மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 'டாட்டூ' தொழிலாளி கைது

வழக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 'டாட்டூ' தொழிலாளி கைது
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அடுத்துள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்த சங்கர் மகன் சரவணன் (வயது 19). இவர் டாட்டு போடும் மையத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் ஷேர் ஆட்டோவில் வேலைக்கு செல்லும் போது உடன் வந்த 15 வயதுடைய பிளஸ்-1 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகினார். அதன் பின்னர் கடந்த வாரம் பள்ளிக்கு வந்த மாணவியை பஸ் நிலையத்தில் வைத்து திருமணம் செய்து கொள்வதாக கடத்தி சென்றார். செம்பட்டி, மதுரை, வேளாங்கன்னி என பல்வேறு ஊர்களுக்கு மாணவியை அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன் பிறகு திருச்சிக்கு அழைத்துச் சென்று தங்கி உள்ளார். இதனிடையே தனது மகளை காணாமல் பெற்றோர் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவியை சரவணன் கடத்திச் சென்றது உறுதியானது. இதனையடுத்து திருச்சிக்கு சென்ற போலீசார் அவர்கள் 2 பேரையும் திண்டுக்கல் அழைத்து வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துமணி, சப்-இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் பள்ளி மாணவியை கடத்திய சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மாணவியும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

X

Maalai Malar
www.maalaimalar.com