search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbumani"

    • அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் பா.ஜனதா உடன் பாமக கூட்டணி.
    • இன்று காலை நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    தமிழகத்தில் மக்களை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்துள்ளது.

    அதிமுக, பா.ஜனதா கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்ப இரு கட்சி பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. நேற்று வரை அதிமுக கூட்டணியில்தான் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாமக மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்டதால் இழுபறி நீடித்து வந்தது.

    இந்த நிலையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என பாமக திடீரென அறிவித்தது. அதன்படி நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது.

     அதன்படி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சென்றனர். அண்ணாமலையை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றார்.

    பின்னர் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் சில சந்தேகங்களை அண்ணாலையிடம் எழுப்பினார். இது தொடர்பாக தனியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் எனத் தெரிவிக்க அண்ணாமலை, எல். முருகன் ஆகியோர் டாக்டர் ராமதாஸ் உடன் தனிஅறையில் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் பா.ஜனதா- பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
    • வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்துவிட்டது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கோ, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் 32 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்துவதற்கோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்துவிட்டது. எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் அரங்கில் பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
    • விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 என அரசு நிர்ணயிக்க வேண்டும்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் அரங்கில் பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் நேரத்திலும் மேற்கொள்ள வேண்டியவை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு பாசன திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே உபரிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதும் அந்த திட்டத்தை மாவட்டத்தின் கடைகோடியான தலைவாசல் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் மேட்டூர் உபரி நீரை சரபங்காநதி, வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட நதிகளில் இணைக்க வேண்டும்.

    சேலம் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை மூலம், மறுசுழற்சி செய்திட வேண்டும். சேலம் உருக்காலையினை தனியார் மயமாக்கிடும் திட்டத்தினை அரசு கைவிட்டு, ஆலை விரிவாக்கத்திற்காக ஏற்கனவே விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விளைநிலங்களை மீண்டும் அவர்களிடம் திருப்ப ஒப்படைக்க வேண்டும்.

    மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தற்போது மத்திய அரசு அதற்கான குழுவை மட்டுமே அமைத்துள்ளது. திட்டம் பற்றிய விரிவான அறிக்கை வெளிவந்த பின்னரே பா.ம.க. அதுகுறித்து தனது நிலைப்பாட்டினை தெரிவிக்கும்.

    விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 என அரசு நிர்ணயிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்திட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எட்டப்படும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் என கூறினார்.

    பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், எடப்பாடி நகர செயலாளர் சண்முகம், வக்கீல் அண்ணாதுரை, மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் குமார், ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள், எடப்பாடி மேற்கு ஒன்றிய அமைப்பு தலைவர் தம்பிதுரை, வன்னியர் சங்க பொறுப்பாளர் ராமச்சந்திரன், அன்புமணி தம்பிகள் படைத்தலைவர் கிழக்கு ஒன்றியம் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது.
    • டெல்லி அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்.

    சகல கட்சிகளையும் சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் பா.ம.க.வின் கூட்டணி வியூகத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கணித்துவிட முடியாது.

    2016 சட்டமன்ற தேர்தலில் மாற்றம், முன்னேற்றம்-அன்புமணி என்ற முழக்கத்தோடு பா.ம.க. தனித்து போட்டியிட்டு ஏமாற்றத்தைதான் பெற்றது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது. தற்போது அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கி றதா? என்றால் டெல்லி அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் இல்லை என்கிறார்.

    என்ன தான் நினைக்கிறாராம் அன்புமணி? 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மந்திரி சபைக்கு யார் உத்தரவாதம் தருகிறார்களோ அவர்களோடு கூட்டணி அமைக்கலாம் என்ற எண்ணத்தோடு இருக்கிறாராம். தமிழகத்தில் வலிமையான தலைவர்கள் இல்லாததால் எங்கள் சின்னவர் போடும் கணக்கும் சரியாக இருக்கலாம் என்கிறார்கள் பாட்டாளி சொந்த ங்கள்.

    அடுத்த மாதம் நடைபெறும் மேல்சபை தேர்தலில் வைகோ மற்றும் அன்புமணி எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மக்கள் தொகை அளவு, பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேல் சபை உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 18 மேல்சபை இடங்கள் உள்ளன. ஒரு மேல்சபை இடத்தை பெறுவதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற வேண்டும். ஒரு மேல்சபை எம்.பி.யின் பதவி காலம் 6 ஆண்டுகள். இவை சுழற்சி முறையில் காலியாகும்.

