என் மலர்
நீங்கள் தேடியது "2 people arrested for"
- டி.ஜி.புதூரில் உள்ள தனியார் மண்டபத்தின் முன்பு நிறுத்தி இருந்து போது திருட் போனது.
- வாகனத்தை திருடியது கணக்கம் பாளையம் பாரதி வீதியை சேர்ந்த நடராஜ் என்பது தெரியவந்தது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் மாதாகோயில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மொபட் கடந்த 5-ந் தேதி டி.ஜி.புதூரில் உள்ள தனியார் மண்டபத்தின் முன்பு நிறுத்தி இருந்து போது திருட் போனது.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசாரிடம் நாகராஜ் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நாகராஜின் மொபட் திருட்போன பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் வாகனத்தை திருடியது கணக்கம் பாளையம் பாரதி வீதியை சேர்ந்த நடராஜ் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடராஜை கைது செய்து அவரிடம் இருந்த மொபட்டை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த ரத்தினாள் (57). இவரது கணவர் முருகன் கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.
சம்பவத்தன்று முருகன் சத்தியமங்கலம் சென்று விட்டு வீடு திரும்பிய போது டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே தனது மொபட்டை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது தனது மொபட்டை யாரோ எடுத்து சென்றுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த முருகனும் அவரது மனைவியும் இது குறித்து விசாரித்ததில் மொபட்டை திருடி சென்ற நபர் டி.என்.பாளையம் 4-வது வார்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து முருகனின் மனைவி ரத்தினாள் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரஞ்சித் (25) என்பவரை பிடித்து கைது செய்து திருடப்பட்ட மொபட்டை பறிமுதல் செய்தனர்.
- கடையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- அப்போது கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 31).இவர் விஜயமங்கலம், பெருமாள் கோவில் பின்புறம் கடந்த 8 வருடங்களாக பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு இவர் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறு நாள் காலை கடைக்கு வந்து கேட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கடையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் சுற்று சுவர் அருகே ஒரு பழைய பிளாஸ்டிக் டிரம் இருந்தது. பின்னர் பொருட்களை சரி பார்த்தார்.
அப்போது கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த 60 கிலோ எடையுள்ள இரு சக்கர வாகன பேட்டரிகள், 80 கிலோ எடை உள்ள செம்பு கம்பிகள், 40 கிலோ எடையுள்ள பித்தளை பொருட்கள் என மொத்தம் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருந்ததும் மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் கொடு த்தார். இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா க்களை ஆய்வு செய்தார்.
அப்போது அதில் 2 பேர் இரும்பு கடையில் பழைய பொருட்களை திருடி ஒரு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றது தெரிய வந்தது. அவர்களின் உருவங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே பஞ்சர் கடை வைத்து நடத்தி வரும் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் ஈரோடு, முத்தம்பாளை யம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சுரேஷ் (27) ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த பக்கிரி (36) என்பதும் விஜயமங்கலம் பழைய இரும்பு கடையில் பொரு ட்களை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களி டம் இருந்து திருட பயன்படுத்திய வாகனம் மற்றும் ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பவானி பழைய பாலம் அருகில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
- கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி:
பவானி பழைய பாலம் அருகில் பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில் மறைவான இடத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பவானி கல்தொழிலாளர் மூன்றாவது வீதியில் வசிக்கும் கண்ணன் (23) என்பது தெரிய வந்தது அதிக விலைக்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் பவானி அந்தியூர் மெயின் ரோடு பண்டாரப்பச்சி கோவில் பின்பகுதியில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்துக் கொண்டு விற்பனை செய்த குற்றத்திற்காக கல் தொழிலாளர் 1-வது வீதியில் வசிக்கும் பிரபாகரன் (31) என்பவர் கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை
- பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர்
பவானி,
பவானி அருகில் உள்ள சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் பவானி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சிங்காரவேலன் பெட்டிக்கடை அருகே மறைவான இடத்தில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பவானி சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் வசிக்கும் சிங்காரவேலன் (39) என்பவர் கைது செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் பவானி அந்தியூர் ஜங்ஷன் பூக்கடை அருகில் மறைவான பகுதியில் மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
- மின் மோட்டார் கேபிள் வயர் வெட்டப்பட்டு இருந்துள்ளது.
- விசாரித்ததில் 2பேர் வயர் திருடியதை ஒப்பு கொண்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், ஒட்டப்பாறை பஞ்சாயத்து, நாமக்கல்பாளையத்தினை சேர்ந்தவர் பூபதி (26). இவர் ஒட்டப்பாறை பஞ்சாயத்தில் குடிநீர் திறந்து விடும் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று பூபதி நாமக்கல்பாளையம் ரோட்டில் உள்ள மின் மோட்டார் அறைக்கு சென்று பார்த்த போது மின் மோட்டார் கேபிள் வயர் வெட்டப்பட்டு இருந்துள்ளது.
