என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election commission"

    • தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
    • தேர்தல் இல்லாத நேரங்களில் இதுபோன்ற சரிபார்ப்பு பணிகளை தேர்தல் ஆணையம் செய்திருக்கலாமே?

    பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்திற்குள் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் செய்யப்படும் என்று கடந்த ஜூன் 24-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் மாதத்திற்குள் நடைபெற உள்ள நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் ஜூலை 1-ந் தேதி முதல் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    மேலும், வாக்காளர்கள் தேவையான ஆவணங்களை வழங்கினால், வாக்காளர் பதிவு அதிகாரியின் சரிபார்ப்பு பணிகள் எளிதாக இருக்கும். ஒருவேளை தேவையான ஆவணங்களை வழங்க முடியாவிட்டால், உள்ளூர் விசாரணை அல்லது பிற ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். இறுதியில் தேர்தல் பதிவு அதிகாரி முடிவெடுப்பார் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    பீகாரில் உள்ள பெரும்பாலான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருக்கக் குடியுரிமைச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பொதுநல மனு ஒன்றை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    வாக்களிக்கும் அடிப்படைக்கு பாதகமாக விதிமுறைகள் உள்ளதாக மனுதாரர்கள் கூறியதற்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? என்றும் பீகார் மாநிலத்தில் நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போது தீவிர சரிபார்ப்பை செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது. தேர்தல் இல்லாத நேரங்களில் இதுபோன்ற சரிபார்ப்பு பணிகளை தேர்தல் ஆணையம் செய்திருக்கலாமே? என்று கேட்டனர்.

    பீகாரில் மட்டுமல்ல நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    • பீகார் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    • தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு

    பீகாா் சட்டசபை தோ்தல் அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 324, 1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 21 ஆகியவற்றின் கீழ், தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, இந்தத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதனால், பீகாரில் 2003-ம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவா்கள், தாங்கள் இந்தியாவை சோ்ந்தவா்கள் என்பதற்கு பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் போன்ற கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

    தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் ஜா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட பலர் பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தனர்.

    இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்சு துலியா, ஜோய் மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜரானார். பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

    அதே நேரம் இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. வருகிற 10-ந்தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மனுக்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு கபில்சிபல் வலியுறுத்தினார். ஜூலை 10 ஆம் தேதி நாங்கள் அதை பரிசீலிப்போம் என்று நீதிபதி துலியா தெரிவித்தார்.

    • கொடிய சதித்திட்டம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்தார்
    • மல்லிகார்ஜுன கார்கே, இந்த திருத்தம் கிட்டத்தட்ட எட்டு கோடி மக்களைப் பாதிக்கும் என்று கூறினார்.

    வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஆர்.ஜே.டி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகவுள்ளார்.

    தேர்தல் ஆணையம், ஜூன் 24 அன்று பீகாரில் தகுதியுள்ள குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக சிறப்பு திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.

    நகரமயமாக்கல், புலம்பெயர்தல், புதிய வாக்காளர்கள் மற்றும் வெளிநாட்டு சட்டவிரோத குடியேற்றவாசிகள் போன்றவர்களை கண்டறிய இந்த இந்த திருத்தம் அவசியம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

    ஆனால் ஏற்கனவே ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஆர்.ஜே.டி எம்.பி. மனோஜ் ஜா இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதற்கிடையே, மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா இந்த உத்தரவு இளம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையில் இருந்து பறிக்கும் நோக்கம் கொண்டது என்றும், இது பாஜக-விற்கு சாதகம் என்றும் குற்றம் சாட்டினார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதை கொடிய சதித்திட்டம் என்று விமர்சித்தார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த திருத்தம் கிட்டத்தட்ட எட்டு கோடி மக்களைப் பாதிக்கும் என்றும், இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறினார்.

    ஆர்ஜேடி முக்கிய தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், இந்த திருத்தப் பணி ஏன் பீகாரில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த திருத்தப் பணியை ஆதரித்து, எதிர்க்கட்சிகள் தோல்விக்கு சாக்குப்போக்கு தேடுவதாகக் குற்றம் சாட்டியது.

    தேர்தல் ஆணையம், பீகாரில் திருத்தப் பணியின் முதல் கட்டம் சீராக முடிவடைந்துள்ளதாகவும், இந்த செயல்முறை ஆளும் கட்சிக்கு சாதகமாக கையாளப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. ஜூலை 25 வரை ஆவணங்களை சமர்ப்பிக்க வாக்காளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

    • வாக்காளர் பட்டியலை இயந்திரத்தால் படிக்கக்கூடிய வடிவத்தில் வழங்க மாட்டார்கள்
    • வாக்காளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்துள்ளது.

    வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை, வாக்குப்பதிவு முடிந்த 45 நாட்களில் அழித்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

    இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான தரவுகளை வேண்டுமென்றே அழிக்க முயற்சிப்பதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

    ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "வாக்காளர் பட்டியல்? இயந்திரத்தால் படிக்கக்கூடிய வடிவத்தில் வழங்க மாட்டார்கள். சிசிடிவி காட்சிகள்? சட்டத்தை மாற்றி மறைத்துவிட்டார்கள்.

    தேர்தலின் புகைப்படம்-வீடியோ? இப்போது, 1 வருடத்தில் அல்ல, 45 நாட்களில் அழித்துவிடுவோம். யார் பதில் சொல்ல வேண்டுமோ அவர்களே ஆதாரங்களை அழிக்கிறார்கள். இது தெளிவாகிறது - மேட்ச் பிக்சிங் செய்யப்படுகிறது. மேலும் ஒரு சமரசம் செய்யப்பட்ட தேர்தல் ஜனநாயகத்திற்கு விஷம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடிகளின் வெப்காஸ்டிங் காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவது வாக்காளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்துள்ளது.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள், இத்தகைய கோரிக்கைகள் வாக்காளர்களின் தனியுரிமை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் 1950 மற்றும் 1951 இன் கீழ் உள்ள சட்ட விதிகள், மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு நேர் முரணானது என்று தெரிவித்தனர்.

    காட்சிகளைப் பகிர்வது வாக்காளர்களை அடையாளம் காணவும், வாக்களிக்காதவர்களைக் கண்டறியவும் வழிவகுக்கும். இது சமூக விரோத சக்திகளால் வாக்காளர்கள் அழுத்தம், பாகுபாடு அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடலாம்.

    ஒரு குறிப்பிட்ட பூத்தில் ஒரு அரசியல் கட்சிக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருந்தால், சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை என்பதைக் கண்டறிந்து, அவர்களைக் குறிவைத்து துன்புறுத்துதல் அல்லது மிரட்டுதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 

    • ரூ.2,008 கோடியை அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளன.
    • தேசிய கட்சிகள் அதிகபட்சமாக ரூ.2,204 கோடி செலவு செய்திருக்கின்றன.

    கடந்த ஆண்டு மக்களவை தேர்தல், அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் செலவு செய்த தொகை குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்(ADR) என்ற தன்னார்வ அமைப்பின் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

    தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த செலவின அறிக்கை இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மொத்தம் 32 கட்சிகளின் செலவின அறிக்கை ஆய்வில் அடங்கும்.

    அதன்படி மேற்கூறிய மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களுக்காக இந்த கட்சிகள் மொத்தம் ரூ.3,352 கோடி செலவு செய்துள்ளன. தேசிய கட்சிகள் அதிகபட்சமாக ரூ.2,204 கோடி செலவு செய்திருக்கின்றன.

    அதிகபட்சமாக பாஜக பாராளுமன்றம் மற்றும் 4 சட்டமன்ற தேர்தல்களுக்காக சுமார் ரூ.1,494 கோடியை செலவழித்துள்ளது. இது கட்சிகளின் மொத்த செலவினத்தில் 44.56 சதவீதம் ஆகும்.

    அடுத்ததாக காங்கிரஸ் கட்சி ரூ.620 கோடி (18.5%) செலவழித்துள்ளது. இக்கட்சிகள் செலவு செய்த தொகையில் அதிகபட்ச தொகை விளம்பரத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ரூ.2,008 கோடியை அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளன.

    ரூ.795 கோடி பயணங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. மேலும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்கு ரூ.402 கோடி வழங்கி உள்ளன.

    2024 மக்களவை தேர்தலின் போது 5 தேசிய மற்றும் 27 பிராந்திய அரசியல் கட்சிகள் சேகரித்த மொத்த நிதி ரூ.7445.566 கோடி ஆகும். சேகரிக்கப்பட்ட மொத்த நிதியில், தேசிய கட்சிகள் ரூ.6930 கோடி (93.08%) வசூலித்தன. அதே நேரத்தில் பிராந்திய கட்சிகள் ரூ.515.32 கோடி (6.92%) பெற்றன.

