என் மலர்
நீங்கள் தேடியது "அமர்த்தியா சென்"
- எனது தந்தை உயிரிழந்ததாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
- தந்தையுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் உயிரிழந்துவிட்டதாக இன்று மாலை முதலே தகவல்கள் வெளியாகி வந்தன. பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் உயிரிழந்ததாக எக்ஸ் தளத்தில் வெளியான தகவல் காட்டுத்தீ போன்று வேகமாக பரவியது.
இந்த நிலையில், அமர்த்தியா சென் உயிரிழக்கவில்லை என்று அவரின் மகள் நந்தனா சென் தெரிவித்து உள்ளார். மேலும் தனது தந்தை உயிரிழந்ததாக வெளியான தகவல்களில் துளியும் உண்மையில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார். இத்துடன் தனது தந்தையுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், " கவலை தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி ஆனால் அது ஒரு பொய்யான செய்தி. பாபா நலமுடன் இருக்கிறார். கேம்ப்ரிட்ஜ்-இல் கடந்த வாரம் தான் நாங்கள் அருமையான நாட்களை குடும்பத்தோடு கழித்தோம்."
"அவரின் அரவணைப்பை போன்று அவர் உறுதியாகவே இருக்கிறார். அவர் ஹார்வார்டில் வாரத்திற்கு இரண்டு முறை பாடம் எடுத்து வருகிறார். அவர் எப்போதும் போன்று பிசியாகவே இருக்கிறார். அவர் தனது புத்தகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை கொண்டுள்ளது.
- இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவது சரி என்று நான் கருதவில்லை.
கொல்கத்தா:
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது பூர்வீகம் கொல்கத்தா ஆகும். அவர் அவ்வப்போது மத்திய அரசின் நிலைப்பாட்டை விமர்சிப்பது வழக்கம்.
தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து கொல்கத்தா வந்துள்ளார். கொல்கத்தா விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை கொண்டுள்ளது.
இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவது சரி என்று நான் கருதவில்லை. இந்தியா, 'இந்து தேசம் அல்ல' என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவை.
- இந்தியாவில் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு உள்ளார்ந்த கலாச்சாரம் உள்ளது.
கொல்கத்தா :
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள அமர்த்தியா சென் ஆய்வு மையத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது;-
"யாரேனும் என்னிடம் நீங்கள் பயப்படுகிறீர்களா என இப்போது கேட்டால், அதற்கு துளி கூட யோசிக்காமல் ஆமாம் என சொல்வேன். நான் அச்சம் கொள்வதற்கு காரணம் உள்ளது. நாட்டின் தற்போதைய நிலை தான் நான் அச்சம் கொண்டுள்ளதற்கு காரணம். நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எனக்கு அது போதும்.
வரலாற்று ரீதியாக ஒன்றுபட்ட நம் நாட்டில் பிளவு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. இந்தியாவிற்கு தற்போது ஒற்றுமை மிகவும் தேவை. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். வேதங்கள் பற்றிய பொருள் மற்றும் கருத்து விளக்கம் அடங்கிய உபநிடதங்களை உலகிற்கு தெரிய செய்தவர் ஒரு இஸ்லாமிய இளவரசர் தான்.
முகலாய மன்னர் ஷாஜகானின் மகன் தாரா ஷூகோ, சமஸ்கிருதம் கற்று உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவை. இந்தியாவில் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு உள்ளார்ந்த கலாச்சாரம் உள்ளது. இந்தியாவில் பல யுகங்களாக யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் ஒருங்கிணைந்து வாழ்கின்றனர். இந்த பிணைப்பை இந்தியாவின் சகிப்புத்தன்மை கலாச்சாரத்திற்கு உதாரணமாக சொல்ல முடியும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






