என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vellore"
வேலூர்:
தமிழகத்திலும் இத்தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து தமிழகத்தில் தேவாலயங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கந்தர்ப்பதாஸ் என்ற பயங்கரவாதியை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டம் வேலூர் மாவட்டம். இங்கும் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் வருகின்றனர்.
வேலூரில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தவர்கள் உள்ளனர். நோயாளிகள் போர்வையில் நாசவேலையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் சோதனை செய்ய காவல்துறை சார்பில் 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 30 குழுக்களை சேர்ந்த போலீசார் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
5 குழுவினர் வேலூர் மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதி போலீசாரும் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
முக்கிய சுற்றுலா தலமான ஏலகிரிமலையில் உள்ள தங்கும் விடுதிகளை ஒரு குழுவினரும், ஆம்பூர், காட்பாடி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் தலா ஒரு குழுவினரும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் மற்றும் ஆந்திர எல்லை பகுதியிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பஸ் நிலையம், தேவாலயங்கள் மற்றும் முக்கிய இடங்களை கண்காணித்து வருகின்றனர்.
சந்தேகப்படும் படியாக யாராவது நடமாடினால் அது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். #SrilankanBlasts
வேலூர்:
தமிழகத்தில் கடந்த 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க வேலூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
காட்பாடியில் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் 3 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பின்னர் பறக்கும் படையினர் சோதனைப்பணியை மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 39 பறக்கும் படையினர் மீண்டும் இன்று முதல் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பு போல ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லபடும் பணம் பொருட்கள் பறிமுதல் செய்யபடும். இந்த சோதனை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை அமலில் இருக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனையால் வியாபாரிகள் பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் அதற்காக தான் இந்த வாகன சோதனை நடத்தப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 24 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் சோதனை செய்து வருகின்றனர். #LokSabhaElections2019
வேலூர்:
வேலூர் தெற்கு போலீசார் நேற்று முன்தினம் அண்ணாசாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவரை போலீசார் நிறுத்தினர்.
விசாரணையில், அவர் வேலூரை சேர்ந்த விக்னேஷ் (வயது 27) என்பதும், வாகனத்தின் சைலன்சரை அதிக சத்தம் வரும் வகையில் மாற்றி அமைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் பருவமழை தவறியதையடுத்து கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கேற்ப கோடை தொடங்கியதும் 100 டிகிரியை தாண்டியே வெயில் கொளுத்தியது.
கடந்த 3 நாட்களாக வெயிலின் டிகிரி 105 டிகிரியை தாண்டிய நிலையில் நேற்று 107.6 டிகிரியாக சுட்டெரித்தது. தகித்த வெயிலுடன் அனல் காற்றும் சேர்ந்து வீசியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் வேதனைக்கு ஆளாகினர்.
வேலூர் மட்டுமின்றி மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம் நகரங்களில் வெயிலின் உக்கிரம் அதிகரித்து சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன நடமாட்டமும் குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. குளிர்பான கடைகளிலும், இளநீர் கடைகளிலும், கரும்புச்சாறு, பழரச கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
அப்படி வெளியில் நடமாடினாலும் குடைகளுடன் செல்வதுடன், அடர்த்தியான வண்ணம் கொண்ட நைலான், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழை ஆடைகளை தவிர்த்து பருத்தியாலான ஆடைகளை அணிய வேண்டும்.
அதிகளவில் நீராகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வெப்பத்தாக்குதல் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பில் இருந்தும், கோடைகால நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். #SummerHeat
வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக இருக்கும்.
வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் வெயில் அளவு அதிகரித்து, மே மாத இறுதியில் உச்சத்தை தொடும். அந்த சமயத்தில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும். ஆனால் இந்தாண்டு கடந்த மாத இறுதியில் இருந்து தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது.
காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சம் அடைகிறது. கடுமையான வெயில் அனல் காற்றால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வேலூரில் நேற்று வெயிலின் அளவு இதுவரை இல்லாத வகையில் 106.5 டிகிரி கொளுத்தியது. இதனால் வேலூரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பொதுமக்கள் வெயிலின் வெப்பத்தை தணிக்க குளிர்பான கடைகள், பழச்சாறு கடைகளில் தஞ்சம் அடைந்தனர்.