    அதிகபட்சமாக பாஜக ரூ.6268 கோடி நிதியைப் பெற்றது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 592 கோடியைப் பெற்றது, சிபிஐ(எம்) ரூ.62.74 கோடி நிதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    தேர்தல் ஆணையத்தில், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, உத்தவ் சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), கேரளா காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் இன்னும் தங்கள் செலவின அறிக்கையை வழங்கவில்லை.

    அரசியல் கட்சிகள், காசோலைகள், DD (டிமாண்ட் டிராப்ட்) அல்லது RTGS வழியாக பரிவர்த்தனைகள் செய்வதன்மூலம் மட்டுமே கருப்புப் பணப் பயன்பாடு மற்றும் செலவினங்களை மட்டுப்படுத்த முடியும் என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

    • மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு கட்சி தொடங்க இருந்தார்.
    • வரும் நவம்பர் மாதம் ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனில் விஜய் விண்ணப்பிக்க இருக்கிறார்.

    சென்னை:

    நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. த.வெ.க. சந்திக்கும் முதல் தேர்தல். இதற்காக வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்து முடித்துள்ளார், விஜய். கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறார்.

    அடுத்தக்கட்டமாக, தேர்தல் சின்னத்தை தேர்வு செய்யும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்டுள்ள சின்னங்களில் த.வெ.க.வுக்கு பொருத்தமான சின்னம் எது? எந்த சின்னம் மக்களை எளிதாக கவரும் என்ற வகையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    சின்னம் தேர்வு செய்யும் பணி கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. தற்போது த.வெ.க. நிர்வாகிகளின் ஒட்டுமொத்த விருப்பமாக, ஆட்டோ சின்னம் தேர்வாகியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் ஆட்டோ சின்னத்திலேயே, தேர்தலை சந்திக்கலாம் என்று விஜய் முடிவு எடுத்துள்ளார். வரும் நவம்பர் மாதம் ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனில் விஜய் விண்ணப்பிக்க இருக்கிறார்.

    தேர்தல் கமிஷனில் சின்னம் கேட்டு பதிவு செய்யும்போது 3 சின்னங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அதில் விருப்ப சின்னத்தையும் குறிப்பிட வேண்டும். அந்தவகையில் ஆட்டோ, நட்சத்திரம், அகல் விளக்கு ஆகிய 3 சின்னங்களை தேர்வு செய்து, விருப்ப சின்னமாக ஆட்டோவை ஒதுக்க த.வெ.க. கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு கட்சி தொடங்க இருந்தார். ரஜினி மன்ற நிர்வாகி பெயரில் தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்ட அந்த கட்சிக்கு 'ஆட்டோ' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. கால சூழல், ரஜினிகாந்த் கட்சி தொடங்காமலேயே அறிவிப்புடன் முடிந்து போனது.

    இந்த சூழலில்தான், ஆட்டோ சின்னத்தை விரும்பி த.வெ.க. பெற முயற்சி மேற்கொண்டு வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நடிகர் விஜய் வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோ ஓட்டி வருவார். எனவே இந்த ஆட்டோவை கட்சிக்கு சின்னமாக பெறுவது பொருத்தமாக இருக்கும் என்று விஜய் தரப்பு கருதுகிறது.

    கட்சி தொடங்குவதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பல இடங்களில் ஆட்டோ சின்னத்தை விருப்பமாக கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • போலி வாக்களிப்பின் மூலம் பாஜக பிராட்மேனாக மாற்றப்பட்டது, இதற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டன என குற்றம்சாட்டினார்.
    • எனது கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் பதிலளித்து நிரூபியுங்கள்.

    கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் "மேட்ச் பிக்சிங்" செய்தது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    ராகுல் காந்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையில், தேர்தல் ஆணையர் நியமனக் குழு சீர்குலைக்கப்பட்டது, போலி வாக்காளர்களைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர்கள் அதிகரிக்கப்ட்டது, வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது, போலி வாக்களிப்பின் மூலம் பாஜக பிராட்மேனாக மாற்றப்பட்டது, இதற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டன என குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அபத்தமானது என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு சவால்" என்றும் தேர்தல் தோல்விக்கு ஆணையத்தை குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளித்துள்ள ராகுல் காந்தி,

    "அன்புள்ள தேர்தல் ஆணையம், நீங்கள் ஒரு அரசியலமைப்பு அமைப்பு. கையெழுத்து போடாத, தப்பிக்கும் நோக்கிலான குறிப்புகளை வெளியிடுவது, தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் முறை அல்ல.

    உங்களுக்கு மறைக்க எதுவும் இல்லை என்றால், எனது கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் பதிலளித்து நிரூபியுங்கள்.

