என் மலர்
நீங்கள் தேடியது "Vellore"
- வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி ஜானகிராமன் அலறி துடித்தார்.
- படுகாயமடைந்த லோகேசை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ராமநாயினி குப்பத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது55), விவசாயி. இவரது மனைவி மல்லிகா(50). இவரது மகன்கள் விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22).
லோகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். விகாஷ், ஜீவா ஆகியோர் சொந்த ஊரிலேயே ஜானகிராமனுக்கு உதவியாக நர்சரி கார்டன் வைத்து விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு ஜானகிராமன் மற்றும் அவரது மகன்கள் விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி ஜானகிராமன் அலறி துடித்தார். இதனை பார்த்த 3 மகன்களும் தந்தையை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது 3 மகன்களும் மின் வேலியில் சிக்கி கொண்டனர்.
சிறிது நேரத்தில் ஜானகிராமன், விகாஷ், ஜீவா ஆகிய 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லோகேஷ் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர், 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த லோகேசை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்த பக்கத்து நிலத்தை சேர்ந்த சங்கர் (52), விவசாயி என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை குப்பம்பட்டு கிராமத்தில் இருந்த அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்திய கும்பல் சிறுவனை அங்கு விட்டு சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- டாக்டர் ராமதாசுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு அன்புமணி கூட்டிய கூட்டங்களில் வட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவருடைய மகன் அன்புமணி இடையே கட்சி பூசல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
நேற்று தைலாபுரத்தில் இருவரும் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகி அந்த கட்சியினரை விரக்தியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் வேலூர் மாநகர் பகுதி மற்றும் குடியாத்தம், அணைக்கட்டு பள்ளி கொண்டா, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த சுவரொட்டிகளில் அய்யா தான் அடையாளம்.. அய்யா தான்... அதிகாரம் அய்யா தானே எல்லாம். சிறை சென்றவனே தலைவன் என்ற வாசகங்கள் அடங்கியுள்ளன.
டாக்டர் ராமதாசுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு அன்புமணி கூட்டிய கூட்டங்களில் வட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 80 சதவீதத்திற்கும் மேல் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது கட்சியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை.
- ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.
வேலூர்:
வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே. நகர் திரவுபதியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு (வயது 33). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். சபீனாபானு, சின்னஅல்லாபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
தொடர்ந்து சதுப்பேரியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலூர் விருப்பாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரும் வேலை செய்து வந்தார்.
இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் பேசுவதை சபீனா பானு தவிர்த்து வந்தார்.
பலமுறை சுரேஷ், சபீனாபானுவை தொடர்பு கொண்டும் அவர் பேச மறுத்ததாக தெரிகிறது. இதனால் சபீனாபானு மீது கோபத்தில் இருந்த சுரேஷ், நேற்றும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து நேற்று இரவு 11.30 மணியளவில் சுரேஷ், சின்ன அல்லாபுரத்தில் உள்ள சபீனாபானுவின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் 'ஏன் என்னிடம் 2 மாதங்களாக பேசவில்லை.
வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா?' என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.
இதை பார்த்த சபீனாபானுவின் தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகியோர் தடுக்க முயன்றனர். இருவரையும் சுரேஷ் கம்பியால் தலையில் தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அவர்கள் மயங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனாபானு, வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்ற சுரேஷ், சபீனாபானு வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் அருகே மடக்கி அவரை சரமாரியாக தாக்கினார் .
இதில் சம்பவ இடத்திலேயே சபீனாபானு பரிதாபமாக இறந்தார். உடனே, சுரேஷ் தனது பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் சக்கரவர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சுரேஷின் செல்போன் எண்ணை வைத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்.
அங்கு தனது அறையில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சுரேஷ் பிணமாக தொங்கினார்.
சபீனாபானுவை கொலை செய்த பின்னர், வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த சபீனாபானுவின் பெற்றோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மது அருந்திக்கொண்டு இருந்தவர்களுக்கும் சரத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர், ஆவாரம் பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 34). ஆட்டோ டிரைவர்.
இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி அமை ப்பாளராக இருந்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று சரத்குமார் அரியூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது அருந்தி கொண்டு இருந்தார். அப்பகுதியில் மது அருந்திக்கொண்டு இருந்தவர்களுக்கும் சரத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் படுகாயடைந்தார். கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சரத்கு மாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக ஆஸ்பத்திரி முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அரியூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
- வேலூர் நகரில் இன்று பகலில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில் மழை.
- வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, வேலூர், கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
வேலூரில் 105.1 டிகிரி, திருச்சியில் 102 டிகிரி, திருத்தணியில் 102 டிகிரி, சென்னையில் 101 டிகிரி, கரூர், மதுரை, தஞ்சாவூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்துள்ளது.
வேலூர் நகரில் இன்று பகலில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
வேலூர் மாநகரில் சத்துவாச்சாரி, வள்ளலார், காட்பாடி, திருவலம், கொணவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியால், மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
- விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில்.
- மின்விளக்கு ஒளியில் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரதராமியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இரவு 7 மணி அளவில் கோவில் உட்புற சுவற்றில் மின்விளக்கு ஒளியில் விநாயகர் சன்னதியின் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.
