கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

சத்தியமங்கலம் மலையடிப்புதூர் பள்ளிக்கு பின்புறம் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து 3 பேரை மடக்கிப்பிடித்த கோபி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
Published on

ஈரோடு:

சத்தியமங்கலம் மலையடிப்புதூர் பள்ளிக்கு பின்புறம் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் மேற்கொண்ட சோதனையில் சத்தியமங்கலம் தலமலை கஸ்பா பகுதியை சேர்ந்த சின்னராசு (24), கே.என்.பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் (29), குருமந்தூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (25) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரை மடக்கிப்பிடித்த கோபி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.11,700 மதிப்பிலான 650 கிராம் கஞ்சா, 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com