search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட் திருடிய 2 பேர் கைது
    X

    மொபட் திருடிய 2 பேர் கைது

    • டி.ஜி.புதூரில் உள்ள தனியார் மண்டபத்தின் முன்பு நிறுத்தி இருந்து போது திருட் போனது.
    • வாகனத்தை திருடியது கணக்கம் பாளையம் பாரதி வீதியை சேர்ந்த நடராஜ் என்பது தெரியவந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் மாதாகோயில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மொபட் கடந்த 5-ந் தேதி டி.ஜி.புதூரில் உள்ள தனியார் மண்டபத்தின் முன்பு நிறுத்தி இருந்து போது திருட் போனது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசாரிடம் நாகராஜ் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நாகராஜின் மொபட் திருட்போன பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதில் வாகனத்தை திருடியது கணக்கம் பாளையம் பாரதி வீதியை சேர்ந்த நடராஜ் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடராஜை கைது செய்து அவரிடம் இருந்த மொபட்டை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த ரத்தினாள் (57). இவரது கணவர் முருகன் கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று முருகன் சத்தியமங்கலம் சென்று விட்டு வீடு திரும்பிய போது டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே தனது மொபட்டை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது தனது மொபட்டை யாரோ எடுத்து சென்றுள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த முருகனும் அவரது மனைவியும் இது குறித்து விசாரித்ததில் மொபட்டை திருடி சென்ற நபர் டி.என்.பாளையம் 4-வது வார்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்தது.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து முருகனின் மனைவி ரத்தினாள் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரஞ்சித் (25) என்பவரை பிடித்து கைது செய்து திருடப்பட்ட மொபட்டை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×