search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4ஜி"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.51 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 428 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. '

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை ப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்ட மும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

    நீர்வரத்தை விட பாசன த்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.51 அடியாக உள்ளது.

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 428 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடியாக நீர் திறந்து விடப்ப ட்டு வந்த நிலையில் 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதைப்போல் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவர ப்படி 31.35 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 5.01 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.56 அடியாகவும் உள்ளது.

    • மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையின் நீர்மட்டம் 74.58 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்ப ட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.58 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடி 1,534 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 4,887 கனடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காளிங்க ராயன் பாசனத்திற்கு 550 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. 

    • இருவழி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது.
    • 4 வழிச்சாலையில் போக்கு வரத்து தொடங்கு வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சேலம்–-உளுந்துார்பேட்டை இடையிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலையில், சேலம் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய 8 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள புறவழிச்சாலைகள், இரு வழிச்சாலையாகவே உள்ளன.

    இச்சாலைகள் அகலம் குறைவாக அபாயகரமான வளைவுகளுடன் அமைந்து ள்ளதால் இச்சாலையில் பயணிப்போரிடம் 'விபத்து அச்சம்' தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, வாழப்பாடி பகுதியில் முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான 4 கி.மீ துார புறவழிச்சாலையில், போதிய எச்சரிக்கை பதாகைகள், சாலையோர மின் விளக்குகள் மற்றும் இரவில் ஒளிரும் சாலை யொட்டிகள் அமைக்கப்படா ததால் அடிக்கடி விபத்தும், உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது.

    எனவே, இருவழி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில், சேலம்-–உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புறவழிச்சாலைகளை, 4 வழிச்சாலையாக தரம் உயர்த்திட மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ் சாலைத்துறை, சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்றுள்ள தனியார் நிறுவனத்திற்கு வலியுறுத்தியது.

    இதனையடுத்து, இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலை யாக தரம் உயர்த்தும் பணி 3 மாதங்களாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    வாழப்பாடி பகுதியில் புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதால், வருகிற மே மாதத்திற்குள் 4 வழிச்சாலையில் போக்கு வரத்து தொடங்கு வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் வாழப்பாடி பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இணைப்புச்சாலை

    வாழப்பாடி பகுதியில் 4 வழிச்சாலை அமைப்பதால், வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் பகுதியில் இருந்து நீதிமன்றம் வழியாக கிழக்குகாடு குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான சாலை துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வழியின்றி அவதிக்குள் ளாகியுள்ளனர்.

    எனவே, தேசிய நெடுஞ்சாலையின் தெற்கு புறம் கிழக்குக்காடு புகையி லைக்காரர் தோட்டத்தில் இருந்து தெற்கத்தியார் தோட்டம் வரையும், வடக்குபுறம் ராதாகிருஷ்ணன் தோட்டத்தில் இருந்து பால் கூட்டுறவு சங்கம் வரையும் இணைப்புச்சாலை அமைத்து, பால் கூட்டுறவு சங்கம் அருகில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை சுரங்க பாலத்தோடு கிழக்குக்காடு சாலையை குடியிருப்பு பகுதியுடன் இணைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை.

    • நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.84 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிரு க்கிறது.

    அணையில் கீழ் பவானி வாய்க்காலு க்கு 2,200 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,500 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை மீண்டும் 104 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.83 அடியாக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று வினாடிக்கு 2,800 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 4,792 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.83 அடியாக உயர்ந்துள்ளது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் பெரும்பள்ளம், வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம் ஆகிய அணைகள் தொடர்ந்து தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. 

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் கடந்த 17-ந் தேதி மாலை பவானிசாகர் அணை மீண்டும் 102 அடியை எட்டியது. அணையின் விதிப்படி 102 அடி எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகு வழியாக அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    • சப்-இன்ஸ்பெக்டர் உத்தமசோழபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் இவர் நேற்று உத்தமசோழபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளி எதிரில் 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் அந்த 4 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து 4,500 பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் கொண்டலாம்பட்டி சின்னபுத்தூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 48), பூலாவரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சென்றாயன் (வயது 72), உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (வயது 40), நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் வயது 60 என்பது தெரியவந்தது.கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோட்டில் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.
    • இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 15 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 961 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய டெலிகாம் சந்தையில் அதிவேக 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறது. #RelianceJio



    இந்திய டெலிகாம் சந்தையில் மார்ச் 2019 இல் சராசரியாக 22.2Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்கி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 2019 இல் ரிலையன்ஸ் ஜியோ 20.9Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்கியிருந்த நிலையில் மார்ச் மாதத்தில் இணைய வேகம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 4ஜி வேகம் வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னணி இடம் பிடித்து வருகிறது. 