இதன்மூலம் சிவபெருமான் காட்சி அளித்ததாக பக்தர்கள் பரவச மடைந்தனர். இதனைக் கண்டு மெய் சிலிர்த்து வணங்கினர்.
மின்விளக்கு ஒளி தெரியும் இடத்திற்கும் சிவலிங்கம் ஒளி உருவான இடத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் மின்விளக்கு எரிந்தவுடன் சிவலிங்கம் தென்பட்டது. பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ பரவி வருகிறது.
- இசுரேலின், நெகேவ் டிம்னா பூங்காவில் உள்ள காணப்படும் காளான் பாறைகள் இந்தியாவில் தார் பாலை வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
- அதிசய காளான் பாறைகள் வேலூர் மாவட்டம் சிவநாதபுரம் அருகில் உள்ள குருமலையில் கண்டறியப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் சிவநாதபுரத்தில் அதிசய காளான் பாறை கண்டறியப்பட்டுள்ளது.
இசுரேலின், நெகேவ் டிம்னா பூங்காவில் உள்ள காணப்படும் காளான் பாறைகள் இந்தியாவில் தார் பாலை வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லை திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தில், கதிரியப்பன் கோவில் வட்டம் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அதிசய காளான் பாறைகள் தற்போது வேலூர் மாவட்டம் சிவநாதபுரம் அருகில் உள்ள குருமலையில் கண்டறியப்பட்டுள்ளது.
- நான் இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறேன். ஏனெனில் எனக்கு வேலூரை விட்டால் வேறு வழியில்லை
- தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன்
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.
வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அவர் இன்று வேலூரில் தேர்தல் அலுவலகம் சென்று முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "எத்தனையோ கட்சிகள் எத்தனையோ இடங்களில் போட்டியிடட்டும். நான் இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறேன். ஏனெனில் எனக்கு வேலூரை விட்டால் வேறு வழியில்லை. வேலூர் மக்களுக்கும் என்னை விட்டால் வேறு வழியில்லை. நான் நல்ல வேலைக்காரனாக உழைப்பேன். உங்களுக்காக கழுதை போல பொதி சுமப்பேன்.
இந்திய ஜனநாயக புலிகள்தான் என் கட்சி. ஆனால் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும். தற்போது சுயேச்சையாகதான் நிற்கிறேன். தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன். லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்று பெயர். சரக்கு என்றால் அந்த சரக்கு இல்லை.
ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன் என்று நகைச்சுவையாக பேசினார் மன்சூர் அலிகான்.
- தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன்.
- ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன்
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.
வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அவர் இன்று வேலூரில் தேர்தல் அலுவலகம் சென்று முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இந்திய ஜனநாயக புலிகள்தான் என் கட்சி. ஆனால் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும். தற்போது சுயேட்சையாகதான் நிற்கிறேன். தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன். லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்று பெயர். சரக்கு என்றால் அந்த சரக்கு இல்லை.
ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன் என்று நகைச்சுவையாக பேசினார் மன்சூர் அலிகான்.
இந்நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு 'பலாப்பழம்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வேலூர், அரக்கோணம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
- அப்போது பேசிய அவர், தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்றார்.
வேலூர்:
வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை தோற்கடிக்க தேர்தலை தள்ளிப் பார்த்தார்கள். ஆனால் வாக்காளர்களான நீங்கள் 'அவர்களை' தள்ளி வைத்து வெற்றியைக் கொடுத்தீர்கள். இந்த தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
தி.மு.க.வின் திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைகிறார்கள். இன்று காலை, சமூக வலைதளத்தில் கனடா நாட்டின் பள்ளிகளில் உணவுத்திட்டம் வழங்கப்படுவதாக செய்தியைப் பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'ஒன்றிணைவோம் வா' என உங்களுக்காக பணியாற்றுவோம். ஆட்சியில் இருந்தால் திட்டங்களை நிறைவேற்றி 'நீங்கள் நலமா?' என உங்களிடம் கேட்போம்.
பொய்களையும், அவதூறுகளையும் துணையாக அழைத்துக்கொண்டு தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. தேர்தல் முடிந்ததும் அவர்கள் தமிழ்நாட்டின் பக்கமே வர மாட்டார்கள்; நிதி கேட்டா தர மாட்டார்.
பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா?
இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய என் மீது, திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர்மீது வழக்குப்பதிவு செய்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் நம் அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கக் கூட மனம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்களுடன் வெளியே சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
- வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.
- சேலம் ஏற்காட்டில் சுட்டெரித்து வந்த வெயிலுக்கு இடையே கோடை மழை.
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றுமு், நாளையும் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மே 4ம் தேதி முதல் மே 6ம் தேத வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் கொளுத்தி வந்த நிலையில், திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.
இந்நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்ததால், சற்று வெப்பம் தணிந்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல், ராசிபுரத்தில் வெளியில் சுட்டெரித்து வந்த வெயிலுக்கு நடுவே திடீரென கோடை மழை பெய்தது.
இதேபோல், சேலம் ஏற்காட்டில் சுட்டெரித்து வந்த வெயிலுக்கு இடையே கோடை மழை கொட்டியது.
அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியதால் அங்கு வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.






