என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Commission"

    • 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் ஆற்றிய பங்கிற்காக வீர சக்ரா விருது பெற்றவர் அருண் பிரகாஷ்
    • அருண் பிரகாஷ் 2004 முதல் 2006 வரை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றினார்

    பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.

    இந்நிலையில் கோவாவின் SIR திருத்தத்தின் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படை தலைவர் அருண் பிரகாஷ் நேரில் ஆஜராகி தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 12 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கணினி பிழை காரணமாக முன்னாள் கடற்படை தலைவர் அருண் பிரகாஷுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து அருண் பிரகாஷ் அதிருப்தி தெரிவித்தார்.

    1971 இந்திய-பாகிஸ்தான் போரில் ஆற்றிய பங்கிற்காக வீர சக்ரா விருது பெற்ற அருண் பிரகாஷ், ஜூலை 31, 2004 முதல் அக்டோபர் 31, 2006 வரை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றினார். பின்னர், அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மற்றும் தேசிய கடல்சார் அறக்கட்டளை ஆகியவற்றில் பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவர்கள் பதவியில் இருக்கும்போதும் அல்லது பதவி விலகிய பின்னரும், எந்தவொரு நீதிமன்றமும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
    • இந்தப் புதிய சட்டம் தேர்தல் ஆணையத்தை சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற்றுகிறது.

    2023 இல் மத்திய அரசு, தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனம், பதவிக்காலம் மற்றும் அவர்களுக்கான சட்டபாதுகாப்பு குறித்த சட்டத்தை கொண்டு வந்தது.

    இந்த சட்டத்தின் பிரிவு 16, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களுக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது.

    அதாவது, தேர்தல் ஆணையர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யும்போது செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகளுக்காக அவர்கள் பதவியில் இருக்கும்போதும் அல்லது பதவி விலகிய பின்னரும், எந்தவொரு நீதிமன்றமும் அவர்கள் மீது சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது.

    இதை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், "அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கூட குடியரசுத் தலைவருக்கோ அல்லது ஆளுநர்களுக்கோ இத்தகைய வாழ்நாள் கால பாதுகாப்பை வழங்கவில்லை.

    ஆனால், இந்தப் புதிய சட்டம் தேர்தல் ஆணையத்தை சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற்றுகிறது" என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், நமது அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் இத்தகைய பாதுகாப்பை வழங்க முடியுமா, முடியாதா? என்று ஆராய வேண்டியுள்ளது என்று கூறி, இது தொடர்பாகப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

    அதேநேரம் மனுதாரர் கேட்டதற்கு இணங்க இப்போதைக்கு அந்தச் சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள்மறுத்துள்ளனர். எனினும், வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணை தொடரும் என்றும் தெரிவித்தனர்.

    எஸ்ஐஆர் பணிகளில் பாஜகவுடன் சேர்ந்து ஞானேஷ் குமார் தலைமையிலான மத்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.  

    • அமர்த்தியா சென், மோடி தலைமையிலான பாஜக அரசின் சமூக மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவர்.
    • இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும் நோட்டீஸ் அனுப்பட்டது.

    மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு (92) தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அமர்த்தியா சென்னின் வாக்காளர் விவரங்களில் வயது உள்ளிட்டவற்றில் சில முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஜனவரி 16-ஆம் தேதி பீர்பூம் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அமர்த்தியா சென் போன்ற புகழ்பெற்ற ஒருவரை விசாரணைக்கு அழைப்பதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று சாடியுள்ளது.

    முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும்  நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. 

    பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், மோடி தலைமையிலான பாஜக அரசின் சமூக மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமர்த்தியா சென் நிலைப்பாடு:

    பாஜகவின் கொள்கை 'இந்து ராஷிடிரா' இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றும், சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுவதாகவும் அமர்த்தியா சென் தெரிவித்திருந்தார்.

    குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டது என்றும், இது நாட்டின் சமத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்

    விசாரணையின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்படுவது ஆங்கிலேயர் காலத்து அடக்குமுறையை நினைவூட்டுகிறது, கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் அரசு தலையிட்டு இந்துத்துவா சித்தாந்தத்தைத் திணிக்கிறது, பாஜக அரசு வணிகத்திற்குத் தரும் முக்கியத்துவத்தை, ஏழை மக்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரத்திற்குத் தருவதில்லை எனவும் அமர்த்தியா சென் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சனம் செய்திருந்தார். 

    .

    • மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.
    • அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

    பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.

    இதில், தமிழகத்தில் மட்டும், 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

    அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

    இதில் பெரும்பாலும் இரட்டைப் பதிவுகள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    ஆனால் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே 10, 2026 அன்று முடிவடைகிறது.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தப் பணிகள் (Special Intensive Revision) தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இறுதிப் பட்டியல் வெளியான பிறகு, பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் பாதுகாப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள்.

    சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் தமிழகம் வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகள்

    மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே 10, 2026 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு அமைய வேண்டும்.

    பொதுவாக ஏப்ரல் மாதக் கோடை விடுமுறை மற்றும் தேர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேதிகள் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.
    • பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது.

    இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவால் உருவாக்கப்பட்டவை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

    மேற்கு வங்கத்தின் கங்காசாகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காகப் பயன்படுத்தும் செயலிகள் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவால் உருவாக்கப்பட்டவை.

    தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயலிகள் அரசமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானவை.

    இவை முழுக்க முழுக்க பாஜகவின் ஐடி செல் கண்காணிப்பில் இயங்குகின்றன. தேர்தல் ஆணையம் அனைத்தையும் தவறாகச் செய்கிறது. உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாகப் பட்டியலிடுகிறார்கள்.

    மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.

    பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது. மக்களின் குரலாக நான் நீதிமன்றம் செல்வேன்" என்று தெரிவித்தார்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.     

    • முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
    • விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருவதால், குறிப்பிட்ட தேதியில் ஆஜராக இயலாது

    இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகம்மது கைப் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறையின் ஒரு பகுதியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

    மேற்குவங்கத்தில் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் 'வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின்' போது, முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, 'புரோஜனி மேப்பிங்' மற்றும் 'செல்ஃப் மேப்பிங்' விவரங்களில் தவறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    கொல்கத்தாவின் ராஷ்பெஹாரி தொகுதியின் கீழ் வரும் வார்டு எண் 93-ல் ஷமி ஒரு வாக்காளராகப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்காக, ஜனவரி 5, 2026 அன்று ஆஜராகுமாறு அவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ராஜ்கோட்டில் நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருவதால், குறிப்பிட்ட தேதியில் ஆஜராக இயலாது என ஷமி தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

    ஷமியின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் ஆணையம் இந்த விசாரணையை வரும் ஜனவரி 9 முதல் 11 வரையிலான தேதிகளுக்கு மாற்றியமைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் பிறந்த போதிலும், ஷமி பல ஆண்டுகளாக கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

    • தமிழகத்தில் 4 நாட்கள் நடந்த முகாம் நிறைவடைந்துள்ளது.
    • இறந்துபோன, 13 ஆயிரத்து 457 பேரின் பெயர்களை நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7-ம் அளித்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர்.

    தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடத்த தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி நேற்று வரை சிறப்பு முகாம்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடனும், இறந்தவர்களின் பெயர்களை நீக்க படிவம் 7-ஐ, முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கைக்காக படிவம்-8ஐ ஆர்வமுடன் அளித்தனர்.

    புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது கல்வி சான்று, ஆதார் அட்டை, 2005-ம் ஆண்டுக்கான பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்கள் சமர்ப்பித்தனர்.

    வீடுகளை மாற்றிக் கொண்டு இடமாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்காக படிவம் எண் 6ஐ அளித்தனர். இந்தப் படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்தனர்.

    தமிழகத்தில் தி.மு.க.விற்கு 68 ஆயிரத்து 286, அ.தி.மு.க.விற்கு 67 ஆயிரத்து 286, பா.ஜ.க.விற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 592 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் 4 நாட்கள் நடந்த முகாம் நிறைவடைந்துள்ளது. இதில் கடந்த மாதம் 19-ந்தேதியிலிருந்து கடந்த 3-ந்தேதி இரவு 8 மணி வரை 18 வயது நிரம்பிய தகுதியுடைய 9 லட்சத்து 14 ஆயிரத்து 931 பேர் படிவம் 6, 6 ஏ அளித்தனர். இதேபோல இறந்துபோன, 13 ஆயிரத்து 457 பேரின் பெயர்களை நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7-ம் அளித்தனர்.

    தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக சிறப்பு தீவிர முகாமை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்குமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்து அறிவிக்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

    • படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
    • இந்த சிறப்பு முகாம்கள் அடுத்த வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த நவ. 4-ந்தேதி முதல் டிச.14-ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதன்படி தமிழகத்தில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரி இல்லாத 66.44 லட்சம் பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான விடுமுறை நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த 27, 28-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் 27-ந்தேதி 2.56 லட்சம் பேர், 28-ந்தேதி 2.86 லட்சம் பேர் என மொத்தம் 5.43 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7.37 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

