திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம் பெண் பாலியல் பலாத்காரம்:வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சிதம்பரம் நகர அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம் பெண் பாலியல் பலாத்காரம்:வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு
Published on

கடலூர்:

சிதம்பரத்தை அடுத்த தில்லை விடங்கன் கெடச்சா வடிகாலமைப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனகாம்பாள் (வயது 19) . அதே பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை மகன் சுகன்ராஜ் இவர் 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தனியார் நூல் ஆலையில் வேலை பார்த்து வருகிறார். சுகன்ராஜ் கனகாம்பாளை காதலிப்பதாகவும், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கனகாம்பாள் சிதம்பரம் நகர அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுகன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com