என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் இளம்பெண் காரில் கடத்தல்- 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு
    X

    பாளையில் இளம்பெண் காரில் கடத்தல்- 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு

    • நேற்று மாலை சந்திரா தனது 3 மகள்களையும் அழைத்துக் கொண்டு பாளை ராமர் கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்றார்.
    • விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள மைதானம் அருகே சென்ற போது ஒரு காரில் வந்த 2 வாலிபர்கள் கண்ணி மைக்கும் நேரத்தில் மீனாவை கடத்திச் சென்றனர்.

    நெல்லை:

    பாளை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த வர் குமாரவேல். இவரது மனைவி சந்திரா (வயது 63). இவர்களுக்கு மீனா (24) உட்பட 3 மகள்கள் உள்ளனர்.

    காரில் கடத்தல்

    நேற்று மாலை சந்திரா தனது 3 மகள்களையும் அழைத்துக் கொண்டு பாளை ராமர் கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்றார். பின்னர் அவர்கள் 4 பேரும் வீட்டுக்கு திரும்பினர்.

    அங்குள்ள விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள மைதானம் அருகே சென்ற போது ஒரு காரில் வந்த 2 வாலிபர்கள் கண்ணி மைக்கும் நேரத்தில் மீனாவை கடத்திச் சென்றனர்.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக சந்திரா பாளை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் இன்ஸ் பெக்டர் வாசிவம் வழக் குப்பதிவு செய்து மீனாவை கடத்தி சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×