search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people arrested for"

    • விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாள வாடி சுற்றுவட்டார பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தாளவாடி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டி ருந்த தாளவாடி திகினாரை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மஞ்சையா மகன் மணி என்ற ஐயப்பன் (வயது 30), தாளவாடி பனகள்ளி பகுதியை சேர்ந்த மாதேவா மகன் பசுவராஜ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் பெருந்துறை பகுதியில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் ஜெய்சங்கர் (39) என்பவர் மீது பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஞான சேகரன் என்பவரை பங்களாபுதூர் போலீசார் கைது செய்தனர்.
    • 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என நம்பியூர், பங்களாபுதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சின்ன கோச ணம் 3 ரோடு பகுதியில் ' போதை பொருள்களை விற்பனை செய்த நம்பியூர் சின்ன கோசனம் சாலை தோட்டத்தை சேர்ந்த அமராவதி மகன் தர்மலி ங்கம் (வயது 37) என்பவரை நம்பியூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த ஹான்ஸ், பான் மசாலா, கூலிப் உள்ளி ட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் டி.என்.பாளையம் பகுதியில் அனும தியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட டி.என்.பாளையம் 4-வது வார்டு குமரன் கோவில் தெருவை சேர்ந்த தேவசகாயம் மகன் ஞான சேகரன் என்பவரை பங்க ளாபுதூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டி இருந்த ஆடுகளில் கிடாவை காணவில்லை.
    • போலீசார் மாணிக்கம், விக்னேசை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர், புது தோட்டத்தை சேர்ந்தவர் பூவாத்தாள் (57). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகளை தோட்டத்திற்கு அருகே உள்ள காலியிடத்தில் கட்டி இருந்தார்.

    ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது கட்டி இருந்த ஆடுகளில் கிடாவை காணவில்லை.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பக்கத்து தோட்டத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஆட்டை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் துப்பு துலுக்கினர்.

    சத்தியமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் பவானிசாகர் அருகே பகுத்தம்பாளை யத்தை சேர்ந்த மாணிக்கம் (31), கெஞ்சனூரை சேர்ந்த அப்புசாமி என தெரிய வந்தது.

    இதற்கு உடந்தையாக வடக்குப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (32) என்பவர் இருந்ததும் தெரியவந்தது. போலீசார் மாணிக்கம், விக்னேசை கைது செய்தனர்.

    இதில் அப்புசாமி 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் அந்தியூர், காஞ்சி கோவில், கருங்கல்பாளையம் போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதியின்றி மது பாட்டி ல்களை விற்பனை செய்து கொண்டிருந்த கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் ஸ்ரீனிவாசன் (வயது 43) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைப்போல் வாய்க்கால் கரை பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் பென்னா கரத்தைச் சேர்ந்த மனோ கரன் மகன் சுதாகர் (32) என்பவரை காஞ்சிக்கோயில் போலீசார் பிடித்தனர்.

    இதே போல் அந்தியூர்-பர்கூர் சாலையில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்றுக் கொண்டிருந்த அந்தியூர் தெப்பக்குளம் தெருவை சேர்ந்த தங்கவேல் மனைவி பேச்சியம்மாள் என்பவரை அந்தியூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு நடுப்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சித்தோடு நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் ரமேஷ் (வயது 57), அதே பகுதியை சேர்ந்த மணி மகன் ஆனந்தன் (51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட செல்போன் மற்றும் ரூ.300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் நிகாந் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் சிவப்பிரகாஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • சேவல் சண்டை நடப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள பழனிபுரம், பவானி ஆற்றின் கரையோரம் பணம் பந்தயம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த சரவணன் (41), பவானி, கல்தொழிலாளர் முதல் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (34) ஆகிய இருவரும், பணம் பந்தயம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்க ளிடமிருந்து 2 சேவல்கள், பணம் ரூ. 500 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
    • முயல் வேட்டையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல்க ளை தடுக்க காவல்துறை மற்றும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் காஞ்சி க்கோவில் அடுத்துள்ள பெ த்தாம் பாளையம் பகுதியில் ஒரு கும்பல் சட்ட விரோதமா க முயல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக காஞ்சிக்கோவில் போலீஸ் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடை த்துள்ளது.

    அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடி சோதனை மேற்கொ ண்டனர்.

    அப்போது சட்ட விரோதமாக முயல் வேட்டையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ், பொன்னு சாமி ஆகிய 2 பேரை கைது செய்து செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வேட்டைக்கு பயன்படுத்திய உபகரணங்க ள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேர் மற்றும் பறிமுதல் செய்யப் பட்ட பொருட்களையும் ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அண்ணா தியேட்டர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில் ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் இரும்பநாடு பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் தவமணிசெல்வம் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரிடமிருந்த 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அறச்சலூர் தலவுமலை எல்பிபீ வாய்க்கால் அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக குறிஞ்சி நகரை சேர்ந்த விஜயன் (36) என்பவரை போலீசார் கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • பெருந்துறை போலீசார் ரோந்து சென்றனர்.
    • பூமாணிக்கத்தை கைது செய்து 40 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் மேக்கூர் இந்திரா நகர் பகுதியில் பெருந்துறை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த மர்மநபர் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முற்பட்டார்.

    இதையடுத்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனைக்கு வைத்திருப்பதும், அவரிடம் நடத்திய விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த பூமாணிக்கம் (52) என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பூமாணிக்கத்தை கைது செய்து 40 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல், சத்தியமங்கலம் கரட்டூர் சாலையில் கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றதாக சத்தி ஜலிகுழி வீதியை சேர்ந்த நாகராஜ்(69) என்பவரை போலீசார் கைது செய்து 24 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    • பொதுமக்கள் செல்போன் திருடிய 2 பேரை மடக்கி பிடித்தனர்.
    • போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கரு மாண்டி செல்லிபாளை யத்தை சேர்ந்தவர் தாமோ தரன் (23). இவர் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் மடத்துப்பாளையம் பகுதிக்கு வாடகைக்கு ஆட்டோவில் சென்றார்.

    இதை தொடர்ந்து அவர் தனது ஆட்டோவில் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை வைத்து விட்டு சென்றுள்ளார்.

    அப்போது 2 பேர் தனது செல்போனை திருடி கொண்டு சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாமோதரன் சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் செல்போன் திருடிய 2 பேரை மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து அவர்க ளை பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணை யில் அவர்கள் குன்னத்தூரை சேர்ந்த சபரி (வயது 25), சம்பத்குமார் (37) என்பது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • போலீசார் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • அவர்களிடம் இருந்து 3 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் வெளிமாநில வெள்ளை தாளில் எண் எழுதிய துண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு இதை வாங்கினால் பரிசுகள் விழும் என 2 பேர் கூறியுள்ளனர்.

    இது குறித்து கண்ணன் பவானி போலீசாரிடம் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது பவானி குருப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயராஜ் (52) மற்றும் பவானி பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (32) ஆகியோர் என்பதும்,

    வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 3 விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 3 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

    ×