    அந்த வகையில் மார்ச் மாதத்தில் ஜியோ வழங்கிய டேட்டா வேகம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு அதிகமாகும். இத்துடன் 2018 ஆம் ஆண்டு முழுக்க வேகமான 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்தது. 



    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டவுன்லோடு வேகம் பிப்ரவரியில் 9.4Mbps ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் டேட்டா வேகம் 9.3Mbps ஆக இருந்தது என டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்ட போதும், டிராய் இருநிறுவனங்களின் விவரங்களை தனியாகவே வெளியிட்டிருக்கிறது. 

    வோடபோனின் சராசரி 4ஜி டவுன்லோடு வேகம் மார்ச் மாதத்தில் 7Mbps ஆக இருந்தது. ஐடியா நிறுவனம் மார்ச் மாதத்தில் 5.6Mbps வேகம் வழங்கியிருக்கிறது. இருநிறுவனங்களும் பிப்ரவரி மாதத்தில் முறையே 6.8Mbps மற்றும் 5.7Mbps வேகம் வழங்கியிருக்கின்றன.

    வோடபோன் நிறுவனம் 4ஜி அப்லோட்களில் முதலிடம் பிடித்திருக்கிறது. மார்ச் மாதத்தில் வோடபோன் அப்லோடு வேகம் 6Mbps ஆக இருந்தது. ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் அப்லோடு வேகம் முறையே 5.5Mbps மற்றும் 3.6Mbps ஆக இருந்தது. ஜியோவின் அப்லோடு வேகம் 4.6Mbps ஆக இருந்தது.
    இந்தியா முழுக்க 4ஜி சிக்னல் பரப்பளவு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. #4G



    ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் சீராக கிடைக்கவில்லை என பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை அதிரச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. 

    இந்தியாவில் 4ஜி சேவை கிடைக்கும் 50 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அனைத்து நகரங்களிலும் 4ஜி சிக்னல் பரப்பளவு குறைந்தபட்சம் 87 சதவிகிதம் என தெரியவந்துள்ளது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில் 4ஜி சிக்னல் பரப்பளவு 95.3 சதவிகிதமாக இருக்கிறது.

    4ஜி சிக்னல் பரப்பளவில் இரு இந்திய நகரங்கள் 95 சதவிகித அளவை கடந்துள்ளன. அந்த வகையில் ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சி இரண்டாவது இடம்பிடித்திருக்கிறது. ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 50 இந்திய நகரங்கள் 4ஜி பரப்பளவில் 87 மற்றும் அதற்கும் அதிகளவு புள்ளிகளை பெற்றிருக்கின்றன. இது வரும் காலங்களில் மேலும் வளர்ச்சியடையும் என தெரிகிறது.




    தன்பாத், ராஞ்சியை தொடர்ந்து ஸ்ரீநகர், ராய்பூர் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில் பாட்னாவில் 4ஜி சிக்னல் பரப்பளவு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இரண்டு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

    ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி இந்தியாவின் பெருநகரங்கள் 4ஜி சிக்னல் பரப்பளவில் சிறு பகுதிதளை வீழ்த்த முடியவில்லை. டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் 4ஜி சிக்னல் பரப்பளவு 90 சதவிகிதத்திற்கு கீழ் இருக்கிறது. 

    இந்த அறிக்கையின் படி சென்னையில் 4ஜி சிக்னல் பரப்பளவு 91.1 சதவிகிதம் ஆகும். முன்னதாக ஜனவரி மாதத்தில் 4ஜி டவுன்லோடு வேகங்களில் நவி மும்பை முதலிடம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் அலகாபாத் கடைசி இடம் பிடித்துள்ளது.
    இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா டவுன்லோடு வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #RelianceJio
    இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ 20.9Mbps வேகத்தில் 4ஜி டவுன்லோடு வழங்கியிருக்கிறது. 

