என் மலர்

    நீங்கள் தேடியது "2 people arrested for"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கடம்பூர்-மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் அஞ்சனை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக ஒரு ஆம்னிவேன் வந்து கொண்டிருந்தது.

    அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான் மசாலாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்க ப்பட்டது.

    மொத்தம் 8 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.

    இதனையடுத்து வேனில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கோபி அடுத்த துறையாம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்த முகமது யாசின் (39), கோபி அடுத்த நஞ்சன் கவுண்டன் பாளையம் பகுதி சேர்ந்த மாரிமுத்து (47) என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள் கர்நாடகா மாநிலத்தி லிருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆம்னி வேன் மற்றும் 8 கிலோ புகையிலை பொருட்களை யும் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின் மோட்டார் கேபிள் வயர் வெட்டப்பட்டு இருந்துள்ளது.
    • விசாரித்ததில் 2பேர் வயர் திருடியதை ஒப்பு கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், ஒட்டப்பாறை பஞ்சாயத்து, நாமக்கல்பாளையத்தினை சேர்ந்தவர் பூபதி (26). இவர் ஒட்டப்பாறை பஞ்சாயத்தில் குடிநீர் திறந்து விடும் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று பூபதி நாமக்கல்பாளையம் ரோட்டில் உள்ள மின் மோட்டார் அறைக்கு சென்று பார்த்த போது மின் மோட்டார் கேபிள் வயர் வெட்டப்பட்டு இருந்துள்ளது.

    இது குறித்து அவர் ஒட்டப்பாறை தலைவருக்கு தகவல் தெரிவித்து விட்டு அக்கம், பக்கம் தேடி பார்த்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் சென்றதை பார்த்தார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 2 ேபரையும் பிடித்து விசாரித்தார்.

    விசாரித்ததில் அவர்கள் வயர் திருடியதை ஒப்பு கொண்டனர். இதனையடுத்து 2 பேரையும் சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் வேலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், பாரதி நகர் பகுதியை சேர்ந்த பாலு (24), நாகராஜ் (27) என்பதும், இவர்கள் 2 பேரும் அண்ணன், தம்பிகள் எனவும், தற்போது ஈரோடு, சூரம்பட்டி வலசு, கோவலன் வீதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை
    • பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர்

    பவானி,

    பவானி அருகில் உள்ள சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் பவானி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சிங்காரவேலன் பெட்டிக்கடை அருகே மறைவான இடத்தில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து பவானி சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் வசிக்கும் சிங்காரவேலன் (39) என்பவர் கைது செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் பவானி அந்தியூர் ஜங்ஷன் பூக்கடை அருகில் மறைவான பகுதியில் மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பவானி பழைய பாலம் அருகில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி பழைய பாலம் அருகில் பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில் மறைவான இடத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பவானி கல்தொழிலாளர் மூன்றாவது வீதியில் வசிக்கும் கண்ணன் (23) என்பது தெரிய வந்தது அதிக விலைக்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் பவானி அந்தியூர் மெயின் ரோடு பண்டாரப்பச்சி கோவில் பின்பகுதியில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்துக் கொண்டு விற்பனை செய்த குற்றத்திற்காக கல் தொழிலாளர் 1-வது வீதியில் வசிக்கும் பிரபாகரன் (31) என்பவர் கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • அப்போது கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 31).இவர் விஜயமங்கலம், பெருமாள் கோவில் பின்புறம் கடந்த 8 வருடங்களாக பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு இவர் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறு நாள் காலை கடைக்கு வந்து கேட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது கடையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் சுற்று சுவர் அருகே ஒரு பழைய பிளாஸ்டிக் டிரம் இருந்தது. பின்னர் பொருட்களை சரி பார்த்தார்.

    அப்போது கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த 60 கிலோ எடையுள்ள இரு சக்கர வாகன பேட்டரிகள், 80 கிலோ எடை உள்ள செம்பு கம்பிகள், 40 கிலோ எடையுள்ள பித்தளை பொருட்கள் என மொத்தம் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருந்ததும் மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் கொடு த்தார். இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா க்களை ஆய்வு செய்தார்.

    அப்போது அதில் 2 பேர் இரும்பு கடையில் பழைய பொருட்களை திருடி ஒரு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றது தெரிய வந்தது. அவர்களின் உருவங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே பஞ்சர் கடை வைத்து நடத்தி வரும் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் ஈரோடு, முத்தம்பாளை யம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சுரேஷ் (27) ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த பக்கிரி (36) என்பதும் விஜயமங்கலம் பழைய இரும்பு கடையில் பொரு ட்களை திருடியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களி டம் இருந்து திருட பயன்படுத்திய வாகனம் மற்றும் ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டி.ஜி.புதூரில் உள்ள தனியார் மண்டபத்தின் முன்பு நிறுத்தி இருந்து போது திருட் போனது.
    • வாகனத்தை திருடியது கணக்கம் பாளையம் பாரதி வீதியை சேர்ந்த நடராஜ் என்பது தெரியவந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் மாதாகோயில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மொபட் கடந்த 5-ந் தேதி டி.ஜி.புதூரில் உள்ள தனியார் மண்டபத்தின் முன்பு நிறுத்தி இருந்து போது திருட் போனது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசாரிடம் நாகராஜ் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நாகராஜின் மொபட் திருட்போன பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதில் வாகனத்தை திருடியது கணக்கம் பாளையம் பாரதி வீதியை சேர்ந்த நடராஜ் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடராஜை கைது செய்து அவரிடம் இருந்த மொபட்டை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த ரத்தினாள் (57). இவரது கணவர் முருகன் கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று முருகன் சத்தியமங்கலம் சென்று விட்டு வீடு திரும்பிய போது டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே தனது மொபட்டை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது தனது மொபட்டை யாரோ எடுத்து சென்றுள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த முருகனும் அவரது மனைவியும் இது குறித்து விசாரித்ததில் மொபட்டை திருடி சென்ற நபர் டி.என்.பாளையம் 4-வது வார்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்தது.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து முருகனின் மனைவி ரத்தினாள் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரஞ்சித் (25) என்பவரை பிடித்து கைது செய்து திருடப்பட்ட மொபட்டை பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • அவர்களது சட்டை பாக்கெட்டில் ரோஸ் கலர் சீட்டில் எண் எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பரிசு விழும் என விற்பனை செய்தது தெரியவந்தது.

    பவானி:

    பவானி அந்தியூர் மெயின் ரோடு பொன்காட்டார் கடை அருகில் பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பவானி அருகில் உள்ள ஜம்பை, நல்லிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தாண்டான் (46) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி (46) என்பது தெரியவந்தது.

    அவர்களது சட்டை பாக்கெட்டில் ரோஸ் கலர் சீட்டில் எண் எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பரிசு விழும் என விற்பனை செய்தது, செல்போன் மூலம் விற்பனை செய்தது தெரியவ ந்ததை தொடர்ந்து 2 பேரையும் பவானி போலீசார் கைது செய்தனர். 5 சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

    ×