search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dating app"

    ரஷியாவில் டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை கவர்ந்து, அவர்களை கொலை செய்து, சமைத்து உண்ணும் பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். #Russia #DatingApp
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடாலியா பக்‌ஷீவா என்ற பெண்ணும், அவரது கணவரான டிமிட்ரி பக்‌ஷீவா என்பவரும் பல ஆண்டுகளாக மனிதர்களை கொலை செய்து, அவர்களை சமைத்து உண்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில், சமீபத்தில் தனது கணவருடன் நெருக்கமாக இருந்த ஹோட்டல் ஊழியரான எலேனா என்ற பெண்ணை தனது கணவரின் மூலமாகவே கொலை செய்ய வைத்துள்ளார் நடாலியா. மனைவியின் வற்புறுத்தலினால் தோழியை கொலை செய்த ட்மிட்ரி, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி மனைவியிடம் கொடுக்க அவர் அதனை சமைத்து உண்டுள்ளார்.

    ஹோட்டல் ஊழியர் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர், நடாலியாவின் வீட்டை சோதனை செய்ததில், மனித மாமிசங்களின் மீதமும், தோல் போன்றவையும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டின் குளிர்சாதன பெட்டியில் இருந்த மாமிசம், கொலை செய்யப்பட்ட ஹோட்டல் ஊழியருடையது என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள தம்பதியிடம் விசாரணை நடத்தியதில், டேட்டிங் ஆப் மூலம் 30 பேர் வரை ஏமாற்றி வரவழைத்து கொன்று தின்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    ஏற்கனவே, நடாலியாவின் கணவர் ட்மிட்ரி மீது நிரூபிக்கப்படாத நரமாமிச குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், காசநோய் இருப்பதால் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. #Russia #DatingApp
    ஃபேஸ்புக் F8 டெவலப்பர்கள் நிகழ்வில் தனது டேட்டிங் சேவையை ஃபேஸ்புக் அறிமுகம் செய்த நிலையில், இந்த சேவைக்கான சோதனை துவங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Facebook


    ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 நிகழ்வு இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு அறிவிப்புகளுடன் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சார்ந்த அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. 

    இந்நிலையில், அறிவிப்பு வெளியான சில மாதங்களில் டேட்டிங் சேவை சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக் பணியாளர்கள் மத்தியில் முதற்கட்டமாக சோதனை செய்யப்படுவதாக ஆப் ஆய்வாளர் ஜேன் மேன்சுன் வாங் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரம் சேவையின் சோர்ஸ் கோடுகளில் இடம்பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    டேட்டிங் ப்ரோஃபைல்களில் போலி தகவல்களை பதிவு செய்ய ஃபேஸ்புக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அனைத்து தகவல்களும் பொது வெளியீட்டுக்கு முன் அழிக்கப்பட்டு விடும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய சேவை சோதனை செய்யப்பட்டாலும் துன்புறுத்தலுக்கு எதிரான விதிமுறைகள் இந்த சேவைக்கு பொருந்தும் என எச்சரித்துள்ளது.



    புதிய சேவையின் சைன்-அப் பக்கத்தில் பாலினம், இருப்பிடம் மற்றும் நீங்கள் விரும்பும் பாலினம் சார்ந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். வொங் சைன்-அப் விவரங்களை பதிவு செய்திருந்தாலும், அவரது ப்ரோஃபைல் உருவாக்க முடியவில்லை. சோதனை வெற்றிகரமாக நிறைவுற்றதும், வெளியிடப்படும் என்றும், பிடிக்காத பட்சத்தில் இந்த சேவை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் என ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.

    ஃபேஸ்புக் டேட்டிங் சேவையில் பயனர்கள் தங்களது ஃபேஸ்புக் ப்ரோஃபைலில் இருந்து வித்தியாசமான டேட்டிங் ப்ரோஃபைலை உருவாக்க முடியும். பயனர் தேர்வு செய்யும் விருப்பத்திற்க்கு ஏற்ப ப்ரோஃபைல்களை வரிசைப்படுத்தும். இவ்வாறு பொதுவாக இருக்கும் விவரங்கள், மியூச்சுவல் நண்பர்களின் ப்ரோஃபைல்கள் இடம்பெறும் நிலையில், க்ரூப் மற்றும் ஈவன்ட்களில் இருந்தும் ப்ரோஃபைல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. #Facebook
    ×