    மகாராஷ்டிரா உள்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றம் சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் மற்றும் மாகாரஷ்டிர வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளில் மாலை 5 மணிக்குப் பிறகு பதிவான அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் வெளியிட வேண்டும்.

    கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்றும், உண்மையை கூறுவதே அதை செய்யும்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    • விரைவில் வர உள்ள பீகார் தேர்தலிலும் பாஜக இதையே செய்யும் என்று அவர் கூறினார்.
    • தேர்தல் ஆணையர் நியமனக் குழு சீர்குலைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் "மேட்ச் பிக்சிங்" செய்தது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    ராகுல் காந்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையில், தேர்தல் ஆணையர் நியமனக் குழு சீர்குலைக்கப்பட்டது, போலி வாக்காளர்களைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர்கள் அதிகரிக்கப்ட்டது, வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது, போலி வாக்களிப்பின் மூலம் பாஜக பிராட்மேனாக மாற்றப்பட்டது, இதற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டன என குற்றம்சாட்டினார்.

    ஆணையத்தால் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட வாக்கு சதவீத புள்ளிவிவரங்களுக்கும் பின்னர் வெளியிடப்பட்ட வாக்கு சதவீத புள்ளிவிவரங்களுக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் விரைவில் வர உள்ள பீகார் தேர்தலிலும் பாஜக இதையே செய்யும் என்று அவர் கூறினார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு சவால்.

    டிசம்பர் 24, 2024 அன்று காங்கிரசுக்கு அளித்த பதிலில் அனைத்து உண்மைகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இது ஆணையத்தின் வலைத்தளத்தில் கிடைக்கிறது. இவை அனைத்தையும் முற்றிலும் புறக்கணித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தவறான தகவல்களை யாரேனும் பரப்புவது சட்டத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், அந்தந்த அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாக தேர்தல் ஆணையம் மேலும் கூறியது.

    தேர்தலின் போது வெளிப்படையாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான அதிகாரிகளை இது ஊக்கப்படுத்துவதில்லை. வாக்காளர்களிடமிருந்து பாதகமான தீர்ப்பு வந்தால், தேர்தல் ஆணையம் ஒரு சார்புடையது என்று கூறி, அதை அவதூறு செய்ய முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. 

    • வெறும் 5 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிரடியாக அதிகரித்தது.
    • மக்களவைத் தேர்தலில் 32% வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளின் அசாதாரண வாக்குப்பதிவால் சட்டமன்றத் தேர்தலில் 89% வெற்றி பெற்றது.

    கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    முன்னதாக நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கூட்டணி அதிக வெற்றியை பெற்றது. ஆனால் சில மாதங்களுக்கு பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. இதன் பின்னணியில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது. 

    இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் நீண்ட கட்டுரை எழுதியுள்ள ராகுல் காந்தி, "மேட்ச் பிக்சிங் மகாராஷ்டிரா" என்ற தலைப்பில் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.

     ராகுல் காந்தி கட்டுரையின் சுருக்கம்:

    தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் குளறுபடி: தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் பரிந்துரையை நிராகரித்து, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தங்கள் விருப்பப்படி ஆட்களை நியமித்தனர். இது நீதித்துறைத் தலைவரை நீக்கி முறைகேடு செய்ய வழிவகுத்தது.

    போலி வாக்காளர்கள் அதிகரிப்பு: 2019-ல் 8.98 கோடியாக இருந்த வாக்காளர்கள், 2024 மக்களவைத் தேர்தலில் 9.29 கோடியாக உயர்ந்தனர். ஆனால்,  வெறும் 5 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிரடியாக அதிகரித்தது.

    மகாராஷ்டிராவின் மொத்த வயதுவந்தோர் மக்கள் தொகையே 9.54 கோடிதான் இருக்கும் நிலையில், இந்த 41 லட்சம் வாக்காளர் அதிகரிப்பு பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

    வாக்குப் பதிவில் வினோத மாற்றம்: மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னரும், 7.83% (சுமார் 76 லட்சம்) வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இது முந்தைய தேர்தல்களை விட மிக மிக அதிகம். குறிப்பாக, 85 தொகுதிகளில் உள்ள 12,000 வாக்குச்சாவடிகளில் மட்டும், மாலை 5 மணிக்குப் பிறகு சராசரியாக 600க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். ஒரு வாக்குக்கு ஒரு நிமிடம் என்றாலும், 10 மணி நேரம் வாக்குப்பதிவு நடந்திருக்க வேண்டும்!

