என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case registration"

    • SIR படிவத்தில் போது தவறான தகவல்களை வழங்கியதற்காக நாட்டிலேயே முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • BNS சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் FIR பதிவு செய்துள்ளனர்.

    பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு மேற்குவங்கம், கேரளா, உத்தரப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் SIR படிவங்களில் தவறான தகவல்களை வழங்கியதற்காக உத்தரபிரதேச காவல்துறை நூர்ஜகான் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

    ராம்பூரில் வசிக்கும் நூர்ஜஹான் உடைய இரண்டு மகன்கள் ஆமிர் கான் மற்றும் டேனிஷ் கான் ஆகியோர் நீண்ட காலமாக துபாய் மற்றும் குவைத்தில் வசித்து வருகின்றனர்.

    ஆனால் SIR படிவத்தில் நூர்ஜஹான் தனது மகன்கள் ராம்பூரில் வசிப்பதாக குறிப்பிட்டு போலி கையொப்பங்களுடன் கூடிய ஆவணங்களை பூத்-லெவல் அதிகாரியிடம் சமர்ப்பித்திருந்தது கண்டறியப்பட்டது.

    SIR படிவத்தை டிஜிட்டல் முறைக்கு பதிவேற்றம் செய்யும்போது நூர்ஜஹான் அளித்த தகவல் தவறானது என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர் தனது மகன்களின் கையொப்பங்களை போலியாக இட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

    இந்த சூழலில், ராம்பூர் தேர்தல் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் நூர்ஜஹான் மீது போலீசார் BNS சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் FIR பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் SIR படிவத்தில் போது தவறான தகவல்களை வழங்கியதற்காக நாட்டிலேயே முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அறியா பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (64) இருவரும் உறவினர்கள்.

    இவர்களுக்கு ஏற்கனவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் வீட்டின் அருகே வழி ஒன்று உள்ளது.

    அந்த வழியினை முள்வேலி போட்டு அடைத்தார். இதனால் அந்த வழியாக செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் விஸ்வநாதன் உள்பட சிலர் மணிகண்டனிடன் சென்று தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பு மோதலாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்து செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது
    • டீக்கடைக்கு முன்பாக வெடி வெடித்ததால் எழுந்த தகராறு தொடர்பாக எடமலைப்பட்டிப்புதூர் காவல்துறையினர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

    திருச்சி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திற்குள் செல்போன் மூலம் வீடியோ மற்றும் போட்டோ எடுத்த நான்கு பேரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

    இதில் எழுந்த தகராறில் நான்கு பேர் மீது ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் ஆட்டோ டிரைவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேலும் எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் உள்ள டீக்கடைக்கு முன்பாக வெடி வெடித்ததால் எழுந்த தகராறு தொடர்பாக எடமலைப்பட்டிப்புதூர் காவல்துறையினர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் பல்வேறு நிகழ்வுகளில் மொத்தம் 25-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை தண்ணீர் தொட்டி அருகே முகம்மது ரியாஸ் (வயது 23) என்பவரை கத்தியை காட்டி மிரட்டிய தர்மநாதபுரம் புனித அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த தாமஸ் அந்தோணி (22) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல் தில்லை நகர் பிரதான சாலையில் சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த பாஸ்கர் (56) என்பவரிடம் தென்னூர் வாமடம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (28) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து கத்தி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அடையாளம் தெரியாத நபர் பஸ்சை வழிமறித்து அவருடைய இரு சக்கர வாகனத்தை பஸ் முன்னாடி நிறுத்தினார்.
    • இதனால் டிரைவர் சுரேஷ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் செந்தாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவர் தனியார் பஸ்சில் 10 வருடமாக டிரைவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று பகல் 2 மணி அளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இந்திலி ஆர் .கே. எஸ். கல்லூரி அருகே அடையாளம் தெரியாத நபர் பஸ்சை வழிமறித்து அவருடைய இரு சக்கர வாகனத்தை பஸ் முன்னாடி நிறுத்தினார்.

    பின்னர் டிரைவரை பார்த்து நீ பஸ் சாலையில் ஓட்டுறியா? இல்லை வானத்தில் ஓட்டுகிறாயா? என ஆபாசமாக திட்டி கல்லால் பஸ்சின் முன் பகுதி கண்ணாடியை உடைத்துசேதப்படுத்தினார். இதனால் டிரைவர் சுரேஷ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வழக்கை பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தியாகதுருகம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி, அக்.27-

    தியாகதுருகம் அருகே நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் (வயது 38) கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததார். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். இதுகுறித்து வரஞசரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ராஜவேல் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து.
    • ஆட்டோ டிரைவர் பாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (வயது 57).இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரும் இவரது மனைவி மஞ்சுளா (50). ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்துபோ திண்டிவனம் போலீஸ் நிலையம் எதிரில் வந்து கொண்டிருக்கும்போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஆட்டோ ராஜவேல் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து.

    இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தலைமையாசிரியர் ராஜவேல், அவரது மனைவி மஞ்சுளா, ஆட்டோவில் பயணம் செய்த ராஜன் தெருவைசேர்ந்த யாகவல்லி, ஆட்டோ டிரைவர் வேங்கை பகுதியை சேர்ந்த பாஸ்ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்றனர். மேலும் ஆட்டோ டிரைவர் பாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து விட்டார். இதுகுறித்து திண்டி வனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வள்ளிக்கண்ணு (வயது65).இவரது மகன் பூல்பாண்டி. டிரைவர்.
    • வள்ளிக்கண்ணு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி அவரை அவதூறாக பேசி தாக்கினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வள்ளிக்கண்ணு (வயது65).இவரது மகன் பூல்பாண்டி. டிரைவராக உள்ளார்.