பகலில் அடித்த வெயிலின் தாக்கம் இரவிலும் தெரிந்தது. மின்விசிறிகள் அனல்காற்றை கக்கியது. இதனால் குழந்தைகள் முதியவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர். இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் நேற்று வேலூர் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, வேலூரில் 106.5 டிகிரி கொளுத்தியது.
கரூர் பரமத்தியில் 105 டிகிரியும், மதுரை விமான நிலையம், மதுரை தெற்கு, திருச்சி, திருத்தணியில் 104 டிகிரியும், சேலம், நாமக்கலில் 103 டிகிரியும், தருமபுரி, பாளையங்கோட்டையில் 102 டிகிரியும், கோயம்புத்தூரில் 100 டிகிரியும் வாட்டியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் இன்று வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என்றும் அதேநேரத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Summer
வேலூர் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளையொட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்றும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் மூட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் 11-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஆந்திர மாநிலத்தையொட்டிய தமிழக எல்லையில் 5 கிலோ மீட்டருக்குள் இயங்கி வரும் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் 11-ந் தேதி மாலை 6 மணிவரையில் மூடி வைக்க வேண்டும்.
அதேபோன்று தமிழ்நாட்டில் வருகிற 18-ந் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் 18-ந் தேதி இரவு 12 மணிவரையிலும், மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அன்றைய தினத்திலும் சில்லரை விற்பனை மதுபான கடைகள் மற்றும் மதுக்கூட்டங்களை மூடி வைக்க வேண்டும். ஆக மொத்தம் மாவட்டத்தில் 7 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மேற்படி நாட்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல் அன்றைய தினங்களில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மதுக்கூடங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது காட்பாடியில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ஒரு பேக்கில் ரூ. 1 லட்சம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணம் எடுத்து வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்பாடி காந்தி நகரை சேர்ந்த மணிவண்ணன் (45) என்பது தெரியவந்தது.
சென்னைக்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை வேலூர் தாசில்தார் பழனியிடம் பறக்கும் படை போலீசார் ஒப்படைத்தனர். #Parliamentelection #LSPolls
பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் ராமன் ஆம்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், தேர்தலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, தாசில்தார் சுஜாதா மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் ஆம்பூர் தொகுதி மக்கள் 2 வாக்கு செலுத்த வேண்டும். வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ளவர்களுக்கு வருகிற 24-ந் தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு 4 கட்ட பயிற்சி அளிக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கும், ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை வேலூரில் உள்ள தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தான் நடக்கும்’ என்றார்.
அதைத்தொடர்ந்து வாணியம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்தும், அதன் விவரங்களையும் கேட்டறிந்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறைகளை கலெக்டர் எஸ்.ஏ.ராமன் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து மண்டல அலுவலர்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தாசில்தார் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமநந்தினி, வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன், துணை தாசில்தார் பலராமன், கிராம நிர்வாக அலுவலர்கள் தரணி, சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர். #LSPoll
வேலூர்:
தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைதேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லபடுவதை தடுக்கும் பொருட்டு நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிரவாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது காட்பாடி வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ஒரு பேக்கில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணம் எடுத்து வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்பாடி காந்தி நகரை சேர்ந்த பிரசாத் (வயது 44) என்பதும் காண்ட்ராக்ட் தொழில் செய்வதும் தெரியவந்தது.
தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க சென்னைக்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை வேலூர் தாசில்தார் பழனியிடம் பறக்கும் படை போலீசார் ஒப்படைத்தனர். #LSPolls
வேலூர்:
வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் ரபியுல்லா (வயது 50). வீட்டின் அருகில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் நாகூர் தர்காவுக்கு சென்றிருந்தார்.
மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இன்று வீடு திரும்பிய ரபியுல்லா வீட்டில் கொள்ளை நடந்தது கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.