    மேல்சபை உறுப்பினர்களில் 6 பேரது பதவி காலம் ஜூலை 24-ந்தேதி முடிகிறது. வி.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன் (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஆகியோரது பதவி காலம் முடிகிறது.

    இதனால் புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) நடக்கிறது.

    சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த கட்சி மேல்சபையில் ஒரு இடத்தை இழக்கிறது. தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மேல்சபை எம்.பி. பதவியை பெறுகிறது.

    234 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எண்ணிக்கை 110ஆக இருக்கிறது. டி.டி.வி. தினகரன் ஒரு தொகுதியில் உள்ளார்.

    இதன்மூலம் மேல்சபையில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.


    ஒரு உறுப்பினருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இதன்மூலம் அ.தி.மு.க.வில் 3 மேல்சபை உறுப்பினர்களுக்கு 102 பேர் தேவை. 21 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியில் உபரியாக இருப்பார்கள்.

    பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க.வுக்கு ஒரு மேல்சபை தொகுதி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேல்சபை எம்.பி.யாகிறார். அவர் ஏற்கனவே 2004 முதல் 2010 வரை மேல்சபை எம்.பி.யாக இருந்தார்.

    தி.மு.க.வில் 3 மேல்சபை உறுப்பினர்கள் தேர்வுக்கு பிறகு 8 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக இருப்பார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி ம.தி.மு.க.வுக்கு ஒரு மேல்சபை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியது. அதன்படி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.

    அ.தி.மு.க.வில் இருந்து மற்ற 2 மேல்சபை உறுப்பினராக யார்? தேர்வு செய்யப்படுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது மேல்சபை எம்.பி.யாக உள்ள மைத்ரேயன் மீண்டும் அந்த பதவியை கேட்பதாக தெரிகிறது. இதேபோல கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தம்பி துரையும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்பதாக தெரிகிறது. அ.தி.மு.க. இது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

    தி.மு.க.வில் உள்ள எஞ்சிய 2 இடத்தில் ஒரு தொகுதியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக காங்கிரஸ் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காங்கிரசுக்கு கொடுத்த போது மீதமுள்ள ஒரு எம்.பி. பதவியை தி.மு.க. யாருக்கு கொடுக்க போகிறது என்று தெரிவில்லை. தி.மு.க. தலைமை இது குறித்து விரைவில் முடிவை அறிவிக்கும்.

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்து ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்துவோம் என அன்புமணி கூறியுள்ளார். #anbumani #chennaisalemexpressway #tngovt
    தர்மபுரி:

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்து இன்று சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை வேண்டாம் என்று எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே கூறி இருக்கின்றோம். கூட்டணி சேர்ந்தோம் என்பதற்காக எங்களது கொள்கைகளை விட்டுவிட முடியாது. சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கின்றோம்.

    இன்னும் அரசாங்கத்திடம் வலியுறுத்தி இதை விட்டுவிடுங்கள்; இதற்கு மேல்முறையீடு செய்ய தேவையில்லை என்று வலியுறுத்தி நிச்சயம் அழுத்தம் கொடுப்போம். தேர்தலுக்கும், 8 வழிச்சாலைக்கும் சம்பந்தம் கிடையாது. இது என் கடமை. விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது என் உரிமை. 

    இவ்வாறு அவர் கூறினார். #anbumani #chennaisalemexpressway #tngovt
    பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவரிடம் முந்தைய நிலைப்பாடு மற்றும் தற்போதைய கூட்டணி தொடர்பாக கேள்விகளை எழுப்பியதால் கடும் அதிருப்தி அடைந்தார். #AnbumaniRamadoss
    சென்னை:

    சென்னையில் இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி  ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என்று கூறியதுடன், அதிமுக ஆட்சியையும் முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு இப்போது கூட்டணி வைத்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    அதிமுக, திமுகவுடன் இனி கூட்டணி வைக்கமாட்டோம் என்று கூறியது உண்மைதான். அப்போது இருந்த சூழல் வேறு, தற்போதுள்ள சூழல் வேறு. சூழல் மாறியதால் கூட்டணி வைத்துள்ளோம். 8 ஆண்டுகளாக தனித்து நின்றோம். யாராவது எங்களைப் பாராட்டினீர்களா? பாமக தனித்து நின்றபோது ஒரு எம்எல்ஏவை கூட மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.