    பூல்பாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கும், அவரது மனைவி செல்வ அரசிக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் செல்வ அரசி கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். சம்பவத்தன்று வள்ளிக்கண்ணு கணேசன் என்பவருடன் பைக்கில் களக்காடு வந்து கொண்டிருந்தார். ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே வந்த போது அங்கு பூல்பாண்டி நின்று கொண்டிருந்தார்.

    இதைப்பார்த்த வள்ளிக்கண்ணு, பூல்பாண்டியிடம் சென்று வேலைக்கு செல்லாமல் இங்கு என்ன செய்கிறாய்? எனக் கேட்டுள்ளார். அதற்கு பூல்பாண்டி மது அருந்த பணம் தருமாறு கேட்டுள்ளார். வள்ளிக்கண்ணு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி அவரை அவதூறாக பேசி தாக்கினார்.

    மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பூல்பாண்டியை தேடி வருகின்றனர்.

    • தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்
    • 45 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருச்சி:

    தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றதை தொடர்ந்த அனைத்து கட்சி உள்ளிட்ட ஏராளமானவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக 45 வாலிபர்கள் திருச்சி தலைமை தபால் நிலையம் பகுதியில் ஒன்று திரண்டனர்.

    திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் எஸ்ஐ அகிலா, அவர்களை எச்சரித்தும் கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாக ராமநாதபுரத்தை சேர்ந்த சதாசிவம், ராஜா உள்ளிட்ட 45 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.


    • கடந்த 1-ம் தேதி உள்ளாட்சி தின சிறப்பு கிராம கூட்டம் நடந்தை அருகே புளியம்பட்டி அருந்ததியர் தெருவில் நடைபெற்றது.
    • அந்த கிராம சபை கூட்டத்திற்கு வந்த 3-வது வார்டு கவுன்சிலர் வேணியின் கணவர் ரமேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நடந்தை அருகே புளியம்பட்டி அருந்ததியர் தெருவைச்சேர்ந்தவர் முருகேசன்( 50 ).இவரது மனைவி வசந்தா (46) .இவர் நடந்தை ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி உள்ளாட்சி தின சிறப்பு கிராம கூட்டம் நடந்தை அருகே புளியம்பட்டி அருந்ததியர் தெருவில் நடைபெற்றது . அப்போது அந்த கிராம சபை கூட்டத்திற்கு வந்த 3-வது வார்டு கவுன்சிலர் வேணியின் கணவர் ரமேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அவர் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நோட்டை பிடுங்கி கிழித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடந்தை ஊராட்சி தலைவர் வசந்தா நல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் ரமேஷ் பதுங்கி இருந்த இடத்தை பற்றி தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். 

    • தோழிகள் இருவரும் மனக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்து வருகின்றனர்.
    • உனது மகளால் தான் எனது மகள் காணாமல் போய்விட்டார் என்றுகூறி அவரை தாக்கியுள்ளனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பூசாரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிவபாலன் மகளும் தோழிகள். இருவரும் மனக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்து வருகின்றனர். இந்நிலையில் சிவபாலன் மகள் அடிக்கடி வீட்டில் இருப்பவர் திடீரென்று காணாமல் போய் விட்டு திரும்ப வீட்டுக்கு வந்து விடுவார். கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்த சிவபாலன் மகள் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் வீட்டில் இருந்த பெற்றோர் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தனர் ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    ஆத்திரமடைந்த சிவபாலன் , அவரது மனைவி ராதா,உறவினர்கள் ரங்கசாமி, கலியம்மாள் ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவலிங்கம் வீட்டிற்கு சென்று சிவலிங்கம் மனைவி மகாலட்சுமியிடம் உனது மகளால் தான் எனது மகள் காணாமல் போய்விட்டார் என்றுகூறி அவரை தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த மகாலட்சுமி திருக்கோ விலூர் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • காரைக்காலில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மாயமானார்.
    • தாய் செல்வராணியை கிருத்திகா தனது வீட்டுக்கு அழைத்துவந்து கவனித்து வந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி மெயின் சாலையில் வசிப்பவர் நாகராஜ். இவரது மனைவி கிருத்திகா. கிருத்திகாவின் தந்தை விஸ்வநாதன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதிலிருந்து கிருத்திகாவின் தாய் செல்வராணி(வயது72) மனநிலை பாதிக்கப்பட்டு தனக்கு தானே பேசி கொன்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால், தாய் செல்வராணியை கிருத்திகா தனது வீட்டுக்கு அழைத்துவந்து கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3ந் தேதி, வீட்டில் அமர்ந்திருந்த செல்வராணி மாயமாகிவிட்டதாக கூற ப்படுகிறது. உறவினர்கள் மற்றும் பல இட்டங்களில் தேடியும், செல்வரானி கிடை க்காததால், கிருத்திகா காரைக்கால் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் , தாயை தேடி கண்டுபிடித்துதருமாறு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராணியை தேடிவருகின்றனர்.

    • ேமாட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காமாட்சி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர்.
    • மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் ஜி.பி. நகரை சேர்ந்தவர் ரேணுகோபால். அவரது மனைவி காமாட்சி. இவர்கள் சம்பத்தன்று சென்னை சென்று வீட்டுக்கு வந்தனர். அப்போது ேமாட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காமாட்சி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

    ×