அனுமதியின்றி மதுவிற்ற 5 பேர் மீது வழக்கு

போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி மதுவிற்ற 5 பேர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் ஈரோடு டவுண், கோபி போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் குற்ற சம்பவ ங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அம்மாபேட்டை, பெருந்துறை சுற்றுவ ட்டாரப் பகுதிகளில் அனு மதியின்றி மது விற்று கொண்டிருந்த பெரியசேமூர் கன்னிமார் நகரை சேர்ந்த மது மகன் சந்திரசேகர் (வயது 44), சிவகங்கை மாவ ட்டம் காளையார் கோவி லை சேர்ந்த எடிவக்கண்ணு மகன் முத்துவேல்,

அந்தியூர் கொமரயனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (40), மதுரை மாவட்டம் உசிலம்ப ட்டியை சேர்ந்த ராசு மகன் பூம்பாண்டி (42) சத்தி பு.புளியம்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் உதயகுமார் (34) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மது பாட்டி ல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com