search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnapping"

    • மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார்.
    • பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு நகரமான குரிகாவில் உள்ள பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் 280-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தி சென்றனர். மாணவர்களை மீட்க உள்ளூர் மக்கள் பயங்கரவாதிகளுடன் போராடியுள்ளனர்.

    ஆனால் அவர்களை துப்பாக்கியைக் காட்டி பயங்கரவாதிகள் மிரட்டினர். இதில் ஒருவர் சுடப்பட்டதாகவும் தெரிகிறது. மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார். கடந்த ஜனவரி மாதம் இப்பள்ளியின் முதல்வரைக் கொன்றதாகவும், அவரது மனைவியைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து நைஜீரியா அதிபர்போலா டினுபு கூறும்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றார். பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்த பிறகு கடத்தியவர்களை விடுவிக்கிறார்கள்.

    கடந்த 2014-ம் ஆண்டு நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பித்தக்கது.

    • கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    • கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள அகூர் ஊராட்சி, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி (42). தொழிலாளி. இவர் நேற்று காலை தனது தாய் லட்சுமியுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசென்றார். பின்னர் மாடுகளை விவசாய நிலத்தில் கட்டி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    நத்தம் கிராமத்தில் உள்ள கோவில் மண்டபம் அருகே வந்தபோது காரில் வந்த 4 பேர் கும்பல் திடீரென கத்தி முனையில் மிரட்டி வெங்கட முனியை காரில் கடத்தினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் லட்சுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த கிராமமக்கள் கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அவர்கள் கத்தியால் வெட்ட முயன்றனர். இதனால் பயந்து போன பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் கடத்தல் கும்பல் வெங்கடமுனியை காரில் கடத்தி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திருவாலங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வெங்கடமுனியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், பல முறை பணம் கேட்டு வெங்கடமுனி தராததால் கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து சென்று இருப்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து வேலூர் பகுதிக்கு வந்து இருப்பது தெரியவந்தது. போலீசார் விரட்டிச்சென்று காரில் கடத்தப்பட்ட வெங்கடமுனியை பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கடத்தப்பட்ட வெங்கட முனியை 12 மணிநேரத்தில் போலீசார் மீட்டு உள்ளனர். இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
    • தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம்களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஆத்தூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி தீபா (வயது 42) மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    பெரம்பலூர் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவர்கள் 2 பேரையும் கடந்த 15-ந் தேதி முதல் காணவில்லை. மேலும் ஆசிரியை தீபா பயன்படுத்தி வந்த காரும் மாயமானது. அதைத்தொடர்ந்து மனைவியை காணவில்லை என தீபாவின் கணவர் பாலமுருகன் வி. களத்தூர் போலீஸ் நிலையத்திலும், கணவரை காணவில்லை என வெங்கடேசனின் மனைவி காயத்ரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கோவை பி1 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கடைவீதி பகுதியில் மாயமான ஆசிரியை தீபாவின் கார் 2 நாட்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக வி. களத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் போலீசார் விரைந்து சென்று காரைத்திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் ரத்தக் கறை படிந்த சுத்தியல், தீபா அணிந்திருந்த தாலி, கொலுசு, அவரின் ஏ.டி.எம். கார்டு வெங்கடேசனின் 2 செல்போன்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இதனிடையே ஆசிரியர் வெங்கடேசன் செல்போனில் இருந்து பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தீபா கதி என்ன என்பது குறித்து தனிப்படை கோவை, தேனி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளது.

    தனிப்படை போலீசார் விசாரணையில் ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தீபா என்ன ஆனார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. இதனிடையே கோவை, மதுரை, தேனி ஆகிய இடங்களில் ஏ.டி.எம்க.ளில் வெங்கடேசன் பணம் எடுத்த போது அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது.

    வெங்கடேசன் தொடர்பு கொண்டு பேசுபவர்களின் செல்போன் எண்களை விசாரிக்கும் போது, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது தெரிய வந்தது.

    தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம் களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    மாயமான ஆசிரியர் வெங்கடேசன், தனது இருப்பிடத்தை போலீசர் அறிந்துவிடுவார்கள் என அவ்வப்போது சிம்கார்டுகளையும், தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றி மாற்றி வருகிறார். இதனால் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தீபாவை வெங்கடேசன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே ஆசிரியை தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
    • கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37). இவர் கண்ணு வலி கிழங்கு என சொல்லப்படும் செங்காந்தாள் விதை வியாபாரம் செய்து வருகிறார்.

