என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  ஓடும் பஸ்சில்  பிளஸ் -2  மாணவி  கடத்தல்
    X

    பண்ருட்டியில் ஓடும் பஸ்சில் பிளஸ் -2 மாணவி கடத்தல்

    • ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் வந்து பார்த்த போது மாணவியை காணவில்லை.
    • மேல்பட்டாம்பாக்கம் தமிழ்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது

    கடலூர்:

    விழுப்புரம் ஜி.ஆர். பி. நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண்மேல் பட்டாம்பாக்கம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்நேற்று தனது அண்ணனுடன் பஸ்சில் ஏறினார். அப்போது விழுப்புரம் செல்லும் போது அண்ணன் முன்பக்கமும், மாணவி பின் பக்கமும் உட்கார்ந்து சென்றனர். ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் வந்து பார்த்த போது மாணவியை காணவில்லை.

    இவரை ஓடும் பஸ்சில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் தமிழ்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) வழக்கு பதிவு செய்து கடத்திச் செல்லப்பட்ட மாணவியை வலை வீசி தேடி வருகிறார்.

    Next Story
    ×