    பாஜக வெற்றிஅதிகரிப்பு: மக்களவைத் தேர்தலில் 32% வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளின் அசாதாரண வாக்குப்பதிவால் சட்டமன்றத் தேர்தலில் 89% வெற்றி பெற்று 149 இடங்களில் 132 இடங்களை வென்றது.

    ஆதாரங்களை அழிக்கும் முயற்சி: முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் புகார் அளித்த போதும், தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது.

    மேலும், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை பொதுவெளியில் வெளியிடும் கோரிக்கையை நிராகரித்து, விதிகளைத் திருத்தி அணுகலைக் கட்டுப்படுத்தி, ஆதாரங்களை அழிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

    ராகுல் காந்தி தனது கட்டுரையில், "இது கிரிக்கெட்டில் நடக்கும் மேட்ச் பிக்சிங் போன்றது. இப்படிப்பட்ட முறைகேடுகள் ஜனநாயக நிறுவனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.  

    • இரு ஆண்டும் முறையாக வருமான வரி தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வழக்கின் விசாரணையை ஜூன் 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    சென்னை:

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்தால் மட்டுமே அந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2018-2019, 2019-2020 ஆகிய நிதி ஆண்டுகளில் நன்கொடை குறித்த அறிக்கை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த இரு நிதியாண்டுகளுக்கும் வருமான வரிவிலக்கு வழங்க மறுத்த வருமான வரித்துறை முறையே 66.76 லட்சம் ரூபாயும், 1.07 கோடி ரூபாயும் செலுத்தும் படி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதன் காரணமாக 2018-19 மற்றும் 2019-20 நிதி ஆண்டுகளில் பெற்ற நன்கொடை குறித்து தாமதமாக அளித்த அறிக்கையை ஏற்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

    ஆனால் சட்டப்படி தாமதத்தை ஏற்க முடியாது எனக்கூறி விண்ணப்பத்தை நிராகரித்து தேர்தல் ஆணையம் மே 13-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை ரத்து செய்து நன்கொடை குறித்த அறிக்கையை ஏற்க உத்தர விட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், 2018-19 ம் ஆண்டு எந்த அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்வது என்ற குழப்பம் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், 2019-20 ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும் இரு ஆண்டும் முறையாக வருமான வரி தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையம் மனுவுக்கு பதில் அளிக்கும் படி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களைப் பெற்றபோது பாஜக 48 இடங்களைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றது.
    • காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்திற்கான பொதுச் செலவாக ரூ.40.13 கோடி செலவிட்டது.

    தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வென்றது.

    சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக பெற்ற வெற்றி இது. அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி சிறை சென்றது, அவர் சொகுசு மாளிகையில் வாழ்ந்தார் என முன்னெடுத்த பிரசாரம் ஆகியவை பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது.

    டெல்லி சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களைப் பெற்றபோது பாஜக 48 இடங்களைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்குக் கட்சிகள் வழங்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி கடந்த தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சி ரூ.14.51 கோடியை செலவிட்டுள்ளதாக அவர்களின் செலவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இதில் பொது கட்சி பிரச்சாரத்திற்கான மொத்த செலவாக ரூ.12.12 கோடி மற்றும் கட்சி வேட்பாளர்களுக்கான மொத்த செலவு ரூ.2.39 கோடி ஆகும்.

    அதேநேரம் தேர்தல் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பாஜகவின் செலவின அறிக்கையின்படி, பாஜக செலவிட்ட தொகை மொத்தம் ரூ.57.65 கோடி ஆகும். அதில் ரூ.39.15 கோடி பொது கட்சி பிரச்சாரத்திற்கான மொத்த செலவாகவும், மேலும் ரூ.18.51 கோடி கட்சி வேட்பாளர்களுக்கான மொத்த செலவாகவும் செலவிடப்பட்டது.

    காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்திற்கான பொதுச் செலவாக ரூ.40.13 கோடியும், கட்சி வேட்பாளர்களுக்கான மொத்தச் செலவாக ரூ.6.06 கோடியும் உட்பட மொத்தம் ரூ.46.19 கோடியை செலவிட்டுள்ளது. 

    • ஜூன் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
    • மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் தலா ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும்.

    குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

    ஜூன் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜூன் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    குஜராத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் தலா ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும்.

    பஞ்சாப் மாநிலம் லூதியானா, கேரளாவில் நிலம்பர், மேற்கு வங்காளத்தில் காளிகஞ்ச், குஜராத்தில் காடி மற்றும் ஆந்திராவின் விசாகப்பட்டினம் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. 

    ×