    நாங்கள் கூறிய ஊழல் புகார்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைகள் முடிந்த பின்னர்தான் தெரியவரும். பாமக அளித்த ஊழல் புகார் குறித்து ஆளுநர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்.



    மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவும் எங்களிடம் பேசியது. இப்போது தோல்வி பயத்தால் ஸ்டாலின் எங்கள் மீது அவதூறுகளை வீசுகிறார். ஆனால் நாங்கள் அவரை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம்.

    அதிமுக அரசின் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அன்புமணி ராமதாஸ் நேரடியாக பதில் அளிக்காமல் மறைமுகமாக பதிலளித்தார். அதிமுகவுக்கு எதிராக இதற்கு முன்னர் வைத்த விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, சற்று கோபமடைந்த அன்புமணி, செய்தியாளருடன் வாக்குவாதம் செய்தார். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு, அமைதியாக இருங்கள் என்று கூறினார். #AnbumaniRamadoss
    பாராளுமன்ற தேர்தலில் பாமக 7 தொகுதிகளிலும் தோற்பது உறுதி என்று வன்னியர் சங்க தலைவர் விஜிகே மணிகண்டன் கூறியுள்ளார். #pmk #parliamentelection #vanniyarsangamleader

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில், காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்க தலைவருமான வி.ஜி.கே.மணிகண்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதியாக தங்களை கூறிக்கொண்டு, வன்னியர் சமூகத்தை ராமதாசும், அன்புமணியும் அடிமைப்படுத்த நினைக்கின்றனர். காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த அ.தி.மு.க.வுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளதன் மூலம், ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தினரையும் ராமதாஸ் இழிவுபடுத்தியுள்ளார்.


    கடல் இருக்கும் வரை, உலகம் இருக்கும் வரை அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று கூறிய பாமக, தற்போது எதற்காக கூட்டணி அமைத்துள்ளது?. அ.தி.மு.க ஆட்சியில் 22 துறைகளில், ரூ.70ஆயிரம் கோடி ஊழல் என்று புத்தகம் வெளியிட்ட ராமதாஸ், இப்போது எப்படி ஊழலை ஏற்றுக் கொண்டார்?

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரையும் விடுவித்தால் மட்டுமே கூட்டணி என்று பா.ஜனதாவிடம் தற்போது ஏன் நிபந்தனை விதிக்கவில்லை? மது ஒழிப்பு போராட்டம் செய்த அன்புமணி, தற்போது படிப்படியாக குறைக்க வேண்டும் என்று கோருவது ஏன்?

    இனியும் ராமதாசையும், அன்புமணியையும் வன்னிய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அவர்கள் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள். போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் பா.ம.க தோற்கும்.

    அன்புமணி எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து, காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் போட்டியிடுவார். இனி வன்னியர்கள் பெயரைச்சொல்லி ராமதாசும், அன்புமணியும் வாக்கு சேகரிக்கக்கூடாது .

    இவ்வாறு அவர் கூறினார். #pmk #parliamentelection #vanniyarsangamleader 

    முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தில் அன்புமணி எதிர்க்காதது ஏன்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். #thirumavalavan #anbumani

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்?. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக சமூக நீதியைப் பலியிடுகிறார்களா?

    எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனுக்குடன் அறிக்கை விடுவதில் கவனம் செலுத்தும் மருத்துவர் ராமதாஸ் இந்தப் பிரச்சனையில் பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை விடாதது ஏன்? அன்புமணி விடுத்த அறிக்கையே போதுமென்று மவுனம் காக்கிறாரா? எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு இதனால் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதானே அவருடைய மவுனத்துக்குக் காரணம்?