    இதையடுத்து இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    ஜனவரி 1-ந்தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணியின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் படிவம் 6-ஐ வழங்க வேண்டும். அத்துடன் உறுதிமொழி படிவத்தையும் வழங்க வேண்டும். அதில் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் உள்ளதை போன்றே, தங்களது அல்லது தங்கள் பெற்றோரின், 2002, 2005 காலகட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்படுவதால் அவர்களுக்கு உதவி செய்வதற்காக தொழில்நுட்பம் தெரிந்த ஆட்களை வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும் நியமித்துள்ளனர். கம்ப்யூட்டர் அனுபவம் மிக்கவர்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் பொதுமக்களை செல்போனில் அழைத்து தாங்கள் குறிப்பிடும் இடங்களுக்கு வருமாறு தொடர்ந்து கூறி வருகிறார்கள். இது தங்களுக்கு தேவையில்லாத அலைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது 2002, 2005-ம் ஆண்டு பற்றிய தகவல்களை விண்ணப்ப படிவத்தில் நாங்கள் நிரப்பி கொடுப்பதற்கு தயாராக இருந்த நிலையிலும் அரசியல் கட்சியினர் சிலர் தலையிட்டு அதையெல்லாம் குறிப்பிட வேண்டியதில்லை என கூறியதன் காரணமாகவே எங்களது விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்யாமல் அளித்தோம். ஆனால் தற்போது உங்களது விண்ணப்பம் முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை என எங்களை செல்போனில் அழைத்து பேசுவதன் மூலம் இந்த தேர்தலில் ஓட்டு போடாமலேயே விட்டு விடலாமோ என்கிற மனநிலையும் ஏற்படுகிறது என்று வாக்காளர் ஒருவர் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

    இது பற்றி வாக்குச்சாவடி அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே பொதுமக்களை தொலைபேசியில் அழைத்து விவரங்களை கேட்கிறோம் என்றும், எந்த வகையிலும் நாங்கள் அவர்களை தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.

    இந்த சிறப்பு முகாம்கள் அடுத்த வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இதேபோன்று 17,18 ஆகிய தேதிகளிலும் நடத்தப்படுகிறது. 18-ந்தேதி கடைசி நாள் என்பதால் அதற்குள் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 2002-ம் ஆண்டிலிருந்து வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளார். ஆனால் தற்போது பெயர் நீக்கப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.
    • இதுவரை சுமார் 60 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து முடிந்துள்ளது. அங்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 58 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டனர்.

    இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் கவலையடைந்த 82 வயது முதியவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

    உயிரிழந்தவர் புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த துர்ஜன் மாஜி ஆவார். இவர் சாந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

    திங்களன்று ஓடும் ரெயிலின் முன்பு குதித்து அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. 1943-ல் பிறந்த அவர், 2002-ம் ஆண்டிலிருந்து வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளார்.

    ஆனால் தற்போது பெயர் நீக்கப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.

    விசாரணைக்குச் செல்ல வாகன வசதி கிடைக்காததாலும், தனது குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தாலும் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த SIR நடைமுறை ஏழை மக்களைத் துன்புறுத்துவதாகவும், இதுவரை சுமார் 60 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளை நேரடி விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  

    • வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த 19-ந்தேதி வெளியிட்டார்.
    • வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    தமிழகத்தில் கடந்த மாதம் 4-ந் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்கிற எஸ்ஐஆர் பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது.

    இந்த பணி, கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதியன்று இருந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

    அந்த பட்டியலின்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி அதனை பூர்த்தி செய்து பெற்று வந்தனர்.

     

    இந்த படிவங்களில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் இடம்பெற்று இருந்த சட்டசபை தொகுதிகளின் விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன.

    இந்த விவரங்கள் இல்லாதவர்கள், தங்களது பெற்றோரின் விவரங்களையும், அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த அடிப்படையில், கடந்த 14-ந் தேதி வரை வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த படிவத்தை, பூர்த்தி செய்து கொடுக்காவிட்டால், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்ததால் அனைவரும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    இந்த படிவத்தை பெற்று கொண்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் ஆணையத்தின் செயலியில் அதனை பதிவேற்றம் செய்தனர்.

    படிவம் கொடுத்த வாக்காளர்கள் விவரம் மட்டுமின்றி, அந்த தொகுதியில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் போன்ற விவரங்களையும் பதிவு செய்தனர். மேலும் இரட்டை பதிவு பெயர்களும் நீக்கப்பட்டன.

    இதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் 19-ந் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழகத்திற்கான மொத்த வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த 19-ந்தேதி வெளியிட்டார்.

    இந்த வரைவு பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர். அதாவது, கடந்த அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்தால் சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். இது 15.18 சதவீதம் ஆகும்.

     

    இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில்,

    வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆண்கள் 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேர் ஆவர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 6 ஆயிரத்து 332 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 191 பேரும் இடம்பெற்றுள்ளனர். இந்த வரைவு பட்டியலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மட்டும் 4 லட்சத்து 19 ஆயிரத்து 355 பேரும் இருக்கிறார்கள்.

