வாலிபர்களை தாக்கிய 3 பேர் கைது

தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தமிழரசு, வினோத் உள்பட 8 பேர் இருந்தனர்.இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
வாலிபர்களை தாக்கிய 3 பேர் கைது
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சலங்கைபாளையம் பகுதியை சேர்ந்த பிரகதீஷ் (வயது 26). பவானி அடுத்த சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த பூபதி (30). இவர்கள் 2 பேரும் டிரைவர்கள். இவர்கள் 2 பேர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பூபதி பச்சமலையை சேர்ந்த தினேஷ் (28) என்பவரிடம் என்னிடம் பணம் இல்லை. ரூ.200 தாருங்கள். கூகுள்பே மூலம் அந்த பணத்தை அனுப்புகிறேன் என்று கூறினார்.

இதையடுத்து தினேஷ், பூபதிக்கு ரூ.200 கொடுத்தார். அதன் பிறகு பூபதி கூகுள்பே மூலம் தினேசுக்கு அனுப்பி விட்டார்.

இந்த நிலையில் தினேஷ், பூபதிக்கு போன் செய்து கோபிசெட்டி–பாளையம் அருகே உள்ள பச்சமலை பகுதிக்கு வரும்படி கூறினார். இதையடுத்து பூபதி, பிரகதீஷ் ஆகியோர் பச்சமலை பகுதிக்கு சென்றனர்.

அப்போது அங்கு தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தமிழரசு, வினோத் உள்பட 8 பேர் இருந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் பேசி கொண்டு இருந்தனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து தினேஷ் (25), தமிழரசு (25), வினோத் (25) உள்பட 8 பேர் சேர்ந்து பிரகதீஷ், பூபதியை தாக்கியதாக கூறப்ப–டுகிறது. இதில் அவர்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.

இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தினேஷ், தமிழரசு, வினோத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மற்ற 5 பேர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி அவர்கள் 5 பேரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com