இது குறித்து அவர் ஒட்டப்பாறை தலைவருக்கு தகவல் தெரிவித்து விட்டு அக்கம், பக்கம் தேடி பார்த்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் சென்றதை பார்த்தார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 2 ேபரையும் பிடித்து விசாரித்தார்.
விசாரித்ததில் அவர்கள் வயர் திருடியதை ஒப்பு கொண்டனர். இதனையடுத்து 2 பேரையும் சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் வேலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், பாரதி நகர் பகுதியை சேர்ந்த பாலு (24), நாகராஜ் (27) என்பதும், இவர்கள் 2 பேரும் அண்ணன், தம்பிகள் எனவும், தற்போது ஈரோடு, சூரம்பட்டி வலசு, கோவலன் வீதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடம்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கடம்பூர்-மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் அஞ்சனை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக ஒரு ஆம்னிவேன் வந்து கொண்டிருந்தது.
அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான் மசாலாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்க ப்பட்டது.
மொத்தம் 8 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.
இதனையடுத்து வேனில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கோபி அடுத்த துறையாம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்த முகமது யாசின் (39), கோபி அடுத்த நஞ்சன் கவுண்டன் பாளையம் பகுதி சேர்ந்த மாரிமுத்து (47) என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் கர்நாடகா மாநிலத்தி லிருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆம்னி வேன் மற்றும் 8 கிலோ புகையிலை பொருட்களை யும் பறிமுதல் செய்தனர்.
- டீ கடை ஒன்றில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
- தப்பியோடிய பாலசுப்பிரமணியம் என்பவரை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அரசு மருத்துவ மனை போலீஸ் நிலைய போலீசார் நசியனூர் ரோடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள டீ கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கிருந்த நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இருப்பினும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
விசாரணையில் அங்கு கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்டிருந்தது ஈரோடு, மரப்பாலம் பகுதியை சேர்ந்த கர்ணன் (30), கைகாட்டி வலசு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் 71 மற்றும் எண்கள் எழுதப்ப ட்டிருந்த வெள்ளைத் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தப்பியோடிய பாலசுப்பிரமணியம் என்பவரை தேடி வருகின்றனர்.
- கர்நாடகா மாநில மதுவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
- தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பசுண்ணாவை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழு வதும் போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாள வாடி சி ஹெச் நகர் ரோடு, சோதனை சாவடி அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
அவரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடகா மாநில மதுவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடமிருந்த 12 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் தாளவாடி அடுத்த திகினாரை, அம்பேத்கர் தெருவை சேர்ந்த பசுண்ணா (38) என்ன தெரிய வந்தது.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பசுண்ணாவை கைது செய்தனர்.
இதேப்போல் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சித்தோடு அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
- போலீசார் 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
பவானி:
பவானி தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் தன்னிடம் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை வாங்க சொல்லி வற்புறுத்தி வரும் 2 பேர் குறித்து பவானி போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து சம்பவயிடம் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்த தனபால் (47) மற்றும் பழனிபுரம் பகுதியை சேர்ந்த குமரேசன் (47) ஆகிய 2 பேரும் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- மேலும் அவர்களிடம் இருந்த போலி லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வேட்டைக்காரன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் போலி லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடை த்தது.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் அதே பகுதியை சே ர்ந்த மோக ன்ராஜ் (37), வடுகபாளையம் புதூரை சேர்ந்த குமார் (45) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் குயில் என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட போலி லாட்டரிச் சீட்டுக ள் 10 எண்ணிக்கையில் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
- அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்.
- மது பானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பங்களாபுதூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட புஞ்சை துறையா ம்பாளையம் ஈஸ்வரன் கோவில் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அதில் அவரிடம் அரசு மது பானத்தை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ப னை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது.
விசார ணையில் அவர் கொ டிய ம்பாளை யத்தை சேர்ந்த ராம சா மி (62) என்ப து தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல மொடக்குறிச்சி போலீசார் மேற்கொ ண்ட சோத னையில் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி டாஸ்மாக் அருகில் அரசு மதுபானத்தை சட்டவிரோ தமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த மொடக்குறிச்சி, மஞ்சக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த தண்ட பாணி (78) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- போலீசார் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- அவர்களிடம் இருந்து 3 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.
பவானி:
பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் வெளிமாநில வெள்ளை தாளில் எண் எழுதிய துண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு இதை வாங்கினால் பரிசுகள் விழும் என 2 பேர் கூறியுள்ளனர்.
இது குறித்து கண்ணன் பவானி போலீசாரிடம் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது பவானி குருப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயராஜ் (52) மற்றும் பவானி பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (32) ஆகியோர் என்பதும்,
வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 3 விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 3 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.