    இந்த சிறப்பு தீவிர திருத்தப்பணி மூலம் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றவர்கள் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர் ஆகும். இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் முகவரியில் வசிக்காதவர்கள் எண்ணிக்கை 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 ஆகும். வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 ஆகும். தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரிலும், அதற்கு அடுத்ததாக பல்லாவரம் தொகுதியிலும் அதிகம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வரைவு வாக்காளர் பட்டியல், https://www.elections.tn.gov.in / Electoral-Services.aspx மற்றும் அரசின் மாவட்ட இணையதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில், வாக்காளர்கள் தங்களது பெயர் இருக்கிறதா? என சரிபார்த்து கொள்ளலாம்.

    அதுமட்டுன்றி இறப்பு, இடமாற்றம் மற்றும் இரட்டை பதிவு உள்ள வாக்காளர்களின் விவரங்களையும் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரைவு பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள், பட்டியலில் புதிதாக சேர படிவம்-6 கொடுக்க வேண்டும். அதனை ஆன்லைன் அல்லது வாக்குச்சாவடி அலுவலர்கள் அல்லது வாக்குசாவடி மையங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் கொடுக்கலாம். இதற்கு அடுத்த மாதம் 18-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

     

    இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தம் 5.43 கோடி வாக்காளர்கள் தான் உள்ளனர்.

    கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தமிழகத்தில் 5.50 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

    அதன்படி பார்த்தால், வாக்காளர் எண்ணிக்கையில் தமிழகம் இப்போது 14 ஆண்டுகள் பின்னோக்கி சென்று இருக்கிறது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் (27, 28) வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்நது. இதையடுத்து ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

     

    இதற்கிடையில் வாக்காளர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து கொடுக்காத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் வழங்கும் பணியினையும் தொடங்கி இருக்கிறது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் வழிகாட்டுதல்களின்படி, விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும். இந்திய தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள 13 ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக் கூடிய ஆவணத்தை வாக்காளர்கள் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்வார்கள்.

    இதற்கிடையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் மற்றும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து வழங்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகளாக 1,255 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களை சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் கமிஷன் நியமனம் செய்துள்ளது. இவர்கள் அந்த பணியினை முழு வீச்சில் இறங்கி செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இறுதி வாக்காளர் பட்டியலானது பிப்ரவரி மாதம் 17-ந் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
    • பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் எண்ணிக்கை 2,854-ல் இருந்து 2,520 ஆக குறைந்துள்ளது.

    நம் நாட்டில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவை தவிர சுமார் 3 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதேநேரம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக இயங்கி வந்தன.

    இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்து உள்ளன. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்தும் வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை நிறைவேற்றாத 334 அரசியல் கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது. இதன்மூலம் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் எண்ணிக்கை 2,854-ல் இருந்து 2,520 ஆக குறைந்துள்ளது.

    இதுதவிர அங்கீகரிக்கப்பட்ட 6 தேசிய கட்சிகள் மற்றும் 67 மாநில கட்சிகள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29பி மற்றும் 29சி பிரிவுகளின் கீழ் வருமான வரி விலக்கு கோர முடியாது.

    இதையடுத்து 2-வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை செப்டம்பர் மாதம் தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஆகமொத்தம் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கொங்கு ஈஸ்வரன்

     

    இந்த 42 அரசியல் கட்சிகளில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சி பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்டது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் உள்ளது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் உள்ளார்.

    ஜவாஹிருல்லா

     

    ரத்து செய்யப்பட்ட கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சியானது, கடந்த 3 தேர்தல்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எனவே அவர்கள் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக கருதப்படவில்லை.

     

    ஜான் பாண்டியன்

    இதேபோன்று ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் தேர்தல் கமிஷனின் ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து இவரது கட்சி தேர்தலை சந்தித்து வந்தது. 2021ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. சின்னத்திலும் போட்டியிட்டது.

     

    தமிமுன் அன்சாரி

    2016 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்ட தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் இக்கட்சி போட்டியிடவில்லை.

    நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு 808 கட்சிகளின் பதிவை 2 கட்டங்களாக ரத்து செய்துள்ளதை தொடர்ந்து தற்போது தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை 2,046 ஆக குறைந்திருக்கிறது. அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து நடவடிக்கை எடுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தேர்தல் விதிகளின்படி, தொடர்ந்து 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத மற்றும் கணக்கு தாக்கல் செய்யாத 474 பதிவு செய்யப்படாத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை (Registered Unrecognised Political Parties - RUPPs) ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை, தேர்தல் முறையை சீர்திருத்தும் ஒரு தொடர்ச்சியான பணியின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் 2025 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மொத்தம் 808 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. 

    ×