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி டேட்டா வழங்குகிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் பிப்ரவரி 2019 இல் 9.4Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து வோடபோன் நிறுவனம் 6.8Mbps வேகத்தில் டேட்டா வழங்கியிருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை தொடர்ந்து ஐடியா நிறுவனம் 5.7Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. டிராயின் மைஸ்பீடு தளத்தில் வெளியாகியிருக்கும் புதிய தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. 


    ஜனவரி 2019 இல் ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி டேட்டா வேகம் 18.8Mbps ஆக இருந்தது. அதிவேக டேட்டா வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்து வருவதை போன்று ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஜனவரி 2019 இல் ஏர்டெலின் டேட்டா வேகம் 9.5Mbps ஆக இருந்தது. 

    வோடபோன் நிறுவனம் பிப்ரவரியில் 6.7Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. இந்நிறுவனம் ஜனவரி மாதத்தில் 6.8Mbps வேகத்தில் டேட்டா வழங்கியிருந்தது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்துவிட்டதால், டிராய் தனது வேகப்பட்டியிலில் இருநிறுவனங்களை தனித்தனியாகவே பட்டியலிடுகிறது.

    ஐடியா நிறுவனம் 5.5Mbps வேகத்தில் 4ஜி சேவை வழங்கியிருக்கிறது. வோடபோன் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் 6.0Mbps வேகத்தில் டேட்டா வழங்கியுள்ளது. ஜனவரி மாதத்தில் வோடபோன் 5.4Mbps வேகத்தில் டேட்டா வழங்கியது. 
    இந்தியா முழுக்க அதிவேக 4ஜி டேட்டா பெறும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஓபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #4G #internet

     

    இந்தியாவில் 4ஜி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நவி மும்பை பகுதியில் வசிப்போர் அதிவேக டவுன்லோடு வேகத்தை அனுபவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுக்க 20 நகரங்களில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது. மும்பையில் 4ஜி டவுன்லோடு வேகம் சராசரியாக 8.1Mbps ஆக இருந்ததாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    லண்டனை சேர்ந்த ஓபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் மிகக்குறைந்த டேட்டா பெறும் நகரமாக அலகாபாத் இருக்கிறது. அலகாபாத் அதிகபட்ச டேட்டா வேகம் சராசரியாக 4Mbps ஆக இருந்துள்ளது. 



    இந்தியாவின் 20 நகரங்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகாலை 4.00 மணிக்கு சராசரியாக 16.8Mbps டவுன்லோடு வேகம் பெற்றிருக்கின்றனர். தினசரி அடிப்படையில் டேட்டா வேகம் சராசரியாக 6.5Mbps ஆக இருந்தது. இரவு நேரங்களில் டவுன்லோடு வேகம் 4.5 மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது.

    இந்தியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமான 4ஜி டவுன்லோடு வேகங்களை அனுபவிக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் 20 நகரங்களில் நவி மும்பை அதிவேக டவுன்லோடு வேகம் வழங்கியிருக்கிறது. 



    "இந்தியாவில் எப்போதும் சீரான டேட்டா வேகம் வழங்கிய நகரங்கள் பட்டியலில் ஐதராபாத் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அலகாபாத்தில் டேட்டா வேகம் சீரற்று இருக்கிறது. அனைத்து நகரங்களிலும் 4ஜி டவுன்லோடு வேகங்கள் தினசரி அடிப்படையில் ஒவ்வொரு மணிக்கும் மாறிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் டேட்டா வேகம் 4.5 மடங்கு அதிகமாக இருக்கிறது" என ஓபன்சிக்னல் தொழில்நுட்ப ஆய்வாளர் ஃபிராசெஸ்கோ ரிசாடோ தெரிவித்தார்.

    இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் நாள் முழுக்க டேட்டா வேகம் குறைய துவங்கி இரவு 10.00 மணி வாக்கில் டேட்டா வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. இரவு நேரங்களில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கு சேவைகளை இண்டர்நெட் மூலம் மொபைல்களில் பயன்படுத்துவதால் டேட்டா வேகம் குறைகிறது.
    ×