    செங்காந்தாள் விதை கொள்முதல் செய்வதற்காக நண்பர்கள் அவினாசியை சேர்ந்த குமார், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வாஞ்சியப்பன் (39) ஆகியோருடன் 50 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு காரில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி காலை 4.30 மணிக்கு சேலம் இரும்பாலை அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மற்றொரு காரில் வந்த மர்மகும்பல் போலீஸ் என கூறி வெங்கடேஷ், அவருடன் வந்த குமார், வாஞ்சியப்பன் ஆகியோரை பணத்துடன் காரில் கடத்தியது. பின்னர் தாரமங்கலம் அருகே மாரமங்கலத்துப்பட்டி பகுதியில் இறக்கி விட்டு விட்டு கடத்தல் கும்பல் தப்பி சென்றது.

    இது குறித்து வெங்கடேஷ் இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து இந்த கடத்தலில் தொடர்புடைய 6 பேரை செப்டம்பர் மாதம் இறுதியில் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை பிடிக்க துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை விசாரித்து வந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள முத்தியால் பள்ளியை சேர்ந்த நடராஜன் (53), அவரது மனைவி சுஜாதா (45) ஆகியோரை நேற்று கைது செய்தனர் . தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவல் படி சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூசாரி வட்டம் சீனிவாசன் (44) , கீரப்பாப்பம்பாடி மகாலிங்கம் (39), மாமாங்கம் ஜெகன்மோகன் (44), தர்மபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகர் கோபி (38) ஆகியோரை அவரவர் வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 6 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    • வனத்துறையினர் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • யாருக்கு விற்பனை செய்ய அம்பர் கிரிசை கொண்டு வந்தார்கள்? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சம் வாசனை திரவியங்கள் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை சிலர் கடத்தி கொண்டு சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் அம்பர் கிரிஸ் விற்பனை செய்யப்படுவதாகவும், சிலர் கடத்தி கொண்டு வருவதாகவும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காரில் வந்த ஒரு கும்பலை வனத்துறையினர் பிடித்தனர். அந்த காரில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் அவர்களது காரை வனத்துறையினர் சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களது காரில் அம்பர் கிரிஸ் கடத்தியது தெரியவந்தது. காரில் இருந்த 11 கிலோ அம்பர் கிரிசை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த நாராயணன்(வயது41), மேலப்பாளையத்தைச் சேர்ந்த அருணாச்சலம்(53), வேலாயுதம்(47), நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தர் (25) என்பது தெரியவந்தது.

    நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு அம்பர் கிரிசை விற்பனைக்காக கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர். அது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் யாருக்கு விற்பனை செய்ய அம்பர் கிரிசை கொண்டு வந்தார்கள்? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    இதில் தொடர்புடைய நாகர்கோவில் சேர்ந்த நபரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரிசின் மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. 

    • திருவெண்ணைநல்லூர் அருகே மினி லாரியில் ஆற்று மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மினி லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் போலீசார் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆனத்தூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மினி லாரி ஒன்று வேகமாக வந்தது. மினி லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது மினி லாரியில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தப்பட்டதை கண்டனர். இதையடுத்து மினிலாரியை ஓட்டிவந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி வட்டம் உளுந்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது.
    • கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.

    அதேபோல் மானாம்பேட்டை சோதனை சாவடியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.

    அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

    இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மானம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது 49), திருச்செங்காட்டங்குடி தெற்கு தெருவை சேர்ந்த தியாகராஜன் (வயது 32) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் திருவாரூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 26-ந் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
    • கிருஷ்ணராஜ் (26)என்பவர் ஆசைவார்த்தை கூறி அனிதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகள் அனிதா (வயது 17). இவர் பண்ருட்டி தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர். வழக்கம்போல கடந்த 26-ந் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து காடாம்புலி யூர் போலீஸ் நிலையத்தில் அனிதாவின் தந்தை அருள் புகார் செய்தார்.

    அதில் பணிக்கன்குப் பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வரும் குறிஞ்சிப்பாடி புலியூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் கிருஷ்ணராஜ் (26)என்பவர் ஆசைவார்த்தை கூறி அனிதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி கல்லூரி மாணவி அனிதாவை தேடி வருகின்றனர்.

    • மீதமுள்ள ரூ.4 லட்சத்தை கவியரசன் திருப்பி கேட்டுள்ளார்.
    • போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசன், தொழில் அதிபர் இவர் தனது நண்பர் தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் என்பவர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த பாலகுமாரன் என்பவரிடம் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    மேலும் ரூ.4 லட்சத்தை கவியரசன் திருப்பி கொடுத்துள்ளார். மீதி தொகையை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

    இந்நிலையில் ஸ்டீபன் செல்வகுமார் தொலைபேசி மூலம் கவியரசனை தஞ்சாவூருக்கு அழைத்துள்ளார்.

