search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lust"

    • கடந்த 26-ந் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
    • கிருஷ்ணராஜ் (26)என்பவர் ஆசைவார்த்தை கூறி அனிதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகள் அனிதா (வயது 17). இவர் பண்ருட்டி தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர். வழக்கம்போல கடந்த 26-ந் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து காடாம்புலி யூர் போலீஸ் நிலையத்தில் அனிதாவின் தந்தை அருள் புகார் செய்தார்.

    அதில் பணிக்கன்குப் பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வரும் குறிஞ்சிப்பாடி புலியூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் கிருஷ்ணராஜ் (26)என்பவர் ஆசைவார்த்தை கூறி அனிதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி கல்லூரி மாணவி அனிதாவை தேடி வருகின்றனர்.

    • காட்டுமன்னார்கோயில் தாத்தா வட்டம் பகுதியை சேர்ந்த செங்கதிர் (வயது 32) என்பவரும் அதே வீட்டிற்கு சென்று தங்கினார்.
    • இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து பாட்டியிடம் தெரிவித்தனர்.

    கடலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேல்மூங்கிலடி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கினார். அப்போது இந்தப் பெண்ணின் மாமா முறையான சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோயில் தாத்தா வட்டம் பகுதியை சேர்ந்த செங்கதிர் (வயது 32) என்பவரும் அதே வீட்டிற்கு சென்று தங்கினார். இந்நிலையில் வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தனியாக அந்தப் பெண் இருந்ததே நோட்டமிட்ட செங்கதிர் அந்த பெண்ணிடம் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து பாட்டியிடம் தெரிவித்தனர். இது குறித்து பாட்டி சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செங்கதிரை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சிதம்பரம் நகர அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கடலூர்:

    சிதம்பரத்தை அடுத்த தில்லை விடங்கன் கெடச்சா வடிகாலமைப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனகாம்பாள் (வயது 19) . அதே பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை மகன் சுகன்ராஜ் இவர் 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தனியார் நூல் ஆலையில் வேலை பார்த்து வருகிறார். சுகன்ராஜ் கனகாம்பாளை காதலிப்பதாகவும், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கனகாம்பாள் சிதம்பரம் நகர அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுகன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செய்தனர்.

    ×