search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggling ganja"

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து விசாரித்தனர்.
    • போதைப்பொருளான கஞ்சா 2 கிலோ இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு;

    ஈரோடு வெண்டி பாளையம் கதவணை மின் நிலைய பாதையில் ஈரோடு டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து விசாரித்தனர். அதில் அவர் ஈரோடு கருங்கல்பாளையம், கமலா நகரை சேர்ந்த சக்தி (31) என்பது தெரியவந்து.

    அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா 2 கிலோ இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா மற்றும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆகிவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வாலிபர் சக்தியின் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ளை நிறப்பையுடன் நின்று கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெருந்துறை-கோவை ரோட்டில் உள்ள பெரிய வேட்டுவபாளையம் பிரிவு அருகில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வெள்ளை நிறப்பையுடன் நின்று கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து அவரது பையை சோதனையிட்டனர். அதில் 1 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் சிவகிரி, மாரங்காட்டூர் வாழைத் தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (25) என்பதும் தற்போது பெருந்துறை ஜெ.ஜெ.நகரில் வாடகை வீட்டில் தங்கி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.11 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    பவானி போலீசார் ஜம்பை, கோட்டை அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.

    போலீசார் அவரை நிறுத்தி விசாரித்த போது அவர் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த முகமத் ஜின்னா என தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்தி விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதேபோல் அதே பகுதி யில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் அந்தியூர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (24) என்பதும் கஞ்சா பொட்ட லங்களை கடத்தி விற்ப னைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான 2 பேரிடம் இருந்தும் 2 மோட்டார் சைக்கிள், ஒரு கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்ய ப்பட்டது.

    • பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்துள்ள பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது டி.ஜி.புதூரில் இருந்து கே.என்.பாளையம் செல்லும் சாலையில் காளியூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரபு (26), சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (26), டி.ஜி.புதூரை சேர்ந்த சதீஷ் (19) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மதிப்பிலான 1,100 கிராம் கஞ்சா, அதை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பணம் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன், பிரதாப், உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
    • தலைமறைவான கணேசன் மற்றும் பாலாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு தங்கதுரை மற்றும் போலீ சார் வாய்க்கால் மேடு பகுதியில் ேசாதனை செய்து கண்காணித்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோத னை நடத்தி விசாரித்தனர். இதில் அவர்கள் ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த பிரதாப் (21), பெருந்துறை பழைய பாளையம் பகுதி சேர்ந்த 18 வயது வாலிபர் என தெரியவந்தது.

    மேலும் போலீசார் அவர்கள் வைத்து இருந்த கட்டைப் பையை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் ரூ.20 ஆயிரம் மதிப்பி லான 2 கிலோ கஞ்சா மற்றும் எலக்ட்ரானிக் எடை மெஷின் இருந்ததும், அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய வைத்திருந்தும், இவர்கள் ஈரோடு பழைய பாளையம் பகுதியை சார்ந்த நவீன் (21) என்பவரிடமிருந்து கஞ்சா வை வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும் தெரிவித்த னர்.

    இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, எடை மெஷின், மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    இதை தொடர்ந்து நவீனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் ஈரோடு மணல்மேடு பகுதியை சார்ந்த கணேசன் மற்றும் ஈரோடு காந்தி கார்டன் பகுதியை சேர்ந்த பாலா (29) ஆகியோரிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வதாக தெரி வித்தார்.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன், பிரதாப், உள்பட 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான கணேசன் மற்றும் பாலாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் 1.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
    • இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் பஸ் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை லே-அவுட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களை நிறுத்தி மேற்கொண்ட சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் 1.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    விசாரணையில், அவர்கள் கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த சக்திகுமார் (30), கேரள மாநிலம், சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த சதீஷ் (34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல, பர்கூரை அடுத்துள்ள கர்கேகண்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில் 850 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் பர்கூரைச் சேர்ந்த மாதேவன் (52), சின்னப்பி (32) என்பதும், கர் நாடக மா நிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, பர்கூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தி வரப்பட்ட 2¼ கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    ×