என் மலர்
நீங்கள் தேடியது "selling liquor without permission"
- போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, பவானி, கோபி பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண், கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அரசு அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த சென்னிமலை கே.ஜி.வலசை சேர்ந்த தங்கவேல் (வயது 60), பவானி வரதநல்லூரை சேர்ந்த மாதேஸ்வரன் (53), கோபி மல்லிபாளையத்தை சேர்ந்த காந்தி வேல் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்த 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஈரோடு டவுண், கோபி போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் குற்ற சம்பவ ங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அம்மாபேட்டை, பெருந்துறை சுற்றுவ ட்டாரப் பகுதிகளில் அனு மதியின்றி மது விற்று கொண்டிருந்த பெரியசேமூர் கன்னிமார் நகரை சேர்ந்த மது மகன் சந்திரசேகர் (வயது 44), சிவகங்கை மாவ ட்டம் காளையார் கோவி லை சேர்ந்த எடிவக்கண்ணு மகன் முத்துவேல்,
அந்தியூர் கொமரயனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (40), மதுரை மாவட்டம் உசிலம்ப ட்டியை சேர்ந்த ராசு மகன் பூம்பாண்டி (42) சத்தி பு.புளியம்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் உதயகுமார் (34) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மது பாட்டி ல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு முதியவர் சந்தேகத்துக்கிடமான நிலையில் இருந்தார்.
- போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை நடத்தினர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வண்டிபாளையம் பகுதியில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு முதியவர் சந்தேகத்துக்கிடமான நிலையில் இருந்தார்.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கடத்தூர் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- அனுமதியின்றி மது விற்ற 54 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
- ஒரே நாளில் 667 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழு வதும் சட்ட விரோதம் மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்த ரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. எனினும் இந்த உத்தரவை மீறி மது விற்பனை நடைபெறுகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தங்கள் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் தீவிர சோதனையில் ஒரே நாளில் மாவட்ட முழுவதும் அனுமதியின்றி மது விற்ற 54 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடமிருந்து ஒரே நாளில் 667 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விற்பனைக்காக வைத்திருந்த 29 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரச்சலூர், தாளவாடி, கடம்பூர், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த அவல்பூந்துறை கே.கே.வலசு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சுப்பிரமணி (வயது 72),
தாளவாடி தலமலை பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன், கடம்பூர் சுஜில்கரை சிவா என்ற கோழிக் கடை சிவா, கடம்பூர் பகுதியை சேர்ந்த வீரப்பா மகன் குருசாமி,
சத்தியமங்கலம் கொட்டு வீரப்பம்பாளையம் சேகர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 29 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைபோல் செம்பட்டி பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் மோகன், சுந்தர் மகன் பூபதி ஆகியோர் மீது கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மலையம்பாளையம், சிறுவலூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 19 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மலையம்பாளையம், சிறுவலூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
அப்போது சின்னம்மா புரம், கெட்டிசெவியூர்-நம்பியூர் ரோடு, வெள்ளப்பம்பாளையம் எல்.பி.பி. வாய்க்கால் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த ஈரோடு புஞ்சை கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த வீரன் மகன் பெரியசாமி (வயது 53), கொடுமுடி இலுப்பு தோப்பு பகுதியை சேர்ந்த பால சுப்பிரமணியன் மகன் வினோத்குமார் (32), நம்பியூர் சூரியம்பாளையம் பழனி மகன் நாகராஜன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 19 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் காஞ்சி கோவில்-பெருந்துறை ரோடு, இச்சிபாளையம் வாய்யக்கால் கரை பகுதியில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பெருந்துறை முள்ளம்பட்டி அடுத்த கண்ணவேலம் பாளைய த்தை சேர்ந்த மூர்த்தி (50), கொடுமுடி விருப்பம்பா ளையம் ராமகி ருஷ்ணன் மகன் சீனிவாசன் (28) ஆகி யோர் மீது காஞ்சி கோவில், கொடுமுடி போலீ சார் வழ க்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 16 மதுபாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்தி ற்காக மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சின்ன ப்பன் மகன் முருகன் (41) என்பவரை மலையம்பாளையம் போலீ சார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாள வாடி சுற்றுவட்டார பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தாளவாடி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டி ருந்த தாளவாடி திகினாரை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மஞ்சையா மகன் மணி என்ற ஐயப்பன் (வயது 30), தாளவாடி பனகள்ளி பகுதியை சேர்ந்த மாதேவா மகன் பசுவராஜ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் பெருந்துறை பகுதியில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் ஜெய்சங்கர் (39) என்பவர் மீது பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கோபி, பெருந்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விஜயமங்கலம்- ஊத்துக்குளி ரோடு டாஸ்மாக் கடை, மூல வாய்க்கால் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த சிவந்தி கண்ணன் மகன் ராஜமாணிக்கம் (வயது 44),
சிவகங்கை மாவட்டம் மருதவாயில் பகுதியைச் சேர்ந்த காசி மகன் கோபால் (44) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