    மோடி அரசின் மோசடிக்கு மறைமுக ஆதரவு அளித்ததன்மூலம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூக நீதி பற்றி பாமக பேசுகிறது என்பது அம்பலமாகியுள்ளது. இந்த ‘நாடக அரசியலை’ பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #thirumavalavan #anbumani

    20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவோம் என்று கோவையில் நடந்த பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார். #anbumani #pmk #byelection

    கோவை:

    பா.ம.க. செயற்குழு கூட்டம் கோவை சிங்காநல்லூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

    கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது-

    2018-ம் ஆண்டு முடிந்து 2019-ம் ஆண்டு தொடங்க போகிறது. கடந்த ஆண்டில் பா.ம.க. மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

    கட்சியில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். தமிழ் நாட்டில் நீர் நிலைகளை பாதுகாக்க பா.ம.க. தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    பா.ம.க. தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. பொதுமக்கள், விவசாயிகள் என்று அனைத்து தரப்பு மக்களுக்காகவும் இந்த கட்சி வெறும் போராட்டங்களை மட்டும் நடத்தாமல் மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்ற பாடுபட்டு வருகிறது. அதற்கான திட்டங்களை தயாரித்து கொடுக்கிறோம். வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாகும். நாடாளுமன்ற தேர்தல் குறித்து மட்டுமே பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தல் குறித்து பலர் மறந்து போய் விட்டனர்.

    20 சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்தல் மூலம் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. இந்த தேர்தல் முக்கிய தேர்தலாகும்.

    கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின்னர் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. ஆனால் இப்போது 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவோம்.

    20 தொகுதிகளில் பெரம்பூர், பூந்தமல்லி, செங்கல்பட்டு, சோளிங்கர், குடியாத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்போரூர், அரூர், நிலக்கோட்டை, ஆம்பூர், தஞ்சாவூர் ஆகிய 11 தொகுதிகளில் வெற்றியை நாங்கள் தீர்மானிப்போம்.

    நாங்கள் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பதை விட எங்களுடன் யார் சேருவார்கள் என்பது தான் முக்கியம். எங்கள் கட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து விட்டனர். மக்களின் நம்பிக்கையை ஓட்டாக மாற்றி காண்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #anbumani #pmk #byelection

    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். #mekedatuissue #centralgovernment #karnatakagovt #anbumani

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டும் சிக்கலுக்கு தீர்வு காண தமிழ்நாடு கர்நாடக முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    இந்த செய்தி உண்மையாக இருந்தால் மத்திய அரசின் நிலைப்பாடு ஒருதலைபட்சமானது மட்டுமின்றி கண்டிக்கத்தக்கதும் ஆகும். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது மேகதாது அணையை கட்ட உதவி செய்யும் படி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்றுக் கொண்டு தான் இரு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நிதின்கட்கரி உறுதியளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    உண்மையில் மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. மத்திய அரசு என்பது தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவானது ஆகும்.

    இரு மாநில மக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது. அவ்வாறு இருக்கும் போது, இரு மாநில அரசுகளும் கோரிக்கை விடுக்காத நிலையில், எந்த பிரச்சினை குறித்தும், எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்தி பேச்சு நடத்த அழைக்க முடியாது.

    மேகதாது அணை தொடர்பாக பேச்சுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கர்நாடகம் மட்டுமே கோரியிருக்கிறது. தமிழகத்தின் சார்பில் அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்படாத நிலையில் தமிழகத்தை பேச்சுக்கு அழைக்க முடியாது. அவ்வாறு செய்தால் அது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக அமைந்துவிடும்.

    இந்த உண்மைகள் மத்திய அரசுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

    மேகதாது அணைக் கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு தன்னிச்சையாக அனுமதி அளித்த மத்திய அரசு, இப்போது அணைக்கான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதற்காகவே இரு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு துடிக்கிறது.


    மத்திய அரசு மேகதாது அணை விவகாரத்தில் நல்லெண்ண அடிப்படையில் முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறது என்றால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். மேகதாது அணை கட்டுவதால் கர்நாடகத்தை விட தமிழகத்துக்கு தான் கூடுதல் நன்மை என்பதால், அதை தமிழக அரசிடம் எடுத்துக் கூறி ஒப்புதலைப் பெற்றுத் தர உதவும்படி குமாரசாமி கோரியதன் அடிப்படையில் தான் முதல்வர்கள் கூட்டத்தை நடத்த மத்திய அமைச்சர் நிதின்கட்கரி சம்மதித்துள்ளார்.

