search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 people were arrested for"

    • மலையம்பாளையம், சிறுவலூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 19 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மலையம்பாளையம், சிறுவலூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.

    அப்போது சின்னம்மா புரம், கெட்டிசெவியூர்-நம்பியூர் ரோடு, வெள்ளப்பம்பாளையம் எல்.பி.பி. வாய்க்கால் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த ஈரோடு புஞ்சை கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த வீரன் மகன் பெரியசாமி (வயது 53), கொடுமுடி இலுப்பு தோப்பு பகுதியை சேர்ந்த பால சுப்பிரமணியன் மகன் வினோத்குமார் (32), நம்பியூர் சூரியம்பாளையம் பழனி மகன் நாகராஜன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 19 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் காஞ்சி கோவில்-பெருந்துறை ரோடு, இச்சிபாளையம் வாய்யக்கால் கரை பகுதியில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பெருந்துறை முள்ளம்பட்டி அடுத்த கண்ணவேலம் பாளைய த்தை சேர்ந்த மூர்த்தி (50), கொடுமுடி விருப்பம்பா ளையம் ராமகி ருஷ்ணன் மகன் சீனிவாசன் (28) ஆகி யோர் மீது காஞ்சி கோவில், கொடுமுடி போலீ சார் வழ க்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 16 மதுபாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்தி ற்காக மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சின்ன ப்பன் மகன் முருகன் (41) என்பவரை மலையம்பாளையம் போலீ சார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என அம்மாபேட்டை, பங்களாபுதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.

    அப்போது கொங்கர்பா ளையம், கணக்கம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த அந்தி யூர் ஏ.டி. காலனியை சேர்ந்த சாமிதுரை மகன் உத்தரசாமி (வயது 44),

    கொங்கர்பா ளையம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த ராக்கன் மகன் கிட்டன் (55), கோபி செட்டிபாளையம் கணக்கம்பாளையத்தை சேர்ந்த பெரிய தம்பி மகன் ரவி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதைபோல் கோபி குப்பமேடு டாஸ்மாக் அருகே அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த திரு ப்பூர் மாவட்டம் பாரதிநகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அஜய்குமார் (25) என்பவர் மீது கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போதை பொருட்களை விற்பனை செய்த சிக்காந்தர் என்பவரை கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முல வாய்க்கால் டாஸ்மாக், சிங்கி ரிபாளையம் டாஸ்மார்க் கடை அருகே அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு அனுமதியின்றி மதுவிற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் மரு தவாயல் பகுதியை சேர்ந்த காசி மகன் கோபால் (வயது 46),

    நம்பியூர் தாலுகா கரட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் பாலமுருகன் (30) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு ஈ.பி.பி.நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்த சிக்காந்தர் (56 என்பவரை கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.

    மேலும் அவர் விற்பனை க்காக வைத்திருந்த புகையி லைப் பொருட்களை பறி முதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது விற்றதாக வெங்கடேஷ் என்பவரை கைது செய்தனர்.
    • மது அருந்த அனுமதித்தாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிங்கிரிபாளையத்தில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக கோவை சூலூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த ரகுபதி (31) என்பவரை போலீசார் கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு கொல்லம்பாளையத்தில் மது விற்றதாக பச்சப்பாளியை சேர்ந்த வெங்கடேஷ்(49) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறையில் மது விற்றதாக கவுரிசங்கர் (31) என்பவரை போலீசார் கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக புளியம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (43), பாண்டியன் (72), பெருந்துறையில் தனபாலன் (34), பழனிசாமி (60), ஈஸ்வரன் மனைவி புஷ்பா (53) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • 3 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
    • போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மணல் மேடு பகுதியில் சூரம்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்த 3 பேர் தப்பியோட முயன்றனர்.

    அவர்களை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சூரம்பட்டி வலசு அணைக்கட்டு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (28), காசிபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் (56) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் 3 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 52 சீட்டுகள், பணம் ரூ.130 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • பிச்சப்பாளி மேடு பகுதிக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • அங்கு பாறைகளை வெடி வைத்து தகர்க்கப்பட்டது தெரியவந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிச்சப்பாளி மேடு என்ற இடத்தில் அனுமதியின்றி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதாக அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் பிச்சப்பாளி மேடு பகுதிக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு சிலர் பாறைகளை வெடி வைத்து தகர்க்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இது சம்பந்தமாக அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பெருமா பாளையத்தைச் சேர்ந்த சின்னப்பன், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த நடராஜ் ஆகிய 3 பேர் அனுமதியின்றி பாறைகளை வெடி வைத்து தகர்த்தியது தெரிய வந்தது.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்தனர் தொடர்ந்து 3 பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்துள்ள பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது டி.ஜி.புதூரில் இருந்து கே.என்.பாளையம் செல்லும் சாலையில் காளியூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரபு (26), சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (26), டி.ஜி.புதூரை சேர்ந்த சதீஷ் (19) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மதிப்பிலான 1,100 கிராம் கஞ்சா, அதை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பணம் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு அழகம்பாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.
    • சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அழகம்பாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வாய்க்கால் பகுதியில் அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்தது.

    இதன்பேரில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ராயர்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அந்த நபர் ராயர்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புற பகுதியை சேர்ந்த பொன்னான் என்ற பொன்னுசாமி (58) என்பதும், அவரது மொபட்டினை சோதனை செய்தபோது 12 மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து பொன்னுசாமியை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியில் மளிகை கடையில் தாலுகா போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கடையின் உரிமையாளரான நாதகவுண்டன் பாளையத்தை சேர்ந்த திலிப்குமார் (31) என்பவரை கைது செய்து கடையில் இருந்த 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • கடத்தூர் பகுதியில் சிலர் தள்ளுவண்டிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து கடத்துர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டி புகாரின் பேரில் போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் பகுதியில் சிலர் தள்ளுவண்டிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடத்தூர் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    அப்போது உக்கரம் குப்பன்துறை பகுதியை சேர்ந்த நடுபழனி (75), அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி(40), வண்டிப் பாளையம் விநாயகா நகரை சேர்ந்த மருதாசலம் (46) ஆகியோர் தள்ளுவண்டியில் மது விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடத்துர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டி புகாரின் பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×