாலாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர்.
    • அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது.

    கொடுமுடி:

    மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய ப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தனி ப்படை அமைத்து சோதனை செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தொடர்ந்து அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது,

    இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ராசாம் பாளையம் ராட்டை சுற்றி பாளையத்தை சேர்ந்த பாலா (வயது 29) மற்றும் அவரது நண்பர் ஈரோடு வி. வி. சி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (22) ஆகியோரை பிடித்து போலீ சார் விசாரணை நடத்தினர்.

    இதில் கஞ்சா மூட்டையை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அவற்றை சிறு பொட்டலங்களாக பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களி டம் இருந்து ரூ.2.10 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் பாலா, அஜித் குமார், ஈரோடு அக்ரகார வீதியைச் சேர்ந்த பக்கீர் மைதீன் ஜமீர் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். மேலும் தலைமறை வான கணேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்ற னர்.

    • சத்தியமங்கலம் மலையடிப்புதூர் பள்ளிக்கு பின்புறம் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து 3 பேரை மடக்கிப்பிடித்த கோபி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் மலையடிப்புதூர் பள்ளிக்கு பின்புறம் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் மேற்கொண்ட சோதனையில் சத்தியமங்கலம் தலமலை கஸ்பா பகுதியை சேர்ந்த சின்னராசு (24), கே.என்.பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் (29), குருமந்தூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (25) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரை மடக்கிப்பிடித்த கோபி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.11,700 மதிப்பிலான 650 கிராம் கஞ்சா, 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • பவானி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது அங்கு இருந்த மணி என்பவரது டீக்கடையில் சோதனை செய்தனர்.

    பவானி:

    பவானி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இருந்த மணி என்பவரது டீக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 3.264 கிலோ எடை கொண்ட ரூ.2496 மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை வஸ்து பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பவானி போலீசார் பவானி தாசில்தாருக்கு டீக்கடைக்கு சீல் வைக்க கோரி தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் உத்தரவுப்படி வருவாய் அலுவலர் விஜய கோகுல், வி.ஏ.ஓ. குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் டீக்கடைக்கு வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

    இதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி சீனிவாசபுரம் எக்ஸ்டென்ஸ் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (46) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னப் பருவாச்சிபகுதி கடையில் ஹான்ஸ் விற்கப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை செய்ததில் 10 பாக்கெட் ஹான்ஸ் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து அந்தக் கடையின் உரிமையாளர் சதாசிவம் (49) என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பருவாச்சி பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக கொடுத்த தகவலின் பேரில் அங்கிருந்து சதாசிவம் உடன் பருவாச்சிஅண்ணா நகர் பகுதியில் சோதனை செய்தனர்.

    அங்கு ஏராளமான போதை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த விருதுநகர் ஈரெட்டிப்பட்டியை சேர்ந்த காளிராஜ் (24) என்பவரையும் கைது செய்தனர். இந்த குட்காவின் மதிப்பு 39 ஆயிரம் 500 ரூபாய் ஆகும்.

    ×