    இதில் இருந்தே இந்தக் கூட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். எனவே, மத்திய அரசே அழைத்தாலும் மேகதாது அணை குறித்த எந்த பேச்சிலும் தமிழக அரசு கலந்து கொள்ளக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mekedatuissue #centralgovernment #karnatakagovt #anbumani

    தமிழகத்தில் சினிமா, திராவிட அரசியல் முடிந்துவிட்டது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். #anbumani #ramadoss #pmk
    சென்னை:

    பா.ம.க. இளம்பெண்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

    கட்சி தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, இளம்பெண்கள் சங்கத்தின் செயலாளர் ஜூலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    ‘வாக்கு’ என்கிற சூலாயுதம் ஒவ்வொரு பெண்களும் கையில் வைத்து இருக்கிறீர்கள். மாம்பழம் தான் மாற்றத்தை கொடுக்கும். பெண்களை வாழ வைக்கும். இனி வேண்டாம் சூரியன், இரட்டை இலை என்று ஒவ்வொரு வீட்டிலும் திருத்தினால், இந்த நாடு திருந்தும். தமிழ்நாட்டில் மாற்றம் வரும். சமூக புரட்சி வரும். அது வந்தால் தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.

    50 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் ரூ.300, ரூ.500 என்று தேர்தலில் லஞ்சம் கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள். மிக்சி, கிரைண்டர், டி.வி. என்று இலவசங்களை கொடுத்து, மக்களை பிச்சைக்காரர்கள் என்று நினைத்துக்கொண்டார்கள். கல்வி புரட்சி, பசுமை புரட்சி நடக்க வேண்டும் என்று அன்புமணி சொல்லி வருகிறார். அதற்கான திட்டங்களையும் அவர் வைத்திருக்கிறார்.

    பா.ம.க. ஆட்சியில் பெண்களுக்கு என்று தனி பட்ஜெட் போடப்படும். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற அந்த 3 வார்த்தை 10 வயது குழந்தைகளிடம் போய் சேர்ந்து இருக்கிறது. ஆனால் பெற்றோர்கள், பாட்டி-பாட்டனார்களிடம் போய் சேரவில்லை. அதை சேர்க்கும் பணி பா.ம.க. இளம்பெண்களுடையது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அமைதியான மாற்றம், பெண்கள் மனதில் புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சினிமா அரசியல், திராவிடர் அரசியல் எல்லாம் முடிந்து விட்டது. பாட்டாளி அரசியலை மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்ப பா.ம.க.வினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

    பா.ம.க. வித்தியாசமான கட்சி. இனி பிறக்கிற குழந்தைகளுக்கு எல்லாம் தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தை தான் ‘இனிஷியலாக’ வைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கட்டளையிட்டு இருக்கிறார். இந்தியாவில் எந்த கட்சியும் இப்படி சொல்லாது. என் மகள்களுக்கு கூட என் மனைவி பெயர் தான் இனிஷியல்.

    மதுவை ஒழித்தாலே பெண்களுக்கு பாதி விடுதலை. பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் ஒரு மணி நேரத்திலேயே பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம். நான் மத்திய மந்திரியாக இருந்த போது 108 ஆம்புலன்சு திட்டத்தை கொண்டு வந்தேன். இன்றைக்கு தமிழ்நாட்டில் 99 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனையில் நடப்பதற்கு காரணம் 108 ஆம்புலன்சு தான்.

    இந்த செய்தியை பொதுமக்களிடம் பா.ம.க. இளம்பெண்கள் எடுத்து சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. இளம்பெண்கள் 10 உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதில் சில உறுதிமொழிகள் வருமாறு:-

    * எல்லோருக்கும் தரமான, சமச்சீரான, கட்டணமில்லா, சுமையில்லா திறன்சார் கல்வி, அறிவுசார் கல்வி, தொழில் கல்வி கட்டாயமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய பாடுபடுவோம்.

    * 108 ஆம்புலன்சு புரட்சி போன்று அனைவருக்கும் தரமான, கட்டணமில்லா மருத்துவம் அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதை உறுதி செய்வோம்.

    * ஒரு பைசா ஊழல் இல்லாத நேர்மையான, தூய்மையான ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் பரப்புரை செய்வோம்.

    * மது ஒழிப்பே மக்கள் பணி. மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம் அமைப்போம். #anbumani #ramadoss #pmk
    ×