    தஞ்சாவூருக்கு சென்ற கவியரசனை பைனான்சியர் பாலகுமாரன் உள்ளிட்டோர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கவியரசனின் மனைவி அனுசியா தேவிக்கு போன் மூலம் வாங்கிய கடன் தொகையை கொடுத்துவிட்டு மீட்டுச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அனுசியா தேவி இது குறித்து திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பைனான்சியர் பாலகுமாரன், அவரது சகோதரர் பாலமுருகன், புதுக்கோட்டை அத்திவெட்டியைச் சேர்ந்த புகழேந்தி, மணிகண்டன், தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் ஆகியோர் தஞ்சாவூர் சென்று கவியரசனை கடத்திச் சென்று புதுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி அய்யனார் கோவில் அருகே அடைத்து வைத்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய புகழேந்தி மற்றும் ஸ்டீபன் செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் தலைம றைவான பைனான்சியர் பாலகுமாரன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • தொடர்ந்து குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ராஜிபாளையம் பகுதியில் அழுக்கான கிழிந்த ஆடைகளை அணிந்த 2 வாலிபர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்கள் பெரிய சாக்கு மூட்டைகளை தோளில் சுமந்தபடி சென்றனர்.

    இதனைக் கண்ட அந்த பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வாலிபர்களை மடக்கி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    மேலும் பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் 2 வாலிபர்களும் அங்கிருந்து மூட்டைகளுடன் ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை அவிழ்த்து பார்த்த போது அதில் 2 குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வாலிபர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    அவர்களை நெல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தைகளை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அழுக்கான கிழிந்த ஆடைகளுடன் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர்கள் போல் சென்று அவர்கள் குழந்தைகளை கடத்தி சென்றது தெரியவந்தது.

    குறிப்பாக தெருவில் விளையாடும் குழந்தைகளை மயக்க மருந்து தெளித்தும் கைக்குட்டையில் மயக்க பவுடர் வைத்து அதன் மூலமும் மயங்க செய்து சாக்கு மூட்டையில் கட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது.

    பிடிபட்ட வாலிபர்களில் ஒருவர் இதுவரை 2 குழந்தைகளையும் மற்றொருவர் 10 குழந்தைகளையும் கடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

    கடத்தப்பட்ட குழந்தைகளை நெல்லூர் காவாலி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் வைத்து கடத்தல் கும்பல் தலைவனிடம் குழந்தைகளை ஒப்படைத்துள்ளனர். அதற்கு ரூ.5 ஆயிரம் முதல் பணம் வாங்கியுள்ளனர்.

    பணத்திற்கு பதிலாக மது பாட்டில்களையும் வாங்கியுள்ளனர்.

    இதுவரை கடத்தப்பட்ட குழந்தைகள் என்ன ஆனார்கள்? அவர்கள் எங்கு உள்ளார்கள்? குழந்தைகளை வாங்கியவர்கள் யார்? என போலீசார் பிடிபட்ட 2 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த குழந்தைகளை பிச்சை எடுக்கவும், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் உடல் உறுப்புகளை திருடி விற்பதாகவும் தகவல் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ந்து குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    தற்போது மீட்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மளிகை கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்கியபோது சிறுமியிடம் பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பவளத்தனூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 17 வயது மகள் பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தில் பைப்லைன் அமைக்கும் பணிக்காக ஓமலூர் அருகே குதிரை குத்திபள்ளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மோகன், பெருமாள் ஆகியோர் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் வேலை செய்து வந்துள்ளனர்.

    அப்போது அவர்கள் அருகில் இருந்த மளிகை கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்கியபோது சிறுமியிடம் பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பந்தபட்ட சிறுமி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து மாயமானார்.

    இதுகுறிதது சிறுமியின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதில் தங்களது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக பெருமாள் (25) என்பவர் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை கட்டி கொண்டு சென்ற நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • 55 கிலோ பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திரா அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை போலீ சார் அறிவழகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை கட்டி கொண்டு சென்ற நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைகடலி மெயின் ரோட்டில் உள்ள ஒருவரின் கடைக்கு கடத்தியது தெரியவந்தது .

    இதனிடையே இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த ராஜா, மணிமாறன் மற்றும் ஜெயராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து கடத்தி வந்த தடை செய்யப்பட்ட 55 கிலோ பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து பெரம்பூர் காவல் துறையினரிடம் குற்றவா ளிகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×