என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling liquor"

    • போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர்.
    • கைது செய்து, அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை, வயல்வெளி, வீடுகளின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததாக சிவபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (32), குளத்தூரை சேர்ந்த பட்டம்மாள் (50), விரியூரை சேர்ந்த ஜான் கென்னடி (36), குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (22), ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த வேலு (50) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    • அவல்பூந்துறை-வெள்ளோடு ரோட்டில் முதியவர் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மொடக்குறிச்சி:

    ஈேராடு மாவட்டம் சிவகிரி பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அவல்பூந்துறை-வெள்ளோடு ரோட்டில்  முதியவர் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அவல்பூந்துறை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த திருஞான சம்பத் (52) எனவும் அவர் அனுமதியின்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை
    • பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர்

    பவானி,

    பவானி அருகில் உள்ள சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் பவானி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சிங்காரவேலன் பெட்டிக்கடை அருகே மறைவான இடத்தில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து பவானி சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் வசிக்கும் சிங்காரவேலன் (39) என்பவர் கைது செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் பவானி அந்தியூர் ஜங்ஷன் பூக்கடை அருகில் மறைவான பகுதியில் மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் ரோந்துபணியில்ஈடுபட்டுஇருந்தனர்.
    • எரிசாராய பாக்கெட்களை அரசு அனுமதிஇல்லாமல்விற்பனையில்ஈடுபட்டது தெரிய வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ)சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல்மற்றும் போலீசார் ரோந்துபணியில்ஈடுபட்டுஇருந்தனர். அப்போது பண்ருட்டி பாரதி நகர் வடக்கு தெரு முருகன் மனைவிகிருஷ்ணவேணி (வயது50).இவர்வீட்டின் பின்புறம் அரசால்தடைசெய்யப்பட்டஎரிசாராய பாக்கெட்களைஅரசு அனுமதிஇல்லாமல்விற்பனையில்ஈடுபட்டது தெரிய வந்தது.இதனை தொடர்ந்துஅவரை கைது செய்துஅவரிடம் இருந்து எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும், மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

    அதன்படி நேற்று ஒரே நாளில் வரபாளையம், வெள்ளோடு, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, கொடு முடி, ஈரோடு தாலுகா, டவுன், வெள்ளிதிருப்பூர், அரச்சலூர், திங்களூர், ஆசனூர், ஆப்பக்கக்கூடல் கோபி, அந்தியூர் என்ன மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.

    இதில் அனுமதியின்றி மது விற்றதாக ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் தகரை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • நாககுப்பம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் செல்வி (வயது 36) கஜேந்திரன் (45), சித்ரா (42), சுதாகர் (55) ஆகியோர் அவர்களது வீட்டில் சாராயம் விற்று வந்தது தெரியவந்தது. அங்கு

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் தகரை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, மணிகண்டன் தலைமையிலான போலீசார் நாககுப்பம் மற்றும் தகரை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாககுப்பம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் செல்வி (வயது 36) கஜேந்திரன் (45), சித்ரா (42), சுதாகர் (55) ஆகியோர் அவர்களது வீட்டில் சாராயம் விற்று வந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். இதில் கஜேந்திரன் மற்றும் சுதாகர் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    அதேபோல் தகரை கிராமத்தில் மூணாங்கண்ணி குட்டை அருகே கலா (42), சுரேஷ் (32) ஆகியோர் சாராயம் விற்பனை செய்து வந்தவரை போலீசார் மடிக்கி பிடித்தனர். அப்போது சுதாகர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் பிடிபட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற கஜேந்திரன், சுதாகர், சுரேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சோதனையில் அனுமதியின்றி மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சத்தி-மைசூர் ரோடு காரப்பள்ளம் சோதனை சாவடியில் ஆசனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. பஸ்சில் இருந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தி கொண்டிருந்தபோது ஒரு வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரது பையை சோதனை செய்ததில் கர்நாடகா அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு வாங்கி வந்து சட்ட விரோதமாக விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் அந்த வாலிபர் கோவை சேனைக்கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த தமிழரசன் (30) என தெரிய வந்தது. இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேப்போல் நேற்று ஒரே நாளில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அனுமதியின்றி மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சிறுவலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    கெட்டிசெவியூர், சாந்தகடை பகுதி அருகே ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்த போது அவர் நம்பியூர் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (34) என்பதும் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கருங்கல்பாளையம், கொடுமுடி, கடம்பூர் பகுதிகளிலும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கர்நாடகா மாநில மதுவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
    • தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பசுண்ணாவை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழு வதும் போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன்படி தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாள வாடி சி ஹெச் நகர் ரோடு, சோதனை சாவடி அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடகா மாநில மதுவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடமிருந்த 12 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர் தாளவாடி அடுத்த திகினாரை, அம்பேத்கர் தெருவை சேர்ந்த பசுண்ணா (38) என்ன தெரிய வந்தது.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பசுண்ணாவை கைது செய்தனர்.

    இதேப்போல் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது சித்தோடு அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்த 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சோதனையில் அனுமதி இன்றி மதுவிற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறு கிறதா? என்பதை கண்காணி க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மதுவிலக்கு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் இ.வி.கே. சம்பத் சாலை, மூலப்பட்டறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்ததில் அவர் மதுரை, மேலூர் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி (45) என்பதும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரிட மிருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதேபோல் கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், சூரம்பட்டி மலைய ம்பாளையம், சிறுவலூர் என மாவட்டம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அனுமதி இன்றி மதுவிற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஒரே நாளில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
    • 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ப னை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று ஒரே நாளில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அதில் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், பெருந்துறை, தாளவாடி, சத்திய மங்கலம், பவானி போன்ற பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்த அனுமதி கொடுத்ததற்காகவும்,

    அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்டதாகவும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 32 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    • 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என சிவகிரி, வரப்பாளையம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது கொமரபாளையம் மற்றும் கோவில் காடு பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த நம்பியூர் கொமரபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திருநாவுக்கரசு (வயது 31), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் நாகராஜன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×